தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ,விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயில், சொக்கநாதர் கோயில், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், ரெங்கநாதசுவாமி கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை 6:00 மணிக்கு ஆண்டாள்கோயிலில் நடை திறக்கப்பட்டு ஆண்டாள், ரெங் கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள், பழனி ஆண்டவர், பெரிய மாரியம்மன் கோயிலில், உள்ளூர் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் பல்வேறு நகரங்களைச்சேர்ந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காலை முதல்கடுமையாக சுட்டெரித்த வெயிலினால் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல்பெரிதும் அவதிப்பட்டனர். 8- th april மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில்பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்நிலவியது.பஞ்சு மார்க்கெட் நேருசிலை, பழைய பஸ் நிலையம், சங்கரன்கோவில் முக்கு, புதிய பஸ் நிலையம், காந்திசிலை ரவுண்டானா, ரெயில்வே பீடர் ரோடு வரை தொடர்ந்து மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.சத்திரப்பட்டி, தளவாய்புரம், சேத்தூர், தேவதானம், கோவிலூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று இரவு 7:00 மணிக்கு ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது.இக்கோயிலில் மார்ச் 24 ல் கொடியேற்றத்துடன் திருக்கல்யாண திருவிழா துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம், எழுந்தருளலும், இரவு வீதியுலாவும் நடந்தது. ஒன்பதாம் திருநாளான இன்று காலை 7:20 மணிக்கு செப்பு தேரோட்டமும், இரவு 7:00 மணிக்குஆடிப்பூர பந்தலில் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாணமும் நடக்கிறது.அப்போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்துநேற்று மாலை பட்டு, மங்கலப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது.. பின்னர் மாடவீதிகள் சுற்றி வந்து, ஆண்டாள் சன்னதியில் பட்டு சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர். இன்று இரவு நடக்கும் திருமணத்தின் போது ஆண்டாளுக்கு இந்த பட்டு சாற்றப்படுகிறது.
இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா.நாள் : 01.04.2026 புதன்கிழமை, காலை 10.00 மணிஇடம் : 120/16, இராஜாஜி ரோடு, ஸ்ரீவில்லிபுத்தூர். திறந்து வைப்பவர்: Dr.P.V.ஜவஹர்லால் அவர்கள் -President IMA - ராஜபாளையம் கிளை.முன்னிலை : Dr.K.பால்சாமி அவர்கள் - President ,IMA - ஸ்ரீவில்லிபுத்தூர்.Dr.T.சுப்பிரமணியன் அவர்கள் - Secretary, IMA - ஸ்ரீவில்லிபுத்தூர்.Dr.G.அமலச்சந்திரன் அவர்கள் - Treasurer,IMA - ஸ்ரீவில்லிபுத்தூர்.Dr.S.ராமநாதன் அவர்கள் - State Council Member,IMA - ஸ்ரீவில்லிபுத்தூர். அனைவரும் வருகைதந்து விழாவினைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். அன்புடன்.Dr.G.P. கிருஷ்ண சைதன்யா, Dr. R.மதுரிகா, Dr.J.ராஜேஷ், Dr.M.அனிதாதங்கள் நல்வரவை விரும்பும் :Dr.G.பார்த்தசாரதி , Dr.சரஸ்வதி பார்த்தசாரதி.
கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட,ராஜபாளையத்தில் செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர் நடவடிக்கைஎடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ராஜபாளையம் சாலைகளில் கண் கூசும் ஒளியை அனைத்து வாகனங்களிலும் பொருத்தி செல்வ தால் எதிர்வரும் வாகனங்கள் அதிக வெளிச்சம் காரணமாக மோதி விபத்திற்கு உள்ளாவது அதிகரித்துள்ளது.போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் விஜயகாந்த், அருள் சேகர் தலைமையிலான போலீசார் காந்தி சிலை ரவுண்டானா பகுதிகளில் சோதனை செய்து,.ஆட்டோ, வேன் உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான சிகப்பு, நீல நிற விளக்குகள்பொருத்திய வாகனங்களுக்கு மீறல் காரணமாக வழக்குப்பதிந்து ரூ.5 ஆயிரம்அபராதம் விதித்துள்ளனர்.வாகன ஓட்டுநர்கள் முகப்பில் பொருத்தப்பட் டுள்ள கண் கூசும் வண்ண விளக்குகளை தாமாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவ டிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு ராஜபாளையம் கோதண்டராமசாமி கோயில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு மேல் கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடந்து கொடியேற்றத்துடன்துவங்கி மகா தீப ஆராதனை காட்டப்பட்டது. மார்ச் 24ல் திருக்கல்யாணம்நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சீனிவாச ராஜா தலைமையில்நிர்வாகிகள் செய்திருந்தனர். 10 நாள் திருவிழாவில் தினமும் சிம்ம, அனுமந்த, சேஷ, கருட, குதிரை வாகனங்களில் சுவாமி காட்சி அளிப்பார்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக புதுபஸ் ஸ்டாண்டிலிருத்து காந்தி கலைமன்றம் அருகே நகர் பகுதி வழியில்செல்வதற்கு பதில் சங்கரன்கோவில் ரோட்டில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் எதிர் பகுதி தென்காசி ரோட்டில் இணைப்புச் சாலை அமைக்க 2024 பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது.2.10 கி.மீட்டர் துாரத்திற்கு 10 மீட்டர் அகலத்தில் ரெண்டு பெரிய பாலம் மற்றும் 16 சிறிய நீர்வழி பாலங்களுடன் 2.10 கிலோ மீட்டர் நீளத்தில் புதிய சாலை அமைக்கப்பட்டது.அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்இந்த இணைப்பு சாலையை திறந்து வைத்தார். ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் சங்கரன் கோவில்ரோட்டில் அமைந்துள்ளதால் மதுரை, தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் வழித்தடங்களில் ஊருக்குள் சென்று நெரிசல் ஏற்படுத்தாத வண்ணம் மக்களுக்கு இடையூறு இன்றி புது பஸ் ஸ்டாண்டுக்கு சென்று அதே வழியில் திரும்பி செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது.
முடங்கியாறு ரோடு ராஜபாளையம் நகரின் மையத்திலிருந்து மேற்கு செல்லும் பிரதான சாலை ஆக்கிரமிப்பாளர்களால். போட்டி போட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. கண்டுகொள்ளாமல் உள்ள ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகளால், சாமானிய மக்கள் தினமும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.ரோட்டின் எல்லை தெரியாத அளவு ,ராஜபாளையம் நகரின் மையப்பகுதியான காந்தி சிலை ரவுண்டானாவில் தொடங்கி எம். ஜி.ஆர்சிலை வரை அகலமான முடங்கியார் ரோடு பல்வேறு ஆக்கிரமிப்பாளர்களால் மறைக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் நகராட்சி புதிய குடியிருப்புகளால் ஒவ்வொரு நாளும் அதிக வாகன போக்குவரத்தை எதிர் கொண்டு வருகின்றன. முதியோர், பாதசாரிகள் நின்று ஒதுங்கி செல்ல வேண்டியுள்ளது. ஆக்கிரமிப்புகளால் சாமானியர்கள் சங்கடத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை நிறுத்தி வைத்திருப்பது போன்ற அவலங்கள் தினமும் நிகழ்ந்து வருகிறது.
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் 02.03.2026 திங்கள்கிழமை (மாசி மாதம் 18ம் தேதி) பஞ்சமூர்த்தி புறப்பாடு காலை 6.15- 6.45 மணிக்குள் மீன லக்னத்தில் தீர்த்தவாரி, மாலை 7.00 மணிக்கு பஞ்ச மூர்த்தி புறப்பாடுமண்டகப்படிதாரர்கள்ஸ்ரீ N.K.ராம்குமார் ராஜா - ஸ்ரீமதி R.நளினா ராமலெக்ஷ்மிஸ்ரீ S.R.ஸ்ரீராம் ராஜா - ஸ்ரீமதி S.சாரதா தீபாபஜன் மாலை 6.00 மணிநிகழ்த்துபவர்: திரு. S.S. மாடசாமிராஜா அவர்கள் தலைமையில் வாழும் கலை அமைப்பினர்
01.03.2026 ஞாயிற்றுக்கிழமை (மாசி மாதம் 17ம் தேதி) தேர்த்திருவிழாபல்வேறு வாத்யமேள தாளங்களுடன், காலை 6.00 மணிக்கு மேல் கும்ப லக்னத்தில் தேர்த்திருவிழாமண்டகப்படிதாரர்கள்ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்இரவு 7.35 மணிக்கு தேர் உலா பாதையில் வலம் வருதல்.மண்டகப்படிதாரர்கள்ராம்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணி11 மிருதங்க கலைஞர்கள் பங்குபெறும் "மிருதங்க நாதமயம்"நிகழ்த்துபவர்: "மதுர கலாமணி", "லய ஜோதி" Dr. K. தியாகராஜன்முதல்வர் (ஓய்வு), ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம், மதுரை.