கடலில் கலக்காத நீர், எவரும் குடிக்காத நீர். அது என்ன? கண்ணீர் kneerகத்தி போல் இலை இருக்கும், கவரிமான் பூ பூக்கும், தின்ன பழம் கொடுக்கும், தின்னாத காய் கொடுக்கும். அது என்ன? வேம்பு
கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரைக் கண்டு பதைபதைக்கிறான். அவன் யார்? நெருப்பு மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம் வலதிலும் துவாரம் இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம், வெளியிலும் துவாரம், இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன். நான் யார்? பஞ்சு
காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான். அவன் யார்? தென்னை மரம் சுற்றும் போது மட்டும் சுகம் தரும். அது என்ன ? மின் விசிறி
வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி. அது என்ன? விளக்குத் திரி .ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவர்கள் யார்? ? எறும்புக் கூட்டம்
வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம். அது என்ன? - கனவுமென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன். அவன் யார்? - நத்தை
அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான். அவன் யார்? புகை . மேலே மேலே செல்லும், ஆனால் கீழே வராது. அது என்ன ? வயது.
காது பெரியது, ஆனால் கேளாது. வாய் பெரியது, ஆனால் பேசாது. வயிறு பெரியது, ஆனால் உண்ணாது. அது என்ன?----அண்டா .ராஜா உண்டு, ராணி உண்டு, மந்திரியும் உண்டு. ஆனால் நாடு இல்லை. அது என்ன?----சீட்டு கட்டு kattu
அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன?---தலை வகிடுமுதுகை தொட்டால் மூச்சு விடுவான், பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான். அவன் யார்?-----ஆர்மோனியம்
உயரத்திலிருந்து விழுவான் அடியே படாது .தரைக்குத்தான் சேதாரமாகும். அது என்ன? அருவி நீர் பச்சைக் கீரை சமைக்க உதவாது வழுக்க உதவும். அது என்ன? பாசி
.என் குதிரை கருப்புக் குதிரை, குளிப்பாட்டினால் வெள்ளைக் குதிரை. அது என்ன? உளுந்து மண்ணைச் சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து, மண்ணோடு மண்ணாவான். அவன் யார்? மண்புழு