காலால் உதைத்தால், காற்றால் உருளும். அது என்ன? - மிதிவண்டி . காளை கட்டிக்கிடக்குது, கயிறு ஓடிக் கிடக்குது. அது என்ன? - பரங்கிக்காய்
கால் இல்லை கை இல்லை, கண்கள் உண்டு, வால் உண்டு, சிறகுண்டு. அது என்ன? மீன் பூ இருந்தும், பறப்பதில்லை. அது என்ன? சேவல் கொண்டை
பூவை பூவெடுத்து பூ மீது வைத்தால், பூ போக மீதி பூ என்ன இருக்கும்?எறும்பு, கரும்பு, வரப்பு விழுந்தால் படுக்காது, எழுந்தால் நிற்காது. அது என்ன?தஞ்சாவூர் பொம்மை .
கரிச்சட்டி வயிற்றிலே, வெள்ளை முத்துக்கள். அது என்ன? சாதம் வண்ண நிலா விண்ணிலே, மலர்ந்திடுவாள் மண்ணிலே.அது என்ன? -அல்லிப்பூ .
ஒரு மரம் ஏறி, ஒரு மரம் பூசி, ஒரு மரம் வீசிப் போகிறாள். --பாதகுறடு, சந்தனம், விசிறி . கட்டுப்பட்டு இருந்த மகளை, விட்டுப் பிரிந்து வந்தாள்.-உமி, நெல் .
குடிக்கலாம், அடிக்கலாம். அது என்ன? - காப்பிஏனக் கோணல் மூன்று, கண் ஆறு, கால் பத்து. அது என்ன? - கலப்பை
.தேடாமல் கிடைக்கும் பல், தேடும் செல்வத்தை குறைக்கும் பல். அது என்ன?சோம்பல் .ஆணை போகிறது, ஆனால், தலை தெரியவில்லை. அது என்ன? பரிசல்
எளிதில் உடையும் புட்டியில், இரண்டு வலுவான தைலம். அது என்ன? முட்டை சுற்றி சுழல்வான், வீர விளையாட்டாக இருப்பான்.அவன் யார்? - சிலம்பாட்டம் .
பல் துலக்காதவனுக்கு, உடம்பெல்லாம் பற்கள். அவன் யார்? - சீப்பு காதை திருகினால், கதையெல்லாம் சொல்லுவான். அவன் யார்? - வானொலி
கால் கருப்பு, முக்கால் சிகப்பு, உடைத்தால் பருப்பு, தின்றால் துவர்ப்பு. அது என்ன? குன்றிமணி கல் படாத இடத்தில், கரு இல்லாத முட்டை. அது என்ன? காளான்