பிறந்தது முதல் வயிற்றாலே அசைந்து போகிறது. அது என்ன? - பாம்பு .கடிப்பட மாட்டாள், பிடிப்பட மாட்டாள்.அவள் யார்? - தண்ணீர்
உச்சி கிளையிலே ஒரு முழு குச்சி ஊசல் ஆடுது. அது என்ன? - முருங்கைக்காய் . கிணற்றிலே அம்புகள் போடுவார்கள், எடுப்பார் இல்லை. அது என்ன? - மழை நீர்.
.ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலை கனம் அதிகம். யார் அவன்? - பம்பரம் . கழுத்தை வெட்டினால் கண் தெரியும்?அவன் யார்? - நுங்கு .
அட்டைக்கு ஆயிரம் கண்ணு, முட்டைக்கு மூணு கண்ணு. அவர்கள் யார்? - கட்டிலும், தேங்காயும் தேடிக் கிடைத்த இறையை, கூடி கூடி உண்பவன். அவன் யார்? - காகம் .
சூரிய ஒளியில் உணவை சமைப்பேன்.சுற்றுச் சூழலைப் பேணிக்காப்பேன்.நான் யார்? - மரம் வெள்ளை மாடு, வாலால் நீர் அருந்தும். அது என்ன? -விளக்கு, திரி.
.வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது, கொள்ளையடிக்க முடியாது. கொடுத்தாலும் குறையாது. அது என்ன? - கல்வி இரவிலே பிறந்த ராஜகுமாரனுக்கு தலையிலே ஒரு குடை. அவன் யார்? காளான் .
பச்சை நிற அழகிக்கு உதட்டு சாயம் பூசாமலே சிவந்த வாய். அவள் யார்? பச்சை கிளி. என் தாயோ கடல், என் தந்தையோ சூரியன், என்னை விரும்பாத வீடே இல்லை. நான் யார்? உப்பு .
.பார்த்தால் கல், பல் பட்டால் நீர். அது என்ன? - பனிக்கட்டி . பல் துலக்க மாட்டான். ஆனால், இவன் பல் எப்பொழுதும் வெள்ளை.இவன் யார்? பூண்டு
ஒளி கொடுக்கும் விளக்கு அல்ல, சூடு கொடுக்கும் தீயல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல. அது என்ன? - -சூரியன். .கிளை உண்டு, ஆனால் இலை இல்லை.? அது என்ன--மான் கொம்பு .
பிறக்கும் போது வால் உண்டு, இறக்கும் போது வால் இல்லை. அது என்ன? - தவளை. முற்றத்தில் நடப்பான், மூலையில் படுப்பான். அவன் யார்? - துடைப்பான் .