கல்லைச் சுமந்தவள், கறிக்கு ருசி அது என்ன? விடை:- புடலங்காய் பச்சைப்பசேல் என்றிருக்கும், வாய் வைத்தால் கசக்கும், குழம்பு வைத்தால் ருசிக்கும் அது என்ன? விடை:- பாகற்காய்
சந்தையில் அழகாய் தெரிந்தவன், சமையல் அறையில் அழவைப்பான் அவன் யார்? விடை:- வெங்காயம் அடித்தால் உடைந்து போவான், அரைப்படி தண்ணீரோடு அவன் யார்? விடை:- தேங்காய்
பச்சைக் கீரை சமைக்க உதவாது வழுக்க உதவும். அது என்ன?பாசிமுதுகை தொட்டால் மூச்சு விடுவான், பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான். அவன் யார்?ஆர்மோனியம்
மண்ணைச் சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து, மண்ணோடுமண்ணாவான். அவன் யார்?மண்புழுஉயரத்திலிருந்து விழுவான் அடியே படாது தரைக்குத்தான் சேதாரமாகும். அது என்ன?அருவி நீர்
தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால்வெள்ளைக்காரன். அவன் யார்? - தேங்காய் என் குதிரை கருப்புக் குதிரை, குளிப்பாட்டினால் வெள்ளைக் குதிரை.அது என்ன? - உளுந்து
. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன்யார்? - கடல் அலை.உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம். அது என்ன? - தராசு
ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும். அது என்ன? -ஊதுபத்தி நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன். நான் யார்? -வெங்காயம்
கலர்ப்பூ கொண்டைக்காரன் காலையில் எழுப்பிவிடுவான். அவன் யார்? சேவல் ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, ஸ்ரீ ரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்?மூச்சு
தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்க முடியாது. அது என்ன? முதுகு
கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ. அது என்ன? உப்புகந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அவன் யார்? சோளக்கதிர் kan