. அரசன் இல்லாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவுக் காவல்காரன் ஒருவன். அவர்கள் யார்?சூரியன், சந்திரன் என்னை கீழே போட்டால், நான் உடைந்து விடுவேன். என்னைப் பார்த்து சிரித்தால், நான் உன்னைப்பார்த்து சிரிப்பேன். நான் யார்?கண்ணாடி
முள்ளு முள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே, வைக்கோல் போருக்குள்ளே, கண்டெடுத்தேன் வைரமணி. அது என்ன?பலாப்பழம்விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன? உலக்கை
.குடியிருக்க கோட்டை கட்டும், அந்த கோட்டையை உடைத்து வெளியே வரும்.அது என்ன? பட்டாம்பூச்சி.வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி.அவர்கள் யார்? பூட்டும், சாவியும்
சங்கீத பாட்டுக்காரன், மழையில் கச்சேரியே செய்வான். அவன் யார்? தவளை.ஒற்றைக்கால் வெள்ளைச்சாமி, நீரோடையில் மீன் பிடிக்கிறான். அவன் யார்? கொக்கு ஆடி ஆடி நடந்தான். அமைதியாக அதிர வைத்தான். அவன் யார்? யானை பச்சை நிற அழகிக்கு உதட்டு சாயம் பூசாமலே சிவந்த வாய். அவள் யார்? பச்சை கிளி
எட்டு பேர் நாங்கள், எங்கள் தலைவரை காப்பாற்ற முன்னால் போவோம், ஆனால் பின்னால் வரமாட்டோம். நாங்கள் யார்? சதுரங்க சிப்பாய். சிறகடித்து பறப்பவனை சமாதானத்துக்கு உதாரணம் சொல்வர். அவன் யார்? புறா.இருட்டில் மினு மினுக்கும், ஆனால் நட்சத்திரம் அல்ல. அது என்ன? மின்மினிப் பூச்சி