வட்ட வட்ட பாய், வாழ்வு தரும் பாய், ஊரெல்லாம் சுற்றும் பாய், ஒவ்வொருவரும் விரும்பும் பாய். -ரூபாய். பிறக்கும் போது வால் உண்டு, இறக்கும் போது வால் இல்லை. -தவளை.
கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் -மெழுகுவர்த்தி சூடு பட்டு சிவந்தவன், வீடு கட்ட உதவுவான். -செங்கல்
ஒரு பச்சை கற்களை கடலில் வீசி இருந்தால் அது என்னவாகும்?- ஈரமாகும் .எல்லா பிரியாணிக்கும் டெஸ்ட்வச்சா எந்த பிரியாணி பெயில் ஆகும்?-முட்டை பிரியாணி
கீழே விழுந்தாலும் காயம் படாமல் இருப்பது -மழைஎந்த வில்லை நாம கட்ட முடியாது? - வானவில்
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். –அலாரம். உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம் - அஞ்சல் பெட்டி
முதுகிலே சுமை தூக்கி, முனகாமல் அசைந்து வரும்.- நத்தை தண்ணீரில் மிதக்குது.கட்டழகிய வீடுகள். - கப்பல்கள்.
தலை இல்லாதவன், தலையை சுமப்பவன். அவன் யார்? - தலையணை அந்தரத்தில் தொங்குவது சொம்பும், தண்ணீரும். அது என்ன? - இளநீர்
அம்மா பின்னிய நூலை, அவிழ்த்தால் போச்சு. அது என்ன?- இடியாப்பம் அடிமேல் அடி வாங்கி, அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன? மிருதங்கம்
கடல் நீரில் வளர்ந்து, மழை நீரில் மடிவது என்ன?-- : உப்பு விரல் இல்லாமலே, ஒரு கை அது என்ன? - தும்பிக்கை
வால் உள்ள பையன்,காற்றில் பறக்கிறான். அது என்ன?*--பட்டம் வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?--பூட்டும், சாவியும்.