.உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம். அது என்ன? தராசு தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன். அவன் யார்? தேங்காய்
.நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன். நான் யார்?வெங்காயம்உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?கடல் அலை
இந்த குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனையுண்டு. ஆனால் குற்றத்தை செய்து விட்டால் தண்டிக்க முடியாது. அது என்ன? தற்கொலை தேவைப்படும்போது தூக்கி எறியப்படும். தேவை இல்லாத போது பத்திரமாய் வைக்கப்படும். அது என்ன? நங்கூரம்
அச்சு இல்லாத சக்கரம், அழகை கூட்டும் சக்கரம். அது என்ன?வளையல் .முக்கண்ணன் சந்தைக்கு போகின்றான். அவன் யார்?தேங்காய்
மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும்.அது என்ன?இரயில் என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும்ஆவல். தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை. நான் மறைக்கப்பட வேண்டியவன். நான் யார்?ரகசியம்
அஸ்திவாரம் இல்லாமல் அரண்மனை கட்டினேன். அது என்ன? ---கப்பல்வாங்கும்போது கறுப்பு நிறமாகவும், பயன்படுத்தும் போது சிவப்பு நிறமாகவும், தூக்கி எறியும் போது சாம்பல் நிறமாகவும் இருப்பது எது?---விறகு
தேர் ஓடுது பூ உதிருது .அது என்ன? அரவை இயந்திரம் சங்கீதம் பாடுபவனுக்கு, சாப்பாடு இரத்தம். அது என்ன? கொசு
நான் மிகவும் முக்கியமானவன். ஆனால் ஒரு சில வினாடிக்கு மேல் என்னை உங்களிடம் வைத்திருக்க முடியாது. நான் யார்?மூச்சு காற்று. நான் ஒரு பாறை. ஆனால், நீரில் போட்டால் கரைந்து விடுவேன். நான் யார்? ஐஸ் கட்டி
உயரமான இடத்தில் இருந்து தூக்கி எரிந்தாலும், அதற்கு ஒன்றும் ஆகாது. அனால், தண்ணீரில் போட்டால் மட்டும், அது செத்து விடும். அது என்ன?காகிதம்இவருடைய உடம்பெல்லாம் சிகப்பு, குடுமி பச்சை. யார் இவர்?தக்காளி
முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது. அது என்ன? குயில் உடம்பு முழுவதும் முள்.அது என்ன? கள்ளிசெடிகையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்? தையல்காரர்