குதி குதி என குதிக்கிறான், கொட்டைப் பல்லால் சிரிக்கிறான். அவன் யார்?சோளப்போறி .ஒற்றை காதுக்காரன் ஓடி ஓடி வேலி அடிக்கிறான். அவன் யார்? ஊசி .
பிறந்தது முதல் வயிற்றாலே அசைந்து போகிறது. அது என்ன? - பாம்பு .கடிப்பட மாட்டாள், பிடிப்பட மாட்டாள்.அவள் யார்? - தண்ணீர்.
கழுத்தை வெட்டினால் கண் தெரியும்?அவன் யார்? - நுங்கு உச்சி கிளையிலே ஒரு முழு குச்சி ஊசல் ஆடுது. அது என்ன? - முருங்கைக்காய்
பல் துலக்க மாட்டான். ஆனால், இவன் பல் எப்பொழுதும் வெள்ளை.இவன் யார்? - பூண்டு சூரிய ஒளியில் உணவை சமைப்பேன்.சுற்றுச் சூழலைப் பேணிக்காப்பேன்.நான் யார்? - மரம்
இரவிலே பிறந்த ராஜகுமாரனுக்கு தலையிலே ஒரு குடை. அவன் யார்? காளான் பார்த்தால் கல், பல் பட்டால் நீர். அது என்ன?பனிக்கட்டி icebar
வெள்ளை மாடு, வாலால் நீர் அருந்தும். அது என்ன? விளக்கு அட்டைக்கு ஆயிரம் கண்ணு, முட்டைக்கு மூணு கண்ணு. அவர்கள் யார்? கட்டிலும், தேங்காயும்
தேடிக் கிடைத்த இறையை, கூடி கூடி உண்பவன். அவன் யார் ? காகம் ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலை கனம் அதிகம். யார் அவன் ? பம்பரம்
என் தாயோ கடல், என் தந்தையோ சூரியன், என்னை விரும்பாத வீடே இல்லை. நான் யார்? உப்பு வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது, கொள்ளையடிக்க முடியாது. கொடுத்தாலும் குறையாது. அது என்ன? - கல்வி
கிளை உண்டு, ஆனால் இலை இல்லை - மான் கொம்பு. பச்சை நிற அழகிக்கு உதட்டு சாயம் பூசாமலே சிவந்த வாய் - பச்சை கிளி.
முற்றத்தில் நடப்பான், மூலையில் படுப்பான். அவன் யார்? துடைப்பான் ஒளி கொடுக்கும் விளக்கு அல்ல, சூடு கொடுக்கும் தீயல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல. அது என்ன? - சூரியன்