என் தாயோ கடல், என் தந்தையோ சூரியன், என்னை விரும்பாத வீடே இல்லை. நான் யார்? உப்பு வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது, கொள்ளையடிக்க முடியாது. கொடுத்தாலும் குறையாது. அது என்ன? - கல்வி
கிளை உண்டு, ஆனால் இலை இல்லை - மான் கொம்பு. பச்சை நிற அழகிக்கு உதட்டு சாயம் பூசாமலே சிவந்த வாய் - பச்சை கிளி.
முற்றத்தில் நடப்பான், மூலையில் படுப்பான். அவன் யார்? துடைப்பான் ஒளி கொடுக்கும் விளக்கு அல்ல, சூடு கொடுக்கும் தீயல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல. அது என்ன? - சூரியன்
வட்ட வட்ட பாய், வாழ்வு தரும் பாய், ஊரெல்லாம் சுற்றும் பாய், ஒவ்வொருவரும் விரும்பும் பாய். -ரூபாய். பிறக்கும் போது வால் உண்டு, இறக்கும் போது வால் இல்லை. -தவளை.
கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் -மெழுகுவர்த்தி சூடு பட்டு சிவந்தவன், வீடு கட்ட உதவுவான். -செங்கல்
ஒரு பச்சை கற்களை கடலில் வீசி இருந்தால் அது என்னவாகும்?- ஈரமாகும் .எல்லா பிரியாணிக்கும் டெஸ்ட்வச்சா எந்த பிரியாணி பெயில் ஆகும்?-முட்டை பிரியாணி
கீழே விழுந்தாலும் காயம் படாமல் இருப்பது -மழைஎந்த வில்லை நாம கட்ட முடியாது? - வானவில்
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். –அலாரம். உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம் - அஞ்சல் பெட்டி
முதுகிலே சுமை தூக்கி, முனகாமல் அசைந்து வரும்.- நத்தை தண்ணீரில் மிதக்குது.கட்டழகிய வீடுகள். - கப்பல்கள்.
தலை இல்லாதவன், தலையை சுமப்பவன். அவன் யார்? - தலையணை அந்தரத்தில் தொங்குவது சொம்பும், தண்ணீரும். அது என்ன? - இளநீர்