25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பழமொழி.

Apr 15, 2026

பறவைகள் பற்றிய பழமொழிகள் -2

. வௌவால் வீட்டிற்கு விருந்திற்கு போனால் தலைகீழாகத்தான் தொங்கணும். . ஒரு குருவி இரையெடுத்தால் ஒன்பது குருவி வாய் திறக்கும். . குருவி தலைமீது பறக்கிறது என்பதற்காக தலையில் கூடுகட்ட அனுமதிக்கலாமா.  கடல் வற்றும் கருவாடு தின்னலாம் என்று காத்திருந்து உடல் வற்றி செத்ததாம் கொக்கு.  கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் காலை தூக்கிகிட்டு ஆடிச்சாம்.

Apr 08, 2026

பறவைகள் பற்றிய பழமொழிகள் - 1

தூக்கணாங்குருவி குரங்குக்கு புத்தி சொன்னது போல.   வித்தை காட்டுற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து. பாசமா வளர்த்தானாம் பச்சைக்கிளி.. அத பொசுக்குன்னு வெட்டுச்சாம் வெட்டுக்கிளி. காட்டு கோழிக்கு உரலும் உலக்கையும்தான் கைலாசம். பாக்கு தின்ற வௌவாலுக்கு தாம்பூலம் தந்தது யாரோ?

Apr 01, 2026

ஜோதிட பழமொழிகள் -2

.ஞாயிற்றுக்கிழமை பிறந்தால்,நாய் படாத பாடு....  சித்திரை, பத்தரை மாற்று தங்கம்..... .மிருகசீரிடம் பட்டாபிஷேகம்...... .திருவோணம் பரிமள பிரியன்.. .பரணியில் மழை பெய்தால், தரணி விளையும்..

Mar 25, 2026

ஜோதிட பழமொழிகள் 1

அவிட்டம் தவிட்டு பானையிலும் தங்கம் சேரும்...... குரு கொடுப்பின் சனி தடுப்பார், சனி கொடுப்பின் எவர் தடுப்பார்......! .கன்னியில் செவ்வாய், கடலும் வற்றும்..... வைத்தியன் கையை பிடிப்பான், ஜோதிடன் |காலை பிடிப்பான்.... குரு நின்ற இடம் பாழ், சனி பார்த்த இடம் பாழ்.....

Mar 18, 2026

பணம் பத்தா இருக்கணும், பொண்ணு முத்தா இருக்கணும், முறையும் அத்தை மகளா இருக்கணும்.

நிச்சயதார்த்தம் என்பதை பரிசம் போடுதல் எனக் கூறலாம். அதாவது 'பரிசு கொடுத்தல்' என்பதுதான் மருவிப் பரிசம் என்றாகிவிட்டது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். நிச்சயதார்த்தத்திற்கும் பரிசு கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்?அந்தக் காலத்தில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யவேண்டுமானால், ஆண்மகன் தன் சம்பாத்தியத்தில் பொருள் சேர்த்து ஒரு பெரிய தொகையைப் பெண் வீட்டார்க்கு கொடுக்கவேண்டுமாம். தனக்கு மனைவியாகத் தன் வீட்டிற்கு வரப்போகிறவளை பேணி வளர்த்த குடும்பத்திற்காக ஒரு ஆண் கொடுக்கும் பரிசுதான் அந்தத் தொகை. அப்படி பரிசு கொடுக்க நம்மிடம் நிறைய பணம் இருக்க வேண்டும். ஏனெனில், பெண்ணின் அழகு மற்றும் குடும்ப சூழ்நிலை பொறுத்து அந்தத் தொகை அதிகரிக்கும். அதனால்தான் பணம் பத்தா இருக்கணும்.பின் பெண் முத்துபோல அழகாக மற்றும் நல்ல குணங்களை கொண்டவளாக இருக்கணும். முறை அத்தைமகளாக இருந்தால் பணம்கூடக் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை.

Mar 11, 2026

பணம் இருந்தால் பகைவன் பல்லும் மின்னும். பணம் இல்லாவிட்டால் சொந்தக்காரன் சொல்லும் கொல்லும்.பணம் இல்லாவிட்டால் சொந்தக்காரன் சொல்லும் கொல்லும்.

பணம் இருந்தால் பகைவன் பல்லும் மின்னும்.பணம் இல்லாவிட்டால் சொந்தக்காரன் சொல்லும் கொல்லும்.எப்போதும் உங்களுக்கென்று சேர்த்து வைத்துக் கொண்டு ,மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

Mar 04, 2026

உணவுப் பழக்கம் பழமொழி வடிவில். NO -3

 மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு.வாந்திக்கு மருந்து மணத்தக்காளி. வாத நோய் தடுக்க அரைக்கீரை. வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.  பருமன் குறைய முட்டைக்கோஸ். பித்தம் தணிக்க நெல்லிக்காய்.குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை. 

Feb 25, 2026

உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்:NO-2.

 கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்.கொலஸ்ட்ரால் குறைக்கப் பன்னீர் திராட்சை.சித்தம் தெளிய வில்வம்.சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி.சூட்டைத் தணிக்க கருணைக்கிழங்கு.ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்.தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு.தேனுடன் இஞ்சி இரத்தத் தூய்மை.

Feb 18, 2026

உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்: .NO- 1.

1. சீரகம் இல்லா உணவு சிறக்காது.2. தன் காயம் காக்க வெங்காயம் போதும்.3. வாழை வாழ வைக்கும்.4. அவசர சோறு ஆபத்து.5. இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.6. ரத்தக் கொதிப்புக்கு அகத்திக் கீரை.7. இருமலைப் போக்கும் வெந்தயக்கீரை.8. உஷ்ணம் தவிர்க்க கம்பங்களி.

Feb 11, 2026

மருத்துவ பழமொழிகள்.

1. ஆறு வெற்றிலை இருந்தால் அறியாதவன் வீட்டிலும் சாப்பிடலாம். பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம். 2. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் முதுமையிலும் இளமை. 3. மேகம் போக்கும் ஆலம்பட்டை, பித்தம் போக்கும் வேப்பம் பட்டை 4. ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா. 5. ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன். 6. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி 7. மேகம் முற்றினால் வெள்ளை. வெள்ளை முற்றினால் வெட்டை வெட்டை முற்றினால் கட்டை  8.இறங்கு பொழுதில் மருந்து குடி. 9. வில்வப்பழம் தின்பார் பித்தம் போக, பனம்பழம் தின்பார் பசியைப் போக்க. 10. குடலைக் கழுவி உடலைப் பேண்

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News