25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் >> ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா APRIL 24 கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு திட்ட முகாம் நிறைவு >> ராஜபாளையம் கோயில்வழிபாடு, திருக்கல்யாண நிகழ்ச்சி. >> ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா >> ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளியில்  இலக்கிய மன்றம் நிறைவு விழா >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண் டாள் கோயிலில் யுகாதி விழா . >> கோதண்டராமர் கோவிலில் பிரமோற்சவ விழா. >> பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >>


பழமொழி.

Apr 23, 2025

 ஆழ உழுவதை விட அகல உழுவதே மேல்

‘‘ ஆழ உழுவதை விட அகல உழுவதே மேல்’’என்று பழமொழியாகக் கூறுகின்றனர். நிலத்தில் அகலமாக உழுதால் பெய்யும்மழைநீர்நிலத்தில்தேங்கும், மண்ணரிப்பும், நிலத்தில் மேல் உள்ள சத்துக்களும் அடித்துச் செல்லப்படமாட்டாது என்ற உழவின்தொழில்நுட்பத்தைஇப்பழமொழியில்எடுத்தரைக்கின்றனர். தற்போதுவேளாண்விஞ்ஞானிகள்சரிவுக்குக்குறுக்கேஉழவேண்டும்என்றுகூறுவது  அகல  உழுவதையேஎன்பதுகுறிப்பிடத்தக்கதாகும்.

Apr 16, 2025

மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.

மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.  பொருள்: ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்று பொருள் வருகிறது,உண்மையான பொருள்:மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்,மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயி வீட்டில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து நிலத்தில் உழைத்தால் பொன்னும், பொருளும் சேரும் என்பது அர்த்தம்.

Apr 09, 2025

சங்கரா சங்கர என்றால் சாதம் வாயில் வந்து விழுமா?

சங்கரா சங்கர என்றால் சாதம் வாயில் வந்து விழுமா?பொருள்: ஒரு செயலுக்குரிய முயற்சியில்லாமல் வெறும் வாய்ப்பேச்சு பயன் தராது.

Apr 02, 2025

பசித்தபின் புசி

பசித்தபின் புசி.பொருள்,நன்றாக பசி எடுத்த பிறகு உண்டோமானால் உணவு ருசியாக இருக்கும். அதே சமயம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகவும் வாழலாம்.

Mar 26, 2025

ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.

ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான். பொருள் - தந்தையின் தொழிலை மகனுக்கு யாரும் கற்றுத்தரவேண்டிய அவசியம் இல்லை. அவன் தன் தந்தையுடன் இருக்கும்போது, அவனை அறியாமலே அதை அவன் கற்றுக்கொண்டு ,அதில் அவன் சிறந்தவனாகவும் விளங்குவான்.

Mar 19, 2025

ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்.

ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்.பொருள்: எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு 

Mar 12, 2025

கெட்டவனுக்கு உற்றார் கிளையிலும் இல்லை

கெட்டவனுக்கு உற்றார் கிளையிலும் இல்லை. பொருள்: தீய குணம் மற்றும் நடத்தை கொண்டவனின் சொந்தம் என அவனது உறவுகள் கூட கூறிக்கொள்ள மாட்டார்கள். 

Mar 05, 2025

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

பொருள்: என்னதான் பணம் சம்பாதித்து பெரும் செல்வந்தன் ஆனாலும் ,அவனிடம் படிப்பு இல்லை என்றால் ,அவனிடம் ஞானம் இருக்காது என்பதே பொருள்.

Feb 26, 2025

இருகினால் களி இளகினால் கூழ்

இருகினால் களி இளகினால் கூழ்பொருள்: எந்த ஒரு விடயத்திலும் எவ்வகையிலாவது நமக்கு நன்மை உண்டு.

Feb 19, 2025

கல்லை கண்டால் நாயை காணோம், நாயை கண்டால் கல்லைக் காணோம்.

 பொருள் -"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனை கண்டால் கல்லைக் காணோம்" என்பதே சரி. நாயகன் என்பது இங்கு கடவுளை குறிக்கிறது. ஒரு கற்சிலையை கற்சிலையாக பார்த்தால் அதில் கடவுள் தெரியமாட்டார். அதே கற்சிலையை கடவுளாக பார்த்தால் அங்கு கல் தெரியாது.

1 2 3 4 5 6 7 8 9 10

AD's



More News