‘‘ ஆழ உழுவதை விட அகல உழுவதே மேல்’’என்று பழமொழியாகக் கூறுகின்றனர். நிலத்தில் அகலமாக உழுதால் பெய்யும்மழைநீர்நிலத்தில்தேங்கும், மண்ணரிப்பும், நிலத்தில் மேல் உள்ள சத்துக்களும் அடித்துச் செல்லப்படமாட்டாது என்ற உழவின்தொழில்நுட்பத்தைஇப்பழமொழியில்எடுத்தரைக்கின்றனர். தற்போதுவேளாண்விஞ்ஞானிகள்சரிவுக்குக்குறுக்கேஉழவேண்டும்என்றுகூறுவது அகல உழுவதையேஎன்பதுகுறிப்பிடத்தக்கதாகும்.
மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம். பொருள்: ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்று பொருள் வருகிறது,உண்மையான பொருள்:மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்,மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயி வீட்டில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து நிலத்தில் உழைத்தால் பொன்னும், பொருளும் சேரும் என்பது அர்த்தம்.
சங்கரா சங்கர என்றால் சாதம் வாயில் வந்து விழுமா?பொருள்: ஒரு செயலுக்குரிய முயற்சியில்லாமல் வெறும் வாய்ப்பேச்சு பயன் தராது.
பசித்தபின் புசி.பொருள்,நன்றாக பசி எடுத்த பிறகு உண்டோமானால் உணவு ருசியாக இருக்கும். அதே சமயம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகவும் வாழலாம்.
ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான். பொருள் - தந்தையின் தொழிலை மகனுக்கு யாரும் கற்றுத்தரவேண்டிய அவசியம் இல்லை. அவன் தன் தந்தையுடன் இருக்கும்போது, அவனை அறியாமலே அதை அவன் கற்றுக்கொண்டு ,அதில் அவன் சிறந்தவனாகவும் விளங்குவான்.
ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்.பொருள்: எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு
கெட்டவனுக்கு உற்றார் கிளையிலும் இல்லை. பொருள்: தீய குணம் மற்றும் நடத்தை கொண்டவனின் சொந்தம் என அவனது உறவுகள் கூட கூறிக்கொள்ள மாட்டார்கள்.
பொருள்: என்னதான் பணம் சம்பாதித்து பெரும் செல்வந்தன் ஆனாலும் ,அவனிடம் படிப்பு இல்லை என்றால் ,அவனிடம் ஞானம் இருக்காது என்பதே பொருள்.
இருகினால் களி இளகினால் கூழ்பொருள்: எந்த ஒரு விடயத்திலும் எவ்வகையிலாவது நமக்கு நன்மை உண்டு.
பொருள் -"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனை கண்டால் கல்லைக் காணோம்" என்பதே சரி. நாயகன் என்பது இங்கு கடவுளை குறிக்கிறது. ஒரு கற்சிலையை கற்சிலையாக பார்த்தால் அதில் கடவுள் தெரியமாட்டார். அதே கற்சிலையை கடவுளாக பார்த்தால் அங்கு கல் தெரியாது.