ஆடிமாதப் பழமொழிகள் பல 'ஆடிப் பட்டம் தேடி விதை', 'ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்', 'ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', 'ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', 'ஆடிக் கூழ் அமிர்தமாகும்' என்னும் பழமொழிகளாக மக்கள் மத்தியில் வழங்கப்படுகின்றன
ஆடி மாதத்தில் விதைப்பதே விதைப்பதற்குச் சரியான காலகட்டமாகும்.மேலும், விவசாயம் செய்கின்றபோது விவசாயம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாது பலனை மட்டும் எதிரபார்த்தல் கூடாது. என்ற இக்கருத்தை, பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன
காலத்தோடு, காலத்திற்கேற்ற பயிர்களைப் பயிரிட வேண்டும். அவ்வாறு பயிரிட்டால் தான் நன்கு விளைச்சலைப் பெருக்க இயலும். பருவம் தவறி விதைத்தால் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற முடியாது. இதனை, இப்பழமொழி தெளிவுறுத்துகின்றன.
நிலத்தில் மாட்டை ஏரில் பூட்டி உழும்போது ஒன்றன் பின் ஒன்றாகவே உழுதல் வேண்டும். அதனைவிட்டுவிட்டு நான்கு ஏர்கள் உழுகின்றதெனில் வரிசையாக உழுதல் கூடாது என்ற முறைமையை, பழமொழி விளக்குகின்றது.
‘‘எள்ளுக்கு ஏழு உழவு’’ .நெல், கரும்பு, சோளம் என ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு மாதிரியாக உழுதல் வேண்டும். எள் விதைப்பதற்கு முன்னர் நிலத்தை ஏழு முறை உழுதல் வேண்டும். அப்போதுதான் எள் நன்கு முளைத்து வளர்ந்து பலனளிக்கும். இல்லை எனில் வளர்ச்சி குன்றி விளைச்சலும் குறையும். இத்தொழில் நுட்பக் கருத்தினை, பழமொழி தெளிவுறுத்துகிறது.
சிறு பிள்ளைகள் இருவர் அண்ணன் தம்பி என்று வைத்துக்கொள்வோம். ஆனால், தற்போது அவர்கள் சண்டை போட்டுக்கொண்டு பேசுவதில்லை. அண்ணன் ஒரு தின்பண்டம் வாங்கி வருகிறான். தன் தம்பியிடம் பாதி கொடுக்கிறான். ஆனால் தம்பி, அண்ணன் மீதுள்ள கோபத்தால் வேண்டாம் என்கிறான். அப்போது அண்ணன்'உனக்குக் கோபமாச்சி, எனக்கு இலாபமாச்சி' என்று சொல்லிக்கொண்டு மீதி பாதி தின்பண்டத்தையும் அவனே தின்றுவிடுவான்.
தண்ணீர் இல்லாத குளத்துக்கு மீன் பிடிக்கச்சென்றானாம்.பொருள்: எந்த பொருள் எங்கு கிடைக்குமோ, அங்கு சென்று வாங்க வேண்டும்; இல்லாத இடத்தில் தேடக் கூடாது. அப்படி தேடுவதாகச் சொன்னால், அது பொய்.
பொருள்: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை உண்டு.யாரும் யாரையும், எந்த விஷயத்திற்கும் நிர்ப்பந்திக்க முடியாது; 'இந்த பாதை ஆபத்து' என்று இதமாகச் சொல்லி, நகர்ந்து விடுவது நல்லது, அது, நாம் வளர்த்த மகனே ஆனாலும் கூட!
சொல்லப்படும் பொருள்:தை மாதம் பிறந்தால் நல்ல வழி அல்லது நல்ல விஷயம் நடக்கும் .உண்மையான விளக்கம்:தை மாதத்தில் அறுவடை காலத்தில், விவசாயிகளின் கையில் பணவரவு இருக்கும். அதை வைத்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை செய்யலாம்.இன்னொரு பொருள், வயலில் முளைத்து இருக்கும் நெல் மணிகள் வரப்பை அடைத்து கொண்டு வழியில்லாமல் வளர்ந்து நிற்கும். தை மாதம் பிறந்தவுடன் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, வரப்பில் நடக்க வழி கிடைக்கும்.
மண் பானையில் இருப்பதை மாணிக்கப் பானையில் போட்டு மூடணும்.மாணிக்கப் பானை என்பது நமது வயிறு. அதாவது பாத்திரத்தில் இருக்கும் உணவை நமது வயிறு என்னும் பாத்திரத்தில் போட்டு மூடுவதை இவ்வாறாகக் கூறுகிறார்கள்.