25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சமையல்

Apr 11, 2026

கொண்டைக்கடலை மசால் ப்ரை.

தேவையான பொருட்கள்:வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம்கடலை மாவு - 4 தேக்கரண்டிமிளகாய் துாள், அரிசி மாவு, கரம் மசாலாத்துாள் - தலா 1 மேஜைகரண்டிஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:கொண்டைக் கடலையை இரண்டு மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். பின், கடலையில் உள்ள தண்ணீரை வடிக்கவும்.அகலமான பாத்திரத்தில், வேக வைத்த கடலையுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் துாள், கரம்மசாலாத்துாள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக கடலையை போட்டு பொரித்து எடுக்கவும்.புரதம், இரும்பு சத்து, நார்சத்து நிறைந்த கொண்டைக்கடலை மசால் ப்ரை தயார். குழந்தைகள் விரும்பி உண்பர்.

Apr 11, 2026

கத்தரிக்காய் ரசவாங்கி.

தேவையான பொருட்கள்:கத்தரிக்காய் - 1/4 கிலோ,புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,தனியா - 2 டீஸ்பூன்,காய்ந்த மிளகாய்- 2,கடலைப்பருப்பு -1 டீஸ்பூன்,தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்,துவரம்பருப்பு - ஒரு சிறிய கப்,மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,பெருங்காயத்தூள் - சிறிதளவு,கடுகு -1 டீஸ்பூன்,உளுந்தம்பருப்பு - ½ டீஸ்பூன்,எண்ணெய் -2 டீஸ்பூன்,‬‎உப்பு -  தேவையான அளவு.செய்முறை:கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்து அரைக்கவும்.துவரம்பருப்பை வேகவைக்கவும். கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் தூள்,உப்பு,புளிக்கரைசல்சேர்த்துவேகவிடவும்.இதனுடன், அரைத்துவைத்த பொடி, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு,உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.இந்த கத்தரிக்காய் ரசவாங்கியை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

Apr 11, 2026

பூண்டு தேங்காய் பொடி.

தேவையான பொருள்கள்:பூண்டு - 10 முதல் 12 பல்,துருவிய தேங்காய் -1கப்,காய்ந்த மிளகாய் - 5 முதல் 7,காய்ந்த மிளகாய் -1கப்,கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்,உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்,உளுத்தம்பருப்பு -1 ஸ்பூன்,சீரகம் - 1/2 ஸ்பூன்,உப்பு - தேவைக்கேற்ப,எண்ணெய் - 1 ஸ்பூன்,கருவேப்பிலை - சிறிதளவு,செய்முறை:கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.காய்ந்த மிளகாய், சீரகம், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும்.பூண்டு சேர்த்து லேசா வறுக்கவும். (பச்சை வாசனை போகும் வரை).கடைசியாக தேங்காய் சேர்த்து நன்றாக காய வறுக்கவும்.. (தேங்காய்ல ஈரம் இருக்கக் கூடாது -இது முக்கியம்)முழுக்க குளிர்ந்ததும், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.டிப்ஸ்:தேங்காய் நன்றாக வறுத்தா 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.கொஞ்சம் புளி சேர்த்தா super taste. காரம் அதிகமா வேண்டும்னா மிளகாய் கூடச்சேர்க்கலாம்.

Apr 11, 2026

கேரட் கேசரி.

தேவையான பொருட்கள்:கேரட் - அரை கிலோ,சர்க்கரை - கால் கிலோ,பால் - அரை லிட்டர்,வறுத்த முந்திரி, கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - தலா 10,தேங்காய் துருவல்,கோதுமை மாவு - தலா 2 தேக்கரண்டி,நெய் - 2 ஸ்பூன்.செய்முறை:குக்கரில் பேரீச்சம் பழம், கேரட் துருவலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் மசிய அரைக்கவும்.பால்கோவா பதத்திற்கு பாலை சுண்ட காய்ச்சவும். நெய் விட்டு கோதுமை மாவை பொன்னிறமாக வறுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சிறிதுதண்ணீர் விட்டு, சர்க்கரை சேர்க்கவும். பாகு பதத்திற்கு வரும் போது கேரட் விழுது, பால்,கோதுமை மாவு சேர்த்து, அடிபிடிக்காமல் கெட்டியாக கேசரி பதம் வரும் வரை கிளறவும்.அதில், வறுத்த முந்திரியை துாவி இறக்கினால், சத்து நிறைந்த, கேரட் கேசரி தயார்.மாலை சிற்றுண்டியாக குழந்தைகள் விரும்பி உண்பர்.

Apr 11, 2026

புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி.

தேவையான பொருட்கள் -1 புடலங்காய்,1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்,ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்,1/4 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் ,உப்பு தேவையான அளவு.எண்ணெய் பொரிப்பதற்கு. செய்முறை -புடலங்காயை கழுவி வைத்துக்கொள்ளவும். பின்னர் காயின் ஓரங்களை வெட்டி விட்டு மையப்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.அதை ரிங் ரிங் ஆக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.நறுக்கும் போது உதிரும் சதைப்பகுதியை விட்டுவிட்டு மற்ற புடலங்காய் ரிங்ஸ்களை எடுத்து வைக்கவும்.ஒரு பௌலில் அரிசிமாவு, கடலை மாவு, காஷ்மீர் +மிளகாய்த்தூள்,பெருங்காயத்தூள், உப்பு,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும். அதில் நறுக்கிய ரிங்ஸ்சை சேர்த்து பிரட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தயாராக வைத்துள்ள ரிங்ஸ்சை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.இப்போது மிகவும் சுவையான ஒரு வித்தியாசமான புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி தயார். இந்த சுவையான புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜியை அனைவரும் ஈவ்னிங் பைட்ஸ் ஆக செய்து சுவைக்கவும்.

Apr 11, 2026

கருணைக்கிழங்கு பொடிமாஸ்.

தேவையான பொருட்கள் - 1/4 கிலோ - கருணைக்கிழங்கு,3டேபிள் ஸ்பூன் ஆயில்,1/4ஸ்பூன் கடுகு,1/4ஸ்பூன் உளுந்து,1வெங்காயம் ,1கொத்து கருவேப்பிலை,1/4ஸ்பூன் மஞ்சள் தூள்,1ஸ்பூன் மிளகாய் தூள்,3டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்,உப்பு.செய்முறை - கருணைக்கிழங்கின் தோலை நீக்கி விட்டு மண் இல்லாமல் நன்றாக கழுவிக் கொள்ளவும்.பின்னர் கேரட் துருவதை போல் துருவிக் கொள்ளவும்.பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் துருவிய கருணைக்கிழங்கை சேர்த்து கை விடாமல் 2நிமிடம் வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிழங்கு முருவலாக வரும் வரை கிளறவும்.பின் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.கிழங்கை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.இல்லை எனில் அடி பிடிக்கும், மிகவும் குறைந்த தீயில் சமைக்கவும். தண்ணீர் சேர்க்க கூடாது.சுவை அருமையாக இருக்கும். கிழங்கு சற்று பழைய கிழங்காக இருக்க வேண்டும்.எண்ணெயில் வறுப்பதால் அரிப்பு இருக்காது.

Apr 04, 2026

சில்லி சாஸ்

தேவையான பொருட்கள்:காய்ந்த மிளகாய் (சிவப்பு) - 10-15 (விதைகளை நீக்கினால் காரம் குறையும்)பூண்டு - 4-5 பற்கள்,வினிகர் (Vinegar) - 2 மேசைக்கரண்டி,சர்க்கரை - 1 தேக்கரண்டி,உப்பு - தேவையான அளவு,தண்ணீர் - அரைக்கத் தேவையான அளவு,செய்முறை: காய்ந்த மிளகாயை 15-20 நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும்.ஊறிய மிளகாய், பூண்டு, சர்க்கரை, உப்பு, வினிகர் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.அரைத்த விழுதை ஒரு கடாயில் ஊற்றி, மிதமான தீயில் 5 நிமிடம் கிளறி, சாஸ் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.ஆறிய பிறகு, சுத்தமான காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து பிரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரைகெடாது. பச்சை மிளகாய் சாஸ் செய்ய, காய்ந்த மிளகாய்க்கு பதிலாக பச்சை மிளகாயைப் பயன்படுத்தலாம்.

Apr 04, 2026

சில்லி முட்டை

தேவையான பொருட்கள்:வேகவைத்த முட்டைகள் - 5,எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,நறுக்கிய வெங்காயம்- சிறிது,இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்,மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,பச்சை மிளகாய்- 3,மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்,சர்க்கரை - அரை டீஸ்பூன்,கெட்டியான புளிக்கரைசல் - 1 ஸ்பூன்,உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை:வேக வைத்த முட்டைகளின் ஓட்டை எடுத்து விட்டு முள்கரண்டியால் முட்டைகளின் மீது குத்தி விடவும்.ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, இஞ்சி, பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், புளிக் கரைசல், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.அரை கப் கொதிநீரை ஊற்றி, சர்க்கரை, மஞ்சள் தூள் சேர்க்கவும். குழம்பில் முட்டைகளை மெதுவாக போடவும்.நன்றாக கெட்டிப்படும் வரை குறைந்த தணலில் வைக்கவும். ருசியான சில்லி முட்டை தயார்.

Apr 04, 2026

சில்லி சப்பாத்தி

தேவையான பொருட்கள்:மிஞ்சிய சப்பாத்தி - 4 அல்லது 5,வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,பச்சை மிளகாய் - 2,குடைமிளகாய் - பாதி (விருப்பப்பட்டால்),தக்காளி சாஸ் (Ketchup) - 1 மேசைக்கரண்டி,சோயா சாஸ் - 1 தேக்கரண்டி,மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி,எண்ணெய், உப்பு - தேவையான அளவு,கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு.செய்முறை:சப்பாத்திகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு கடாயில் பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், தேவையான உப்பு மற்றும் சாஸ் வகைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.வறுத்து வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, சாஸ் அனைத்து சப்பாத்திகளிலும் படுமாறு நன்கு கிளறவும்.சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி சாப்ட் ஆகும் வரை 2 நிமிடம் மூடி வைத்து, இறுதியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.சப்பாத்திகளை முன்கூட்டியே வறுத்து சேர்ப்பது சில்லி சப்பாத்திக்கு மொறுமொறுப்பான தன்மையைத் தரும்.குழந்தைகளுக்கு கொடுக்கும்போது காரத்தை குறைத்துக் கொள்ளலாம்.மிஞ்சிய சப்பாத்திகளைப் பயன்படுத்தி 10 நிமிடங்களில் சுவையான சில்லி சப்பாத்தி செய்யலாம்.

Apr 04, 2026

சில்லி பேபி பொட்டேட்டோ (Chilli Baby Potato).

தேவையான பொருட்கள்:சிறு உருளைக்கிழங்கு (Baby Potatoes) - 250 கிராம் (வேகவைத்தது),மிளகாய் தூள் - 1 tsp (காரத்திற்கு ஏற்ப),இஞ்சி பூண்டு விழுது - 1/2 tsp,வறுத்த வேர்க்கடலை, தனியா, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம் பொடி - 1 tsp,மஞ்சள் தூள் - 1/4 tsp,கடுகு, உளுந்தம் பருப்பு - தாளிக்க,கருவேப்பிலை - சிறிதளவு,எண்ணெய் - 2-3 tbsp,உப்பு - தேவையான அளவு,செய்முறை :பேபி பொட்டேட்டோக்களை வேகவைத்து, தோல் நீக்கி, ஆங்காங்கே சிறு துளைகள் இடவும்.(மசாலா இறங்க).ஒரு கிண்ணத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, மற்றும் வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.மசாலாவில் ஊறிய உருளைக்கிழங்குகளைச் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, தோல் மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.சூடான சில்லி பேபி பொட்டேட்டோ தயார். தயிர் சாதம் அல்லது ரசம் சாதத்துடன் பரிமாறலாம்.உருளைக்கிழங்கை அதிகமாக வேகவைக்கக் கூடாது (குழைந்துவிடும்).அரிசி மாவு அல்லது கார்ன் பிளவர் சிறிது சேர்த்தால் இன்னும் மொறுமொறுப்பாக கிடைக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 60 61

AD's



More News