தேவையான பொருட்கள்:பிரெட் - 6 துண்டுகள்முட்டை -3பால் - ½கிளாஸ்நெய் - தேவையான அளவுமிளகுத்தூள் -½ டீஸ்பூன்உப்பு - தேவையான அளவு.செய்முறை:ஒரு பாத்திரத்தில் 3 முட்டையை உடைந்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.அதில் ½ கிளாஸ் பால், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.பிரெட் துண்டுகளை விருப்பமானால் டிரையாங்கிள் (Triangle) வடிவில் 'வெட்டிக் கொள்ளவும்.ஒவ்வொரு பிரெட் துண்டையும் முட்டை-பால் கலவையில் நன்றாக தோய்த்து எடுக்கவும்.தோசைக்கல்லை சூடாக்கி சிறிதளவு நெய் தடவவும்.தோய்த்த பிரெட் துண்டுகளை தோசைக்கல்லில் வைத்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்.சூடாக சட்னி, தக்காளி சாஸ் அல்லது தேனுடன் பரிமாறலாம்.டிப்ஸ்: சிறிதளவு மிளகுத்தூள் அல்லது சில்லி ஃப்ளேக்ஸ் தூவினால் சுவை இன்னும் அருமையாக இருக்கும். சுவையான & சத்தான காலை உணவு.
தேவையான பொருட்கள் : ரோஜா இதழ்கள் - 2 கப்,சர்க்கரை - 2 கப்,தண்ணீர் - 2 கப்,எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்,ரோஸ் எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்பிங்க்/ரெட் ஃபுட் கலர் சில துளிகள் (விருப்பம்),செய்முறை:ரோஜா இதழ்களைநன்றாக கழுவவும்.தண்ணீர் சேர்த்து 10-15 நிமிடம் கொதிக்க விடவும்.நிறம் இளஞ்சியப்பு ஆக மாறியதும் அடுப்பை அணைக்கவும்.வடிகட்டி இதழ்களை நீக்கவும்,வடிகட்டிய தண்ணீரில் சர்க்கரை சேர்த்து கிளறவும்.சிறிது கெட்டியான பதம் வரும் வரை கொதிக்க விடவும்.எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.ஆறிய பிறகு ரோஸ் எசென்ஸ் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து கலக்கவும்.குறிப்புகள் : பூச்சிக்கொல்லி தெளிக்காத நறுமண ரோஜா இதழ்களை பயன்படுத்தவும்.இந்த சிரப் ஃபிரிட்ஜில் 1 முதல் 2 மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.1கப் பால் + 2-3 டேபிள்ஸ்பூன் ரோஸ் சிரப் = சுவையான ரோஸ் மில்க்.
தேவையான பொருட்கள்:வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 கப்,வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது),தக்காளி -1 (விதை நீக்கி நறுக்கியது),பச்சை மிளகாய் -1 (பொடியாக நறுக்கியது),கொத்தமல்லித்தழை சிறிதளவு,எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்,மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,சாட் மசாலா- 1 /2 டீஸ்பூன்,உப்பு-தேவையான அளவு,வெண்ணெய் -1 டீஸ்பூன் (விருப்பம்).செய்முறை :ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ஸ்வீட் கார்னை சேர்க்கவும். அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.மிளகாய்த் தூள், மிளகுத்தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். எலுமிச்சை சாறு மற்றும் வெண்ணெய் சேர்த்து மீண்டும் கலக்கவும். உடனே பரிமாறினால் சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் தயார்.குறிப்பு:பரிமாறும் முன்பே எலுமிச்சை சாறு சேர்த்தால் சாட் ப்ரெஷ்ஷாகவும், சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:ப்ரோக்கோலி -2 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது),உருளைக்கிழங்கு -1 சிறியது (சிறிய துண்டுகளாக நறுக்கியது),வெண்ணெய் அல்லது எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது),பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது),தண்ணீர் அல்லது வெஜிடபிள் ஸ்டாக் -3 கப்,மிளகுத்தூள் -½டீஸ்பூன்,உப்பு - தேவையான அளவு.செய்முறை:ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது எண்னெயை சூடாக்கி, பூண்டு மற்றும் வெங்காயத்தை நன்றாக வதக்கவும். உருளைக்கிழங்கை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.ப்ரோக்கோலியை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து 2 நிமிடங்கள் லேசாக வதக்கவும்.தண்ணீர் அல்லது வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து 10-12 நிமிடங்கள் காய்கறிகள் மென்மையாகும் வரை வேகவிடவும்.உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து 2-3 நிமிடங்கள் மட்டும் கொதிக்கவிடவும். இறுதியாக மேலே சிறிதளவு மிளகுத்தூள் தூவி சூடாக பரிமாறவும். எளிமையான பொருட்களில் சத்தும் சுவையும் நிறைந்த ப்ரோக்கோலி சூப்பை வீட்டிலேயே செய்து ருசித்து மகிழுங்கள்.டிப்ஸ்:விருப்பப்பட்டால் பரிமாறும் முன், சிறிதளவு துருவிய சீஸ் தூவினால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :பேரிச்சம்பழம் -1 கப் (கொட்டைகளை நீக்கி),துருவிய தேங்காய் -1கப்,பாதாம் -1/4 கப்,முந்திரி - 1/4 கப்,ஏலக்காய் தூள் -1/4 டீஸ்பூன்,நெய்-1 டீஸ்பூன் (விருப்பமெனில்,)எள் (வறுத்தது) 1 டேபிள்ஸ்பூன் (விருப்பமெனில்).செய்முறை :பேரிச்சம்பழத்தை 10-15 நிமிடம் சூடான நீரில் ஊறவைக்கவும்.தண்ணீரை வடிகட்டி, பேரிச்சம்பழத்தை மிக்ஸியில் போட்டு நெகிழியாக அரைக்கவும்.ஒரு கடாயில் துருவிய தேங்காயை மிதமான தீயில் 3-4 நிமிடம் வறுக்கவும்.அதில் நெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.அரைத்த பேரிச்சம்பழம் விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்.பாதாம், முந்திரியை சிறிதாக நறுக்கி சேர்க்கவும். ஏலக்காய் தூள் மற்றும் எள்ளை சேர்த்து நன்றாக கலக்கவும்.கலவை கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கவும் சிறிது ஆற விடவும்.சிறு உருண்டைகளாக உருட்டி, தேவையானால் துருவிய தேங்காயில் உருட்டி பரிமாறவும்.பாலூட்டும் தாய்மார்களுக்கான சத்தான சிற்றுண்டி.
தேவையான பொருட்கள்:கோதுமை மாவு - 1 கப்,பேக்கிங் சோடா-சிட்டிகை (விருப்பம்),நன்கு பழுத்த வாழைப்பழம் - 2,தண்ணீர்-தேவையான அளவு,வெல்லம் - 1/2 கப்,சிறிய துண்டுகளாக நறுக்கிய தேங்காய் -2 டேபிள்ஸ்பூன்,ஏலக்காய் - 3,நெய் -1 டீஸ்பூன் (தேங்காய் வறுக்க),சிட்டிகை உப்பு,நெய் அல்லது எண்ணெய் -அப்பம் சுட தேவையான அளவு.செய்முறை:மிக்ஸி ஜாரில் வாழைப்பழம், கோதுமை மாவு, வெல்லம், ஏலக்காய், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் (Bowl) ஊற்றிக் கொள்ளவும்ஒரு வாணலியில் நெய் சேர்த்து, சிறிய துண்டுகளாக நறுக்கிய தேங்காயை லேசாக பொன்னிறமாக வறுத்து, மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.விருப்பப்பட்டால் சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து 10-15 நிமிடங்கள் ஓய்வெடுக்க விடவும். அப்பம் கல் அல்லது பணியாரக்கல்லை சூடாக்கி, சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் தடவவும். மாவை ஊற்றி இருபுறுமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.குறிப்பு:வாழைப்பழம் நன்கு பழுத்ததாக இருந்தால் அப்பம் மிகவும் மென்மையாகவும், இயற்கையான இனிப்புடனும் சுவையாகவும் இருக்கும். வறுத்த தேங்காய் துண்டுகளை சேர்ப்பதால் அப்பம் இன்னும் சுவையாகவும், ஒவ்வொரு கடியிலும் அருமையான மொறுமொறு உணர்வுடனும் இருக்கும்.சுவையான & சத்தான அப்பம்.
தேவையான பொருட்கள்: உதிர்த்த இடியாப்பம் - 1 கப்தக்காளி-1பெரிய வெங்காயம்- 1இஞ்சி - சிறுதுண்டுபூண்டு - 2 பல்பச்சை மிளகாய்-2தேங்காய்- சிறுதுண்டுதாளிக்க - பிரிஞ்சி இலை, பட்டை, சோம்பு, கறிவேப்பிலைஎண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு நெய் - 2 டீஸ்பூன்எலுமிச்சம்பழம் - அரை மூடி. செய்முறை:தேங்காய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் முதலியவற்றை லேசாக நீர்தெளித்து, மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.வெங்காயம், தக்காளியை மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பிரிஞ்சி இலை,சோம்பு, பட்டை போட்டு. வெடித்தவுடன் கறிவேப்பிலையைப் போடவும்.அரைத்த விழுதைப் போட்டு, வாசம் போகும் வரை இளந்தீயில் கிண்டவும்.நன்கு வெந்தவுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து, 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கிண்டுங்கள்.விழுது போல எல்லாம் சேர்ந்து வெந்தபின், இடியாப்பத்தைக் கொட்டிநெய் சேர்த்துக் கிளறவும். கடைசியாக எலுமிச்சம்பழத்தைப்பிழிந்துவிட்டு கிளறி உபயோகிக்கலாம்.இது வெங்காய தயிர்ப்பச்சடியுடன் சாப்பிட்டால் பிரியாணி போலஇருக்கும். விரும்பினால் கேரட், பட்டாணி, காலிபிளவரை சிறுதுண்டுகளாக்கி உப்பு சேர்த்து குழையாமல் வேகவைத்து கலந்துகொள்ளலாம்.வெங்காயம், தக்காளியுடன் சேர்த்து வதக்கிக்கொள்ளவும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:மேல் மாவுக்கு...கோதுமை மாவு - 2 கப்எண்ணெய் 2 டீஸ்பூன்கருஞ்சீரகம் - சிறிதளவுஎண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவுஉப்பு -தேவைக்கேற்பஸ்டபிங் செய்ய...பொட்டுக்கடலை - 1 கப்பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தலா 1 டீஸ்பூன்சீரகம் ஓமம், தலா கால் டீஸ்பூன்உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்பகொத்தமல்லித் தழை- சிறிதளவு.செய்முறை:மேல்மாவுக்கு, கொடுத்துள்ள பொருள்களில் தேவையான தண்ணீர்விட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும்.பொட்டுக்கடலையைச் சுத்தம் செய்து, அதில் பச்சை மிளகாய்,கொத்தமல்லி, சீரகம், ஓமம், இஞ்சி, உப்பு சேர்த்து மிக்சியில் நன்குபொடித்துக் கொள்ளவும்.கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் காய வைத்து, பொடித்துவைத்துள்ளதைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக்கி, செப்பு மாதிரிச் செய்து நடுவில் ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து இழுத்து மூடி,சப்பாத்தியாகத் தேய்த்து, தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.
தேவையான பொருட்கள்-ஒரு கப் கோதுமை மாவு,ஒரு கப் சர்க்கரை,தண்ணீர் தேவையான அளவு ,மாவு பிசைய தேவையான காய்ச்சி ஆற வைத்த பால்,ஒரு ஸ்பூன் நெய்,ஏலக்காய்பொடி சிறிதளவு ,எண்ணெய் தேவையான அளவு.செய்முறை:முதலில் கோதுமை மாவை நெய்விட்டு வறுத்துக்கொள்ள வேண்டும்.பின் அந்த மாவில் சிறிது நெய் மற்றும் பால் கலந்து சப்பாத்திமாவு பதத்தில்பிசைந்துகொள்ள வேண்டும்.கலவையை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.ஊறிய பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில்பொரித்தெடுக்கவும்.சர்க்கரை பாகு:1 கப் கோதுமை மாவு எடுத்துக்கொண்டால் 1 கப் சர்க்கரை 2 கப்தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.பொரித்தெடுத்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்க்கவும்.கோதுமை குலோப்ஜாமுன் தயார்.
தேவையான பொருட்கள்:பச்சரிசி -1 கப்புழுங்கல் அரிசி - 1 கப்உளுந்தம் பருப்பு - அரை கப்துண்டாக்கிய பிரண்டை - அரை கப்வெந்தயம், எண்ணெய்,உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயத்தை தண்ணீரில்மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் பிரண்டையை சேர்த்துநன்கு அரைத்து மாவாக்கவும். அதில் உப்பு சேர்த்து, எட்டு மணி நேரம்புளிக்க விடவும். பின், தோசையாக வார்த்தெடுக்கவும்.சுவை மிக்க, 'பிரண்டை தோசை!' தயார். சட்னி தொட்டு சாப்பிடலாம்.வித்தியாசமான சுவையுடன் இருக்கும். பசியைத் தூண்டும். தொடர்ந்து ,சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும்.