25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


பழமொழி.

Sep 24, 2025

சொப்பனத்தில்  கண்ட அரிசி சோற்றுக்காகுமா?

சொப்பனத்தில்  கண்ட அரிசி சோற்றுக்காகுமா?பொருள் மாட மாளிகை காட்டுவதாகக் கனவு கண்டால் நடக்குமா.? அதை நோக்கி முன்னேற நிஜ வாழ்க்கையில் உழைத்து ,கனவை நனவாக்க வேண்டும். வெறும் கனவு காண்பதால் பலனில்லை.

Sep 23, 2025

‘‘நெல்லுக்கு நண்டோட வாழைக்கு வண்டியோட தென்னைக்குத் திருவாரூர்த் தேரோட’’

‘‘நெல்லுக்கு நண்டோட வாழைக்கு வண்டியோட,தென்னைக்குத் திருவாரூர்த் தேரோட’’எனத் அனுபவ மொழியாகக் கூறியிருப்பது நோக்கத்தக்கது. ஒரு பயிருக்கும் மற்றொரு பயிருக்கும் ஒரு நண்டு போகும் அளவிற்கு இடைவெளிவிட்டு நடவேண்டும், என்று இப்பழமொழி குறிப்பிடுகின்றது. இதனை இன்று ஒரு மிதிவண்டியின் டயருக்குள் 17 குத்துக்கள் இருப்பதைப் போல் நெற்பயிரை நடவு செய்தல் வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். மேலும் இன்று இதனை செம்மை நெல் சாகுபடி என்றும் குறிப்பிடுகின்றனர்.வாழைக் கன்றை நடவு செய்கின்றபோது ஒரு மாட்டு வண்டி போகுமளவு இடைவெளிவிட்டு நட வேண்டும். தென்னைக்கு ஒரு தேர் ஓடுமளவிற்கு இடைவெளி விடவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பயிரையும் எவ்வாறு நட்டால் பயிர் அதிக விளைச்சலைத் தரும் என்பதை பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர் நமக்குக் கூறியுள்ளனர்.

Sep 17, 2025

தண்ணீருக்கு பயந்தால் நீச்சல் வருமா?

தண்ணீருக்கு பயந்தால் நீச்சல் வருமா?பொருள்: ஒரு பணியை செய்ய முடிவு செய்தால், அச்சப்படக் கூடாது; துணிந்து காரியத்தில் இறங்க வேண்டும்.

Sep 16, 2025

‘‘உழுகிறபோது ஊருக்குப் போயிட்டு அறுக்கிறபோது அரிவாளோடு வந்தானாம்’’

 ‘‘உழுகிறபோது ஊருக்குப் போயிட்டு அறுக்கிறபோது அரிவாளோடு வந்தானாம்’’அனைவரும் வயலில் பயிரிடுகின்றபோது நாமும் பயிரிடவேண்டும். அப்போதுதான் அது விளையும். இல்லையெனில் அஃது பாழ்பட்டுப் போய்விடும். மேலும் உழவுத் தொழிலில் கவனம் செலுத்துதல் வேண்டும் என்பதையும் இப்பழமொழி நன்கு விளக்குகின்றது..ஒவ்வொரு பயிரையும் அதற்குரிய தொழில் நுட்பத்திற்குத் தகுந்தாற்போல் நடவு செய்தால் அப்பயிர் நன்கு விளைச்சலைத் தரும். அவ்வாறு செய்யவில்லையெனில் விளைச்சல் குறையும். பயிர் நடவு செய்யும் இத்தொழில் நுட்பத்தை,

Sep 10, 2025

சர்க்கரை என்றால் தித்திக்குமா?

சர்க்கரை என்றால் தித்திக்குமா?சர்க்கரையை சாப்பிட்டால்தானே தித்திக்கும். அதற்குக் காசு வேண்டாமா? வாழ்க்கைக்கு எப்படி வாழ வேண்டும் என்று கனவு கண்டால் மட்டும் போதாது. அந்தக் கனவை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும்.சிலர் ஒருவருக்காக எல்லாமும் செய்வேன் என்று சர்க்கரைப் போன்று பேசுவார்கள். ஆனால், ஒரு துரும்பைக்கூட அசைக்கமாட்டார்கள். இந்தப் பிதற்றல்காரர்கள் வாயால் வடை சுடுவதால் என்ன பலன்? 

Sep 03, 2025

துளசிக்கு வாசமும், முள்ளுக்கு கூர்மையும் முளைக்கிற போதே தெரியும்.

துளசிக்கு வாசமும், முள்ளுக்கு கூர்மையும் முளைக்கிற போதே தெரியும்.பொருள்: துளசிசெடி, கன்றாகஇருக்கும்போதே,அதன்வாசனைதெய்வீகமணத்தைப்பரப்பத்துவங்கிவிடும்; முள்ளும், முளைக்கும்போதே அதன் கூர்மை தன்மைதான் முதலில் வெளிப்படும். அதுபோல, ஒருவரின் குணத்தை, அவரின் ஐந்து வயதிலேயே அறிந்துகொள்ள முடியும்

Aug 27, 2025

தலைக்கு தலை நாட்டாண்மையாய் இருக்கிறது.

தலைக்கு தலை நாட்டாண்மையாய் இருக்கிறது.பொருள்: ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு நபரும் அவரவர் சிந்தனைக்கேற்ப அணுகுவார்; சரியான கோணத்தில் சிந்திக்கப்படும்போது தோன்றும் கருத்தே, அந்த விஷயத்தைச் சிறப்பிக்கும்.

Aug 20, 2025

தன் பலம் கொண்டு அம்பலம் ஏற வேண்டும்.

பொருள்: பண பலமோ, உடல் பலமோ, மன பலமோ.,நமக்கென்ன உண்டோ அந்த அளவு மட்டுமே முதலீடாக வைத்து, காரியங்களைச் செய்ய வேண்டும்; பலத்தை மீறி செய்யப்படும் காரியம் எதுவுமே, சிக்கலில் சிக்க வைக்கும்.

Aug 13, 2025

தான் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது.

பொருள்: எந்த பணியையும் ஒரு பலனை எதிர்பார்த்துசெய்யும்போது, அந்தபலன்கிடைக்காமல்போகலாம்; அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதை உணர்ந்து, எதிர்பார்ப்பை கைவிட வேண்டும்; இல்லையெனில், துக்கமே மிஞ்சும்.

Aug 06, 2025

ஆடி பழமொழி

ஆடிமாதப் பழமொழிகள் பல 'ஆடிப் பட்டம் தேடி விதை', 'ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்', 'ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', 'ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', 'ஆடிக் கூழ் அமிர்தமாகும்' என்னும் பழமொழிகளாக மக்கள் மத்தியில் வழங்கப்படுகின்றன 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News