பக்கத்து இலைக்கேன் பாயாசம் கேக்கற?அடுத்தவர்களுக்காகப் பரிந்து பேசி, பிறரிடம் பிரச்சினைக்குச் செல்பவர்களை இந்தப் பழமொழி வைத்துத் திட்டுவோம். ஒரு விருந்தில் அமர்ந்து சாப்பிடுகிறோம் என்றால், நமக்குப் பாயாசம் இன்னும் வரவில்லையென்று பரிமாறுபவரிடம் கேட்கலாம். ஆனால், அருகில் அமர்ந்து உண்பவருக்காகக் கேட்பது என்பது நம் வேலை இல்லை. அவருக்கு வாய் இருக்கிறது, அவர் கேட்டுக்கொள்வார். அதுபோலதான் வாழ்க்கையும்.
தனக்கே தகராறாம், தம்பிக்குத் தயிர் சோறாம்."தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும்" என்பார்கள். தன்னுடைய குடும்பத்தையே கவனிக்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களை இந்தப் பழமொழி குறிப்பிடுகிறது. அதாவது, உதவி செய்யக்கூட நாம் ஒரு நிலையில் இருக்க வேண்டும். மிகவும் ஏழ்மையானவர்கள் பிறருக்கு உதவி செய்ய என்னும்போது இப்படித்தான் சமுதாயம் அவர்களைக் கேலி செய்கிறது.
1.படை கொண்ட அரசருக்கும் இறுதியில் பிடி சாம்பல் தான் மிஞ்சும். 2. சிவன் சொத்து குல நாசம். 3. மக நட்சத்திர பெண் ஜெகத்தை ஆள்வார். 4 ஆடையின்றி குளிப்பது அறம் ஆகாது. 5. சஷ்டியில் விரதம் இருந்தால், அகப்பையில் பிள்ளை வரும். 6.ஆனியில் அடி கோளகூடாது. ஆடியில் குடி போக கூடாது. 7. வஸ்திரம் இன்றி குளிப்பதோ தூங்குவதோ கூடாது. 8 புரட்டாசியில் மண்ணுரிய மழை பெய்யும். பொன்னுரிய வெயில்' காயும். 9.மார்கழியில் மண்ணும் குளிரும், தையில் தரையும் குளிரும். 10.பூரம் மாப்பிள்ளை யோகத்தை தரும்.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல.சொல்லப்படும் பொருள்:தன் தகுதிக்கு மீறிய செயலை ஒருவர் செய்யும் போது இப்படி சொல்வார்கள்.உண்மையான விளக்கம்:முயலான் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போல என்பதே சரியான பொருள்.கொம்பு தென் மலை உச்சியில் தான் இருக்கும். முயற்சி செய்யாமல், சோம்பி இருப்பவன் அதை அடைய முடியாது என்பதற்க்காக சொல்லப்பட்டது.
‘‘ ஆழ உழுவதை விட அகல உழுவதே மேல்’’என்று பழமொழியாகக் கூறுகின்றனர். நிலத்தில் அகலமாக உழுதால் பெய்யும்மழைநீர்நிலத்தில்தேங்கும், மண்ணரிப்பும், நிலத்தில் மேல் உள்ள சத்துக்களும் அடித்துச் செல்லப்படமாட்டாது என்ற உழவின்தொழில்நுட்பத்தைஇப்பழமொழியில்எடுத்தரைக்கின்றனர். தற்போதுவேளாண்விஞ்ஞானிகள்சரிவுக்குக்குறுக்கேஉழவேண்டும்என்றுகூறுவது அகல உழுவதையேஎன்பதுகுறிப்பிடத்தக்கதாகும்.
மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம். பொருள்: ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்று பொருள் வருகிறது,உண்மையான பொருள்:மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்,மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயி வீட்டில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து நிலத்தில் உழைத்தால் பொன்னும், பொருளும் சேரும் என்பது அர்த்தம்.
சங்கரா சங்கர என்றால் சாதம் வாயில் வந்து விழுமா?பொருள்: ஒரு செயலுக்குரிய முயற்சியில்லாமல் வெறும் வாய்ப்பேச்சு பயன் தராது.
பசித்தபின் புசி.பொருள்,நன்றாக பசி எடுத்த பிறகு உண்டோமானால் உணவு ருசியாக இருக்கும். அதே சமயம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகவும் வாழலாம்.
ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான். பொருள் - தந்தையின் தொழிலை மகனுக்கு யாரும் கற்றுத்தரவேண்டிய அவசியம் இல்லை. அவன் தன் தந்தையுடன் இருக்கும்போது, அவனை அறியாமலே அதை அவன் கற்றுக்கொண்டு ,அதில் அவன் சிறந்தவனாகவும் விளங்குவான்.
ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்.பொருள்: எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு