25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி

Mar 21, 2024

தமிழ்த்துறை சார்பாக "நாட்டார் வழக்காற்றியல்"என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம்

இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி கலையரங்கத்தில் வைத்துத் தமிழ்த்துறை சார்பாக "நாட்டார் வழக்காற்றியல்"என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு வந்த அனைவரும் வரவேற்றுத்  தமிழ்த்துறைத் தலைவர் திரு.ச‌.மைதிலிராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி ஆட்சி மன்றக் குழுச்  செயலாளர் ‌முனைவர்‌ எஸ்.சிங்கராஜ் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுத் தலைமையுரை ஆற்றினார்.நிகழ்ச்சியில்  கல்லூரி முதல்வர் முனைவர் த.வெங்கடேஸ்வரன் மற்றும் சுயநிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெ.சூரியகலா ஆகியோர் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார்கள். கருத்தரங்கத்திற்குச்  சிறப்பு விருந்தினர்களாக முனைவர் டி.தருமராஜ் முனைவர் பா.ச.அரிபாபு மற்றும் முனைவர் கு.சக்திலீலா ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.நிகழ்ச்சியில்   மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தேர்வாணையத்தின்  தலைவரும், நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறைத் தலைவருமான முனைவர் டி.தருமராஜ் அவர்கள் "படிக்காதவர் படித்த புத்தகங்கள்" என்ற தலைப்பில் நாட்டார் வழக்காற்றியலில் உள்ள மக்களின் இன்றைய பழக்க வழக்கங்கள் மற்றும் நாட்டுப்புறவியல் சார்ந்த மக்களின் நம்பிக்கை குறித்துச்  சிறப்புரையாற்றினார். அமெரிக்கன் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் பா.ச.அரிபாபு அவர்கள் "இராமாயணநாடகம் -சடங்கே நாடகமாதல்" என்ற தலைப்பில் தமிழகத்தில் இன்றைய காலகட்டத்தில் நாட்டார் வழக்காற்றியலில் இராமாயணம், மகாபாரதப் புராணங்கள் எவ்வாறு அரங்கேற்றப்படுகிறது மட்டுமல்லாமல் அக்கருத்துகள் நாட்டார் வழக்காற்றியலோடு எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகிறது என்பன பற்றி மிகச் சிறப்பாக உரையாற்றினார்.காளீஸ்வரி உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சக்திலீலா அவர்கள் "பெருந்திரள் வழிபாட்டின் நீட்சி" என்ற தலைப்பில் நாட்டார் வழக்காற்றியலில் உள்ள பெருந்தெய்வ மற்றும் சிறு தெய்வ வழிபாடு குறித்துப் பல அரிய கருத்துக்களைப் பல்வேறுநூல்களில்இருந்துமாணவமாணவியர்களுக்குஎடுத்துரைத்தார்.கருத்தரங்கத்திற்குநாட்டார்வழக்காற்றியலில் பயன்படுத்தப்பட்ட பழம்பெரும் பொருட்கள் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டன.கருத்தரங்கத்திற்குப் பிற  கல்லூரிமாணவமாணவிகள்பேராசிரியர்கள்மற்றும்ஆய்வாளர்கள்ஏராளமானோர்கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சியில்  தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்.( சுயநிதிப் பிரிவு ) நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்து  விழாவைச் சிறப்பித்தனர்.

Mar 21, 2024

இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியில் முதுகலை ஆங்கிலத் துறையின் சார்பில் நடைபெற்ற ஆங்கில இலக்கிய விழா

இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியில் முதுகலை ஆங்கிலத் துறையின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கு இடையிலான ஆங்கில இலக்கிய விழா நடைபெற்றது. ஆங்கிலத்துறை தலைவர் மருதநாயகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் மற்றும் சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் சூர்யகலா வாழ்த்துரை வழங்கினார்கள்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயமும் சான்றிதழையும் கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் வழங்கினார். நன்றியுரையை பேராசிரியர் பாண்டிபிரியா வழங்கினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். 

Mar 19, 2024

இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி, தமிழ்த்துறை பாரதிய பாஷா சமித்,

இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி, தமிழ்த்துறை பாரதிய பாஷா சமித், (மத்திய கல்வி அமைச்சகம்) நிதி நல்கையுடன் இணைந்து நடத்தும் ஜெகத்குரு ஸ்ரீசங்கராச்சார்யார் வியாக்ன மாலாசிறப்புரை-பேராசிரியர் C.R. அனந்தராமன், இணைப்பேராசிரியர், துறைத்தலைவர், சமஸ்கிருதத் துறை (ஓய்வு), விவேகானந்த கல்லூரி, திருவேடகம் மேற்கு, மதுரை. வருகை தரு பேராசிரியர், சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.தலைப்பு: ஜெகத்குரு ஸ்ரீசங்கராச்சார்யார்Dr.S.ஸ்ரீதர் சுவாமிநாதன்,,துறைத்தலைவர், உதவிப் பேராசிரியர், சமஸ்கிருதத் துறை, விவேகானந்த கல்லூரி, திருவேடகம் மேற்கு, மதுரை.தலைப்பு: சங்கர திக்விஜயம் 19/03/2024 ,மணி: 10.00 காலை,இடம்: கருத்தரங்க அறைமுனைவர்.ச.சிங்கராஜ், செயலர்,முனைவர்.த.வெங்கடேஸ்வரன் முதல்வர்முனைவர்.வி. கலாவதி ,கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறைத் தலைவர்திருமதி சு சத்யா, திரு.ச.குமார் தமிழ்த்துறை பேராசிரியர்கள்

Mar 11, 2024

இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

.இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 2022- 2023 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுகலைப் பயின்ற மாணவ, மாணவியர்களுக்குப் பட்டமளிப்பு விழா கல்லூரியின் கலை அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. கல்லூரிச் செயலர் முனைவர்.சிங்கராஜ் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் விழாவிற்கு வருகை புரிந்து அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஐ.ஜி. முத்துச்சாமி அவர்கள்  கலந்து கொண்டு மாணவர்களுக்குத் தேவையான நற்சிந்தனை, உடல் ஆரோக்கியம் , பெற்றோர்களின் பொறுப்புணர்வு, மற்றும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்தும், வாழ்வியல் நலன்  குறித்தும் ,கல்வியின் நோக்கம் குறித்தும் சிறப்புரையாற்றி, 550 மாணவ, மாணவியர்களுக்குப் பட்டம் வழங்கி  பெருமை பாராட்டினார்.  இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்கள் உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்வில் கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 2

AD's



More News