விரலி மஞ்சள் கிழங்குள்விருதுநகர்மாவட்டத்தில்மல்லாங்கிணறுஅருகேஉள்ளசூரம்பட்டி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ளது.பொங்கல் பானையில் பொங்கல் பண்டிகை அன்று விரலி மஞ்சள் கிழங்குகளை செடியோடு கொத்தாககட்டி பொங்கலிடுவது தமிழர்களின் வழக்கம்.மஞ்சள் கிழங்குகள் சில நாட்களாக ,பெய்த மழை காரணமாக நல்ல விளைச்சல் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
15 ஆயிரம் ஏக்கரில் ராஜபாளையம் ,தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவிவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெய்த கனமழையால் சாஸ்தா கோவில் செல்லும் சாலையில் நன்கு விளைந்தபாதித்த நெற்பயிர்கள் , விளைந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் மனு அளித்துள்ளனர். விவசாயிகள்அறுவடைசெய்யப்படும்நெல்மணிகளைஉலரவைக்க, உலர்களம்அமைக்கவும்நெல்மணிகளை பாதுகாக்கவும், கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நெல்கொள்முதல்நிலையம் தொடங்கினால் எண்ணற்ற விவசாயிகள் பயன்பெறுவதுடன் நெல்லுக்கு உரிய விலை கிடைக்க ,தற்போது அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.2,450 வரை நிர்ணயம் செய்துள்ளது. தனியாரிடம் நெல் மூடைகளை விற்பனை செய்தால்குவிண்டாலுக்கு ரூ.1,800 நிர்ணயம் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்குஇழப்பீடு ஏற்படும். ஆகையால் மாவட்ட நிர்வாகம் நெல்கொள்முதல் நிலையம் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் .
ராஜபாளையம் அருகே மேற்குதொடர்ச்சி மலையில் அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாகஇருக்கும்.ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களும், வெளியூர்களிலிருந்து எண்ணற்ற பேரும் தங்களது குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இங்குள்ள தோப்புகளில் குளிப்பதற்காக விடுமுறை நாட்களில் அதிகம் பேர் வருகின்றனர்.இப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுப் பன்றி. முள்ளம்பன்றி, மான், சாம்பல் நிற அணில் ராஜ நாகங்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் இங்குவசித்து வருகின்றன இங்கு போலீஸ் பாதுகாப்பு வசதி எதுவும் இல்லை.இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆதலால் சுற்றுலா பயணிகள் பெரிதும்சிரமப்படுகின்றனர். எனவே வனத்துறையினருடன் போலீசாரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேற்கண்ட பகுதியில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் .
சாலை விதிகளுக்கு அக்கறை கொடுக்கும் போக்கு வரத்து போலீசார், அதிக ஒளி ஊமிழும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜபாளையத்தில் போக்குவரத்து விதிகளின் படி, நகர பகுதிகளில் எல்லைக்குட்பட்ட வாகனங்களை இயக்கும்போது குறைந்த பட்ச ஒளி விளக்கு ,எனும் 'லோ பீம்' உபயோகிக்க வேண்டும் என்ற விதி இருந்தும் யாரும் பின்பற்றுவதில்லை.வாகன ஒட்டிகள் இரவில் பிரயாணம் செய்யும் பொழுது, எதிரில் வரும் வாகனங்களுக்கு கார் லைட்டை டிம் செய்து, பின் ஒளிர விட வேண்டும் என் பது கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது வாகன விதி .இது யாருக்கும் தெரியாதா? அல்லது அலட்சியமா?அதிகபட்ச ஒளி விளக்குகளை எறிய விட்டு வாகனங்களை இயக்குகின்றனர். இவற்றை போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் கண்டு கொள்வதில்லை.திடீரென அதிக ஒளி கண்ணில் படும்போது பார்வை ஸ்தம்பித்து முடிவெடுப்பதற்குள் விபத்து ஏற்படுவது உடன், தொடர்ந்து எதிர் கொள்ளும் இத்தகைய ஒளியால் விழித்திரை பாதித்து பார்வை திறன் குறைகிறது. போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மக்கள்எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் அம்பள புலி பஜார் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மெயின் ரோடு சாக்கடை அடைப்பு காரணமாக கடந்து செல்ல வழியின்றி, தேசிய - நெடுஞ்சாலை சாந்தி - தியேட்டர் எதிரே பஸ் - ஸ்டாப், பி.எஸ்.கேபார்க், - குடியிருப்புகள், வணிக கடைகள் அமைந்துள்ள பகுதியில், ரோட்டோரம் வழிந்து தேங்கி நிற்கிறது . ஓட்டல்கள், மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் முன்பு கழிவுகள் தேங்கி ,நெடுஞ்சாலையில் கடந்து செல்லும், வாகனங்கள், பாதசாரிகள் கழிவு நீரில் பயணிப்பதுடன், வாகனங்கள் செல்லும்போது சாக்கடை மேலே சிதறி பாதிப்பு சுகாதார கேடு ஏற்படுத்தி வருகிறது . நகராட்சி இதை கவனிக்குமா? தேசிய வடிகால் அமைக்கும் பணியை முறைப்படுத்தி கழிவு நீர் தேங்காதவாறு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் வரை வெறும் 10 கிலோமீட்டர் தூரம் தான்.ஆனால் இந்த குறுகிய தூரம் இன்று மரணப் பயணமாக மாறியிருப்பது சமூகத்தின் பெரும் கவலையாக உள்ளது.10 கிலோமீட்டரில் 23 வளைவுகள் – அபாயத்தின் தொடக்கம்இந்த சாலையில் 23 சிறு–பெரும் வளைவுகள் உள்ளது. 7 பேரிக்கார்டுகள் அமைத்து போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்திசித்தாலும் 365 நாட்களும் விபத்துக்கள் நடந்து வருகின்றது.பகல் நேரத்தை விட மாலை மற்றும் இரவு நேரங்களில் இருசக்கர வாகன விபத்துகள் அதிகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.பஞ்சாலை தொழிலாளர்கள் மற்றும் தினசரி பணியாளர்களின் பயன்பாட்டில் அமைந்துள்ளத்தால்,இந்த சாலையின் இருபுறமும் அமைந்துள்ளபஞ்சாலைகள், நூற்பாலைகள் அமைந்துள்ளத்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மூன்று ஷிப்ட் பணிமுறை அடிப்படையில்தினமும் ராஜபாளையம் ↔ ஸ்ரீவில்லிபுத்தூர் பயணம்செய்து வருகின்றனர்.அதிகாலை, மாலை, இரவு என எப்போதும் வாகன நெரிசல் தவிர்க்க முடியாத நிலை. செங்கோட்டை – மதுரை பிரதான இணைப்புச் சாலை.இந்த சாலை செங்கோட்டை – மதுரை பிரதான போக்குவரத்து வழித்தடமாக இருப்பதால்,* கனரக லாரிகள்* பேருந்துகள்* சரக்கு வாகனங்கள்* இருசக்கர வாகனங்கள்என வாகனப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறுகிய சாலை + அதிக வளைவுகள் = தொடரும் விபத்துகள்நான்கு வழிச்சாலை பணி இன்னும் முழுமையாக நிறைவடையாத சூழலில்,* குறுகிய சாலை* திடீர் வளைவுகள்* ஒளியின்மை* வேக கட்டுப்பாட்டின்மைஆகியவை விபத்துகளுக்கான பிரதான காரணங்களாக உள்ளன.காவல் நிலையங்கள் இருந்தும் குறையாத விபத்துகள்இந்த 10 கிலோமீட்டருக்குள் இரண்டு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.மேலும் காவல் துறையினர் ஏழு இடங்களில் பேரிக்கார்டுகள் அமைத்து போக்குவரத்தை கட்டுப்படுத்த முயன்றாலும்,சாலை அமைப்பின் குறைபாடு காரணமாகவிபத்துக்கள் குறையவில்லை.நிலம் இருக்கிறது – விரிவுபடுத்தாதது ஏன்?ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் முதல் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதி வரை,சாலையின் இருபுறமும் விரிவுபடுத்த தேவையான நிலம் உள்ளதுஆனால் இதுவரை சாலை அகலப்படுத்தப்படவில்லை.இதுவே இன்று இந்த சாலை “மரண சாலை” என அழைக்கப்பட காரணமாக உள்ளது.நான்கு வழிச்சாலை வந்தாலும் போதுமா?எதிர்வரும் மாதங்களில் நான்கு வழிச்சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வந்தாலும், இந்த இரண்டு நகரங்களை நேரடியாக இணைக்கும் இந்த 10 கிலோமீட்டர் சாலை அகலப்படுத்தப்படாவிட்டால்விபத்துகளை முழுமையாகத் தடுக்க முடியாதுஅதிகபட்சம் குறைக்க மட்டுமே முடியும்அரசு உடனடி நடவடிக்கை தேவை.மக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் பயணிக்கும் இந்த சாலைக்கு:சாலை அகலப்படுத்தல்வளைவுகளை சீரமைத்தல்போதிய ஒளியமைப்புவேகக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள்பாதுகாப்பு சுவர்கள்உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.அரசு கவனம் கொள்ளுமா?நடவடிக்கை எடுக்குமா?விபத்துகளைத் தடுப்பதற்கான தீர்வு காணுமா?உயிர்கள் தொடர்ந்து இழக்கப்படும் முன்இந்த “மரண சாலை” மக்கள் பாதுகாப்பு சாலையாக மாறுமா?பொறுத்திருந்து பார்ப்போம்.மக்கள் எதிர்பார்க்கின்றனர். பா. இராஜகோபால், சமூக ஆர்வலர், திருவில்லிபுத்தூர்999 475 2121
.கார்த்திகை மாதம் தொடங்கியது முதல், ராஜபாளையம் பகுதிகளில் தொடர்ச்சியாக கன மழை பெய்ததால், உயரமாக உள்ள நிலத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் தாழ்வாக இருந்த நிலத்தில் தேங்கி, பயிர்கள் 30 நாட்கள் வளர்ச்சி அடைந்தநிலையில் மழைநீரில் பருத்தி செடிகள் மூழ்கின.தண்ணீர் செல்லவழி இல்லாத காரணத்தால் 30 நாட்களுக்கு பிறகும் பருத்தி செடிகள் வளர்ச்சி முற்றிலுமாக அழுகும் அபாயநிலையில் உள்ளது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவழித்து மகசூல் பெற முடியாதநிலை உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .
விவசாய பயிர்களுக்கு நீர் ஆதாரமாக ராஜபாளையம் கண்மாய்கள், மழைக்காலங்களில் ஆற்றில் இருந்து கண்மாய்களுக்கும், கண்மாயிலிருந்து மழைநீர்வடிந்துசெல்லவடிகால், வரத்துகால்வாய்எனபல்வேறுஅமைப்புகள்செயல்படுத்தப்பட்டுவருகிறது.மழைக்காலங்களில் வெளியேறும் தண்ணீர் வாய்க்கால் வழியாக அடுத்தடுத்த பகுதிகளுக்கும் வடி நீராகவும் சென்று வருவது அவசியம்.பாசன வாய்க்கால் ஆக்கிரமிக்கப்படுவதால் மழை நீர், கண்மாயிலிருந்து வெளியேறும் உபரி பாசன நீர் வெளியேற வழி இல்லாமல் வயல்களில் தேங்கி நிற்கிறது. தேங்கியுள்ள நீரில் பயிர்களின் வேர்கள் அழுகுவதுடன் வளர்ச்சி தடைப்பட்டு பயிர்கள் சேதம் அடைவதுடன் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.பாரம்பரியமான நீர்வரத்து வழித்தடங்கள், பாசன வாய்க்கால்கள் குறித்து வருவாய் துறையினரிடம் முறையான கணக்கீட்டை பராமரித்து ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு கண்காணித்து இவற்றை சரிசெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்
புது பஸ் ஸ்டாண்ட் சென்று வரும் பஸ்கள் திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் வாகனங்கள், ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அடுத்த பஸ் ஸ்டாப் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு எடுத்து அப்பகுதி சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. அனைத்துவாகனங்கள் இப் பகுதி வழியே செல்வதால், நெருக்கம் அதிகம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் குழாய் உடைப்பும் அதனால் ஏற்படும் ரோடு சேதம் நீண்ட நாட்களுக்குப் பின் சீரமைப்பு மீண்டும் குழாய் உடைப்பு என தொடர்கதையாக இருந்து வருகிறது .இந்நிலையில் அடிக்கடி சேதமாகும் - குழாய் அதனால் ஏற்படும் பள்ளம் தற்காலிக தீர்வாக வைத்து தடுப்புகளை தடை ஏற்படுவது இப்பகுதிக்கு சகஜம் ஆகிவிட்டது. நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை கோட்டத்தில் ரயில்களை 130 கி. மீ., வேகத்தில் இயக்குவதற்காக தண்டவாள சீர மைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கூடல் நகர், சமயநல்லுார், சோழவந்தான் பிரிவில் தினமும் நான்கு நேரம் பராமரிப்பு நடைபெறுகிறது. இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தினசரி ரயிலான செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றப்பட்டு விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. பல மாதங்களாக இது போன்ற அறிவிப்பினால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, பயணிகள் மதுரை செல்வதற்கு விருதுநகர் இறங்கிபஸ்களில் பயணிக்கின்றனர். இத்துடன் குருவாயூர் சென்னை ரயிலும் மாற்றுபாதையில் இயக்கப்படுகிறது. பணிகள் முடிவடையும் வரை ராஜபாளையம் வழியாக செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு கூடுதலாக புதிய ரயில் இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.