25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஆறாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஐந்தாம் திருநாள். >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில் குறைந்து வரும் நீர்மட்டம் . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் நான்காம் திருநாள் >>


சமையல்

Dec 27, 2025

சத்துமாவு புட்டு.

தேவையான பொருட்கள்1 கப் சத்துமாவு,4 ஸ்பூன் தேங்காய் துருவல்,2 ஸ்பூன் சர்க்கரை,1/2 ஸ்பூன் உப்பு,வாழைப்பழம் தேவைக்கேற்ப,1/4ஸ்பூன் ஏலக்காய் தூள்.செய்முறை :முதலில் சத்துமாவை கடாயில் சேர்த்து 2 நிமிடம் வறுத்து கொள்ளவும்.தேவையான அளவு உப்புசேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.கையில் பிடித்தால் கொழுக்கட்டை பதத்திற்கும் உதிர்த்து விட்டால் தூளாகும் அளவுக்கு இருக்கவேண்டும்.இப்பொழுது இதை ஒரு இட்லி தட்டில் துணி போட்டு அதன் மேல் புட்டு மாவை சேர்த்து 5 நிமிடம்ஆவியில் வேக வைக்க வேண்டும்.5 நிமிடம் கழித்து வெந்தவுடன் இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி இதனுடன் சர்க்கரை தேங்காய்துருவல் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து கலந்தால் புட்டு ரெடி.அப்படியே பரிமாறலாம்.அல்லது 1 ஸ்பூன் நெய் சேர்த்து உருண்டைகளாக பிடித்து பரிமாறலாம்.அல்லது 1 வாழைப்பழத்தை மசித்து இதனுடன் சேர்த்து பரிமாறலாம்.குறைவான நேரத்தில் செய்ய கூடிய ரெசிபி புட்டு.இதில் ஆரோக்கியமான சத்துமாவு புட்டு தயார்.

Dec 27, 2025

வெண்ணெய் புட்டு.

தேவையான பொருட்கள்:புழுங்கல் அரிசி - 1 கப்,வெல்லம் - 1 கப்,பால்  - 200. மி. லி, கடலைப்பருப்பு,தேங்காய் துருவல் - தலா கால் கப்,ஏலக்காய்துாள் - சிறதளவு ,வெண்ணெய்,உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:புழுங்கல் அரிசியை ஊற வைத்து, கெட்டி மாவாக அரைக்கவும். கடலைப்பருப்பை தண்ணீரில்வேக வைக்கவும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். அதில் பால் ஊற்றிகொதித்ததும், அரைத்தமாவைசேர்த்துகிளறவும்.பின்,வெந்தகடலைப்பருப்பு, உப்பு, தேங்காய்துருவல் மற்றும் ஏலக்காய்துாள் துாவி கிளறி இறக்கவும். பெரிய தட்டில் வெண்ணெய் தடவி,கலவையை ஊற்றி ஆறியதும் துண்டுகளாக்கவும். சுவைமிக்க, 'வெண்ணெய் புட்டு!' தயார்.அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

Dec 20, 2025

சோள இடியாப்பம்.

தேவையான பொருட்கள்:சோள மாவு - 2 கப்எண்ணெய் - 4 தேக்கரண்டிஉப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:சோள மாவுடன் உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து பிசையவும். அதை இடியாப்ப குழலில் பிழிந்து,15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.சுவையான,'சோள இடியாப்பம்!' தயார். தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். இனிப்பு பிரியர்கள் தேங்காய் துருவல், நாட்டு சர்க்கரை சேர்த்து உண்ணலாம். சுவை அபாரமாக இருக்கும்.

Dec 20, 2025

கவுனி அரிசி இடியாப்பம் .

தேவையான பொருட்கள்: கவுனி அரிசிமாவு  (அல்லது ஊறவைத்த கவுனி அரிசி) - 1 கப்,தண்ணீர் - தேவையான அளவு (மாவு பிசைய),உப்பு - தேவையான அளவு,நெய் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்),தேங்காய் துருவல் - சிறிதளவு (விருப்பப்பட்டால்) ,செய்முறை:கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி4 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நீரை வடித்து, நிழலில் உலர்த்தி மாவாக அரைக்கவும்.ஒரு பாத்திரத்தில் கவுனி அரிசி மாவை எடுத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கொதிக்கும் வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி, கெட்டியாக பிசையவும்(சப்பாத்தி மாவை விட சற்று மென்மையாக). நெய் சேர்த்து பிசைந்தால் மென்மையாக இருக்கும்.இடியாப்ப அச்சில் பிழிந்து, இட்லி தட்டில் வைத்து ஆவியில்5-7 நிமிடங்கள் வேகவைக்கவும்.சுவையான கவுனி அரிசி இடியாப்பத்தை தேங்காய் பால், நாட்டுச் சர்க்கரை அல்லது குருமாவுடன் சேர்த்து பரிமாறவும். இது ஆரோக்கியமான, சத்தான காலை அல்லது இரவு உணவு. 

Dec 20, 2025

பீட்ரூட் இடியாப்பம் .

தேவையான பொருட்கள்:அரிசி  மாவு - 2 கப், பீட்ரூட் சாறு - அரை கப், கொதி நீர் - 2-3 கப்,உப்பு - தேவையான அளவு .செய்முறை :ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு எடுத்து அதில் உப்பு கலந்து கொள்ளவும்.கொதி நீரை சிறிது சிறிதாக ஊற்றி, மாவை கிளறவும்.இடை இடையே பீட்ரூட் சாறை ஊற்றி மாவை கிளறவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றியதும் மாவு வெந்துவிடும். எல்லா மாவையும் ஒன்றாக திரட்டி கொள்ளவும்.தேவையான சிறிது மாவு எடுத்து இடியாப்ப அச்சில் போட்டு, இட்லி குழியில் பிழியவும்3-4 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.பீட்ரூட் இடியாப்பம் ரெடி. குழம்பு அல்லது தேங்காய் பாலுடன் பரிமாறவும்.

Dec 20, 2025

கோதுமை மாவு இடியாப்பம்.

தேவையான பொருட்கள்:கோதுமை மாவு- 500 கிராம்,உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.  செய்முறை:முதலில் கோதுமை மாவை15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்க வேண்டும். அல்லது கோதுமை மாவைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாகப் பிசைந்து கொண்டு, இடியாப்ப உழக்கில் இட்டுப் பிழிந்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். இதற்கு தொட்டுக் கொள்ள கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவை ஏற்றது.

Dec 20, 2025

ராகி இடியாப்பம்.

தேவையான பொருட்கள்:2கப் ராகி மாவு - 2கப்,தண்ணீர்- 2கப்,2ஸ்பூன் எண்ணெய்- 2ஸ்பூன்,உப்பு- தேவையானஅளவு,தேங்காய் துருவல் - தேவையான அளவு, சர்க்கரை- தேவையான அளவு.செய்முறை:1கப் மாவுக்கு 1கப் தண்ணீர் தான் அளவு.முதலில் காடாயில்,2கப் தண்ணீர் சேர்த்து, அதில் தேவையான அளவு உப்பு மற்றும் 2ஸ்பூன் எண்ணெய் கலந்து விட்டு நன்றாக கொதிக்க விடவும்.கொதித்ததும்,அடுப்பை சிறு தீக்கு மாற்றி,மாவு சேர்த்து கிளறவும்.முதலில் தண்ணீர் போதாதது போல் தோன்றும். கிளற கிளற சரியாகிவிடும்.திருப்தியாக இல்லையெனில்,1-2ஸ்பூன் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.2நிமிடங்களில் மாவு வெந்து திரண்டு வந்துவிடும்.அடுப்பை அணைத்து,2-3நிமிடங்கள் மூடி போட்டு வைக்கவும்.பின் இளஞ்சூடாக இருக்கும் போது,சூடு பொறுக்க கையில் சிறிதளவு தண்ணீர் நனைத்துக் கொண்டு 1நிமிடத்திற்குப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.பின் இட்லி குக்கரில்,2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கும் நேரத்தில்,இடியாப்ப அச்சில் ஒவ்வொரு உருண்டைகளாக வைத்து பிழிந்து கொள்ளவும்.பின்,குக்கரில் வைத்து15 நிமிடங்கள் வேக வைக்கவும்.ஆறியதும் இதனுடன் தேங்காய் துருவல் மற்றும் நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.வேக வைக்கும் போது,தேங்காய் துருவல் சேர்த்தும் வேக விடலாம்.சுவையான, ராகி இடியாப்பம் ரெடி.

Dec 20, 2025

ரவா இடியாப்பம்.

தேவையான பொருட்கள்:வறுத்த அல்லது வறுக்காத வெள்ளை ரவை - 2கப்,தண்ணீர் - 4கப்,உப்பு தேவையான அளவு, தேங்காய் துருவல் – தேவையானஅளவு, சர்க்கரை – தேவையானஅளவு, இரண்டரை ஸ்பூன் எண்ணெய் ,செய்முறை :1கப் ரவைக்கு2கப் தண்ணீர் தான் அளவு.கடாயில்4கப் தண்ணீர் சேர்த்து,அதனுடன் உப்பு மற்றும்2ஸ்பூன் எண்ணெய் கலந்து கொதிக்க விடவும்.கொதிக்க ஆரம்பித்ததும்,சிறு தீக்கு மாற்றி,ஒரு கையால் ரவை சேர்த்து,மறு கையால் கிளறவும்.சில நிமிடங்களில் ரவை தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளும்.2-3 நிமிடங்களில் நன்றாக வெந்து,கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும்.இனி,அடுப்பை அணைத்து,மூடி போட்டு 3 நிமிடங்களுக்கு வைக்கவும்.பின் கையில்1/2ஸ்பூன் எண்ணெய் தடவி1 நிமிடத்திற்கு மாவை(கையால் அல்லது கரண்டியால் அழுத்திவிட்டு)நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.உருட்டிய உருண்டைகளை அதே கடாயில்(சூடாக இருக்கும்) போட்டு மூடி வைக்கவும்.ஆறும் முன் இடியாப்ப அச்சில் போட்டு பிழியவும்.ஆறினால், பிழிய கடினமாகும் வாய்ப்பு உள்ளது.இட்லிகுக்கரில்2டம்ளர்தண்ணீர்விட்டுகொதிக்கவிடும்நேரத்தில்,உருண்டைகளை அச்சில் விட்டுப் பிழியவும்.பின் குக்கரில் வைத்து 7-10 நிமிடங்கள் வேக வைக்கவும்.ஆறிய பின் எடுத்தால் பூப்பூவாக வரும்.சுவையான, மெது மெதுவான ரவா இடியப்பம் ரெடி.எப்பொழுதும் போல், தேங்காய் துருவல் மற்றும் சர்கரை அல்லது தேங்காய்ப் பால் கலந்து சாப்பிடலாம்.

Dec 13, 2025

மிளகு - பூண்டு குழம்பு.

தேவையானவை:மிளகு - 4 தேக்கரண்டி,சீரகம் - ஒரு தேக்கரண்டி,பூண்டு - 10 பல்,தோலுரித்தசின்ன வெங்காயம் - 10,கறிவேப்பிலை சிறிதளவு,புளி எலுமிச்சை அளவு,கடுகு, வெந்தயம் - தலா கால் தேக்கரண்டி,உப்பு, நல்லெண்ணெய்- தேவையான அளவு,செய்முறை: புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். இதனுடன் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், பூண்டு சேர்த்து தாளிக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து கிளறவும். பின்னர் புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். மிளகு , பூண்டு குழம்பு ரெடி.

Dec 13, 2025

திரிகடுக குழம்பு.

தேவையானவை:சுக்கு - சிறிய துண்டு.மிளகு - ஒரு தேக்கரண்டி.திப்பிலி - நான்கு.புளி - நெல்லிக்காய் அளவு,சின்ன வெங்காயம் - 10 பல் மிளகாய் தூள்-  ஒரு தேக்கரண்டி.கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா கால் தேக்கரண்டி.மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை நல்லெண்ணெய்,உப்பு - தேவையான அளவு.செய்முறை:வாணலியில் வெறும் வாணலியில் சுக்கு, மிளகு, திப்பிலியை வறுத்து ஆறியதும் அதனுடன், ஐந்து சின்ன வெங்காயம், ஐந்து பல் பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும். எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளித்து, மீதமுள்ள வெங்காயம், பூண்டு, மஞ்சள் துாள் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்க்கவும். இத்துடன், அரைத்த விழுதையும்,மிளகாய் துாளையும் சேர்த்து, கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் இறக்கி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 58 59

AD's



More News