25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல்

Aug 03, 2024

பீர்க்கங்காய் தோல் சட்னி

  தேவையான பொருட்கள்  பிஞ்சு பீர்க்கங்காய் தோல் (பொடியாக நறுக்கியது) 1 கப், தேங்காய்த் துருவல் கால்கப், மல்லித்தழை 1 கைப்பிடி, பச்சை மிளகாய் 2, உளுந்து 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 2, கடுகு 1 டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, புளி சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு தேவைக்கு. செய்முறை:வாணலியில் எண்ணெயைக்  காயவைத்து கடுகு, உளுந்து, மிளகாய் வற்றலைத் தாளித்துப் பிறகு பீர்க்கைத் தோலைச் சேர்த்து நன்கு வதக்குங்கள். பச்சை வாடை நீங்கியதும் தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் மூன்று நிமிடங்கள் வதக்குங்கள். கடைசியாக மல்லித்தழை, புளி, உப்பு சேர்த்து  கிளறி இறக்குங்கள். ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள். குழிப் பணியாரம், சாதம், இட்லி, தோசைகளுக்கு ஏற்றது  பீர்க்கங்காய் தோல் சட்னி. 

Aug 03, 2024

காய்கறி சட்னி 

 தேவையான பொருட்கள் -   கேரட் 1, பீன்ஸ் 6, நடுத்தர அளவு கத்தரிக்காய் 3, கோஸ் 1 துண்டு, சௌசௌ 1 துண்டு, சிறிய முள்ளங்கி 1, பிஞ்சான பச்சை மொச்சைக்கொட்டை கால் கப், அவரை 5, பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, இஞ்சி 1 துண்டு, புளி சிறு எலுமிச்சை அளவு, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் 6, கடுகு 1 டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன், எண்ணெய் 3 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு. செய்முறை:  - வெங்காயம், தக்காளி, காய்கறிகளைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறுங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, மிளகாய் வற்றலைத் தாளித்துப் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் காய்கறிகள், இஞ்சி, தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து மிதமான - தீயில் காய்கள் வேகும்வரை வதக்குங்கள். வதங்கியதும் தேங்காய், பெருங்காயம், புளி, உப்பு, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்குங்கள். ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள். சத்துக்கள் நிறைந்த இந்த காய்கறி சட்னியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.   

Aug 03, 2024

எள் சட்னி

தேவையான பொருட்கள்  கறுப்பு எள் 1 கப் உளுந்து 3 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, பெருங்காயம் அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 1 டேபிள் ஸ்பூன், புளி 1 துண்டு, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன். செய்முறை: எள்ளை சுத்தம் செய்து, வெறும் வாணலியில் (மிதமான தீயில்) மொறுமொறுப்பாகப் பொரித்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து மிளகாய் வற்றல், உளுந்து ஆகியவற்றை வறுத்து, பிறகு தேங்காயைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி இறக்குங்கள். ஆறியதும் இதனுடன் புளி, உப்பு, வறுத்த எள் ஆகியவற்றைச் சேர்த்துக் கரகரப்பாக அரைத்தெடுங்கள்.உளுந்து சாதத்துக்கு சூப்பர் ஜோடி எள் சட்னி

Aug 03, 2024

சேனை சட்னி 

தேவையான பொருட்கள் - சேனைக்கிழங்கு கால் கிலோ, மிளகாய் வற்றல் 10, உளுந்து 2 டேபிள் ஸ்பூன், புளி சிறு எலுமிச்சை அளவு, பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன். உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன். செய்முறை: சேனைக்கிழங்கை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து மிளகாய், பெருங்காயத்தூள், உளுந்து ஆகியவற்றை வாசனை வரும்வரை வறுத்தெடுத்து வையுங்கள். பிறகு சேனைக்கிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து கரகரப்பாக வறுத்தெடுங்கள். இதனுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.  சேனை சட்னிக்கும் சாதத்துக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருக்கும்.    

Aug 03, 2024

முட்டைக்கோஸ் சட்னி 

தேவையான பொருட்கள் -  முட்டைக் கோஸ் கால் கிலோ, பெரிய வெங்காயம் 2, தக்காளி 2, பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 3, புளி சிறிதளவு, கடுகு அரை டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், பெருங்காயம் எண்ணெய்அரை டீஸ்பூன்,உப்பு தேவைக்கு, 2 டேபிள் ஸ்பூன் செய்முறை:கோஸ், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைக் கழுவி பொடியாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு. உளுந்து, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துப் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் சிறிது வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி, கோஸ் சேர்த்து வதக்குங்கள். கோஸ் பச்சை வாடை போக வதங்கியதும் தேங்காய், தக்காளி, புளி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி இறக்குங்கள். ஆறியதும் நைசாக அரைத்தெடுங்கள்.கோஸ் சட்னி இட்லி, தோசைக்கு நல்ல காம்பினேஷன்.

Jul 27, 2024

சவுராஷ்ட்ரா ஸ்டைல் தக்காளி சாதம்

தேவையான பொருட்கள் தக்காளி – 3பச்சை மிளகாய் – 3சின்ன வெங்காயம் – 10பூண்டு – 8 பல் மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்சாம்பார் பொடி  – 2 ஸ்பூன்வடித்த சாதம் – ஒரு கப்கறிவேப்பிலை – ஒரு கொத்துமல்லித்தழை – 2 கொத்துஉப்பு – தேவையான அளவுதாளிக்க தேவையான பொருட்கள்எண்ணெய் – ஒரு ஸ்பூன்கடுகு – கால் ஸ்பூன்உளுந்து – கால் ஸ்பூன்செய்முறை-சின்னவெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகிய அனைத்தையும் உரலில் சேர்த்து இடித்துக்கொள்ள வேண்டும். மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் பல்ஸ் மோடில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்துவிட்டு, அதில் தக்காளியை கைகளால் இதனுடன் சேர்த்து பிசைந்துகொள்ளவேண்டும்.அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவேண்டும்.பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுந்து தாளிக்க வேண்டும். பின்னர் கைகளால் பிசைந்து வைத்துள்ள இந்த கலவையை அடுப்பில் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவேண்டும்.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. சேர்த்தால் சாதத்தில் சுவை இருக்காது. தண்ணீரும் தெளித்துதான் விடவேண்டும். ஊற்றக்கூடாது.எண்ணெய்பிரிந்து வரும் பதத்தில்,அதில் வடித்த சாதத்தைசேர்த்து கிளறவேண்டும்., சுவையானதக்காளி சாதம் நிமிடத்தில் தயாராகிவிடும்.வாழைக்காய் வறுவல், CHIPS சைட்டிஷ் வைத்து சாப்பிடலாம்.சாம்பார்பொடிக்கு பதில், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.பச்சைமிளகாய்உங்கள்காரஅளவுக்குஏற்பசேர்த்துக்கொள்ளலாம்.தாளிக்கும்போதுதேவைப்பட்டால்முழுவரமிளகாயையும்சேர்த்துக்கொள்ளலாம்.

Jul 27, 2024

வாழைக்காய் வறுவல்

வாழைக்காயை வட்ட வட்டமாக நறுக்கிய பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி வாழைக்காய் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு அந்த எண்ணெயில் முக்கால் பதம் வாழைக்காய் வெந்த பிறகு மிளகாய் தூள் சோம்பு பூண்டு சேர்த்து கலந்து விட்டு வறுத்து எடுத்தால் நன்றாக இருக்கும்.வேண்டும் என்றால் லேசாக தண்ணீர் தெளித்து எடுத்தாலும் மெதுவாக நன்றாக இருக்கும்வாழைக்காய் வறுவல்,  ரசம்,தக்காளி சாதம்  பொருத்தமாக இருக்கும்.

Jul 27, 2024

தினை வெண்பொங்கல்

தேவையான பொருட்கள்:  தினை 250 கிராம், பாசிப்பருப்பு -50 கிராம். மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன், முந்திரி - 10, இஞ்சி - சிறு துண்டு, கறிவேப்பிலை - 1 கொத்து, உப்பு - தேவைக்குசெய்முறை:தினையை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவவும். பாசிப்பருப்பை எண்ணெய் விடாமல் வறுத்துக் கழு விக் கொள்ளவும். குக்கரில்5 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். பாசிப்பருப்பை அதில் போட்டு அரை வேக்காடு வேகவைக்கவும். அதனுடன் கழுவி வைத்துள்ள தினை அரிசியைப் போட்டு உப்பு சேர்த்து வேகவிடவும்.2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு உடைத்த முந்திரிப் பருப்பைப் போட்டு வறுக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் வறுத்த முந்திரியை  அதில் சேர்க்கவும். அதனுடன் சிறிது நெய்யில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, துருவிய இஞ்சி ஆகியவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். தினை வெண்பொங்கல் தயார்.

Jul 27, 2024

வெந்தயக் கீரை பராத்தா

தேவையானவை -  சுத்தம் செய்த வெந்தயக்கீரை - 2 கப், கோதுமை மாவு - 2 கப், உப்பு, எண்ணெய் தேவைக்கு, மிளகாய்த்தூள், சீரகத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.செய்முறை: -வாயகன்றபாத்திரத்தில் கோதுமை மாவு, வெந்தயக்கீரை, மிளகாயத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துச் சிறிது சிறிதாகத் தண்ணீவிட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊறவிடவும்.பிறகு அந்தமாவிலிருந்து எலுமிச்சம்பழ அளவு உருண்டையாக எடுத்துச் சப்பாத்தியாகத் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய்விட்டு எண்ணெய்விட்டு வேகவைக்கவும். சுவையான, சத்தான வெந்தயக்கீரை பராத்தா ரெடி. கெட்டித் தயிர் அல்லது தயிர்ப்பச்சடியைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால்,சுவை அள்ளும்.

Jul 27, 2024

அரிசி,உளுந்து இனிப்பு போண்டா

தேவையானவை :பச்சரிசி - 1 கப்உளுந்து பருப்பு -1/2 கப்சமையல் சோடா- ஒரு சிட்டிகைஉப்பு -ஒரு சிட்டிகைசர்க்கரை - 2 கப்தண்ணீர் - 3/4 கப்எலுமிச்சை சாறு - 3 துளிஎண்ணெய்- பொரிப்பதற்குசிவப்பு கலர் -ஒரு சிட்டிகைசெய்முறை :அரிசி மற்றும் உளுந்து பருப்பை 4 மணிநேரம் ஊறவைக்கவும்.ஊறவைத்த அரிசி , பருப்பை தண்ணீர் சேர்க்காமல் மைய அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன், உப்பு, சோடா, கலர் நன்றாக கலக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கலங்கும் வரை அதிக சூட்டில் கொதிக்கவிடவும். நெருப்பை குறைந்த சூட்டில் வைத்து ஒரு கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்துவிட்டு , எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கிவிடுங்கள்.வாணலியில் எண்ணெய் சூடாக்கி , மாவு கலவையை சிறு உருண்டைகளாக எண்ணையில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். எண்ணெய் வடித்துவிட்டு சர்க்கரை பாகில் ஊறவைக்கவும்.ஒரு நாள் ஊறிய பின்பு ,வேறு பாத்திரத்தில் மாற்றி , ஒரு வாரம் வரை சுவைக்கலாம்

1 2 3 4 5 6 7 8 9 10 ... 21 22

AD's



More News