25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல்

Oct 05, 2024

கல்கண்டு சாதம்

தேவையான பொருட்கள் - பச்சரிசி  400 grams , பால் 2 லிட்டர், சீனாகற்கண்டு 1 கிலோ, நெய் ஒன்னே கால் படி, முந்திரிப்பருப்பு 20 எண்ணம், கிஸ்மிஸ்பழம் 1 மேஜைக்கரண்டி, ஏலப்பொடி கால் தேக்கரண்டி, தேங்காய் 1 மூடி,செய்முறைபச்சரிசியை750 மில்லி லிட்டர், தண்ணீரில்(ஒரு பங்கு அரிசிக்கு3 பங்கு தண்ணீர்) போட்டு நன்றாக குழைய வேக விட வேண்டும். பின்2லிட்டர் பாலை ஊற்றி ,நெய்யில் பொரித்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்பழம், வதக்கி தேங்காய்த் துருவலையும் சாதத்துடன் கலந்து பொடி செய்த சீனா கற்கண்டையும் கலந்து, சிறு தணலில் வைத்து அடிபிடிக்காமல் கிளறி ஏலப் பொடி கலந்து இறக்கவும். குறிப்பு- சீனாகற்கண்டிற்குப் பதிலாக 500 grams, சீனியை கலந்து சீனிச் சாதம் தயாரிக்கலாம்.

Oct 05, 2024

மசாலா சுண்டல்

தேவையான பொருட்கள் - 150கிராம் வெள்ளை கண்டல்1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்தேவையான அளவு உப்பு1 பெரிய வெங்காயம் கட் செய்தது2 பச்சை மிளகாய் கட் செய்தது1/2 டீஸ்பூன் மிளகாய்தூள்1/2 டீஸ்பூன் கறிமசால் தூள்1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 4டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் சிறிதளவு கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை3டேபிள்ஸ்பூன் எண்ணெய்1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது செய்முறை- சுண்டலை குறைந்தது8மணி நேரம் ஊற வைக்கவும். பின் குக்கரில் போட்டு மஞ்சள்தூள் சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, பின் உப்பு சேர்த்து வேக வைத்து வடிகட்டி வைக்கவும்(5விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்)ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், வெங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு,தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய் தூள்,1/4 டீஸ்பூன் உப்பு, கறிமசால் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வேக வைத்த சுண்டலை சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, காரம் சேர்ந்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். சுவையான மசாலா சுண்டல் ரெடி.

Oct 05, 2024

பச்சை பயறு சுண்டல்

தேவையான பொருட்கள்பச்சைபயறு- 2கப்தேங்காய்துருவல் -அரைகப்கடுகு -கால்ஸ்பூன்உளுந்தம்பருப்பு- அரைஸ்பூன் பெரியவெங்காயம்-1வரமிளகாய்-2கருவேப்பிலை-1கொத்து உப்புத்தூள்-தேவைக்குசமையல் எண்ணெய் தாளிக்கசெய்முறை- முதலில்பச்சை பயறை சுத்தம் பண்ணி வேகவைத்துக்கொள்ளவும். வடிகட்டி உப்புத்தூள் சேர்த்துக் கொள்ளவும். வெங்காயத்தை கட் பண்ணிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் தாளிக்கிற அளவுக்கு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை, கட்பண்ணிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.அதிலேயே தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். உப்பு சேர்த்த பச்சைப்பயறையும் சேர்த்து ,நன்கு எல்லாம் கலக்கும்படி கலந்துவிடவும். பச்சை பயறு சுண்டல் ரெடி.

Oct 05, 2024

பட்டாணி சுண்டல்

தேவையான பொருட்கள்1/2ஸ்பூன் கடுகு1ஸ்பூன் கடலை பருப்பு1ஸ்பூன் உளுத்தம் பருப்பு3 பச்சை மிளகாய்ஒரு கப் காய்ந்த பச்சை பட்டாணி2 வெங்காயம்2 ஸ்பூன் தேங்காய் துருவல்தேவையானஅளவுஉப்புசமையல் எண்ணெய் தாளிக்கசெய்முறை- எண்ணெய் ஊற்றி கடுகு கடலை பருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். சிவந்த பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தூள் உப்பு போட்டு, நன்றாக வதக்கவும்.பச்சை பட்டாணியை ,8 hoursஊறவைத்து குக்கரில் வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வெந்த பட்டாணியை போட்டு கிளறவும். நன்றாக தாளித்த பிறகு, மேலே தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். பச்சை பட்டாணி சுண்டல் ரெடி.

Oct 05, 2024

தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல்

தேவையான பொருட்கள்:வெள்ளை பட்டாணி - 1 கப் (உலர்ந்த ரகம்) மாங்காய்  (துருவியது) -1/4 கப் + 1 டீஸ்பூன்தேங்காய் - 1/4 கப்(துருவியது)மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்உப்பு - தேவைக்கேற்பகொத்தமல்லி இலை - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)எலுமிச்சை - அரை   பிழிந்தது (விரும்பினால்)எண்ணெய் - 1 டீஸ்பூன்கடுகு -1 தேக்கரண்டிகறிவேப்பிலை - சிறிதளவு (விரும்பினால்) செய்முறை:வெள்ளைப் பட்டாணியை இரவில் அல்லது குறைந்தபட்சம்8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து3 விசில் வரும் அளவிற்கு வேக வைக்கவும். அழுத்தம் வெளியேறும்போது, தண்ணீரில் இருந்து பட்டாணியை வடிகட்டி வைக்கவும்.மாங்காயைத் துருவி, தயாராக வைக்கவும்.வேகவைத்த பட்டாணி, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். பிறகு துருவிய மாங்காய் மற்றும் தேங்காய் சேர்த்து2 முதல்3 நிமிடம் கிளறவும். இறுதியாக, எலுமிச்சையை பிழிந்து, கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும், தீயை அணைக்கவும்.சூடாக இருக்கும் போது பரிமாறவும்.வதக்கிய பிறகு துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். சிறந்த சுவைக்காக நொறுக்கப்பட்ட இஞ்சியை ஒரு தேக்கரண்டி சேர்க்கலாம். இது செரிமானத்திற்கும் உதவுகிறது.உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் எலுமிச்சையை தவிர்க்கலாம்.

Oct 05, 2024

கொண்டைக்கடலை சுண்டல்

தேவையான பொருட்கள்: கொண்டைக்கடலை - 200 கிராம்மிளகாய் வற்றல் - 2தேங்காய் துருவல் - 1 கப்கடுகு உளுந்து - 1 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவுபெருங்காயம் - ½ டீஸ்பூன்கறிவேப்பிலை - ஒரு கீற்றுஎண்ணெய் - தாளிக்க செய்முறை: கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும், அல்லது வெந்நீரில்2 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில், கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கடலையில் கொட்டி கிளறவும். பின்பு தேங்காயைச் சேர்த்து, கிளறி பறிமாறவும். சுவையான கொண்டைக்கடலை சுண்டல் தயார்.

Sep 28, 2024

பீட்ரூட் சாதம்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தினமும் ஒவ்வொரு விதமான உணவு வகைகளை மதியம் சாப்பிடுவதற்காக கொடுத்தனுப்ப வேண்டும். தினமும் ஒரு காய்கறிகளை வைத்து எளிமையான உணவு வகையை குறைந்த நேரத்தில் மிகவும் சுவையாக செய்து முடிக்கலாம். காலையில் எழுந்தவுடன் சாதம், குழம்பு, பொரியல் என்று  செய்வதற்கு சற்று நேரம் அதிகமாக செலவாகும். குக்கரில் EASY யா சாதத்தை எப்படி செய்ய வேண்டும் தேவையான பொருட்கள்: பீட்ரூட் – 200 கிராம், பாஸ்மதி அரிசி – ஒன்றரை டம்ளர், சின்ன வெங்காயம் – 15, இஞ்சி பூண்டு விழுது – அரை  ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், ஏலக்காய் – 1, கிராம்பு – 1, பட்டை சிறிய துண்டு – 1, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து. செய்முறை:  பாஸ்மதி அரிசியை இரண்டு முறை தண்ணீரில் கழுவி, மறுபடியும் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பீட்ரூட்டை தோல் சீவி தேங்காய் துருவல் பயன்படுத்தி துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அது போல பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பை பற்ற வைத்து, அடுப்பின் மீது ஒரு குக்கரை வைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு அரை ஸ்பூன், சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.அதன் பின் துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்பு இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி அரிசியை மட்டும் இதில் சேர்க்க வேண்டும். அதன் பிறகு கொத்தமல்லி  சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு குக்கரை மூடி விடவேண்டும். குக்கரில் பிரஷர் வந்ததும் விசில் போட வேண்டும். 2 விசில் வரும் வரை அப்படியே விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் சாதம் தயாராகிவிட்டது. இவ்வாறு பீட்ரூட் சாதத்தை நீங்களும் ஒருமுறை குக்கரில் செய்து பாருங்கள். மிகவும் அற்புதமாக இருக்கும்.

Sep 28, 2024

புதினா சாதம் 

தேவையான பொருட்கள் :சாதம்- 1 கப் ,  புதினா - ஒரு கைப்பிடி, தேங்காய் - 1/4 மூடி, பச்சமிளகாய் – 1, இஞ்சி - சின்ன துண்டு, நெய் -  2 ஸ்பூன், செய்முறை : புதினா சாதம் எளிதாக செய்ய முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடிபுதினா,1/4 மூடிதேங்காய்,1பச்சமிளகாய், சின்ன துண்டு இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து, ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி, அரைத்த கலவையை சேர்த்து அதோடு வேக வைத்த சாதம் சேர்த்து நன்கு கிளற புதினா சாதம் ரெடி.

Sep 28, 2024

உருளைக் கிழங்கு சாதம்

தேவையான பொருட்கள் :சாதம்- 1 கப் , உருளைக்கிழங்கு - 2 பொடியாக நறுக்கியது, தக்காளி - 2 நறுக்கியது, வெங்காயம் - 2 நறுக்கியது, நெய் -  2 ஸ்பூன்,  மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன்,மிளகாய் தூள் - அரை ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்துசெய்முறை:ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் கடுகு, கறிவேப்பிலை,  நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி,  பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். அதோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, வேக வைத்த சோறை சேர்த்து நன்கு கிளற உருளைக் கிழங்கு சாதம் ரெடி..

Sep 28, 2024

கறிவேப்பிலை சாதம்

தேவையான பொருட்கள் :சாதம்- 1 கப், உளுந்து, கொத்தமல்லி விதை - ஒரு கைப்பிடி, கடலைப்பருப்பு - அரை ஸ்பூன், பெருங்காயம் , மஞ்சள் தூள், கடுகு உப்பு – சிறிதளவு , நெய் - 2 ஸ்பூன் , வரமிளகாய் – 2, மிளகு பொடி- சிறிதுசெய்முறை: ஒருகைப்பிடிஉளுந்து,கொத்தமல்லிவிதை,கடலைப்பருப்பு,கறிவேப்பிலை, பெருங்காயம் வாணலியில் போட்டு நன்கு வறுத்து, சூடு ஆறியதும் நன்கு மிக்ஸியில் போட்டு அரைத்து, பின் ஒரு கடாயில் சிறிதுநெய்ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து, அரைத்த பொடி, சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, அதோடு வேகவைத்த சோறு சேர்த்து கிளறி, மேலாக மிளகு பொடியை தூவி விடவும். சுட சுட கறிவேப்பிலை சாதம் ரெடி காரசாரமான உருளை பட்டாணி கூட்டுடன் பரிமாறலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 21 22

AD's



More News