25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆரோக்கியம்

Mar 23, 2024

சிறுநீரகங்களை சரியான முறையில் செயல்பட வைக்க.....

நமது சிறுநீரகங்களை சரியான முறையில் செயல்பட வைக்க உடலில் போதுமான அளவு நீர் சத்து இருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பது குறைவாக இருந்தால் சிறுநீரக இயக்கம் பாதிக்கும். உங்களின் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளிவந்தால், இதன் அறிகுறியாக கருதலாம். குறைவாக நாம் தண்ணீர் குடிக்கும்போது அது ரத்தத்தில் நச்சுப்பொருட்களைச் சேமித்து வைத்து சிறுநீரகங்களைச் சிரமப்பட்டு செயல்பட வைக்கிறது. இதனைத் தவிர்க்க தினமும் 8 முதல்10 கிளாஸ் வரை தண்ணீர் அருந்துவது நல்லது.சிறுநீரை அடக்கி வைத்திருந்தால் அது சிறுநீர்ப்பையிற்கு அழுத்தம் கொடுக்கும். இந்தப் பழக்கம் தொடர்ந்தால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும். சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கி வைப்பதன்மூலம் அது சிறுநீரகப் பையில் அதிக நேரம் இருந்து அதிகப்படியான கெட்ட பாக்டீரியாக்களை உருவாக்கி, நோய் தொற்று ஏற்படக் காரணமாகிறது. எனவே, சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டவுடன் சிறுநீர் கழித்துவிடுங்கள்.உடலில் உப்பின் அளவு அதிகமாகும்பொழுது அது ரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகத்தில் அழுத்தத்தை அதிகமாக்கும். இதற்காக வேறு நிவாரணிகளை எடுத்துக்கொண்டால் அதுவும் காலப்போக்கில் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தினசரி5 முதல்8 கிராம் உப்பிற்கு மேல் எடுத்துக்கொள்ளாதீர்கள். அதோடு, காபி, சாக்லேட் மற்றும் பிற கால்சியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் ஆசிட்டை உருவாக்கும் பொருட்களைச் சாப்பிடுவதைத் தவி்ர்க்கவும்..அதிகப்படியான புரோட்டீன் உணவுகள் உடலில் அம்மோனியாவை உருவாக்கும். இது சிறுநீரகங்களை பாதிக்கும் நச்சுப் பொருள். எனவே, எவ்வளவுக்கு எவ்வளவு மாமிச உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்து. எனவே, மாமிச உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.காபி, டீ, சோடா மற்றும் குளிர்பானம் போன்ற காஃபின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது அது உடலில் ரத்த அழுத்தத்தை அதிகரித்து சிறுநீரகங்களைப் பாதிக்கும். எனவே, காஃபின் பானங்களைத் தவிர்ப்பது நல்லது.உடலில் எந்த ஆரோக்கியக் குறைபாடு ஏற்பட்டாலும் உடனே அதனை சரிசெய்ய வேண்டும். காரணம் உடலின் சிறு பிரச்னைகள்கூட உங்களது சிறுநீரகச் செயல் பாடுகளைப் பாதிக்கும்.கால்சியம் உடலில் தேங்கி நிற்கும்பொழுது சிறுநீரகக் கற்கள் ஏற்படும். இதனைத் தடுக்க வேண்டும் என்றால் காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், அவகேடோ ஆகிய உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.. இரவு நேரத்தில் சரியாக தூங்காமல் இருப்பவர்களுக்கும் சிறுநீரக பாதிப்பு இருக்கும். ஏனெனின் சிறுநீரக திசுக்கள் இரவு நேரங்களில்தான் புதுப்பிக்கப்படும்.

Mar 22, 2024

அதிக சத்துள்ள, விலை மலிவான சப்போட்டா பழம் 

சப்போட்டாவில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி இருமல் தொற்றிலிருந்தும், சருமத்தை பாதுகாப்பதுடன், வயதான தோற்றத்தையும் தடுக்கின்றது."சிக்கூ" என்றும் அழைக்கப்படும், ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். இதில் பல வைட்டமின்கள் இருக்கின்றதுஇதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் எலும்புகளை வலுப்படுத்தி தேய்மானம் வராமல் பாதுகாக்கின்றது.இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் ரத்த அழுத்தத்தினை சீராக்கி, இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றது.நார்ச்சத்து அதிகம் கொண்ட சப்போட்டா பழம் மலச்சிக்கலை தடுக்க உதவுகின்றது.சப்போட்டா பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பார்வை குறைபாடுகளை தடுக்கவும் செய்கின்றது.இதில் உள்ள மெக்னீசியம் மன அழுத்தத்தை குறைத்து, மனநிலையை மேம்படுத்தவும் செய்கின்றது.சப்போட்டா ரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பதுடன், புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கவும் செய்கின்றது. 

Mar 20, 2024

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நுரையீரல் பாதித்தவர்கள் ,காய்கறி பீன்ஸை தொடர்ந்து சாப்பிட விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்

.அன்றாடம் உண்னவேண்டியடாப்10 காய்கறிகளில்ஒன்றாகக்குறிப்பிடப்படும்காய்கறிபீன்ஸை தொடர்ந்து சாப்பிட விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். பச்சைபீன்ஸில்தேவையானஅளவுக்குவைட்டமின் C, A மற்றும் B6 ஆகியஅனைத்துசத்துக்களும்நிறைந்துஉள்ளன. இதில்ஃபோலிக்அமிலமும்காணப்படுகிறது. இதைத்தவிர, பச்சைபீன்ஸில்தேவையானஅளவுகால்சியம், இரும்புசத்து, மக்னீசியம், மாங்கனீஸ், பீட்டாகரோட்டின், புரதச்சத்து, பொட்டாசியம்மற்றும்காப்பர்சத்துக்கள்உள்ளன.100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின்உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. பீன்ஸ் மெலிந்த புரதங்கள் நிறைந்த உணவு. ஒரு கப் சமைத்த பீன்ஸ்15 கிராம் புரதங்கள் கொண்டது. பீன்ஸ் நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்தது. இவை தசைஉருவாக்கம் மற்றும் தசை வலிமைக்குத் தேவையான புரதங்களை வழங்குகிறது.இதில் நிறைய நார்ச்சத்து மற்றும் சிறப்பு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றம் நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. பீன்ஸில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்திற்கும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.பெருகி வரும் வாகனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால், சுமார்60 சதவீதம் பேர் அசுத்தமான காற்றை சுவாசித்து அதனால் நுரையீரல் பாதித்து நெஞ்சு சளி, மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தில் உள்ளனர் என்கிறது ஓர் ஆய்வு. இந்நிலையில் இந்த நோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்தை தவிர்க்க தினமும்50 கிராம் பச்சை பீன்ஸ் சாப்பிட்டு வர வேண்டும் என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர் . தினமும் பச்சை பீன்ஸ் சாப்பிட90 சதவீதம் நுரையீரல் பிரச்னையை தீர்க்கலாம் என்கிறார்கள்.பீன்ஸ் உட்கொள்வது உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கும். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து தொப்பை மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. பீன்சை கறி, கூட்டு என பல வகைகளில் தயார் செய்து சாப்பிடலாம். அல்லது பீன்ஸை சாலட் வடிவிலும் சாப்பிடலாம். பீன்ஸில் வைட்டமின் ஓ உள்ளது. இது புது செல்கள் உருவாவதில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கின்றது. ஆதலால் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே பரவாமல் தடுக்குமாற்றலை பீன்ஸ் கொண்டுள்ளது.பீன்ஸ் நீரிழிவு நோயாளிகளுக்குஇன்சுலின் எதிர்ப்பை கணிசமாக குறைக்கும்.பீன்ஸ் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது. புரதச் சத்து நிறைந்துள்ளது. பீன்ஸ் டைப்2 இரத்த குளுக்கோஸ் அளவுகளை கணிசமாகக் குறைக்கும் என்கிறார்கள்

Mar 19, 2024

இன்சுலின்’ உற்பத்தி அதிகரிக்க வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியமானது பச்சை வெங்காயத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெங்காயத்தில் க்வெர்செடின் என்ற ஆர்கானிக் சல்பர் உள்ளது. இது உடலில் இன்சுலின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. இதன் விளைவாக நீரிழிவுநோயாளிகளும்வெங்காயத்தைசாப்பிடலாம்.வெங்காயத்தில் ஆர்கானிக் கந்தகம் இருப்பதால் சற்று கடுமையான வாசனையுடன் இருக்கும். ஆனால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் வெங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது. இது இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது.வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஃபோலேட் பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது. இந்த பண்புகள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியம். வெங்காயத்தை வழக்கமாக உட்கொள்வது நரம்பியல் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.வெங்காயம் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் தீமைகளும் உள்ளன. வெங்காயத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வெங்காயம் சரியாக ஜீரணிக்கப்படாவிட்டால், அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படுகிறது.

Mar 18, 2024

கீரையில் உள்ள பலன்கள்

கீரை வகைகள் ஒவ்வொன்றும் நமது உடல் நலனுக்கு ஒவ்வொரு வகையில் உதவுகின்றன. புதினா கீரை: இரும்புச் சத்துள்ளதால், இரத்த சோகையைப் போக்கும்.மணத்தக்காளி கீரை: இதில்வாய்ப்புண், குடல்புண் ஆகியவற்றை குணப்படுத்தும். கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி சத்துக்கள் உள்ளது..கொத்தமல்லி கீரை: பார்வைக் கோளாறு, இரத்த சோகை ஆகியவற்றைப் போக்கும்.வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளது புளிச்சக் கீரை:  இரத்த சோகையைப் போக்கும் வைட்டமின் ஏ, சி, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளது. இக்கீரையைச் சமைத்த நீரை வீணாக்காமல் சூப், ரசம் வைத்து சாப்பிட, சத்துக்கள் கிடைக்கும்.வெந்தயக் கீரை: இதில் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, கால்சியம் உள்ளதால் பார்வைக் கோளாறு, இரத்த சோகையைப் போக்கும். இக்கீரையை நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும்.பசலைக் கீரை: வைட்டமின் ஏ, இரும்பு, பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் இதில் உள்ளன. ஆதலால் பார்வைத் திறனை இது மேம்படுத்தி உடல் சோர்வைத் தடுக்கும்.பொன்னாங்கண்ணிக் கீரை: இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ் சிறிதளவு உள்ளது. மேலும், இரும்பு, கால்சியம் சத்துக்களும் உள்ளன. இக்கீரை சருமத்தை தகதகவென தங்கம் போல் மிளிர வைக்கும்.முருங்கைக் கீரை: வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை இந்தக் கீரையில் உள்ளன. வைட்டமின் ஏ சத்து இதில் மிகுந்துள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் சிறந்தது.முளைக்கீரை: வைட்டமின்கள் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம் ஆகியவை இக்கீரையில் உள்ளன. இது இரத்த சோகையைப் போக்கும். இந்தக் கீரையை சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.அகத்திக்கீரை: இக்கீரையில் வைட்டமின் ஏ, டி, சி, கால்சியம் ஆகியவை சிறிதளவு உள்ளன. வைட்டமின் ஏ 5400 மைக்ரோ கிராம் உள்ளது. ஆதலால் இது இரத்த சோகை, எலும்பு பலவீனமாதல் ஆகியவை வராமல் காக்கும். இந்தக் கீரையை மூடிய பாத்திரத்தில் சமைத்தால் சத்துக்கள் வீணாகாது.கருவேப்பிலை: இதில் வைட்டமின் ஏ,7500 மைக்ரோ கிராம் உள்ளது. போலிக் அமிலம், கால்சியம், வைட்டமின் பி, சி ஆகியவை சிறிதளவு உள்ளன. வைட்டமின் ஏ சத்து மிகுந்துள்ளதால் கண் பார்வைக்கு இது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது

Mar 16, 2024

ஆரோக்கியமான முறையில் ரத்த அளவை அதிகரிக்க….

ரத்த அளவை ஆரோக்கியமான அளவில் பராமரிப்பது நம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் முக்கியமானது. போதுமான அளவு ரத்தம் இருந்தால் மட்டுமே நமது உடலில் ஆக்ஸிஜன் பரவல், ஊட்டச்சத்து வினியோகம் மற்றும் கழிவுகளை அகற்றுவது முறையாக இருக்கும். ஆனால் மரபியல், வாழ்க்கை முறை மற்றும் அடிப்படை சுகாதார நிலைமைகள் போன்ற ரத்த அளவை பாதிக்கும் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இருப்பினும் சில உணவுகளை நாம் உட்கொள்வது மூலமாக ஆரோக்கியமான ரத்த அளவை முறையாகப் பராமரிக்க முடியும். சரி வாருங்கள் இந்தப் பதிவில் அத்தகைய உணவுகளைப் பற்றி பார்க்கலாம். கீரைகள் உடலுக்குத் தேவையான இரும்பு, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளது. குறிப்பாக இரும்புச்சத்து, சிவப்பு ரத்த அணுக்களின் முக்கிய அங்கமாகும். இது உடல் முழுவதும் ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. எனவே கீரைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான முறையில் ரத்த அளவை அதிகரிக்கலாம்.பீட்ரூட்டில் இரும்பு, போலிக் அமிலம் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து காணப்படுகின்றன. பீட்ரூட்டில் உள்ள பெட்டாசயனின் எனப்படும் இயற்கையான சிவப்பு நிறமி, இரத்த சிவப்பணு உற்பத்தியைத் தூண்டி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. பீட்ரூட்டை ஜூஸ் அல்லது பொரியல் செய்து சாப்பிடுவது இரத்த அளவை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும். மாதுளை ஒரு சுவையான பழமாகும். இது இரும்புச்சத்து, விட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. மாதுளையில் உள்ள அதிக வைட்டமின் சி உள்ளடக்கம், இரும்புச் சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதன் மூலமாக ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.பருப்பு, இந்திய உணவு வகைகளில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இது தாவர அடிப்படையிலான புரதம், இரும்பு மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். சைவ உணவு மட்டுமே விரும்பி சாப்பிடுபவர்களுக்கு இரும்புச்சத்து குறைவாக இருப்பின், பருப்பு வகைகள் அவர்களுக்கு உதவும். இதை உட்கொள்வது மூலமாக இரத்த ரத்த அளவை குறிப்பிட்ட அளவு அதிகரிக்கலாம். ஆம்லா என அழைக்கப்படும் நெல்லிக்காயில், விட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இதன் மூலமாக உடலுக்கு இரும்புச்சத்தை உறிஞ்சும் ஆற்றல் அதிகரிக்கும். மேலும் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவி, கணிசமான அளவு ரத்த மேம்படுத்தலுக்கு உதவுகிறது. நெல்லிக்காயை நீங்கள் அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது ஊறுகாய், சட்னி போலவும் உட்கொள்ளலாம். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சத்து நிறைந்த முருங்கைக்காய் இரும்பு சத்து வைட்டமின் ஏ, சி மற்றும் ஆக்சிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. முருங்கைக் கீரை, முருங்கைக்காய், முருங்கை பொடி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக, ஆரோக்கியமான முறையில் ரத்த அளவை அதிகரிக்கலாம்.

Mar 14, 2024

சிறுநீரகம் சுத்தமாக இருக்கவேண்டும் என்றால் ...

சிறுநீரகம் என்பது10 லட்சத்திற்கும் மேற்பட்ட‘நெப்ரான்கள்’ எனப்படும் நுண்ணிய சல்லடைகள் கொண்ட வடிகட்டி. நமது ரத்தத்தைச் சுத்தப்படுத்தி கழிவுகளைச் சிறுநீராக வெளி அனுப்பும் ஓர் உறுப்பு.ஒரு அரை லிட்டர் நீர் அருந்துங்கள். அடுத்து சிறுநீர் எப்போது கழிக்கிறீர்கள் என குறியுங்கள்... உடனே மறுபடியும் அரை லிட்டர் நீர் அருந்துங்கள். மறுபடியும் சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடன் கழித்துவிடுங்கள். இப்படியே உங்கள் வேலை கெடாமல் இதனை3 நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள். முதல் முறை நீர் அருந்தி நீர் கழிக்க எவ்வளவு நேரம் ஆனதோ அதில் பாதி இரண்டாம் முறையும், இரண்டாம் முறை ஆன நேரத்தில் பாதி மூன்றாம் முறையும் என இருந்தால் உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமானது. உதாரணமாக1time60 மினிட்ஸ்2time30 மினிட்ஸ்3 தடவை15minutes என சிறுநீர் வெளியேற வேண்டும். இதில் தவறு இருந்தால் இயற்கையாகவே சரி செய்யலாம்.உங்களது சிறுநீரகம் சுத்தமாக இருக்கவேண்டும் என்றால் முதலில் நீங்கள் தண்ணீரை அதிகமாகக் குடிக்க வேண்டியது அவசியம். தினமும் எட்டு தம்ளர் தண்ணீர் அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்தாலே உங்களது சிறுநீரகம் சரியாக செயல்படத் தொடங்கிவிடும்.சிறுநீரக் கல் கரைக்கவும் சிறுநீரகத்தைச் சுத்தம் செய்யவும் சிறுதானிய உணவுகள் பெரிதும் உதவுகின்றன. குதிரை வாலி, வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகியவை சிறுநீரகத்தைச் சுத்தம் செய்ய உகந்த உணவுகளாகும். மெக்னீசியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரகக் கற்களின் வளர்ச்சியைத் தடுக்கமுடியும். கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் மீல் போன்றவற்றில் மெக்னீசியம் அதிகம் உள்ளது.

Mar 12, 2024

அத்திப் பழ ஜூஸ் குடிப்பதன்மூலம் கிடைக்கும் நன்மைகள்

அத்திப் பழம் உடலுக்கு பல நன்மைகளை தரவல்லது. இருப்பினும், சிலர் அதனை தவிர்ப்பார்கள். அப்படி, அத்திப் பழத்தை வெறுமையாக சாப்பிட இயலாதவர்கள், அதில் பால் அல்லது தண்ணீர் சேர்த்து ஜூஸாக குடித்தால் ருசியாகவும் இருக்கும், உடலுக்கும் நல்லது.விலை உயர்ந்த அத்திப் பழம்,உடல்நலனை கருத்தில்கொண்டு வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டுமுறையோ அத்தி பழ ஜூஸை குடியுங்கள். இருப்பினும், அத்திப் பழ ஜூஸை எத்தனை நாள் இடைவெளியில் குடிக்கலாம் என உங்களின் மருத்துவரை கூட அணுகுவது நலம். அத்திப் பழ ஜூஸை குடிப்பதன் மூலம் தூக்கமின்மை சரியாகும் என கூறப்படுகிறது. அத்திப் பழ ஜூஸில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. தினமும் அத்திப் பழ ஜூஸை குடிப்பதன் மூலம் நீரிழிவு நோயில் இருந்து தள்ளியிருக்கலாம். இதில் இருக்கும் குளோரோஜெனிக் அமிலம்(ChlorogenicAcid) ரத்தத்தில்சர்க்கரைஅளவைகட்டுப்படுத்தும். இருப்பினும், நீரிழிவு பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு பின் அருந்தலாம்., உடல்எடையைகுறைக்கநினைப்பவர்களுக்க,: அத்திப் பழத்தில் கலோரிகள் மிக குறைவு. நார்ச்சத்துஅதிகம்.இதனால்,நீங்கள்வயிறுநிறையகுடித்தாலும்கலோரிகள்ஏறவேஏராது.மேலும்அடிக்கடிபசியும்எடுக்காது.:பொட்டாசியம்அதிகளவில்இருப்பதன்மூலம்,சோடியத்தால்(சமையல்உப்பு)உடலுக்குவரும்மோசவிளைவுகளுக்கு எதிராக இது செயல்படும். இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்கோப்பாக இருக்கும்.   அத்திப் பழ ஜூஸில் ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படும் பீனாலிக் கலவைகள் அதிகம். மேலும், இதில் அதிக அளவு ஃபிளாவனாய்டுகள், அந்தோசயினின்கள் இருக்கின்றன. அவை ஒவ்வாமை(Allergy) எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. எனவே, வயதாகும் தன்மையை இது மெதுவாக்குகிறது.சீக்கிரம்வயதாகமாட்டீர்கள்.உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

Mar 09, 2024

கருவேப்பிலை நீர்:

கருவேப்பிலை நீரில்உள்ள ஜீரணத்திற்கு உதவும் தன்மை, அஜீரணம் மற்றும் வயிற்று உப்புதலை தடுக்கும். கருவேப்பிலை நீர் குடித்தால் வயிற்றின் செயல்பாடுகள் பாதிக்காது. இது கொழுப்பை நீக்கும். இதில் உள்ள பையோ ஆக்டிவ் காம்பொனன்ஸ் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் பசியை குறைக்கும். நாம் அதிகம் சாப்பிட்டதுபோல உணர்வை ஏற்படுத்தும்.இந்நிலையில் இது கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாறுவதின் வேகத்தை குறைக்கும். இதனால் ரத்த சர்க்கரை அதிகரிக்காது. மேலும் இந்த தண்ணீர் குடிப்பதால் இருமல் மற்றும் சளி ஏற்படாது. இதில் மூக்கடைப்பை, நாம் போக்குவதற்கு கருவேப்பிலையில் உள்ள பேக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை அதிகரிக்கும். இதில் உள்ள பிட்டா கரோட்டினி மற்றும் இரும்பு சத்து கூந்தல் நன்றாக வளர உதவும்.கருவேப்பிலைநீர் செய்ய .3 கொத்து கருவேப்பிலையை,4 கப் கொதிக்கும் நீரில் சேர்க்க வேண்டும். அடுப்பை அணைத்து, இதை சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்.  வடிகட்டி குடிக்கவும்.   

Mar 06, 2024

பசியை அதிகரிக்க செய்யும் வெங்காயத்தாள்

ஸ்ப்ரிங் ஆனியன் என்ற பெயரில் பரவலாக அறியப்படும் வெங்காயத்தாள் உணவுக்கு சுவையூட்டுவதாக மட்டுமல்லாமல் பல்வேறு ஊட்டச்சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. பல உடல் பிரச்னைகளை தீர்க்கும் மருத்துவ குணம் இதில் உள்ளது.சைனீஸ் உணவுகள் சாப்பிடும்பழக்கம்மக்களிடையேஅதிகரித்துவிட்டநிலையில்தான்வெங்காயத்தாளின்அருமைமக்களுக்குப்புரியத்தொடங்கிவிட்டது.வெங்காயத்தாளில் விட்டமின் சி. விட்டமின்72 விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள், காப்பர். பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம் மாங்கனிஸ், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன.  வெங்காயத்தில் உள்ளதை போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச்சத்து அதிகளவில் உள்ளது.வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது.வெங்காயத் தாளில் உள்ள புரோப்பைல் டை சல்பேட் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறதுவெங்காயத் தாளை அரைத்து, அதில் வெந்தயத்தை ஊறவைத்து உல ர்த்திப் பொடி செய்து, தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் உடல் சூடு குறையும் . இது உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து, இதய ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது. ரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் உதவுகிறதுவெங்காயத்தாளில் உள்ள சல்பர் சேர்மங்கள் ரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டால் இதயக் கோளாறுகள், பக்கவாதம் போன்ற உயிருக்கு உலை வைக்கும் ஆபத்தான நோய்களில் இருந்து தப்பலாம்.வெங்காயத் தாளில் உள்ள குரோமியம் சத்தானது நீரிழிவு நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. உடலில் சர்க்கரை சத்து ரத்தத்தில் உடனடியாக அதிகரிப்பதை இது தடுக்கிறது.சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக வெங்காயத் தாளை தங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லதாகும்

1 2 ... 6 7 8 9 10 11 12 13 14 15

AD's



More News