25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சர்வதேச செய்திகள்

Jul 23, 2026

நிலவில் குடியிருப்புகள் அமைக்க மஸ்க் திட்டம்.

அடுத்த பத்து ஆண்டுகளில் நிலவில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் குடியிருப்புகளை உருவாக்கும் இலக்கு இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துடன், நிலவில் நிரந்தர தளங்களை அமைக்கும் முயற்சிகளும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

Jul 22, 2026

ராக்கெட் மீட்பில் புதிய சாதனை படைத்த சீனா

சீனா தனது விண்வெளித் திட்டத்தில் மேலும் ஒரு முக்கிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. ஜூலை 10-ஆம் தேதி ஏவப்பட்ட 'லாங் மார்ச் 10பி' ராக்கெட்டின் முதல் கட்டத்தை, கடலில் அமைக்கப்பட்ட சிறப்பு வலை அமைப்பின் மூலம் வெற்றிகரமாக மீட்டதாக அந்நாடு அறிவித்துள்ளது.ராக்கெட்டின் முதல் கட்டத்தை வலையின் உதவியுடன் மீட்கும் தொழில்நுட்பம் உலகளவில் புதிய முயற்சியாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் ராக்கெட் தயாரிப்பு செலவையும் எடையையும் குறைக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெற்றி, விண்வெளித் தொழில்நுட்பத்தில் சீனாவின் திறனை மேலும் உயர்த்தியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

Jul 21, 2026

வியட்நாமில் அரிய குகை முத்துக்கள் கண்டுபிடிப்பு..

வியட்நாமின் குவாங் ட்ரி மாகாணத்தில் உள்ள ஃபோங் நியா-கே பாங் தேசியப் பூங்காவில், 'தாங் குகை' (வெற்றிக் குகை) என்ற புதிய குகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் உருவாகும் அரிய குகை முத்துக்கள் அதிக அளவில் காணப்பட்டுள்ளன.கனிமச் சத்து நிறைந்த நீர், கால்சியம் கார்பனேட் அடுக்குகளை படியவைத்து உருவாகும் இந்த கோள வடிவ முத்துக்கள் உலகளவில் மிகவும் அரிதானவை. மேலும், குகையில் காணப்படும் சுண்ணாம்புப் பாறை அமைப்புகள் மற்றும் கனிமப் படிவங்கள், அப்பகுதியின் பண்டைய புவியியல் வரலாற்றை அறிய முக்கிய ஆதாரமாக உள்ளன.இந்தக் கண்டுபிடிப்பு, வியட்நாமின் நிலத்தடி குகைகள் குறித்து மேலும் ஆய்வு மேற்கொள்ள வழிவகுப்பதுடன், இத்தகைய இயற்கைச் செல்வங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

Jul 20, 2026

அணுமின் சக்தியை தேர்வு செய்த வால்மார்ட்!

அமெரிக்க சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், தனது செயல்பாடுகளுக்காக முதன்முறையாக அணுமின் நிலையத்துடன் நீண்டகால மின்சார ஒப்பந்தம் செய்துள்ளது. இல்லினாய்ஸ் மாநிலத்தில் உள்ள Constellation நிறுவனத்தின் Dresden அணுமின் நிலையத்திலிருந்து சுத்தமான, கார்பன் உமிழ்வில்லா மின்சாரத்தைப் பெறும் இந்த ஒப்பந்தம், 2029 முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் வால்மார்ட்டின் புதிய தானியங்கி விநியோக மையத்திற்கு மின்சாரம் வழங்கப்படும்.

Jul 18, 2026

இந்தியா–ஆஸ்திரேலியா உறவு வலுவாக உள்ளது: விக்டோரியா முதல்வர்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வாழும் இந்தியர்கள் அந்த மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.இந்தியா வெறும் வர்த்தகக் கூட்டாளி மட்டுமல்ல, நம்பிக்கைக்குரிய நாடு என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் தங்களை இந்தியர்களாகவும், ஆஸ்திரேலியர்களாகவும் ஒரே நேரத்தில் பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Jul 17, 2026

நிலக்கரியிலிருந்து நேரடி மின்சாரம்... சீனாவின் புதிய கண்டுபிடிப்பு!

நிலக்கரியை தோண்டி எடுக்காமல், பூமிக்கடியில் உள்ள நிலக்கரி அடுக்குகளிலிருந்தே நேரடியாக மின்சாரம் உற்பத்தி செய்யும் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு மின்கலனை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுமார் 2 கி.மீ. ஆழத்தில் செயல்படும் இந்த தொழில்நுட்பம், Electrochemical முறையில் மின்சாரம் உற்பத்தி செய்து தரைக்கு அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jul 15, 2026

11,000 காரட் அரிய மாணிக்கம் கண்டுபிடிப்பு.

மியான்மரின் புகழ்பெற்ற மொகோக் சுரங்கப் பகுதியில் சுமார் 11,000 காரட் எடையுள்ள அரிய மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2.2 கிலோ எடை கொண்ட இந்த மாணிக்கம், அந்நாட்டில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய ரூபியாக கருதப்படுகிறது. இதன் உயர்தர நிறம் மற்றும் தெளிவுத்தன்மை காரணமாக சர்வதேச சந்தையில் அதிக மதிப்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jul 14, 2026

2.6 லட்சம் குடும்பங்களின் மருத்துவக் கடனை தள்ளுபடி செய்த தம்பதி!

ஸ்னாப்சாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எவன் ஸ்பீகல்மற்றும் அவரது மனைவி மிராண்டா கெர், அமெரிக்காவின் சுமார் 2.61 லட்சம் குடும்பங்களின் மருத்துவக் கடனை தள்ளுபடி செய்துள்ளனர். 'Undue Medical Debt' என்ற இலாப நோக்கமற்ற அமைப்புடன் இணைந்து, சுமார் 550 மில்லியன் டாலர் மதிப்பிலான மருத்துவக் கடனை ஏற்றுக்கொண்ட அவர்கள், பொருளாதார சுமையின்றி மக்கள் சிகிச்சை பெற வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்று தெரிவித்துள்ளனர்.

Jul 14, 2026

உலகின் முதல் Air Taxi Vertiport-க்கு UAE அங்கீகாரம்!

எலக்ட்ரிக் ஏர் டாக்சி சேவைக்கான உலகின் முதல் வணிக Vertiport-க்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் துபாயில் பாதுகாப்பான Air Taxi சேவையை அறிமுகப்படுத்தும் பணிகள் வேகமடைந்துள்ளன. நகர்ப்புற விமானப் போக்குவரத்தில் UAE முன்னோடியாக உருவெடுத்து வருகிறது.

Jul 13, 2026

300 மலைப்பாம்புகள்... மின்கட்டணத்தில் சிக்கிய நபர்!

சீனாவின் தைசோ பகுதியில் வசித்த ஒருவர், தனது வீட்டிலேயே 300-க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகளை வளர்த்து வந்தது அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. பாம்புகளுக்கு தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை பராமரிக்க அதிக மின்சாரம் பயன்படுத்தப்பட்டதால், வழக்கத்திற்கு மாறான மின்கட்டணம் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளிச்சத்துக்கு வந்தது.

1 2 3 4 5 6

AD's



More News