25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


பழமொழி.

May 13, 2026

 அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.---விடா முயற்சி.  அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி –முன்மாதிரி .

May 06, 2026

முன்னோர்கள் சாப்பிடும் போது பேசுகின்ற பழமொழிகள் -2

சட்டியில் இருந்தா தானே அகப்பையில் வரும். அகப்பை அறுசுவை அறியுமா. அண்டை வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே. அசைந்து திங்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

Apr 29, 2026

முன்னோர்கள் சாப்பிடும் போது பேசுகின்ற பழமொழிகள்.

பிச்சை எடுத்துதாம் பெருமாளு அத்த புடுங்கிச்சாம் அனுமாரு. குடலு கூழுக்கு அழுததாம், கொண்டை, பூவுக்கு அழுததாம்.. குடிப்பது கூழாம், கொப்பளிப்பது பன்னீராம்.. ஊசி போல தொண்டையாம், பானை போல வயிறாம்.

Apr 22, 2026

வயசு வைக்கோலா போகுதாம், கிழவி கிண்ணரம் வாசிக்குதாம்.

கிண்ணரம் என்பது ஒரு இசைக்கருவி. இசைக்கருவி வாசிக்கும் அளவுக்கு உடல் வலிமை உள்ள கிழவி,பற்றிய பழமொழி இது. அதாவது சில வயதானவர்கள், அறுத்து அடித்து வைத்த நெற்கதிர்கள் வைக்கோலாக மாறுவதுபோல, எவ்வளவுதான் முதுமை அடைந்தாலும் வலிமை குறையாது, தாங்களே உழைத்து, ஓடி ஆடி வேலை செய்து சாப்பிடுவார்கள். அவர்களை இவ்வாறு கூறலாம்.

Apr 15, 2026

பறவைகள் பற்றிய பழமொழிகள் -2

. வௌவால் வீட்டிற்கு விருந்திற்கு போனால் தலைகீழாகத்தான் தொங்கணும். . ஒரு குருவி இரையெடுத்தால் ஒன்பது குருவி வாய் திறக்கும். . குருவி தலைமீது பறக்கிறது என்பதற்காக தலையில் கூடுகட்ட அனுமதிக்கலாமா.  கடல் வற்றும் கருவாடு தின்னலாம் என்று காத்திருந்து உடல் வற்றி செத்ததாம் கொக்கு.  கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் காலை தூக்கிகிட்டு ஆடிச்சாம்.

Apr 08, 2026

பறவைகள் பற்றிய பழமொழிகள் - 1

தூக்கணாங்குருவி குரங்குக்கு புத்தி சொன்னது போல.   வித்தை காட்டுற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து. பாசமா வளர்த்தானாம் பச்சைக்கிளி.. அத பொசுக்குன்னு வெட்டுச்சாம் வெட்டுக்கிளி. காட்டு கோழிக்கு உரலும் உலக்கையும்தான் கைலாசம். பாக்கு தின்ற வௌவாலுக்கு தாம்பூலம் தந்தது யாரோ?

Apr 01, 2026

ஜோதிட பழமொழிகள் -2

.ஞாயிற்றுக்கிழமை பிறந்தால்,நாய் படாத பாடு....  சித்திரை, பத்தரை மாற்று தங்கம்..... .மிருகசீரிடம் பட்டாபிஷேகம்...... .திருவோணம் பரிமள பிரியன்.. .பரணியில் மழை பெய்தால், தரணி விளையும்..

Mar 25, 2026

ஜோதிட பழமொழிகள் 1

அவிட்டம் தவிட்டு பானையிலும் தங்கம் சேரும்...... குரு கொடுப்பின் சனி தடுப்பார், சனி கொடுப்பின் எவர் தடுப்பார்......! .கன்னியில் செவ்வாய், கடலும் வற்றும்..... வைத்தியன் கையை பிடிப்பான், ஜோதிடன் |காலை பிடிப்பான்.... குரு நின்ற இடம் பாழ், சனி பார்த்த இடம் பாழ்.....

Mar 18, 2026

பணம் பத்தா இருக்கணும், பொண்ணு முத்தா இருக்கணும், முறையும் அத்தை மகளா இருக்கணும்.

நிச்சயதார்த்தம் என்பதை பரிசம் போடுதல் எனக் கூறலாம். அதாவது 'பரிசு கொடுத்தல்' என்பதுதான் மருவிப் பரிசம் என்றாகிவிட்டது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். நிச்சயதார்த்தத்திற்கும் பரிசு கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்?அந்தக் காலத்தில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யவேண்டுமானால், ஆண்மகன் தன் சம்பாத்தியத்தில் பொருள் சேர்த்து ஒரு பெரிய தொகையைப் பெண் வீட்டார்க்கு கொடுக்கவேண்டுமாம். தனக்கு மனைவியாகத் தன் வீட்டிற்கு வரப்போகிறவளை பேணி வளர்த்த குடும்பத்திற்காக ஒரு ஆண் கொடுக்கும் பரிசுதான் அந்தத் தொகை. அப்படி பரிசு கொடுக்க நம்மிடம் நிறைய பணம் இருக்க வேண்டும். ஏனெனில், பெண்ணின் அழகு மற்றும் குடும்ப சூழ்நிலை பொறுத்து அந்தத் தொகை அதிகரிக்கும். அதனால்தான் பணம் பத்தா இருக்கணும்.பின் பெண் முத்துபோல அழகாக மற்றும் நல்ல குணங்களை கொண்டவளாக இருக்கணும். முறை அத்தைமகளாக இருந்தால் பணம்கூடக் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை.

Mar 11, 2026

பணம் இருந்தால் பகைவன் பல்லும் மின்னும். பணம் இல்லாவிட்டால் சொந்தக்காரன் சொல்லும் கொல்லும்.பணம் இல்லாவிட்டால் சொந்தக்காரன் சொல்லும் கொல்லும்.

பணம் இருந்தால் பகைவன் பல்லும் மின்னும்.பணம் இல்லாவிட்டால் சொந்தக்காரன் சொல்லும் கொல்லும்.எப்போதும் உங்களுக்கென்று சேர்த்து வைத்துக் கொண்டு ,மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News