இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை---திருப்திப்படாத மனம். இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை----தருமஞ் செய்.
ஆழம் அறியாமல் காலை விடாதே---ஆராய்ந்து செய். ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்---காலம் மாறி வரும் .
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.---விடா முயற்சி. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி –முன்மாதிரி .
சட்டியில் இருந்தா தானே அகப்பையில் வரும். அகப்பை அறுசுவை அறியுமா. அண்டை வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே. அசைந்து திங்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
பிச்சை எடுத்துதாம் பெருமாளு அத்த புடுங்கிச்சாம் அனுமாரு. குடலு கூழுக்கு அழுததாம், கொண்டை, பூவுக்கு அழுததாம்.. குடிப்பது கூழாம், கொப்பளிப்பது பன்னீராம்.. ஊசி போல தொண்டையாம், பானை போல வயிறாம்.
கிண்ணரம் என்பது ஒரு இசைக்கருவி. இசைக்கருவி வாசிக்கும் அளவுக்கு உடல் வலிமை உள்ள கிழவி,பற்றிய பழமொழி இது. அதாவது சில வயதானவர்கள், அறுத்து அடித்து வைத்த நெற்கதிர்கள் வைக்கோலாக மாறுவதுபோல, எவ்வளவுதான் முதுமை அடைந்தாலும் வலிமை குறையாது, தாங்களே உழைத்து, ஓடி ஆடி வேலை செய்து சாப்பிடுவார்கள். அவர்களை இவ்வாறு கூறலாம்.
. வௌவால் வீட்டிற்கு விருந்திற்கு போனால் தலைகீழாகத்தான் தொங்கணும். . ஒரு குருவி இரையெடுத்தால் ஒன்பது குருவி வாய் திறக்கும். . குருவி தலைமீது பறக்கிறது என்பதற்காக தலையில் கூடுகட்ட அனுமதிக்கலாமா. கடல் வற்றும் கருவாடு தின்னலாம் என்று காத்திருந்து உடல் வற்றி செத்ததாம் கொக்கு. கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் காலை தூக்கிகிட்டு ஆடிச்சாம்.
தூக்கணாங்குருவி குரங்குக்கு புத்தி சொன்னது போல. வித்தை காட்டுற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து. பாசமா வளர்த்தானாம் பச்சைக்கிளி.. அத பொசுக்குன்னு வெட்டுச்சாம் வெட்டுக்கிளி. காட்டு கோழிக்கு உரலும் உலக்கையும்தான் கைலாசம். பாக்கு தின்ற வௌவாலுக்கு தாம்பூலம் தந்தது யாரோ?
.ஞாயிற்றுக்கிழமை பிறந்தால்,நாய் படாத பாடு.... சித்திரை, பத்தரை மாற்று தங்கம்..... .மிருகசீரிடம் பட்டாபிஷேகம்...... .திருவோணம் பரிமள பிரியன்.. .பரணியில் மழை பெய்தால், தரணி விளையும்..
அவிட்டம் தவிட்டு பானையிலும் தங்கம் சேரும்...... குரு கொடுப்பின் சனி தடுப்பார், சனி கொடுப்பின் எவர் தடுப்பார்......! .கன்னியில் செவ்வாய், கடலும் வற்றும்..... வைத்தியன் கையை பிடிப்பான், ஜோதிடன் |காலை பிடிப்பான்.... குரு நின்ற இடம் பாழ், சனி பார்த்த இடம் பாழ்.....