போதுமென்ற மனமே, பொன் செய்யும் மருந்து.மனநிறைவே ஒருவனுக்குச் சிறந்த செல்வமாகும். தொட்டில் பழக்கம், சுடுகாடு மட்டும்.இளமையில் பழகிய பழக்கம், வயதானாலும் வரும்.
. சிறு துரும்பும் பல் குத்த உதவும். எதையும் குறைவாக மதிப்பிடக் கூடாது . தன் வினை தன்னைச் சுடும். பிறருக்குச் செய்யும் தீங்கு தனக்கே தீங்காக முடியும்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை - நன்றி மறவேல் உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? - தகுதிக்கு மேல் எதையும் பெற முடியாது.
இரக்கப் போனாலும் சிறக்கப்போ,வறுமையிற் செம்மை . ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம். கோபம் சிந்தனைக்கு இடையூறு.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு---ஒற்றுமையே பலம். அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறிய---உத்தம நட்பு
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? - இளமையிற் செய் கடவுளை நம்பினோர் கைவிடப்படார் - நம்பிக்கை காக்கும்.
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும் - உலோபங் கூடாது. எடுக்கிறது பிச்சை ,ஏறுவது பல்லாக்கு - வீண் பெருமை
இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை---திருப்திப்படாத மனம். இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை----தருமஞ் செய்.
ஆழம் அறியாமல் காலை விடாதே---ஆராய்ந்து செய். ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்---காலம் மாறி வரும் .
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.---விடா முயற்சி. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி –முன்மாதிரி .