25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


பழமொழி.

Mar 26, 2025

ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.

ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான். பொருள் - தந்தையின் தொழிலை மகனுக்கு யாரும் கற்றுத்தரவேண்டிய அவசியம் இல்லை. அவன் தன் தந்தையுடன் இருக்கும்போது, அவனை அறியாமலே அதை அவன் கற்றுக்கொண்டு ,அதில் அவன் சிறந்தவனாகவும் விளங்குவான்.

Mar 19, 2025

ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்.

ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்.பொருள்: எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு 

Mar 12, 2025

கெட்டவனுக்கு உற்றார் கிளையிலும் இல்லை

கெட்டவனுக்கு உற்றார் கிளையிலும் இல்லை. பொருள்: தீய குணம் மற்றும் நடத்தை கொண்டவனின் சொந்தம் என அவனது உறவுகள் கூட கூறிக்கொள்ள மாட்டார்கள். 

Mar 05, 2025

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

பொருள்: என்னதான் பணம் சம்பாதித்து பெரும் செல்வந்தன் ஆனாலும் ,அவனிடம் படிப்பு இல்லை என்றால் ,அவனிடம் ஞானம் இருக்காது என்பதே பொருள்.

Feb 26, 2025

இருகினால் களி இளகினால் கூழ்

இருகினால் களி இளகினால் கூழ்பொருள்: எந்த ஒரு விடயத்திலும் எவ்வகையிலாவது நமக்கு நன்மை உண்டு.

Feb 19, 2025

கல்லை கண்டால் நாயை காணோம், நாயை கண்டால் கல்லைக் காணோம்.

 பொருள் -"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனை கண்டால் கல்லைக் காணோம்" என்பதே சரி. நாயகன் என்பது இங்கு கடவுளை குறிக்கிறது. ஒரு கற்சிலையை கற்சிலையாக பார்த்தால் அதில் கடவுள் தெரியமாட்டார். அதே கற்சிலையை கடவுளாக பார்த்தால் அங்கு கல் தெரியாது.

Feb 12, 2025

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்..

.தவளை கத்தினால் மழை.அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாரம்.தும்பி பறந்தால் தூரத்தில் மழை.

Feb 05, 2025

ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே

ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே. பொருள் :என்ன தான் ஊரார் வீட்டில் நெய் விட்டு ருசியாக சமைத்திருந்தாலும் அது தன் மனைவியின் கை பக்குவத்திற்கு ஈடாகாது என்று கணவன் மார்கள் கூறும் பழமொழி இது.

Jan 29, 2025

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும். அகத்தில்  போட்டாலும் அளந்து போடணும் சரி  பொருள் : அகம் என்றால் மனம் என்று பொருள். எந்த ஒரு விடயத்தையும் மனதில் பதியவைக்கும் முன்பு அதை தெளிவாக ஆராய்ந்து அறிந்து பதியவைக்க வேண்டும்.

Jan 22, 2025

ஊதாரிக்கு பொன்னும் துரும்பு"

ஊதாரிக்கு பொன்னும் துரும்பு"சேமிக்காமல் செலவு செய்பவர்களுக்கு எவ்வளவு பெரிய செல்வமும் சிறு துரும்பாகவே தெரியும்.என்பதை குறிப்பதுதான் இந்த பழமொழி. 

1 2 3 4 5 6 7 8 9 10

AD's



More News