25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நலம் வாழ

Sep 15, 2023

முலாம்பழம்,சூரியகாந்தி விதைகளின் நன்மைகள்

புரதம் நிறைந்தது.நார்சத்து அதிகம். கொலஸ்ட்ராலை குறைக்கிறது. வீக்கக்தை குறைக்கிறது, முலாம்பழம்விதைகள்.நோய்எதிர்ப்புசக்தியைஅதிகரிக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக் கிறது. கொலஸ்ட்ராலை குறைக்கிறது,சூரியகாந்தி விதைகள்சூரியகாந்தி விதைகளில் ஒலிக் மற்றும் லினோலிக் அமிலம் நிறைந்துள்ளது மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும்சோடியம் குறைவாக உள்ளது.அவற்றில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளன.புற்றுநோய் அபாயத்தைக் குறைக் கிறது.மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.சூரியகாந்தி விதைகள் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பயனுள்ளதாகஇருக்கும்.

Sep 14, 2023

20 நிமிசம்வாக்கிங்:

இன்றைய பிஸியானவாழ்க்கையில், மக்கள்பெரும்பாலும் நாள்முழுவதும் உட்கார்ந்துவேலை செய்கிறார்கள்.இது அவர்களின்ஆரோக்கியத்தில் மோசமானவிளைவை ஏற்படுத்துகிறது.ஐடி துறைஉள்பட பல்வேறுதுறைகளை சேர்ந்தவர்கள்பல மணிநேரம்கணினி முன்உட்கார்ந்தே வேலைபார்ப்பதை வழக்கமாகவைத்துள்ளனர். இவர்கள்பெரிதாக நடைபயிற்சிமேற்கொள்வதில்லை ஒரு ஆய்வின்படி, தினமும் 20 நிமிடம் நடைபயிற்சிசெய்வது பலஆரோக்கிய நன்மைகளைவழங்குகிறது. உட்கார்ந்துஉடற்பயிற்சி செய்வது, நடைபயிற்சி போன்றபலன்களை அளிக்காது. நாள் முழுவதும்சிறிது நேரம்நடப்பது தசைகளைசெயல்படுத்தி இரத்தசர்க்கரை அளவைக்கட்டுப்படுத்த உதவுகிறது.உட்கார்ந்த நிலைகால்களின் இரத்தநாளங்களில் அழுத்தத்தைஏற்படுத்துகிறது, இதுஇரத்த ஓட்டத்தைமாற்றுகிறது மற்றும்இரத்த அழுத்தத்தைஅதிகரிக்கும்.20 நிமிடம்நடைப்பயிற்சி செய்வதால்ரத்தத்தில் உள்ளசர்க்கரை மற்றும்ரத்த அழுத்தஅளவைக் குறைக்கமுடியும் என்றுஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.நடைபயிற்சி ஒருநல்ல கார்டியோஉடற்பயிற்சி ஆகும், இது கலோரிகளைஎரிக்க உதவுகிறது. நீங்கள் உடல்எடையை குறைக்கவிரும்பினால், தினமும் 20 நிமிடம் நடைபயிற்சிசெய்வது நல்லது. தினமும்20 நிமிடங்கள்நடைப்பயிற்சி மேற்கொள்வது,.இதயத்தை ஆரோக்கியமாகவைத்திருக்க உதவுகிறது. இரத்தஅழுத்தம் மற்றும்கொலஸ்ட்ரால் அளவைக்குறைக்க உதவுகிறதுநடைபயிற்சி சிலவகையான புற்றுநோய்களின்அபாயத்தைக் குறைக்கஉதவும்.தினமும் 20 நிமிடம்நடப்பது மனஆரோக்கியத்தை மேம்படுத்தும். நடைபயிற்சி மனஅழுத்தத்தையும் பதட்டத்தையும்குறைக்க உதவுகிறது. இது தன்னம்பிக்கை மற்றும் மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.நடைபயிற்சி பலஆரோக்கிய நன்மைகளைவழங்குகிறது. நடைபயிற்சிஎலும்புகள் மற்றும்தசைகளை வலுப்படுத்தவும்.,தூக்கத்தின் தரத்தைமேம்படுத்தவும் உதவும்..

Sep 12, 2023

கண் சார்ந்த பிரச்சினை குறைய

ஸ்ப்ரிங் ஆனியன் என்ற பெயரில் பரவலாக அறியப்படும் வெங்காயத்தாள் உணவுக்கு சுவையூட்டுவதாக மட்டுமல்லாமல் பல்வேறு ஊட்டச்சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. பல உடல் பிரச்சினைகளை தீர்க்கும் மருத்துவ குணம் இதில் உள்ளது.வெங்காயத்தாளில் விட்டமின் சி, பி2, ஏ, கே காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியுள்ளது.வெங்காயத்தாளில் உள்ள சல்பர் சேர்மங்கள் இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.இதில் உள்ள குரோமியம் சத்தானது நீரிழிவு நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் பெங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது.இதில் உள்ள புரோப்பைல் டை சல்பேட் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இதய ஆரோக்கியத்திற்கும் கொழுப்புகளை குறைக்கவும் வெங்காயத்தாள் நல்ல உணவு.வெங்காயத்தாள் சாப்பிடுவதால் கண் சார்ந்த பிரச்சினைகள் பெருமளவில் குறையும்.

Sep 08, 2023

மதியம் சாப்பிடக் கூடாத உணவுகள்

மதிய நேரத்தில் உணவு சாப்பிடுவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும் மற்றும் எதை சாப்பிட கூடாது என்பதும் முக்கியம்.காலை மற்றும் இரவு உணவை போலவே மத்திய நேரத்தில் உணவு சாப்பிடுவது மிக முக்கியமானது. பலரும் வேலைப்பளு காரணமாக மதிய உணவு சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறார்கள் இல்லை என்றால் மிக தாமதமாக சாப்பிடுகிறார்கள்.இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, சரியான நேரத்தில் தவறாமல் மதிய உணவு சாப்பிட வேண்டும் மதிய நேரத்தில் உணவு சாப்பிடுவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும் மற்றும் எதை சாப்பிட கூடாது என்பதும் முக்கியம். மதியம் மற்றும் மாலை நேரங்களில் ,மிகவும் மோசமான துரித உணவுகளைசாப்பிடக் கூடாது  (பாஸ்தா உணவுகள்,கிரீன் ஜூஸ்,வறுத்த உணவுகள்,சாண்ட்விச்,நூடுல்ஸ் )காபி,டீ போன்றவை மதியம் சாப்பாட்டிற்கு பதில் சாப்பிடக் கூடாது.நேற்றிரவு பிரியாணியை மதிய உணவாக சாப்பிடக் கூடாது. அதிக காரமான உணவை ,சில நாட்களுக்கு முன்பே தயாரித்து சாப்பிடுவது, உங்கள் வயிற்றை மிகவும் மோசமாக பாதிக்கும்.மதிய உணவு நேரம் வறுத்த உணவுகள் வறுத்த உணவுகள் சாப்பிடக் கூடாது.  பலர் மதிய உணவிற்கு சூப் மற்றும் சாலட் சாப்பிடுவதைக் காணலாம். ஆனால் இதுபோன்ற குறைந்த கலோரி உணவை உட்கொள்வதால் இரவு உணவு வரை உங்களை முழுதாக வைத்திருக்க முடியாது. பழங்கள் உணவுக்குப் பின் அல்லது சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது உங்கள் செரிமானத்தை பாதிக்கிறது.சில பீட்சா துண்டுகள் சாப்பிடுவது உங்களை முழுதாக ஆக்கிவிடும் .ஆனால் அது உங்கள் உடலுக்கு தேவையான சரியான ஊட்டச்சத்து அல்ல.மதிய நேரத்தில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க..!

Sep 07, 2023

முதுமை அடையாமல் நீண்ட ஆயுளை அளிக்கும் சக்தி கொண்ட புரசு மரப்பூ கஷாயம்

புரசு மரப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் வாத சளி, மூல நோய்கள் மற்றும் பெண்களின் தனிப்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது.புரசு இலையில் சாப்பாடு செய்தால் வயிற்றுக் கட்டிகள், ரத்தத்தில் உள்ள சூடு, பித்தம் குறையும்.புரசு மரத்தின் இலைகள், பூக்கள், மேல் பட்டை, வேர்ப்பட்டை, காய்களை சம பாகமாக இடித்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எல்லா நோய்களும் குறையும்.1 கிராம் புரசு விதையுடன் 5 கிராம் வெல்லம் கலந்து பேஸ்ட் செய்து சாப்பிட்டால் மாதவிடாய் வலி குறையும்.எலுமிச்சம்பழச் சாறுடன் புரசு விதைகளை அரைத்து சிரங்கு, படை போன்றவற்றின் மீது பூசி வந்தால் நாளடைவில் நோய் குறையும்.புரசு விதையை இளநீர், குங்குமப்பூ சேர்த்து அரைத்து மாத்திரை அளவு செய்து உலர்த்தி நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.புரசு மர விதைகளை உலர்த்தி தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் நீங்கும்.

Sep 06, 2023

வெப்பத்தைத் தணிக்கும் இளநீர்

ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறதுஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்துவாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர் வெப்பத்தைத்  தணிக்கும்உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்இளநீரை வெறும்   வயிற்றில் சாப்பிடக் கூடாதுஇளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.ஜீரண சக்தியை அதிகரிக்கும்.சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.

Sep 03, 2023

உலகில் உள்ள ஊட்டச்சத்தான உணவுகளில் ஒன்றாக இட்லியை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

தமிழர்களின் அன்றாட உணவில் முக்கியமானது இட்லி, அரிசி, உளுந்து கலந்து தயாரிக்கப்படும் இட்லி பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை தன்னுள் கொண்டிருக்கிறது. காலையிலேயே இட்லி சாப்பிடுதால் , வயிற்று கோளாறு, வயிற்றில் புண் இருந்தால் எளிதில் சீரணமாகும் இட்லியை சாப்பிடுவது நல்லது.நீராவியில் வேகவைத்து செய்யும் உணவாதலால் இட்லியில் கொழுப்புச்சத்து அதிகம் கிடையாது.இட்லி சாப்பிடுவதால் மூளைகளில் செயல்படும் செல்கள் சுறுசுறுப்படைகிறது.உடலில் நல்ல இரத்தம் உற்பத்தி அதிகரிக்க இட்லி அற்புதமான உணவு.இட்லியில் புரதச்சத்துக்கள், அமினோ அமிலங்கள், நார்ச்சத்துக்கள் நிறைவாக உள்ளன.இட்லி எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஎன்பதால் அனைவரும் உண்ணலாம்.உலகில் உள்ள ஊட்டச்சத்தான உணவுகளில் ஒன்றாக இட்லியை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

Sep 01, 2023

மணக்கும் மல்லிகைப்பூ

மணக்கும் மல்லிகைப்பூ, தலையில் சூடுவதற்கு மட்டுமல்ல,பெண்களின் கருபிரச்னைகளுக்கு  முக்கிய மருந்தாக மல்லிகைப்பூ உள்ளது.மல்லிகைப் பொடியை தேனில் சேர்த்து சாப்பிட்டால் கருப்பைவலுவாகும்.மல்லிகைப் பூவை கொதிக்க வைத்து, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக பிரச்னைகள் நீங்கும்.வயிற்று கோளாறு மற்றும் அஜீரன பிரச்னைகளுக்கு மல்லிகைப்பூ சாறு நல்லது.வயிற்றுப்புழுக்களையும் மல்லிகைப் பூ அழிக்கிறதுமல்லிகைப் பூ பொடி, சிறுநீரக கற்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.நீர் பாதையில் இருக்கும் எரிச்சலை கட்டுப்படுத்தும்நரம்பு தளர்ச்சிக்கு மல்லிகைப் பூ பொடி சிறந்த மருந்து.தாய் பால் கட்டிக்கொண்டால்மல்லிகைப்பூ பொடிையை மார்பில் போட, பால் கட்டி கரையும். மல்லிகைப்பூக்களைநீரில்போட்டுகொதிக்கவைத்துஅந்தநீரைப்பனங்கற்கண்டுடன்பருகிவந்தால்,கண்களில்ஏற்படும்சதைவளர்ச்சிகுறைந்து,படிப்படியாகபார்வைதெரியஆரம்பிக்கும்.மல்லிகைப்பூக்களை நன்றாக அரைத்து உடலில் வீக்கம் மற்றும் எரிச்சல் நமைச்சல் இருக்கும் இடங்களில் பூசி வந்தால் எளிதில் குணமடையும். நமது குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் வயிற்றின் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்கவைத்து அதனை வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும். அதைப்போலவே அஜீரணக் கோளாறினால் ஏற்படும் வயிற்றுப்புண்களுக்கும். வாய்ப்புண்களுக்கும் மல்லிகை பூ சிறந்த மருந்து.

Aug 30, 2023

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காய் ஜூஸ்

வெண்டைக்காய் ஜூஸில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடம்பில் கொலஸ்ட்ராலின் அளவுகள் அதிகரிக்கும் பொழுது இதயம் சார்ந்த நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். வெண்டைக்காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவும்.வெண்டைக்காய் ஜூஸில் நிறைந்துள்ள கால்சியம் எலும்புகளின் உருவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. வெண்டைக்காய் ஜூஸை தொடர்ந்து குடித்து வர எலும்பு சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.உடம்பில் இரத்த பற்றாக்குறை உள்ளவர்கள் அல்லது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்குவெண்டைக்காய் ஜூஸ் நல்லது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். இதன் மூலம் இரத்த சோகையிலிருந்தும் விடுபடலாம்.வெண்டைக்காய் ஜூஸில் வைட்டமின்களும் புரதங்களும் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வெண்டைக்காய் ஜூஸை தொடர்ந்து குடித்து வர நுண்கிருமிகளால் ஏற்படக்கூடிய தொற்றுகளை தவிர்க்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவும்.

Aug 27, 2023

பெருங்கடல்களில் ஆழமானது பசிபிக் பெருங்கடல்

ஐந்து பெருங்கடல்களில் பெரியது, ஆழமான பசிபிக் பெருங்கடல். இக்கடலுக்கு பெயரிட்டவர்  போர்ச்சுக்கலின் மெகல்லன். இவர் 1519ல் ஸ்பெயினில்  இருந்து ஐந்து கப்பல்களில் 280 மாலுமிகளுடன் கிழக்கு  நோக்கி பயணித்தார். ஒவ்வொரு பகுதியாக  கண்டறிந்த இவர், அமெரிக்க கண்டத்துக்கு அப்பால்  மேற்கே உள்ள கடலுக்கு 'பசிபிக் கடல்' என பெயர்  வைத்தார்.  இதன் பரப்பளவு 16.25  சதுர கி.மீ. இதன் சராசரி ஆழம் 14,040 அடி. அதிகபட்ச ஆழம் 35,797 அடி. பூமியின் மொத்த நீர் பரப்பளவில்  46% இக்கடலில் உள்ளது.

1 2 ... 35 36 37 38 39 40 41 42 43 44

AD's



More News