25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நலம் வாழ

Apr 04, 2026

ஒற்றைத் தலைவலி வராமல் தடுக்க..

சுக்கு, மிளகு, திப்பிலி பொடியை சிறிது எடுத்து தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். மல்லிப்பொடி ஒரு தேக்கரண்டி, பனைவெல்லம், சுக்குப்பொடியை நீர்விட்டு காய்ச்சி குடித்து வரலாம். இரவு படுக்கச் செல்லும் முன் திரிபலா சூரணம் பொடியை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இது ஒற்றை தலைவலி வராமல் தடுப்பதுடன், ரத்தத்தை சுத்திகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

Apr 02, 2026

உடல் சூட்டை குறைக்கும் தர்பூசணி.

கோடைகாலத்தில்வெயிலுக்குஇதமாக உடல் சூட்டை குறைக்கும்பழங்களில்தர்பூசணி முதன்மையானது.வைட்டமின்,தாதுக்கள்,கார்போஹைட்ரெட், இரும்பு சத்துக்கள் தர்பூசணியில் நிறைந்து காணப்படுகிறது.கண் குளிர்ச்சிக்கு தர்பூசணி சிறந்த மருந்தாகும்.ரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் பொட்டாசியத்தின் அளவைகட்டுக்குள் கொண்டு வரலாம்.நீரிழிவு நோய், இதயநோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.

Apr 01, 2026

செரிமானத்தை வலுப்படுத்த மோர் அருந்துங்கள்.

வயிறு உப்புசத்தை குறைக்க வாழைப்பழம் சாப்பிடுங்கள்வாயு தொந்தரவு குறைந்து செரிமானம் மேம்பட இஞ்சி டீ குடியுங்கள்நார்ச்சத்து அதிகரிக்க கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்சூடான நீர் குடிப்பது உங்கள் மெட்டபாலிசத்தை தூண்ட உதவும்செரிமானத்தை வலுப்படுத்த மோர் அருந்துங்கள்மலச்சிக்கலை குறைக்க பேரிச்சம்பழம் சாப்பிடுங்கள்செரிமானத்தை மேம்படுத்த பப்பாளிபழம் எடுத்துக் கொள்ளுங்கள்மெட்டபாலிசத்தை அதிகரிக்க க்ரீன் டீ குடியுங்கள்.

Mar 31, 2026

முருங்கை கீரை.

முருங்கை கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வது நிற்கும். இளநரை, மலச்சிக்கலை போக்கும். பெண்கள் மாதவிடாய் நேரத்தில் வலி இருந்தால் முருங்கை கீரை சாற்றில் உப்பு போட்டு குடித்தால் வலி நீங்கும்.கருவுற்றோர் வாரம் ஒருமுறை முருங்கை கீரை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை மற்றும் பாத வீக்கத்தை தடுக்கும். கீரையை சாறாக எடுத்து பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் சுலபமாக நடக்கும்.துவரம் பருப்பு சேர்த்த முருங்கை கீரை பொரியலை சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதில் உள்ள கால்சியம் தாயின் உடல் பருமனாகாமல் பார்த்துக் கொள்ளும்.முருங்கை கீரையால் சமைத்த உணவை 3 மாதங்கள் உட் கொண்டு வந்தால் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் பெற வாய்ப்பு உண்டு. ரத்த சோகையை போக்கும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் கொண் டது.இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவுகிறது. முருங்கை கீரையோடு 2 துண்டு பூண்டு, ஒரு துண்டு மஞ்சள், உப்பு, மிளகு அரைத்து செய்யப்பட்ட மருந்து நாய்க்கடி நஞ்சை நீக்கும்.முருங்கை சாறு எடுத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கரைத்து ½சங்கு அளவு குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்று உப்புசம் நீங்கும்.

Mar 30, 2026

முதிர்வை தாமதப்படுத்த உதவும்,ஆப்பிள் மற்றும் லவங்கம்.

1.குளிக்கும்போது சிறுநீர் வருவது ஒரு சாதாரண எதிர்வினை. 2. வாழைப்பழத்தை உப்பில் சுற்றி சாப்பிட்டால், பெருவிரல் பலவீனமாகும். 3.உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், நாளொன்றில் குறைந்தது மூன்று முறை உணவு உண்ட பின் நடக்க வேண்டும். 4.ஆப்பிள் மற்றும் லவங்கம் சாப்பிடுவது முதிர்வை தாமதப்படுத்த உதவும். 5. உணவு உண்டவுடன் உடனே சிறுநீர் கழிக்க வேண்டும்; இது சிறுநீரக ஆரோக்கியத்துக்கு நல்லது.

Mar 28, 2026

ஹீமோகுளோபின் கூட சாப்பிட வேண்டியவை.

1.பேரீச்சை பழம் - தினம் நான்கு 2 முருங்கை கீரை - வாரம் 2 முறை 3. பீட்ரூட் ஜூஸ் - தினம் 100m 4. சுண்டைக்காய் - வாரம் 2 முறை 5. முளைக்கட்டிய சுண்டல்/பாசிப்பயறு வாரம் 4 முறை 6.கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை தினமும் 7.மாதுளை, திராட்சை - வாரம் 2 முறை 8.ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் 4 9. பீர்க்கங்காய் - வாரம் 2 முறை 10. நெல்லிக்காய் - தினமும் ஒன்று

Mar 27, 2026

ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலை.

ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படுகிறது. இது பாதாம் பருப்புக்கு இணையான புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் தாதுக்களைகொண்டுள்ளது.100 கிராம் மூல நிலக்கடலையில்1 லிட்டர் பாலுக்கு சமமான புரதம் உள்ளது, மேலும் வறுத்த வேர்க்கடலையில்250 கிராம் இறைச்சியில் கிடைக்கும் தாதுக்கள் கிடைக்கிறது. வாரத்தில்5 நாட்கள் வேர்கடலையை உட்கொண்டால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

Mar 25, 2026

ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் வெண்டைக்காய்

வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து நிறைந்த கோந்துப்பொருள் பெருங்குடலின் உள்பகுதியில் படிந்து சிறப்பாகச் செயல்பட உதவும். இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் நீரில், வெண்டைக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு ,ஊற வைக்க வேண்டும். இதை மறுநாள் காலை எழுந்ததும், பருகி வந்தால் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

Mar 24, 2026

உடல் வெப்பத்தைக் குறைக்கும் பன்னீர் ஆப்பிள் .

பன்னீர் ஆப்பிள் என அழைக்கப்படும் ஜம்புக்காய் சாறு கல்லீரல் மற்றும் மூளை சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் நம்மை காக்கும்.மேலும் காய்ச்சல், வாதம் மற்றும் கை கால் வலிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது.இது நீர்ச்சத்து நிறைந்து, உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உடல் வெப்பத்தைக் குறைத்து, உடலுக்குச் சக்தியளிக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது.பன்னீர்ஆப்பிள்(RoseApple/Jambu) 90% நீர்ச்சத்து கொண்ட சத்தான கோடைகாலப் பழமாகும். இது வெள்ளை முதல் அடர் ஊதா நிறத்தில், கேஷு ஆப்பிள் மற்றும் சாதாரண ஆப்பிள் கலந்த வடிவில் இருக்கும். இந்த பழம் கல்லீரல் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.தாகத்தைத் தணிக்கும், உடலுக்கு நீர்ச்சத்தளிக்கும்.வைட்டமின்B மற்றும்C சத்துக்கள் உள்ளன. பச்சையாக உண்ணலாம், சாலட் மற்றும் ஊறுகாய் செய்யப் பயன்படுகிறது.

Mar 23, 2026

கொழுப்பை குறைக்க உதவும் பப்பாளி

பப்பாளியை தினமும் சாப்பிடபித்தம் சம்பந்தமான நோய்கள் ,அல்சர் பிரச்னை குறையும்.தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.பப்பாளி பழத்தை தேனில் தொட்டு சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.பப்பாளி செரிமானத்தை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், இதய ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.இதில் வைட்டமின்கள் A, C, E, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது.அதேசமயம் பப்பாளி பழம் மலச்சிக்கலை நீக்கி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.இதில் உள்ள பாப்பைன் (Papain) என்சைம் புரோட்டீன் செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலை சரிசெய்கிறது.அதிக வைட்டமின் சி இருப்பதால், உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants) உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அழுத்தத்தைக் குறைக்கிறது.வைட்டமின் A மற்றும் E சருமத்திற்கு ஊட்டமளித்து, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.பப்பாளி இலைச் சாறு டெங்கு காய்ச்சலால் குறையும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 43 44

AD's