தேசிய வேளாண் வளர்ச்சி -திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதைகள் சாகுபடி செய்யும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மக்காச்சோள சாகுபடிக்காக சிறப்பு திட்டமாக தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் - மக்காச்சோள சாகுபடி சிறப்பு திட்டம்(Special Project on maize cultivation)-ஆக அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மக்காச்சோள செயல்விளக்கத்திடல் விருதுநகர்மாவட்டத்திற்கு 5,500 எக்டேர் இலக்கு பெறப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சிறுதானியசாகுபடியில் முக்கிய பயிராக மக்காச்சோளமே முதலிடத்தில் உள்ளது. அதனை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான முக்கிய திட்டமான இதில் விதைகள் அங்கக உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்படவுள்ளது. செயல்விளக்கத்திடல்கள் அமைத்து அனைத்து தொழில்நுட்பங்களையும் கடைபிடித்து உயர் மகசூல் பெற்றிடவும் அதன் விளைவாக மக்காச்சோளப்பயிர் சாகுபடி பரப்பினை அதிகரித்திடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், நெற்பயிரில் SRI/ இயந்திர நடவுக்காக எக்டருக்கு ரூ.6000 மானியம், பருத்தி விதைகள் கிலோவிற்கு ரூ.140 மானியம், பருத்தியில் நுனிக்கிள்ளுதலுக்கு எக்டருக்கு ரூ.1250 மானியம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எனவே, விவசாயிகள் தங்கள்அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி அரசின் மானியங்களைப் பெற்றுபயனடைந்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply