தெருநாய்களை பார்த்தாலே பிடிக்கவில்லையா??இன்னும் சிலருக்கு பார்த்தாலே பயமாகவும், அருவருப்பாகவும் இருக்கிறதா??அழித்துவிட நினைக்கிறீர்களாஒரு நிமிடம் அவர்கள் வாழ்க்கையை தெரிந்துக் கொள்ளுங்கள் நாம் எல்லாம் ஒருவேளை சாப்பிடவில்லை என்றால்கூட உயிரே போய்ட்ற மாதிரி ஆர்பாட்டம் செய்வோம் ஒருவேளை அம்மாவோ அல்லது நம் வீட்டில் இருக்கும் யாராவது சமையல் செய்யவில்லை என்றால் மிகக் கடுமையான கோபம் வரும்.உணவில் கொஞ்சம் சுவை குறைந்தால் தட்டைக் கூட தூக்கி வீசுவீர்கள். ஆனால் அவர்களோ பல நாள் பசியோடு தெருவில் சாப்பாடு இல்லாமல் ரோட்டில் போகின்ற வருபவர்களின் கையையும், முகத்தையும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு யாராவது ஏதாவது கொடுத்து விடமாட்டார்களா நம் பசி போய்விடாதா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன் .அவர்கள் மேல் குறை சொல்லாமல் கொஞ்சம் உணவையும், அன்பையும் கொடுங்கள் அவர்களை பிடிக்காதவர்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லாமல் தள்ளிச்சென்று விடுங்கள். அவர்களும் நம்மை துன்பப்படுத்த மாட்டார்கள் அவர்களை நாமும் துன்பப்படுத்த மாட்டோம். பல நாள் பசியோடு இருக்கும் ஜீவனை.“வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல” நம் கல்லை எடுத்து அடிப்பதால் தான் அவர்கள் நம்மை கடிக்க வருகிறார்கள். பேசமுடியாத அந்த ஜீவன்களின் மனவேதனையை புரிந்து கொள்ளுங்கள்.
நின்று கொண்டு அவசரமாக தண்ணீர் குடிப்பது தவறு . இதனால், செரிமானம் தடை படுவதுடன், கழிவுப் பொருட்கள் உடலில் சேரும்.சாதாரண வெப்பநிலை நீரை குடிக்கும் போது ,சுமார் 20 நிமிடங்களில் சிறுகுடலுக்குள் செல்லும். வெந்நீர் அருந்தும்போது 7 முதல் 10 நிமிடங்கள் ஆகும்.குளிர்ந்த நீரை குடித்தால் அது நீண்ட நேரம் வயிற்றில் இருக்கும். குளிர்ந்த நீர் உடலின் வெப்பநிலையுடன் ஒத்துப்போவதில்லை. அதனால் அதை ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், தாகம் இல்லாமல் தண்ணீர் குடிப்பதும் நீர் நச்சுத் தன்மையை ஏற்படுத்தக்கூடும்.
புதிய பால் பாக்கெட்டை ஆவின் அறிமுகம் செய்யவுள்ளது. இப்போது ஆவினில் ப்ளூ, கிரீன், ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில், வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட பாக்கெட்டை ஆவின் அறிமுகம் செய்யதுள்ளது. கிரீன் கலர் பாக்கெட்டில்'கிரீன் மேஜிக் ப்ளஸ்', என்ற பெயரில் அறிமுகமாகும், இந்த பாக்கெட் காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலத்தில் விற்பனை ஆகிறது.
இந்தியாவில் பெண்கள் பில்லியனர் உலகில் உயர்ந்து 105 பில்லியனர்கள் உள்ளனர்.ஃபோர்ப்ஸின் ரியல்டைம் பில்லியனர்கள் தரவரிசையின்படி ,இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் ஒரே பெண்மணி சாவித்ரி ஜிண்டால் மட்டுமே.3.65 லட்சம் கோடியுடன், ஜிண்டால் குழுமத்தில் முன்னணியில் இருக்கும் ,சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் முதலாவது பணக்கார பெண்மணி ஆவார்.ரேகா ஜுன்ஜுன்வாலா, 76,840 கோடியுடன், இந்தியாவின் இரண்டாவது பணக்கார பெண்மணி.வினோத் ராய் குப்தா 55,123 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.ரேணுகா ஜக்தியானி 40,089 கோடி சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளார்.அனு ஆகா 40,089 கோடி சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வீட்டிற்கு முன் தண்ணீர் வைக்க மறக்காதீர்கள்.பிளாஸ்டிக்ல வைத்தால் தூக்கிட்டுபோய்டுவாங்க. பூச்செடி வைக்கிற தொட்டில கூட அந்த ஒட்டய சிறு சிமென்ட் வச்சு அடச்சுட்டு அதில் ஊற்றி வைக்கலாம் ஒரு ஓரமா வைத்து விடுங்கள் தயவு செய்து.யாரும் எடுக்க மாட்டார்கள் என்றால் காளான் டப்பா பிரியாணி டப்பா,ஸ்வீட் டப்பா எதுவாக இருந்தாலும் அதில் தண்ணீர் ஊற்றி வையுங்கள்.நகரங்களில் இவர்களுக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இல்லை. தயவு செய்து இதுபோல் இனி வரும் காலங்களில் செய்யுங்கள் வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது பல வீட்டு வாசல் முன்பும்,கடைகள் முன்பும் பைபாஸ் ரோட்டிலும், சாலைகளிலும் நாய்கள் தண்ணீர் தாகத்தால் நாக்கை தொங்கப் போட்டு கொண்டு திரிந்துக் கொண்டிருக்கின்றன. எப்போது வீட்டை விட்டு வெளியில் சென்றாலும்2,3 பாட்டிலில் தண்ணீர் கொண்டு செல்லுங்கள்.கீழே கிடக்ககூடிய பிளாஸ்டிக் டப்பா, கொட்டாங்குச்சி, சிமெண்ட் தொட்டி இருந்தால் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டுவாருங்கள், முடிந்தவர்கள் டப்பா கொண்டு செல்லுங்கள் .எந்த உயிராக இருந்தால் என்ன?
குவார்ட்ஸ் அறிக்கையின்படி உலகின் அதிக ஊதியம் பெறும் பாட்காஸ்டர்கள், இந்த லாபகரமான தொழிலில் பெரும் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர்.எடிசன் ஆராய்ச்சியின் படி,12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில், பாதி பேர் ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு போட்காஸ்டையாவது கேட்கிறார்கள்.ஜேசன் பேட்மேன், சீன் ஹேய்ஸ் மற்றும் வில் ஆர்னெட்$33 மில்லியன் (மூன்று ஆண்டுகளில் $100 மில்லியன்) சம்பாதித்து, மூவரும் 2020 இல் தொற்றுநோய்களின் போது SmartLess ஐ அறிமுகப்படுத்தினர்.பில் சிம்மன்ஸ்பில் சிம்மன்ஸ் தனது போட்காஸ்ட் நெட்வொர்க்கிலிருந்து $50 மில்லியன் (ஐந்து ஆண்டுகளில் $250 மில்லியன்) சம்பாதித்தார், இது ஒரு முன்னணி விளையாட்டு போட்காஸ்ட் ஆகும்.டாக்ஸ் ஷெப்பர்ட்DaxShepard2024 இல் தனது போட்காஸ்டுக்காக Amazon'sWondery பிரிவுடன்$80 மில்லியன் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.கரேன் கல்கரிஃப் மற்றும் ஜார்ஜியா ஹார்ட்ஸ்டார்க்மை ஃபேவரிட் மர்டர், பிரபலமான உண்மை-குற்றம் போட்காஸ்ட்,2016 இல் தொடங்கப்பட்டதிலிருந்து$100 மில்லியன் சம்பாதித்தது.அலெக்ஸ் கூப்பர்அலெக்ஸ் கூப்பர் தனது போட்காஸ்ட் கால் ஹெர் டாடி மூலம் $41 மில்லியன் (மூன்று ஆண்டுகளில் $125 மில்லியன்) சம்பாதித்தார், இது VP ஹாரிஸை தொகுத்து வழங்கியது.ஜோ ரோகன்ஜோ ரோகனின் போட்காஸ்ட், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ், அவருக்கு $83 மில்லியன் (மூன்று ஆண்டுகளில் $25 மில்லியன்) சம்பாதித்தது மற்றும் Spotify இல் மிகவும் பிரபலமானது.
1890களில் தமிழ்நாட்டில் பெண்களின் பிரசவ காலங்களில் சிகிச்சை அளிக்க பெண் மருத்துவர்கள் இல்லாததால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிக அதிகம்.தமிழ் பெண்களின் இந்த நிலையே மாற்றுவதற்காகவே மருத்துவம் படிக்கச் சென்றார் அமெரிக்கரான Ida Sophia Scudder.1900 வேலூரில் அவர் உருவாக்கிய ஒரு படுக்கை அறை கொண்ட சிறிய கிளினிக் தான், இன்று பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் /ஆண்டுதோறும் மருத்துவ துறை சார்ந்த நிபுணர்களை உருவாக்கி வரும் இந்தியாவிலே மதிப்புமிக்க CMC மருத்துவமனை.
காது மற்றும் மூக்கு,முடி மற்றும் நகங்கள் போன்றவற்றைத் தவிர ,நம் மரணத்திற்குப் பிறகு சிறிது காலத்திற்கு வளரக்கூடிய இரண்டு வெளிப்புற உடல் பாகங்கள்.காரணம்:நமக்கு வயதாகும் போது நம் உடலின் மற்ற பகுதிகள் சுருங்கும். ஆனால் நமது மூக்கு, காது மடல்கள் மற்றும் காது தசைகள் பெரிதாகிக்கொண்டே இருக்கும். ஏனென்றால், அவை பெரும்பாலும் குருத்தெலும்பு செல்களால் ஆனவை.நமது காதுகள் மற்றும் மூக்கில் எலும்புகள் இல்லை. இது குருத்தெலும்பு இது எலும்பை விடஇலகுவானது மற்றும் நெகிழ்வானது. இதனால் தான் மூக்கு மற்றும் காதுகளை நம்மால் வளைக்க முடிகிறது.
அதிக ரீல்ஸ் தொடர்ந்து பார்ப்பதால்Brainrot என்ற பாதிப்பு ஏற்படலாம். போன் திரையில் விரலால் தள்ளி தள்ளி ரீல் பார்க்கின்றனர். மூளைக்கு வேலை இல்லாமல், ஏதோ ஒன்றை பார்த்து மகிழ்வதால், மூளைக்கு உடனடி நிறைவு கொடுத்து, அதன் செயல்பாடுகளை மாற்றி அமைக்கிறது. இது அறிவாற்றலை குறைத்து, வேலையில் கவனச் சிதறலை ஏற்படுத்துவதுடன், மனித உணர்ச்சிகளையும் குறைக்கும் என்கின்றனர் நிபுணர்கள், ரீல்ஸ் பாக்குறத குறைங்க .....
, இந்த அரண்மனையின் சிறப்பு என்னவென்றால்,5 படுக்கையறைகள் மற்றும்19 குளியலறைகள் மட்டுமே உள்ளது. படுக்கையறைகள் மற்றும் குளியலறைகள் தவிர, இது ஒரு சாப்பாட்டு பகுதி,15 கார்களுக்கான பார்க்கிங், உட்புற, வெளிப்புற நீச்சல் குளங்கள், பவளப்பாறை மீன்வளம் மற்றும் கோல்ஃப் மைதானம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.விலை உயர்ந்த வீடு என்ற பேச்சு வரும்போதெல்லாம் முகேஷ் அம்பானியின் ஆண்டிலியாதான் அனைவரின் நினைவுக்கும் வரும். இருப்பினும், மற்ற வீடுகளும் உள்ளன, அதன் ஆடம்பரம் உங்களை திகைக்க வைக்கும் துபாயின் பிரம்மாண்டத்திற்காக உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு அரண்மனை உள்ளது. இந்த வீட்டில் ஐந்து அறைகள் மட்டுமே உள்ளன, அதன் விலை பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அது துபாயின்‘மார்பிள் பேலஸ்’. துபாயின் மிகவும் விலையுயர்ந்த பகுதியான எமிரேட்ஸ் ஹில்ஸில் அதி ஆடம்பர அரண்மனை மார்பிள் அரண்மனை கட்டப்பட்டுள்ளது.60,000 சதுர அடியில் பரந்து விரிந்து கிடக்கும் மாஸ்டர் படுக்கையறையின் அளவு 4,000 சதுர அடி.துபாயின் இந்த மார்பிள் அரண்மனை இத்தாலிய மார்பிள் கல்லால் கட்டப்பட்டுள்ளது. இதை உருவாக்க 100 மில்லியன் திர்ஹம் செலவானது. இதை கட்ட12 ஆண்டுகள் ஆனது, இந்த அரண்மனை2018 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இங்கு விருந்தினர்களுக்காக உருவாக்கப்பட்ட விருந்தினர் அறை1,000 சதுர அடி.அறிக்கைகளின்படி, துபாயின் மார்பிள் அரண்மனையின் விலை சுமார் 17,67,74,26,200 ரூபாய்.