25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Oct 12, 2024

இந்தியா வல்லரசாக மாற மோடி அரசின் மற்றொரு நல்ல முடிவு: நடிகர் அக்ஷய் குமார் பரிந்துரை

ஒரு நாளைக்கு ஒரு ரூபாய், அதுவும் இந்திய ராணுவத்துக்கு.  அமைச்சரவை கூட்டத்தில், இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கல் மற்றும் போர் பகுதியில் காயம் அல்லது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வங்கிக் கணக்கை மோடி அரசு துவக்கியது. இதில் ஒவ்வொரு இந்தியரும் அவரவர் விருப்பப்படி எந்த தொகையையும் பங்களிக்கலாம். இது ரூ.1ல் தொடங்குகிறது மற்றும் வரம்பற்றது.*  இந்தப் பணம் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு ஆயுதங்கள் வாங்கவும் பயன்படுத்தப்படும். புதுடில்லி, *மன் கி பாத், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப்பில் மக்கள் பரிந்துரைத்தபடி, இன்றைய எரியும் சூழ்நிலையில் மோடி அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்து, கனரா வங்கியில் ராணுவ நல நிதி போர் விபத்து நிதிக் கணக்கைத் திறந்தது.*  இது திரைப்பட நடிகர் அக்ஷய் குமாரின் மாஸ்டர் ஸ்ட்ரோக். இந்தியா வல்லரசாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் 70% பேர் கூட இந்த நிதியில் தினமும் ஒரு ரூபாயை முதலீடு செய்தால், அந்த ஒரு ரூபாய் ஒரு நாளைக்கு 100 கோடியாக மாறும். 30 நாட்களில் 3000 கோடிகள், ஒரு வருடத்தில் 36000 கோடிகள். பாகிஸ்தானின் ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட் ரூ.36,000 கோடி கூட இல்லை. தேவையில்லாத வேலைக்கு தினமும் 100, 1000 ரூபாய் செலவழிக்கிறோம், ஆனால் ராணுவத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்தால் நிச்சயம் இந்தியா வல்லரசாகும்.*  உங்கள் பணம் நேரடியாக ராணுவ உதவி மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் போர் விபத்து நிதியில் டெபாசிட் செய்யப்படும். இராணுவ உபகரணங்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். எனவே மோடிஜியின் இந்த பிரச்சாரத்தில் இணைந்து ராணுவத்திற்கு நேரடியாக உதவுங்கள்.  பாகிஸ்தானை பற்றி கெட்ட வார்த்தைகளால் திட்டி, சாலைகளை மறித்து அறிக்கை விடுவதால் எதையும் சாதிக்க முடியாது. மோடி மற்றும் நாட்டு மக்களின் எண்ணங்களை செயல்படுத்தி உங்கள் நாட்டு ராணுவத்தை பலப்படுத்துங்கள். எனவே பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள், எந்த நாட்டினதும் உதவியின்றி தங்கள் நிலையை காட்ட முடியும்.  வங்கி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.*வங்கி விவரங்கள்:* *கனரா வங்கி* *A/C பெயர்: ராணுவ நல நிதியம் போரில் உயிரிழந்தவர்கள்,* *A/C எண்:* *90552010165915* *IFSC குறியீடு:* *CNRB0000267* *தெற்கு விரிவாக்க கிளை, புது தில்லி.**ஜெய் ஹிந்த். வந்தேமாதரம்.*

Oct 11, 2024

அடுத்த 10 ஆண்டுகளில் தங்கத்தை விட அதிக தேவை இருக்கும் உலோகம் என்ன?

வெள்ளி போலகாட்சியளிக்கும் உலோகமானது அடுத்த10 ஆண்டுகளில் தங்கத்தை விடஅதிகமான தேவையை கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதன் விலையானது தங்கத்தை விடபலமடங்கு குறைவாகும்.பித்தளை, வெள்ளி, அலுமினியம்போன்ற உலோகங்களில் பயன்படுத்தப்படும்துத்தநாகத்தின் (Zinc) தேவையானது அதிகரித்து வருகிறது.இதுகுறித்து சர்வதேச துத்தநாக சங்கம் (IZA) தரப்பில் கூறுகையில், "அடுத்த 10 ஆண்டுகளில் துத்தநாகத்தின் நுகர்வு 11 லட்சம் டன்னில் இருந்து 20 லட்சம் டன்னாக அதிகரிக்கும்" என்று தெரிவித்துள்ளது.மேலும், ஜிங்க் காலேஜ் 2024 (Zinc College) நிகழ்ச்சியில்IZA நிர்வாக இயக்குனர் ஆண்ட்ரூ கிரீன் என்பவர் பேசுகையில்,"இந்தியாவில் துத்தநாகத்தின் நுகர்வு மற்றும் தேவையானது அதன் உற்பத்தியை விட அதிகமாக இருக்கிறது.தற்போது, துத்தநாகத்தின் நுகர்வு மற்றும் தேவையானது 11 லட்சம் டன்கள் ஆகும். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் அதன் தேவை 20 லட்சம் டன்னை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதில் முக்கியசிறப்பம்சம் என்னவென்றால் தங்கத்தைவிட துத்தநாகத்தின் தேவை அதிகமாகஉள்ளது. இந்தியாவில் தங்கத்தின்நுகர்வு ஒவ்வொரு ஆண்டும் 700 டன்களுக்கும்அதிகமாக உள்ளது.

Oct 11, 2024

மனிதர்களுக்கு இயற்கையின் ஒரு சிறிய புழு தரும் அழகான படைப்பு பட்டுத் துணிகள்.

பட்டு நூலை பெற பட்டுப்புழுக்கள் செயற்கை முறையில் வளர்க்கப்படுகின்றன. இதற்கென்று மல்பெரி பட்டுப்புழு, காற்றோட்ட பட்டுப்புழு, ராட்சத பட்டுப்புழு என்று பல்வேறு புழுக்கள் உள்ளன. பட்டுப்புழு விவசாயிகள், முட்டைகளை வாங்கி தகுந்த சூழ்நிலையில் வளர்த்து குஞ்சு பொரிக்கும் வகையில் தயார் செய்கின்றனர். முட்டையில் இருந்து கம்பளி பூச்சிகள் வெளிவந்ததும் அவற்றுக்கு மல்பெரி இலைகளை உணவாக அளித்து மூங்கில் தட்டுகளில் வைத்து வளர்க் கின்றனர்.இந்த கம்பளி பூச்சிகள் அந்த மூங்கில் தட்டில் ஒரு கூட்டை உருவாக்க ஒரு அறை போன்ற சூழலை உருவாக்குகிறது.இது வலைப் பின்னல் போல கூட்டை உருவாக்குகிறது. இதனை கொக்கூன் என்கிறார்கள். பட்டுக்கூடு செயல்பாடு முடிந்த நிலையில் பட்டு இழை உற்பத்தி நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து, பட்டு இழைகளை பிரிக்க கொக்கூன்களை பிரித்து பட்டு இழைகளை தனியாக பிரித்து பட்டுநூலாக உருட்டுகிறார்கள். இந்த பட்டு நூல் கொண்டு பட்டு ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன.பண்டிகைகள், விழாக்கள் என்றால் பட்டுத்துணிகள் முக்கிய இடம் பெறுகின்றன. உலக அளவில் பட்டு உற்பத்தியில் இந்தியா, சீனா. அரே பியா, பிரான்சு, இத்தாலி போன்ற சில நாடுகள் தீவிரமாக இயங்குகின்றன. இந்தியாவில் பட்டு உற்பத்தி மையங்களாக அசாம், பஞ்சாப், காஷ்மீர், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. கர்நாடகம் மிகப்பெரியபட்டு உற்பத்தி மாநிலமாக திகழ்கிறது. இதில் மைசூரு நகரானது குறிப்பிடத் தக்க பங்களிப்பை அளிக்கிறது

Oct 11, 2024

மாறுபடும் உடல் வெப்பநிலை

பொதுவாக ஒருவரது உடலின் சாதாரண வெப்பநிலை98.6 டிகிரி பாரன்ஹீட் என டாக்டர்கள் உட்பட பெரும்பாலான மக்களால் நம்பப்பட்டது. ஆனால் உடல் வெப்பநிலை என்பது ஒருவருக்குஒருவர்மாறுபடுகிறது. இதற்கு பாலினம், வயது, எடை, உயரம் போன்றவை காரணமாகிறது. உடல் வெப்பநிலை நாள் முழுவதும் மாறுபடுகிறது என அமெரிக்காவின் ஸ்டேன்ட்போர்டு பல்கலை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.19ம் நுாற்றாண்டில் இருந்து ஒவ்வொரு பத்தாண்டுக்கும் அமெரிக்கர்களின் சராசரி உடல் வெப்பநிலை 0.5 டிகிரி பாரன்ஹீட் குறைந்துள்ளது

Oct 10, 2024

முகேஷ் அம்பானி சம்பாதித்தது தீர்ந்து போக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

ஆசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ,முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ10.21 லட்சம் கோடி என்றே கூறப்படுகிறது.முகேஷ் அம்பானிஇந்தியாவில் மிகப்பெரிய வணிகராகவேபார்க்கப்படுகிறார். அவர் நாளுக்கு ரூ3 கோடி செலவிடுவதாகஇருந்தால், இதுவரை முகேஷ்அம்பானி சம்பாதித்த சொத்துக்கள்மொத்தம் செலவாவதற்கு932 ஆண்டுகளும்6 மாதங்களும் ஆகும் என்றெ கணக்கிடுகின்றனர்.அதாவது அவர் சாதாரணமாக நாளுக்கு ரூ3 கோடி செலவிடுவதாக இருந்தால், மொத்தம்340,379 நாட்களில் அவரது மொத்த சொத்துக்களும் செலவிட்டுவிடுவார். ஆனால், முகேஷ் அம்பானியின் வருவாய் நாளும் அதிகரித்துவருவதால், அவரது சொத்துக்கள் தீர்ந்து போக பலநூற்றாண்டுகள் ஆகும் என்பதே நிஜம்.2024ல்மட்டும் இதுவரை அவர் ரூ1.98 லட்சம் கோடி தொகையை தமது வருவாயாக ஈட்டியுள்ளார். மட்டுமின்றி, மகனின் திருமணத்திற்காக பல கோடிகளை செலவிட்டுள்ளார். அத்துடன், முகேஷ் அம்பானியின் ஒரு நாள் செலவு என்பது ரூ3 கோடியாக இருக்கவும் வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.-

Oct 10, 2024

உலகில் பெண் ஐன்ஸ்டீன் என்றே புகழ் பெற்ற டொரொத்தி மவுட் வரிஞ்சி

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம். ஐரோப்பிய நாடான இங்கிலாந்து தலை நகர் லண்டனில் உள்ளது.  இங்கு உயிரியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் டொரொத்தி மவுட் வரிஞ்சி.   பல்துறை அறிஞராக விளங்கினார்.  ஆய்வறிஞர்கள் உலகில் பெண் ஐன்ஸ்டீன் என்றே புகழ் பெற்றார். தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் செப்டம்பர் 3 1894ல் பிறந்தார்.  இங்கிலாந்தில் வளர்ந்து 192 கண்டுபிடிப்புகளை நிகழ்ச்சி வட அமெரிக்காவில் இறந்தார்.  இங்கிலாந்தில் உள்ள லண்டன் சர்பிட்டன் உயர் நிலைப் பள்ளியில் படித்தார்.  ஆசிரியர்களுக்கு ரொம்ப செல்லம்  வகுப்புக்கு ஆசிரியர் வராவிட்டால் உரிய பாடத்தை மிக அற்புதமாக கற்பித்து மாணவ மாணவியரிடம் செல்வாக்கு பெற்றார்.  பிரபலமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பிரிட்டன் கல்லூரியில் கணிதவியல் படித்தார்.  அந்த காலத்தில் பாடங்களில் எட்ட முடியாத மதிப்பெண் பெறுபவரை ராங்க்லர் என்று அழைப்பர். கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டிலேயே அந்த பட்டத்தை வாங்கினார் டொரொத்தி.கணித கோட்பாட்டியலில் மூன்று புதிய வடிவமைப்பு சமன்பாடுகளை கண்டுபிடித்து 1921ல் முனைவர் பட்டம் பெற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக சேர்ந்தார்.  ஜான் வில்லியம் நிக்கல்சன் என்பவரை மணந்தார்.  திருமணத்திற்குப் பின் கற்பிப்பதிலும் ஆய்வுகளிலும் தீவிர ஆர்வம் காட்டினார்.  கணிதவியலுடன் உயிரணுவியலை இணைத்து உடல் செல்கள் கணித வரையறைக்கு உட்படுவதை நிரூபித்தார். இதற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உயிரியல் துறையில் முனைவர் பட்டத்தை 1929ல் வழங்கியது.  அங்கு இந்த துறையில் முனைவர் பட்டம் வாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.  தீவிரமான ஆய்வுக்கு பின் 1930ல் “ தி ரிட்ரியட் ப்ரம் பேரண்ட்குட் ”என்ற புத்தகத்தை எழுதினார். அது ஆய்வுப்பணிகளுக்கிடையே குழந்தையை வளர்க்கும்போது பெண்களுக்கு மனச் சிக்கல்கலுக்கு விடை தேடியது. இன்றும் கூட சிறந்த உளவியல் பாடப்புத்தகமாக உள்ளது.ஆக்ஸ்போர்டு பல்கலையில் உள்ள ஆறு கல்லூரிகளில் கணிதவியலிலும் மூன்று கல்லூரிகளில் இயற் அறிவியலிலும் ஒரு கல்லூரியில் உயிரணுக் கணிதவியலிலும் பேராசிரியையாக ஒரே நேரத்தில் பணியாற்றினார்.  எந்த விஞ்ஞானியும் இது போன்ற சாதனை செய்ததாக வரலாறு இல்லை.  ஐந்தே ஆண்டுகளில் 36 நூல்களை எழுதி முடித்தார். அவற்றில் கணித கோட்பாட்டியல் சார்ந்து 20 நூல்களும் அறிவியல் விளக்கவியல் சார்ந்து 16 நூல்களும் அடக்கம்.  உயிர்வேதித் துறையில் கணிதத்தின் அடிப்படை அமைப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள அமெரிக்காவில் உள்ள ராக்பெல்லர் நிறுவனம் 1935ல் அவரை அழைத்தது. அந்த ஆய்வில் புரதசத்து உடல் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நிரூபித்ததோடு புரதங்களின் வேதி அமைப்பை கணிதவியல் முறையில் நிறுவி கிளைக்கால் கோட்பாட்டை முன்மொழிந்தார். உடலுக்கு தேவையான புரதத்தின் அளவு அதன் வடிவம் போன்றவற்றை விவரிப்பது தான் இந்த கோட்பாடு.  இரண்டு வெவ்வேறு துறைகளை இணைந்த அந்த கோட்பாடு அறிவியல் ஆய்வுலகை உலுக்கியது. பிரபல விஞ்ஞானிகள் அதை மோசமாக வசைபாடினர்.  இன்றும் கூட அந்த கோட்பாடு சில ஆல்கலைடு புரதங்களுக்கு பொருந்துகிறது.அவரது வாழ்க்கை பிரமிப்பானது. அவரது மகள் பமீலா ஆறு வினோத பாத்திரங்களை ஒரே காலத்தில் வாழ்ந்தவர் என் தாய் என கூறியுள்ளார்.  குடும்ப பிரச்னைகளால் மனம் உடைந்து 1938ல் நிரந்தரமாக அமெரிக்கா சென்றார். அங்கு பால்டிமோர் நகரில் மேரிலாந்து ஜாநாப்கின்ச் பல்கலைக்கழக உயிரியல் சிறப்பு வகுப்பு பேராசிரியையாக சிலகாலம் பணியாற்றினார்.  விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தொடர்பாக 192 ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார் டொரொத்தி.  அனைத்தும் அறிஞர்களால் ஏற்கப்பட்டன. இவரை பெண் ஐன்ஸ்டீன் என்றே அறிஞர்கள் அழைத்தனர். புரதத்தின் வேதி அமைப்பை கண்டுபிடித்து உடல் நல வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளார். இவர் 72 அறிவியல் நூல்களை எழுதி 1976ல் காலமானார்.

Oct 09, 2024

பால்பாயின்ட் பேனாவின் எழுதுமுனை. 

புரோப்பிலீன் கிளைக்கோல், டொலுவீன் போன்ற கரிமக் கரைப்பானில் சாயத்தைக் கரைத்து, பால் பாயின்ட் பேனா மை தயாரிக்கப்படுகிறது. ஆனால் பாலிமெட்ரிக் பிசின்கள் முதலியவற்றோடு நீரைக் கலந்து, அதில் பல்வேறு சாயங்களுடனும் பேனா மை தயாரிக்கப்படுகிறது. பால் பாயின்ட் பேனாவின் எழுதுமுனையில் சுழலும் தன்மையுடைய பந்து போன்ற அமைப்பு இருக்கும். எழுதும்போது இந்தப் பந்து உருளும். அவ்வாறு உருளும்போது குழாயில் உள்ள மையை தன்மீது பூசிக்கொண்டு வெளிப்படும். பேனாவை அழுத்தி எழுதினால் மட்டுமே மை வெளிப்படும்.

Oct 09, 2024

 உலகம் முழுவதும் 16.6 சதவீத நிலங்களை பிரிட்டிஷ் மன்னர் இளவரசர் சார்லஸ் தன்வசம் வைத்திருக்கிறார்.

 உலகிலேயே அதிக நிலத்தை வைத்துள்ள குடும்பம் என்ற பெருமையை இங்கிலாந்தின் அரச குடும்பம் பெற்றுள்ளது.கிராமப்புற விவசாய நிலங்கள், காடுகள், நகர்ப்புறங்களில் நிலம், வீடுகள், ஆடம்பரமான சந்தை வளாகங்கள் மற்றும் கடற்கரைகள் ஆகியவையும் அவர்களுக்குச் சொந்தமானவை.உலகம் முழுவதும் இவர்களின் நிலங்களையும் சொத்துகளையும் கவனிக்க தனி நிறுவனம் உள்ளது. பல வணிக வலைத்தளங்களின்படி, இளவரசர் சார்லஸ் உலகம் முழுவதும்6.6 பில்லியன் ஏக்கர் நிலம் மற்றும் சொத்துகளை வைத்திருக்கிறார்.இந்த நிலங்கள் கிரேட் பிரிட்டன், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பலநாடுகளில் அமைந்துள்ளன.உலக செல்வத்தில்16.6 சதவீதத்தை பிரிட்டிஷ் மன்னர் வைத்துள்ளார். இந்த முழு சொத்தையும், தி கிரவுன் எஸ்டேட் என்ற அமைப்பு நிர்வகிக்கிறது.பிரிட்டிஷ் அரசகுடும்பம் நேரடியாக2,50,000 ஏக்கர் நிலத்தை நிர்வகிக்கிறது. மீதமுள்ள1,15,000 ஏக்கர், விவசாயம் மற்றும் காடுகளின் கீழ் உள்ளது.இதன் மூலம் கிரவுன் எஸ்டேட் பல்வேறு ஷாப்பிங் சென்டர்களை நடத்துகிறது.அத்துடன் மணல், சரளை, சுண்ணாம்பு, கிரானைட், செங்கல், களிமண், நிலக்கரி ஆகியவற்றையும் விற்பனை செய்கிறது.மத்திய லண்டனில் உள்ள சொத்துக்கள் உட்பட18,000 ஹெக்டேர் நிலத்தை உள்ளடக்கிய டச்சி ஆஃப் லான்காஸ்டர் என்ற தனியார் தோட்டத்திலிருந்து வருமானம் வருகிறது. இதன் மதிப்பு 654 மில்லியன் பவுண்டுகள். மொத்தத்தில், பிரிட்டிஷ் முடியாட்சியின் உலகளாவிய சொத்துக்கள் $15.6 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Oct 08, 2024

காகம் உரிய இணை கிடைத்த பின் ,ஒன்றை விட்டு ஒன்று பிரிவதில்லை, வெறொன்றுடனும் இணைவதில்லை. 

ஐந்தறிவு பறவை இனத்தில் ஒன்றான காகம் பத்து வருட காலமே வாழும் இந்த இனப் பறவைகளில் "பெண் காகம்" தனக்கு இணையைத் தேடுவதற்கு ஒரு வகையில் சத்தம் எழுப்பி சிறகை அடித்துக் கொள்ளும். உரிய இணை கிடைத்த பின் ,ஒன்றை விட்டு ஒன்று பிரிவதில்லை, வெறொன்றுடனும் இணைவதில்லை. இறுதிவரை ஒன்று தான் . கணவன், மனைவி. 

Oct 08, 2024

இரவு நேர இரயில் பயனத்தின்போது இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டுவிடுவோம் என்ற பயம் இனி வேண்டாம்

இரவு நேர இரயில் பயனத்தின்போது, இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டுவிடுவோம் என்ற பயம் இனி வேண்டாம். உங்கள் கைபேசியில் 139 க்கு டயல் செய்து வழிமுறைகளின்படி உங்கள் PNR எண்ணை பதிவு செய்தால் போதும். நீங்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்கியதும், உங்களுக்கு எச்சரிக்கை அழைப்பு வந்துவிடும். பலருக்கு பயன் தரக்கூடிய இந்த தகவலை அனைவருக்கும் பகிரலாமே!.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 46 47

AD's



More News