பொங்கல் முதல் பிரியாணி வரை அவற்றின் கமகம மணத்திற்கு காரணம் ஏலக்காய். இது மசாலாக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏலக்காய் மற்ற அனைத்து மசாலா பொருட்களையும் விட விவசாயிகளுக்கு ஏற்றுமதி வருமானத்தை அள்ளி தருகஏலக்காய் பற்றிய தகவல்கள் வியக்கத்தக்க ஒன்றாகும். இந்தியநாடு உலகின் மிகப்பெரிய ஏலக்காய் ஏற்றுமதி நாடாக உள்ளது. பொதுவாக, இரண்டு வகையான ஏலக்காய் இந்தியாவில் வட கிழக்கு மாநிலங்களில் பயிரிடப்படும். இந்தியாவில் ஏலக்காய் அறுவடை காலம் என்பது ஆகஸ்டு - பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலம் ஆகும்.ஏலக்காயின் முக்கிய சந்தைகள் கேரளாவில் குமுளி, வந்தன் மேடு, தேக்கடி, புலியர்மாலா ஆகிய பகுதிகளும், தமிழ்நாட்டில் போடி நாயக்கனூர் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளும் ஆகும். கர்நாட காவில் சகலேஷ்பூர், சிர்சி ஆகிய இடங்களில் ஏலக்காய் ஏலம் நடைபெறுகிறது. கர்நாடகா மொத்த உற்பத்தியில் சுமார் 25 சதவீதம் ஏலக்காயை உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில் ஏலக்காய் மொத்தம் 15 சதவீத உற்பத்தி என்ற அளவில் உள்ளது என்று கூறப்படுகிறது.பொதுவாக, தென்மாநிலங்களில் உற்பத்தி ஆகும் இந்த ஏலக்காய்களுக்கு வெளிநாட்டில் அதிக வரவேற்பு இருப்பதால் வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றனர். ஏலக்காய் கமகமக்கும் நறுமண மசாலா பொருள் என்பதையும் கடந்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். புற்றுநோய் செல்களை தடுக்கும். செரிமான சிக்கல்களுக்கு உதவுகின்றது. சுவாசம் மற்றும் ஆக்சிஜன் பயன்பாட்டை மேம்படுத்துகிறது. உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
உறைபனி சூழந்த ஆர்டிக் பிரதேசத்தில் வாழ்கின்றன பனிக்கரடிகள்.உலகில் வாழும் ஊன் உண்ணிகளில் பெரிய விலங்கு. கரடி இனத்தை சேர்ந்த பாலுாட்டி. இதன் ரோமம் வெள்ளையாக தெரிந்தாலும் கண்ணாடி போன்று நிறமில்லாதது. உண்மையில் இதன் தோல் நிறம் கறுப்பு. நிலத்தில் பிறந்தாலும், வாழ்நாளில் பெரும் பகுதியை கடலில் கழிக்கும். கடல் வாழ் உயிரினமான சீல் தான் இதன் பிரதான உணவு.இதற்கு, 42 பற்கள் உண்டு. தோலுக்கு அடியில், 10 செ.மீ., அடர்த்தியில் கொழுப்பு திரண்டு இருக்கும். அதனால் தான் குளிரிலும் இயல்பாக வாழ்கிறது.ஒரு கி.மீ., துாரத்தில் உள்ள சீல்களையும் மோப்பத் திறனால் அறியும். மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் ஓடும் திறன் பெற்றது. நீரில் மணிக்கு, 10 கி.மீ., வேகத்தில் நீந்தும். திமிங்கலம் போன்ற உணவு கிடைக்கும் போது மட்டும் பகிர்ந்து உண்ணும்.உறை பனி காலமான ஏப்ரல், மே மாதங்களில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். பிரசவ காலத்தில் பனிப்பரப்பில் பெண்கரடிவளை தோண்டிக் கொள்ளும். அதில், காற்று செல்லும் வசதியுடன் பல அறைகள் இருக்கும்.அங்கு இரண்டு குட்டிகளை ஈன்று எடுக்கும். குட்டிகள் குறைந்தபட்ச ரோமத்துடன் கண்களை மூடியபடி பிறக்கும். ஆர்டிக் பிரதேசத்தில் இதை இரையாக்கும் விலங்கு எதுவும் கிடையாது. மனிதர்கள் வேட்டையாடுவதால் அருகி வருகிறது இந்த உயிரினம். புவி வெப்பம் அதிகரிப்பதால் வேகமாக அழிந்து வரும் இனங்களில் ஒன்றாக உள்ளது.
தேனீக்கள் மென்மையானவை. ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டில் இணைந்து வாழ்கின்றன. ஒவ்வொரு தேனீ கூட்டிலும் சுமார் 80 ஆயிரம் தேனீக்கள் வரை இருக் கும். இவை அனைத்தும் வேலைக்கார தேனீக்கள் ஆகும். இவற்றின் ஆயுட்காலம் சுமார் 7 வாரங்கள்தான்.இதேபோல், ஒரு தேன் கூட்டில் ஒரு ராணி தேனீ மட்டுமே இருக்கும். அதன் வேலை தொடர்ந்து தேனீக்களை உருவாக்குவதுதான். இதன் ஆயுட்காலம் சுமார் 5 ஆண்டுகள் வரை இருக்கும். ராணி தேனீ ஒரு நாளைக்கு 1,500 முட்டைகள் வரை இடும். வாழ்நாள் முழுவதும் கிட்டத் தட்ட 10 லட்சம் முட்டைகள் இடும். தேனீ கூட்டில் இருக்கும் ஆண் தேனீக்கள் 'டிரோன்கள்' என்று அழைக்கப்படுகின்றன. அவை வேலைக்கார தேனீக்களை விட சற்று பெரியவை. அவற்றின் ஒரே வேலை ராணி தேனீயுடன் இனச்சேர்க்கை செயல் முறை நடத்துவது மட்டுமே. அது முடிந்தவுடன் ஆண் தேனீக் கள் உடனடியாக இறந்துவிடும்இந்த சிறிய பூச்சி இனத்தின் வேலைக்கார தேனீக்கள் மணிக்கு 20 மைல் வேகத்தில் பறக்கும். சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பறந்து தேனை சேகரித்து வரும். ஒரு தேக்கரண்டி தேனை தயாரிக்க 8 தேனீக்கள் வாழ்நாள் முழுவதும் முழு நேரமாக உழைக்க வேண்டும். இன்றைக்கு, உலகம் முழுவதும் தேன் பரவலாக பயன்படுத்தப்படு கிறது. மனிதர்களுக்கும் தேன் ஒரு முக்கிய உணவாகும். ஏனெனில், அதில் மனித உடல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நொதிகள் மற்றும் அத் தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள் ளன. தேனீக்கள் மனித இனத்திற்கு கிடைத்த வரம்.
உலகின் பணக்காரர்களில்17வது இடத்தில் உள்ளார். உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் ரூ.15000 கோடி ஆண்டிலியாவில் அம்பானி குடும்பம் வாழ்கிறது.முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் ரூ.15000 கோடி ஆண்டிலியாவில் ஊழியர்கள் எப்படி பணியமர்த்தப்படுகிறார்கள்? அம்பானியின் வீட்டில் வேலை செய்யும் வேலையாட்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். மேலும், கார்ப்பரேட் ஊழியர்களைப் போன்ற பலன்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள். இவரது வீட்டில் சுமார் 600 முதல்700 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட ஓட்டுநரின் சம்பளத்தைப் பற்றி பேசுகையில், அவர் மாதத்திற்கு 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்று பல ஊடக அறிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன, அதாவது ஆண்டுக்கு 24 லட்சம்.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் முகேஷ் அம்பானியின் பாதுகாவலர்களின் மாதச் சம்பளம் ரூ.14,536ல் இருந்து ரூ.55,869 என பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த தொகுப்பு பல அரசு ஊழியர்களின் சராசரிCTC ஐ விட அதிகம். அம்பானியின் இல்லத்தில் ஒரு வேலையைப் பெறுவதற்கு ஒரு தேர்விலும் நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், பொருத்தமான சான்றிதழ் அல்லது பட்டம் வைத்திருப்பது பதவிக்கு மிகவும் முக்கியமானது.நீங்கள் ஒரு சமையல்காரராக விரும்பினால், நீங்கள் சமையல் கலைகளில் சான்றளிக்கப்பட்ட தகுதி பெற்றிருக்க வேண்டும். பாத்திரங்களைக் கழுவுவதற்கு ஒதுக்கப்பட்டவர்கள் கூட கடுமையான ஸ்கிரீனிங் மற்றும் சரிபார்ப்பு செயல்முறை மூலம் செல்கின்றனர்.அம்பானியின் இல்லத்தில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் தாராளமான சம்பளத்துடன், மருத்துவக் காப்பீடு மற்றும் பல்வேறு சலுகைகள் உட்பட பெருநிறுவன ஊழியர்களுடன் ஒப்பிடக்கூடிய பலன்களையும் அவர்கள் பெறுகின்றனர். அவர்களின் ஊதியம் மற்றும் வசதிகள் அவர்களின் குறிப்பிட்ட வேலை பாத்திரங்களால் தீர்மானிக்கப்படுகின்றன., திறன்கள் மற்றும் பொறுப்புகள் சரியான முறையில் வெகுமதி அளிக்கப்படுவதை உறுதி செய்கிறது. வீட்டு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு முதல் சமையல்காரர்கள் மற்றும் தனிப்பட்ட உதவியாளர்கள் வரை, ஒவ்வொரு பணியாளர் உறுப்பினரும் வீட்டின் செயல்திறனைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.வீட்டில் சுமார் 600 முதல் 700 ஊழியர்கள் பணிபுரிகின்றனர் ஓட்டுநரின் சம்பளம் 2 கோடி ஆகும்முகேஷ் அம்பானியின் பாதுகாவலர்களின் மாத சம்பளம் ரூ.14,536 முதல் ரூ.55,869 வரைபாத்திரம் கழுவும் பணியில் ஈடுபடுபவர்கள் கூட கடுமையான சோதனை மற்றும் சரிபார்ப்பு செயல் முறைக்கு உட்படுகிறார்கள் திறன்கள் மற்றும் பொறுப்புகள் சரியான முறையில் வெகுமதி அளிக்கப்படுவதை உறுதி செய்கிறது.
புதிய பாஸ்போர்ட்டுகளில் பெற்றோர் பெயர் இல்லை, வீட்டு முகவரி இல்லை,பாஸ்போர்ட் விதிகள் மாற்றப்பட்டுள்ளன:. புதிய பாஸ்போர்ட்டை உருவாக்குவதற்கு சில முக்கியமான ஆவணங்களின் தேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கட்டாய பிறப்புச் சான்றிதழ் முதல் வண்ணக் குறியீடு கொண்ட பாஸ்போர்ட்கள் வரை,பாஸ்போர்ட் விதிகளில் இந்திய அரசு பல முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. நீங்கள் புதிய பாஸ்போர்ட் பெறுவது அல்லது உங்கள் பாஸ்போர்ட்டைப் புதுப்பிப்பது பற்றி யோசித்தால், இந்த விதிகளை மனதில் கொள்ளுங்கள். அக்டோபர்1,2023 அன்று அல்லது அதற்கு முன் பிறந்த ஒருவர் தனது பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அது பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது பிறந்த தேதிக்கான ஒரே ஆவணமாக இருக்க முடியும். இப்போது பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது பிறப்புச் சான்றிதழை இணைக்க வேண்டும். முன்னதாக, பிறந்த தேதியை மற்ற ஆவணங்களுடன் சேர்த்து சான்றளிக்க முடியும், ஆனால் இப்போது பிறப்புச் சான்றிதழ் மட்டுமே செல்லுபடியாகும். பிறந்த தேதிக்கான சான்றிதழை மிகவும் நம்பகமானதாக மாற்றும் நோக்கில் இந்த விதி செயல்படுத்தப்பட்டுள்ளது.தனியுரிமையை மேலும் வலுப்படுத்த, எழுதப்பட்ட வீட்டு முகவரி பாஸ்போர்ட்டிலிருந்து நீக்கப்படும். அதற்கு பதிலாக, வசிக்கும் இடம் டிஜிட்டல் முறையில் பாஸ்போர்ட்டில் பார்கோடாக சேர்க்கப்படும், இதை குடியேற்ற அதிகாரிகள் மட்டுமே அணுக முடியும். பாஸ்போர்ட் பெறும் எந்த வெளியாரும் உங்கள் முகவரித் தகவலைப் பெற முடியாது. இந்த மாற்றம் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான படியாகும்.பாஸ்போர்ட்டுகள் வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன, இது பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை எளிதாகவும் முறையாகவும் அடையாளம் காணும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. பாஸ்போர்ட் பிரிவுகள் மூன்று வண்ணங்களில் இருக்கும்:வெள்ளை பாஸ்போர்ட்: அரசு அதிகாரிகளுக்கு.சிவப்பு பாஸ்போர்ட்: இராஜதந்திரிகளுக்கு.நீல பாஸ்போர்ட்: சாதாரண குடிமக்களுக்கு.இந்த வண்ணக் குறியீடு அமைப்பு பல்வேறு வகையான பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை அடையாளம் காண்பதை எளிதாக்கும் மற்றும் குடியேற்ற செயல்முறைகளை நெறிப்படுத்த உதவும்.தனியுரிமையை மேலும் வலுப்படுத்த, பெற்றோரின் பெயர் பாஸ்போர்ட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சேவையை விரைவுபடுத்துவதற்காக, பாஸ்போர்ட் சேவை மையங்களை விரிவுபடுத்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது, இதன் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில்442 பாஸ்போர்ட் சேவை மையங்கள்600 ஆக அதிகரிக்கப்படும். இது பாஸ்போர்ட் பெறும் செயல்முறையை விரைவுபடுத்துவதோடு, அதிகமான மக்களுக்கு பாஸ்போர்ட் சேவைகள் எளிதாகக் கிடைக்கும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பாஸ்போர்ட் பெற விரும்பும் குடிமக்களுக்கு பெரும் நிம்மதியைத் தரும்.
தங்களுடைய நட்சத்திரத்துக்கு, மிக அருகில் சுற்றி வரும், புதிய கோள்களை சீன விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கண்ட றிந்துள்ளனர். இவற்றில் நான்கு, பூமியை விடச் சிறியவை, அதாவது சராசரி யாக செவ்வாய் கிரகத்தின் அளவை உடையவை.பூமியைப் போல் 1.9 மடங்கு பெரிய கோள் ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளனர். இது வெண் குறுமீன் (White dwarf) ஒன்றை சுற்றி வருகிறது.
15.07.2010 க்குமுன்னர் ரூபாய் சின்னம் நம்மிடம் இல்லை என்பதையும், அதன் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த உதய் குமார் தர்மலிங்கின் அதை வடிவமைத்து உலகெங்கும் உள்ள தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார் என்பதையும் அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
'பேஸ்மேக்கர்' இதய பாதிப்பு தொடர்பான ஆப்பரேஷன் உள்ளிட்ட சிகிச்சையின் போது சிலருக்கு தற்காலிகமாக பொருத்தப்படும். உலகின் சிறிய அளவிலான தற்காலிக 'பேஸ்மேக்கர்' கருவியை அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலை விஞ்ஞனிகள் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து அப்பல்கலை விஞ்ஞானி ரோஜர்ஸ் கூறும்போது, 'இது அரிசியை விட சிறியது. உடலில் பொருத்திய பின் 'பேஸ்மேக்கர்' பணி இலக்கு முடிந்ததும் உடலுக்கு உள்ளேயே கரைந்து விடும் இக்கருவி ஐந்தாண்டு காலம், சோதனையில் ஈடுபடுத்தப்படும்' என்றார்.
நாட்டின் முக்கிய நகரங்களில் அலுவலக பகிர்வு சேவையை அளித்து வரும் 'வீவொர்க் இந்தியா' நிறுவனத்தின் ஐ.பி.ஓ.,வுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை, 'செபி' நிறுத்தி வைத்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள 'எம்பஸி' குழுமத் துக்கு சொந்தமான வீவொர்க் இந்தியா, பெங்களூரு உட்பட 8 நகரங்களில், 65க்கும் மேற்பட்ட அலுவலகங்களை நிறுவனங்களுக்கு வாடகைக்குவிட்டு வருமானம் ஈட்டி வருகிறது. இந் நிறுவனம் புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கோரி, கடந்த ஜன., 31ம் தேதி விண்ணப்பித்து இருந்தது. அதில், ஏற்கனவே முதலீட்டாளர் வசமுள்ள 4.37 கோடி பங்குகளை, ஐ.பி.ஓ., வாயிலாக விற்க இருப்பதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில், எந்த வொரு காரணத்தையும் குறிப்பிடாமல், வீவொர்க் இந்தியா ஐ.பி.ஓ., வை நிறுத்தி வைத்துள்ளதாக செபி தன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது
அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி பல் கலை மேற்கொண்ட ஆய்வில் அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளில் உள்ள பாலைவனங் களில் 16 புதிய வெட்டுக்கிளி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.