25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையம், ஸ்ரீ பத்மாவதி தாயார் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வார் சந்நதி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் கும்பாபிஷேக விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம், ஸ்ரீ பத்மாவதி தாயார் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வார் சந்நதி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் கும்பாபிஷேக விழா

இராஜபாளையம், ஸ்ரீ வேட்டை வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வார் மற்றும் பரிவார தேவதைகளும் நிகழும் மங்களகரமான 1199ம் ஆண்டு ஸ்ரீகுரோதி வருடம் வைகாசி மாதம் 20ம் தேதி (02.06.2024) ஞாயிற்றுக்கிழமை ஏகாதசியும் ரேவதி நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுபயோக சுபத்தினத்தில்அன்று காலை 10.45 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் ஸ்ரீ வேட்டை வெங்கடேசப் பெருமாளின் பரிபூரண கிருபையாலும் ஆச்சார்யார்கள் அனுக்கிரஹத்தாலும் வெகுச்சிறப்பாக ஸ்ரீ பத்மாவதி தாயார்.ஸ்ரீ சுதர்ஸன சக்கரத்தாழ்வார்க்கு மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற இருப்பதால் ஆன்மீக பக்த ஜனங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஸ்ரீ பத்மாவதி தாயார் ஸ்ரீ சுதர்ஸன சக்கரத்தாழ்வார் அருள்பெற வேண்டுகிறோம். 

ஸர்வசாதகம்:  G.சீத்தாராமன் அய்யங்கார் (எ) கண்ணன் அர்ச்சகர் மற்றும் குழுவினர்

                              ஸ்ரீ வேட்டை வெங்கடேசப் பெருமாள் கோவில், இராஜபாளையம்.

யாகசாலை பூஜைக்குரிய திரவியங்கள் காணிக்கையாக ஸமர்பிக்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

அன்புடன் -  வெ. சுந்தர்ராஜன் 

                        வெ. சௌந்தர்ராஜன்

பரம்பரை அர்ச்சகர் - ஸ்தானிகமிராஸ் 

ஸ்ரீ வேட்டை வெங்கடேசப் பெருமாள் கோவில்

பொறுப்பாளர்: ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கோவில் 

இராஜபாளையம், செல்: 97894 38351, 9976108285

குறிப்பு: 03.06.2024 முதல் 21.07.2024 வரை மண்டல பூஜைகளும், மண்டலாபிஷேகமும் நடைபெறவுள்ளது. இந் நாட்களில் திருமஞ்சனம், பூஜை. நைவேத்யம் ஆகிய சேவைகள் அவர்கள் வேண்டும் நாட்களில் அவரவர் கைங்கர்யமாக நடத்தி வைக்கப்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News