25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Feb 27, 2025

மீண்டும் வந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம் டாபிர்!

தென் அமெரிக்க நாடுகளில்100 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டதாக கருதப்பட்ட அதிசய விலங்கு மீண்டும் காடுகளில் தென்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.உலகம்முழுவதும்பரிணாமவளர்ச்சியில்பலவிலங்குகள்அழிவுற்றபோதிலும்,மனிதவளர்ச்சிக்குபிறகுவேட்டையாடிகளால்பலஉயிரினங்கள்மொத்தமாகஅழிவுற்றன.அப்படியாகஉலகநாடுகளில்அழியும்நிலையில்பலவிலங்குகள்உள்ளன.அப்படியாகசமீப100 ஆண்டுகளில்உலகில்மொத்தமாகஅழிந்துவிட்டதாககருதப்பட்டவிலங்குகளில்தென்அமெரிக்காவில்காணப்பட்டடாபிர்இனங்களும்ஒன்று.கடந்த1914ம்ஆண்டில்இதுகேமிராவில்பதிவுசெய்யப்பட்டபின்னர்அப்பகுதிகளில்தென்படவேஇல்லை.பலஆண்டுகளாகவிலங்குஆர்வலர்கள்தேடியும்இந்தவிலங்கினம்தென்படாதநிலையில்இதுமொத்தமாகஅழிந்துவிட்டதாகவேகருதப்பட்டது. இந்நிலையில்தான் சிலநாட்களுக்கு முன்பாக யாருமே எதிர்பார்க்காத வண்ணம்இந்த விலங்கு பிரேசிலில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் காணப்பட்டுள்ளது. ஒருதாய் டாபிர் இரண்டு குட்டிகளுடன் செல்லும் காட்சியை சிலர், வித்தியாசமான உயிரினமாக தெரிந்ததால் படம் பிடித்துள்ளனர். அதன்மூலம் டாபிர் இன்னும் அழியவில்லை என்ற செய்தி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் எவர் கண்ணுக்கும் சிக்காமல் டாபிர்கள் வாழ்ந்தது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அங்குள்ள டாபிர்களை கண்காணித்து அவற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Feb 26, 2025

எலான் மஸ்க் எச்சரிக்கை.

 பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனபிரபல தொழிலதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, செலவுகளை குறைக்கவும், பிற நாடுகளுக்கு வழங்கப்படும் தேவையில்லாத நிதி உதவிகளை நிறுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நான்காயிரம் கோடி ரூபாய் நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளதுஎன்பதைகுறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், அடுத்த கட்டமாக அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்பவர்களுக்கு எட்டு மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும், அரசு ஊழியர்கள் தாங்கள் வேலை செய்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.எலான் மஸ்க் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் கணிசமான அளவில் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுவதால், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Feb 25, 2025

அமெரிக்காவில் ஆப்பிள் அறிவிப்பு. 500 பில்லியன் டாலர்களுக்கு மேல்  முதலீடு

ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்காவில் அடுத்த 4 ஆண்டுகளில்500 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதனால்20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்க உள்ளதாகவும்அவர்தெரிவித்துள்ளார்.ஆராய்ச்சி, சிலிக்கான் பொறியியல், மென்பொருள் மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த துறைகளில்தான் அடுத்த நான்கு ஆண்டுகளில்500 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆப்பிள் நிறுவனம் இந்தியா உள்பட சில வெளிநாடுகளில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்ததை அடுத்து, அமெரிக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, இந்த முதலீடு அனைத்தையும் அமெரிக்காவிலேயே செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறதுஇன்னும் பல நிறுவனங்கள் அமெரிக்காவில் புதிய முதலீடு செய்ய காத்திருக்கின்றன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Feb 25, 2025

தொட்டால் சுருங்கி!

மருத்துவ தாவரங்களில் தொட்டால் சிணுங்கிக்கு தனி சிறப்பு உண்டு. இது, மனிதனின் குணத்துடன் ஒப்பிடப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் மிமோசா பியூடிகா. தொட்டால் சுருங்கி, இலச்சகி, தொட்டால் வாடி, வசிய மூலிகை, மாய மூலிகை, ஈர்ப்பு மூலிகை, மந்திர மூலிகை, ஆள் வணங்கி என்ற பெயர்களும் உண்டு.மற்ற தாவரங்களை போன்றே, இதன் இலையும் செல்களின் சேர்க்கையால் ஆனது.இலைக்குள் இருக்கும் செல்கள் ஒரு வகை திரவத்தைக் கொண்டிருக்கும்.இலையைத் தொட்டவுடன் தாவரத்தின் தண்டுப் பகுதியில் வினோத அமிலம் சுரக்கும். உடனே, இலையின் அடிப்பகுதியில் திரவத் தன்மை நீங்கி விடும். மேற்பகுதியில் அது நீங்குவது இல்லை. இதனால், எடையில் மாறுபாடு ஏற்பட்டு இலை சுருங்கும். தொட்டவுடன் அது சுருங்கி விடுவதாக கூறுகிறோம்.

Feb 25, 2025

வால்நட் மரம்

சில தாவரங்கள் ஆண் மரம், பெண் மரம் என்று தனித்தனியாக இருக்கும். ஆனால், வால்நட் மரம் பருவத்திற்கு ஏற்ப தன் பூக்களின் பாலினத்தை மாற்றிக் கொள்ளும். இது  அறியப்பட்ட விஷயம் தான் என்றாலும், முதன்முறையாக இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை ஆய்வாளர்கள் தெளிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

Feb 24, 2025

உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும், இந்த வங்கியின் பெயரை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இந்த வங்கி லோகோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று உங்களுக்குத்  தெரியுமா? . எஸ்பிஐ வங்கியின் லோகோ கங்காரியா ஏரி மற்றும் பைலின் ஏரியிலிருந்து எடுக்கப்பட்டது.

Feb 24, 2025

புற்று நோயை தடுக்க மது, மாமிசத்தைத் தவிர்த்துவிட்டு, பால் குடிப்பது நல்லது.

 உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று புற்றுநோய்.அதிலும் குடல் புற்றுநோய் என்பது மிகவும் அபாயகரமா னது. அதிலிருந்து தப்பிப்பதற்கு சிறந்த உபாயத்தை இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.ஏறத்தாழ 5,42,000 மக்களைக் கொண்டு ஓர் ஆய்வுநடத்தப்பட்டது.ஒவ்வொருவருடையஉணவுப்பழக்கம்பற்றியும்கேட்டறியப்பட்டுஆவணப்படுத்தப்பட்டது.அனைவரும் 16 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட் டனர். அதில், 12,259 பேருக்கு குடல் புற்றுநோய் ஏற்பட்டது தெரியவந்தது. இவர்களுக்கு மட்டும் எப்படி வந்தது ? பிறருக்கு ஏன் வரவில்லை என்பது குறித்து ஆராயப்பட்டது.இதிலிருந்து தினமும் 300 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக்கொண்டு வருபவர்களுக் குக் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு 17 சதவீதம் குறையும் என்று கண்டறிந்துள்ளனர். தின மும் ஒரு குவளை பால் சாப்பிட்டால் இந்தச் சுண்ணாம்புச் சத்து நமக்கு கிடைத்துவிடும்.பால் சாப்பிடப் பிடிக்காதவர்கள் டோபு அல்லது பிரக்கோலி போன்ற காய்கறிகள் மூலம் இந்த கால்சியத்தைப் பெறலாம்.அதேபோல இந்த ஆய் வில் மற்றொரு விஷயமும் தெரியவந்துள்ளது. தினமும் 100 கிராம் ரெட் மீட் அதாவது ஆடு, பன்றி, மாடு, முயல் ஆகிய விலங்குகளின் மாமிசம் சாப்பிடுவது இந்தப் புற்றுநோய்வரும் வாய்ப்பை 29 சதவீதம் அதிகரிக்கிறது.தினமும் 200 கிராம் மது குடிப்பது புற்றுநோய் வரும் வாய்ப்பை 15 சதவீதம் அதி கரிக்கிறது. ஆகவே மது, மாமிசத்தைத் தவிர்த்துவிட்டு, பால் குடிப்பது நல்லது என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

Feb 23, 2025

ஆட்டம் போடுகிறான் மனுஷன்.

புத்தகம் அமைதியாக இருக்க, படித்தவன் ஆட்டம் போடுகிறான்...பாட்டில் அமைதியாக இருக்க ,குடித்தவன் ஆட்டம் போடுகிறான்..பணம் அமைதியாக இருக்க, வைத்திருப்பவன் ஆட்டம் போடுகிறான்..பிணம் அமைதியாக இருக்க, எடுத்து செல்பவன் ஆட்டம் போடுகிறான்..

Feb 23, 2025

தங்க நானோ துகள்கள் கொழுப்பை கரைக்கும்.

உடல் பருமனால் பாதிக்கப்படு பவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடல் பருமனைக் குறைக்க, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்க  வேண்டியது அவசியம். ஆனால், கொழுப்பைக் கரைக்க பயன்படும் மருந்துகள் ஆரோக்கியமான தசைகளை வலுவிழக்கச் செய்து விடுகின்றன. இதனால், தசை வலி மையைக் குறைக்காமல் கொழுப்பை மட்டும் கரைக்கும் மருந்தை உருவாக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வந்தனர்.எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியா பல்கலை தங்க நானோ துகள்களை இதற்குப் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளது. எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தத் துகள்கள் அவற்றின் உடலில் உள்ள கொழுப்பை 36 சதவீதம் வரை குறைத்துள்ளது.இந்த மருந்து கொடுக்கப்பட்டு வெறும் ஒன்பது வாரங்களில் இவ்வளவு முன்னேற்றம். அது மட்டும் இல்லாமல் எலிகளின் சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகளின் ஆரோக்கி யத்தையும் மேம்படுத்தி இருக்கின்றன. எனவே வருங்காலத்தில் இது மனிதர்களுக்கும் பயனுள்ள மருந்தாக அமையும் என்று விஞ்ஞானிகள்  கூறுகின்றனர்.

Feb 23, 2025

மின்சார சாப்ஸ்டிக்கை கொண்டு சாப்பிட்டால், உப்பு சப்பில்லாத சாப்பாடு. (நவீன கரண்டி)

 அதிக ரத்த அழுத்தம் இருக்கிறது. இனிமேல் உப்பை குறைவாகச் சாப்பிட வேண்டும்என்று  உங்கள் மருத்துவர் அறிவு றுத்தி உள்ளாரா :உப்பு சப்பில்லாமல் எப்படி சாப்பிடுவது என்று  வருத்தப்படுகிறீர்களா?  கவலை வேண்டாம். உங்களுக்காகவே உரு வாக்கப்பட்டிருக்கிறது இந்த நவீன கரண்டிமின்சாரத்தில் இயங்கும் இந்தக்கரண்டி  (Electric spoon) 2022 ஆண்டே வடிவமைக்கப்பட்டு விட் டது. ஜப்பானைச் சேர்ந்த உணவுத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று முதன் முதலில் மின்சார சாப்ஸ்டிக்கை உருவாக்கியது. இதைக் கொண்டு சாப்பிட்டால், உணவில் உப்பு குறைவாக இருந்தாலும், நம் நாக்கு, உவர்ப்பு சுவையை உணர்ந்து ஆறுதல் அடையும்.அதே போல் இப்போது இந்த மின்கரண்டி உருவாக்கப்பட்டுள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்தக் கரண்டியில் இரண்டு எலக்ட்ரோடு இருக்கும். ஒன்று கைப்பிடியில், மற்றொன்று உணவு எடுக்கும் பகுதியில் இருக்கும். உணவை எடுக்கும் போது, உணவில் இருக்கும் சோடியம் அயனிகளை மட்டும் இந்தக் கரண்டி ஈர்த்துப் பிரித்துவிடும்.சோடியம் அயனிகள் தனியே நாக்கில் படும்போது, உவர்ப்பு சுவையை நாக்கு உணர்ந்து கொள்ளும். இதனால் குறைவான உப்பு இருந்தாலும், நமக்கு நிறைவாக இருக்கும்.ஆரம்பத்தில் 200 கரண்டிகள் மட்டும் வடிவமைக்கப்பட்டன. அவை அனைத்தும் விற்றுவிட்டன. இதைத் தொடர்ந்து,  பிப்ரவரி முதல் மறுபடியும் இந்த ஸ்பூன் உற்பத்தியை துவங்கி உள்ளனர். இதில் ஒரே ஒரு பிரச்னை என்ன வென்றால், தங்களுடைய உடலிலே பேஸ்மேக்கர் முதலிய மருத்துவ மின் கருவிகள் வைத்திருப்பவர்கள் இதைப் பயன்படுத்தக்கூடாது

1 2 ... 122 123 124 125 126 127 128 ... 131 132

AD's



More News