கேழ்வரகில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.எள்ளில் செய்த உணவை சாப்பிட வேண்டும்.எலும்புகள் உறுதியாக. வலுவாக இருக்க பப்பாளி, பீன்ஸ்... பாதாம் முந்திரி.. நட்ஸ். பிரண்டை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள எலும்புகள் பலமாக இருக்கும்.
உருளைக் கிழங்கு அதிக வெளிச்சம் படும் இடத்தில் வைக்கப் பட்டால் பச்சை நிற திட்டுக்கள் உண்டாகும்.நாள் பட்ட கிழங்கு முளை விட்டிருக்கும் அதை அப்படியே சாப்பிட்டால் அதிலுள்ள நச்சுத் தன்மை தலைவலி,வயிற்று உபாதையை ஏற்படுத்தும்.முளைத்த பகுதி,பச்சை நிற பகுதி வெட்டி விட்டுப் பயன்படுத்தலாம்.
பாகற்காயை தோலை சீவி விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதை மிக்சியில் போட்டு தேன், எலுமிச்சை சாறு சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் உப்பு, மிளகுதூள், தண்ணீர் சேர்த்து கலக்கினால் பாகற்காய் ஜூஸ் ரெடி .இது கல்லீரல் பிரச்சனை வராமல் தடுக்கும். மேலும், நீரிழிவு, இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
தினம் இரு வேளை இஞ்சி, எலும்பிச்சைத்தோல், மஞ்ச தூள், இரண்டு கிராம்பு, தேவையான அளவு கல் உப்பு சேர்த்து,1 லிட்டர் தண்ணீரில் கலந்து நன்கு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை பருகி வந்தால், எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய் கிருமிகள் தாக்காத வண்ணம் பாதுகாக்கும். மேலும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மருத்துவமனையில் இதைதான் கொடுக்கிறார்கள். அனைவரும் பின்பற்றவும்..
பன்னீர் திராட்சையில் உள்ள பண்புகள் கட்டிகள் மற்றும் புற்றுநோயின் வளர்ச்சியைதடுக்கின்றன. இதனை ஜூஸாக எடுத்துக்கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோயின்அபாயத்தைப் பெறும் அளவு குறைக்கலாம்.இதனுடன் மாதவிடாய் பிரச்சனைகளும் சரியாகும்.
பச்சை மிளகாயில் இருக்கும் கேப்சைசின், அதிகளவு கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமனுக்கு எதிராக செயல்படுகின்றது. இது கொழுப்பை எரித்து, உங்கள் எடை இழப்பிற்கு துணை புரிகிறது.பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேடிக் புற்றுநோய் மற்றும் இரைப்பை பு ற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடும் திறன் பெற்றது.பச்சை மிளகாயை சாப்பிடுவது, இதய நோயால் ஏற்படும் இறப்புகளை குறைக்கிறது. டைப்-2 நீரிழிவு மற்றும் இதய நோய்க்கு இது மிகவும் சிறந்த மருந்தாகும்.
ஆண்கள் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் தசை தளர்ந்து விரியும்.பாய் உடல் சூட்டை உள் வாங்கக்கூடியது,பெரியோர்கள் சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லா ஒரு சீர்வரிசை கிடையாது.ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது.கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட, வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்... உடல் உஷ்ணம், தணிவதையும் உடலின் வளர்ச்சியும்.ஞாபக சக்தியையும், மன அமைதியும், நீண்ட உடல்/மன ஆரோக்கியத்தையும் தருகிறது,எலும்புகளை வலுவாக்கும். பாலூட்டும் பெண்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும்.
முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்பு காப்பர், செலினியம் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற கனிம தாதுப் பொருட்கள் அதிக அளவில் உள்ளது.இது செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய கொலஸ்டிராலை குறைத்து நன்மை தரக்கூடிய கொலஸ்டிராலை அதிகரிக்க செய்கிறது.
பச்சைப் பயறு, மோர், உளுந்து வடை, பனங்கற்கண்டு, சின்ன வெங்காயம், சுரைக்காய்.நெல்லிக்காய், வெந்தயக்கீரை மாதுளம் பழம், இளநீர், வெந்தயம், நாவற்பழம், கோவைக்காய் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
.புகை பிடித்தல், மன அழுத்தம், உடல் பரு மன் ஆகியவை தான் இதய நோய்களுக்கான காரணிகளாக அறியப்பட்டு வந்தன. தற்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மொனாஷ் பல்கலை23,814 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வில், யாருக்கெல்லாம் மலச்சிக்கல் உள்ளதோ அவர்களுக்கெல்லாம் இதயநோய் ஏற்படும் சாத்தியம் அதிகமுள்ளதாகக் கண்டறிந்துள்ளது.