தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும்.தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.
அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும், அதிமதுர பொடியை2 கிராம் அளவு தேனில் குழைத்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.
கோதுமை ரவை உப்புமாவை உடல் மெதுவாக சீரணிக்கிறது. இதனால் உங்களுக்கு நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்த உணர்வு இருப்பதால், நடுவில் நொறுக்குத்தீனிகள் அல்லது மற்ற உணவுகள் சாப்பிடவும் தோன்றாது. இதனால் உடல் பருமனாவது. கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.கோதுமை ரவையில் உள்ள விட்டமின் சத்துகள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். குறிப்பாக இதிலுள்ள விட்டமின் B, விட்டமின் E ஆகியவை நோயெதிர்ப்பு ஆற்றலுக்கு வலுச் சேர்க்கும்.உப்புமா உடலுக்கு ஆற்றல் அளிப்பதை உணவியல் நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர். மேலும், அதில் போதுமான காய்கறிகள் சேர்க்கும்போது, அதில் சத்தும் கூடுதலாகக் கிடைக்கும்.
இயற்கையாக வீட்டிலேயே தயாரிக்ககூடிய பானமான மோர் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் புரோபயாடிக் பண்புகள் நிறைந்து. அத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியைக் அதிகரிக்கிறது நமது செரிமானம் மண்டலத்திற்கு மோர் ஒரு வரப்பிரசாதம் மோர் குடிப்பது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.மோரில் உள்ள எலக்ட்ரோ லைட்ஸ் நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும்.ஒரு கிளாஸ் மோருடன் உப்பு சேர்த்து தினந்தோறும் குடித்து வர வறட்சி போன்ற பிரச்சனைகள் நீங்கும்.நாம் உண்ணும் உணவில் உள்ள கழிவுகளை போக்கி உணவின் சத்துக்களை முழுமையாக உடலுக்கு கொண்டு சேர்க்கும் பணியை மோரில் உள்ள சேர்மங்கள் செய்து கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் மோர் குடிப் பது நல்லது.முகத்துக்கு அவ்வப்போது மசாஜ் செய்து வர சருமத் தில் உள்ள நச்சுகள் நீங்கி சருமம் பொலிவுறும் இரத்த அழுத்தத்தை சமநிலைப் படுத்துகிறது.
பிரண்டை வீக்கம். சுளுக்கு. தசைப்பிடிப்புக்கு மிகச்சிறந்த வலி நிவாரணி.ஞாபக சக்தியை அதிகரிக்கும்.மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.வாய்வு பிடிப்பை போக்கும்.எலும்புகளை வலிமையாக்கும்.ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை நிறுத்தும்.தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி வராதுரத்தக்குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கும்.இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
பகல் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் அல்லது 1மணி நேரத்திற்கு முன் எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சி சாறு கலந்து அதனுடன் சிறிது கல் உப்பு சேர்ந்து குடித்தால் ஜீரணமண்டலம் நன்றாக வேலைசெய்யும். உணவுநன்றாகசெரிக்கும். மேலும், இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமல், பாதுகாப்பதனால் உடல் பருமன் பிரச்சனை நீங்கும். வயிறு, செரிமான பிரச்சனைகள் வராமல் காக்கும்.
முருங்கைக்கீரை, சுண்டைக்காய் பாசிப்பயறு, எள்ளுருண்டை மணத்தக்காளி வத்தல் அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலை உருண்டை விதையுள்ள கருப்பு திராட்சை நாட்டு மாதுளை, நாட்டுப் பேரீட்சை கறிவேப்பிலைத் துவையல் ,பீர்க்கங்காய் பிரண்டை, முள்ளங்கி பனை வெல்லமிட்டு கிண்டிய உளுந்துக்களி உளுந்து, கேழ்வரகு தோசை பொன்னாங்கன்னி கீரை தண்டுக்கீரை ,வெள்ளாட்டுக்கறி, ஈரல், எலும்பு சூப் நெல்லிக்காய்ச் சாறு, பழரசம் ∙பனைவெல்லப் பாகில் புரட்டிய சிறு தானிய மாவுருண்டை.
மாலை நேரத்தில் ஒரு இளநீரை எடுத்து ஒரு கண்ணை மட்டும் திறந்து, அதற்குள் சீரகம் -ஒரு தேக்கரண்டி, சுத்தமான கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - ஒரு தேக்கரண்டி, பாசிப்பயறு ஒரு தேக்கரண்டி, ஆகிய மூன்று பொருட்களையும் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த இளநீரை எடுத்து ஊறிய இளநீரை மட்டும் வடிகட்டி குடித்தால் போதுமானது, சாப்பிட்டாலும் தவறில்லை.இந்த மருந்தை தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வர ஐந்தில் இருந்து ஏழு நாட்களுக்குள் சிறுநீரகக் கற்கள் முழுமையாக வெளியேறும்
இரவில் கோதுமை சப்பாத்தியை சாப்பிடலாமா, கூடாதா என சந்தேகம் இருக்கும். அதற்கு உடல்நல ஆலோசகர்கள் தெரிவிக்கும் விளக்கத்தை காணலாம். கோதுமை சப்பாத்தியில் கலோரிகள், கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகம் இருக்கும் என்றும், அதை இரவில் சாப்பிட்டால் செரிமானம் ஆக அதிக நேரமாகும் என்றும் கூறுகின்றனர். இதனால் ஜீரண பிரச்னை ஏற்படும் என்பதால், இரவு உணவாக சப்பாத்தி சாப்பிடுவதை தவிர்க்கும்படி அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தற்போது அக்னி வெயில் தொடங்கி விட்டதால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. வெயில் காலத்தில் உடலில் நீர்சத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒரு உணவும் உடலுக்குள் சென்றால், உடலின் வெப்பநிலையை அடைய வேண்டும். வெயிலில் அலைந்து விட்டு வீட்டுக்கு வந்ததும் உடனே குளிர்ந்த நீர், மென்பானம் அருந்துவது தவறு. அது உடலின் வெப்பநிலையை அடைய, கலோரிகளை உடலில் இருந்து தான் எடுக்கிறது. மென்பானங்களில் பழத்தின் சுவை, மணம், நிறம் இருக்கும். சத்துக்கள் குறைவு. எனவே சாதாரண தண்ணீரே நல்லது.