கற்றாழை குடும்பத்தை சேர்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவர இனம் 'டிராகன்'. இந்தப் பழம் அடர்சிவப்பு நிறத்தில் காணப்படும். இதன் செதில்கள் பச்சை நிறமாக இருக்கும். இதன் மையத்தில் வெள்ளை நிறத்திலான இனிப்புக்கூழ் சிறு கறுப்பு விதைகளுடன் காணப்படும். சராசரியாக 700 முதல் 800 கிராம் எடை கொண்டது. இது உலகின் வெப்பமண்டல பகுதிகளில் பயிரி டப்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இந்தப் பழத்தில் வைட்டமின் பி3 இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமன் இல்லாத சீரான உடலமைப்பை உருவாக்க உதவுகிறது. இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளை வலிமைப் படுத்துகிறது.
வெறும் தலையில் சூடி அழகு பார்ப்பதாக மட்டுமல்லாமல், காயங்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் இந்த பூவிற்கு உண்டு.கனகாம்பர பூவுடன் மிளகுத்தூளை கலந்து பேஸ்ட் போல் ஆக்கிவிட்டு காயங்கள் மீது தடவினால் குணமாகும். அன்றைய நாட்களில் இரும்பு பொருள் துருப்பிடிக்காமல் இருக்க கனகாம்பரத்தின் பேஸ்ட் பயன்படுத்தப்பட்டதாம்.நம் உடலில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியா, வைரஸ், ஈஸ்ட் தொற்றுகளை குறைக்கும் தன்மையும் கனகாம்பரத்திற்கு உண்டு.ஒவ்வாமை வாந்தி வராமல் தடுப்பதற்கும் முக்கியமான மருந்தாக கனகாம்பரத்தை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.அத்துடன் தலைவலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும் கனகாம்பரத்தில் மாலை செய்து அணிந்தால் இதயம் நலம் பெறும் .
சாத்துக்குடி, உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கக்கூடியது. பசியை ஏற்படுத்தக்கூடியது. வயிறு மந்தமாக இருப்பவர்கள் சாத்துக்குடி ஜூஸைக் குடித்துவந்தால், நல்ல தீர்வு காண முடியும். இது செரிமானப் பிரச்னையைச் சரிசெய்யக் கூடியது. வறண்ட சருமத்தினர், கடினமான சருமத்தினர் இருவருக்குமே சாத்துக்குடி ஜூஸ் ஏற்றது. இதனைத் தொடந்து பருகிவர முகத்தில் கரும்புள்ளிகள் மறையும்.
கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து டீ செய்து 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குணமாக்கிறது.
மாப்பிள்ளை சம்பா அரிசி பார்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம் நார்ச்சத்து இரும்புச்சத்து துத்தநாகம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை கொடுக்கிறது. ஆண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அரிசி மாப்பிள்ளை சம்பா. உடலுக்கு அதிக அளவில் பலம் கொடுக்க கூடிய சத்து. இதில் இருக்கிறது. குறிப்பாக மாப்பிள்ளையாக போகிறவர்களுக்கு இது மிகவும் அவசியம் .ஆகையால் தான் இளம் வயது உடைய ஆண்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியை சாப்பிட கொடுப்பார்கள். மேலும் உடலுக்கு வலுவை கொடுக்க கூடிய ஏராளமான சத்துக்கள் இதில் உள்ளது. மாப்பிள்ளை சம்பாவின் சிறப்பே ஆண்மையை பலப்படுத்துவது தான் ,மாப்பிள்ளை சம்பா அரிசியை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும்.
சுரைக்காயுடன் பூண்டு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும்,சுரைக்காய் ஜூஸை அடிக்கடி குடித்து வந்தால் வயிற்றுப் புண்கள் மற்றும் வாய்ப்புண்கள் ஆறும்.சுரைக்காயை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் கோடைக்காலத்தில் ஏற்படும் தலைவலி சரியாகும்.வாரம் ஒருமுறை கரைக்காய் ஜூஸ் குடித்தால் உடல் எடை குறையும்.
வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். வாழைப்பூவின் துவர்ப்பு தன்மை ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைக்க உதவுகிறது. வாழைப்பூவை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைந்துவிடும். பெண்களுக்கு மாதவிடாய் சீராக வருவதற்கு வெள்ளைப்படுதல், வயிற்று வலி பிரச்சனை சரியாக வாழைப்பூவை தினமும் சாப்பிடலாம்.
இரத்தம் அதிகரிக்கவும், இரத்தத்தை சுத்திகரிப்பு செய்யவும் உதவும்.நல்ல தூக்கத்திற்கு உதவும்.இளநரை, கண் எரிச்சல் பிரச்சனைகள் சரியாகும்.வாய் துர்நாற்றம், பற்சிதைவு பிரச்சனைகள் நீங்கும்.வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்சனைகள் சரியாகும்.
உறங்கும் போது தலைக்கு கீழ்தலையணை இல்லாமல் தூங்கினால் இதயம் மற்றும் மூளை வலுப்படுத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தூங்க போவதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன் ஒவ்வொரு இரவும் ஒரு மாதுளை உணவு சாப்பிட வேண்டும். இந்த ஆயுர்வேத முறை மூலம் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கலாம்.தினமும் ஒரு வேக வைத்த முட்டையை சாப்பிட வேண்டும். இந்த எளிய முறை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஏசி உடலின் ஈரப்பதத்தைக் குறைத்து விடும்.'நீண்ட நேரம் குளிரூட்டப்பட்ட ஏசி அறையில் அமரும்போது தலைவலி ஏற்படும். ஏசி சரியான பராமரிப்பில் இல்லையென்றால் அலர்ஜி. தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. அதிக நேரம் ஏசியில் இருந்தால், கண் எரிச்சல், நீர் வற்றிப்போதல் ஏற்படும். அலுவலகத்தில் பலருக்கு உடல் அசதி, களைப்பு வருவதற்கு ஏசி தான் காரணம்.