25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


நலம் வாழ

May 05, 2025

அல்சர் குணமாக…

அல்சர் என்பது வயிற்றில் வலி, ரத்தத்துடன் கூடிய வாந்தி, வயிற்றில் வீக்கம், அஜீரணம் , திடீரென எடை குறைதல் போன்றவை  இருந்தால் அது அல்சர் ஆகும்.மணத்தக்காளி கீரையை வாரத்திற்கு மூன்று முறையாவது சூப்பாகவோ அல்லது பொரியலாகவோ உட்கொண்டு வந்தால் வயிற்றுப்புண் வாய் புண் அல்சர் போன்றவற்றை குணமாக்கும்.தேங்காய்பாலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் தேங்காய்பாலை அருந்தி வர குடல் புண் அல்சர் போன்றவற்றை சரிசெய்ய மிகவும் உதவுகிறது. தேங்காய்பால் பிடிக்காதவர் தினமும் சிறிதளவு கொப்பரை  தேங்காயை மட்டும் உட்கொண்டு  வந்தால் போதும்.குடைமிளகாய்,கேரட்,தயிர்,ப்ரக்கோலி,ஆலிவ்ஆயில்,க்ரீன்டீ,அதிமதுரம்,பூண்டு,தேன்,ஆப்பிள்,ஸ்ட்ராபெர்ரி,ராஸ்ப்பெர்ரி,ப்ளூபெர்ரி,முலாம்பழம்,சீத்தாப்பழம்,பலாப்பழம்,முட்டைக்கோஸ்,காலிபிளவர்,முள்ளங்கி, ஆகியவற்றை அல்சர் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

May 02, 2025

அகத்திக் கீரை உணவில் சேர்த்துக் கொள்ள....

அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை  உபயோகித்தால் தேகத்தில் இருக்கும் உஷ்ணம் குறையும்.கண்கள் குளிர்ச்சியாகும்.மலம் இலகுவாகப்  போகும். சிறுநீர் தடையில்லாது தாராளமாகப் போகும்.நீரடைப்பு, பித்த மயக்கம் இவை நீங்கும் .அடிபட்டு ரத்தம் கசியும் ரணங்களுக்கு அகத்தியை அரைத்து வைத்து ரணத்தில் கட்டினால்  விரைவில் ஆறும், சீழ் பிடிக்காது.அகத்திக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால், ரத்த சோகையை குணமாக்கும். ரத்த அழுத்ததை சம நிலையில் வைத்திருக்கும்.நெஞ்சு சளி, தோல் நோய் போன்றவைகளுக்கு அகத்திக் கீரை நல்ல பலனை தரும்.வாய்ப் புண்ணால் அவதிப்படுபவர்கள் அகத்திக் கீரையுடன் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப் புண் விரைவில் குணமாகும். அகத்திக் கீரை வயிற்றுப் புண் என்னும் பெப்டிக் அல்சர் நோயைக் குணப்படுத்துகிறது.  அகத்தி கீரை, தேங்காய் பால் சேர்த்து முன்பெல்லாம் தண்ணீர் சாறு ஒன்று ஒன்று ரசம் போல வைப்பார்கள். அது வயற்று புண், வாய் புண் இவைகளை ஆற்றும். இப்போது அப்படி வைத்து தருபவர்கள் அதிகம் இல்லை.அகத்திக்கீரையில், 65 விதமான சக்திகள் அடங்கி இருக்கின்றன. மலச்சிக்கல், பித்தம் அதிகமாக உள்ளோர், அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட வேண்டும். வெயிலில் அலையும் வேலை உடையவர்களும், காபி, டீ சாப்பிடுபவர்களும் அகத்திக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Apr 30, 2025

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு வல்லாரை கீரை சிறந்த ஊட்டசத்து.

வல்லாரை கீரை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே வருகிறது.இது சிறந்த மருத்துவ சத்து, தாயின் ஆரோக்கியத்தை வளர்ப்பதுடன் குழந்தைக்குத் தேவையான வளர்ச்சிக்கு மிக சிறந்த ஊட்டசத்தை கொடுக்கிறதுஇதை துவையல், அல்லது வெங்காயம் கடலைகாய், எள்ளு, பொரி, காரம், உப்பு, மிளகாய் சேர்த்து கடலை மசால் போல் செய்து சாப்பிடலாம்.வல்லாரை சாறுடன் சிறிது தேன் கலந்து காலை மாலை தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு சிறப்பாக இருக்கும். 

Apr 28, 2025

செரிமானத்திற்கு உதவும் அன்னாசிப் பழம்

பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உட்கொண்டது.பீட்டா கரோட்டின் கண்பார்வை அதிகரிக்கிறது.அமிலத்தன்மையை சமன்செய்யும்.தசைகளின் சீரழிவு தடுக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது.வைரஸ்களை எதிரிடுகிறது.வீக்கத்தை குறைக்கிறது.மூட்டு வலி குறைக்கிறது.வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும் வலூவாகவும் வைக்கிறது.

Apr 27, 2025

நுரையீரலை பாதுகாக்க வைட்டமின் சி" சத்துள்ள  பழங்கள்.

வைட்டமின் C சத்தானது, சளி, காய்ச்சலை குணப்படுத்த உதவுகிறது. குறிப்பாக நுரையீரலை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் வைட்டமின் C அவசியம். இதற்கு ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை உட்கொள்ளுங்கள். வெதுவெதுப்பான நீரில் அரை பாதி எலுமிச்சை சாறு பிழிந்து 2-3 முறை தினமும் குடியுங்கள்.

Apr 25, 2025

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் மக்கா சோளம்

மக்காசோளத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்ட்ஸ் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை போக்கும்.அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டது.நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கிறது.எலும்பு வலிமைக்கு உதவுகிறது.

Apr 24, 2025

மூலநோயை குணப்படுத்தும் துத்தி இலை.

துத்தி இலை மூலநோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் உஷ்ணத்தால் அல்லது மலச்சிக்கலால் வரக்கூடிய மூலநோயை துத்தி இலை குணப்படுத்துகிறது. காலை எழுந்ததும் துத்தி இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறைந்து மூலநோய் குணமாகிவிடும்.மேலும் துத்தி இலையின் சாறை காலை வெறும் வயிற்றில் 2 ஸ்பூன் குடித்து வர மலச்சிக்கல் வராது.

Apr 21, 2025

சீரகம் இதற்கும் பயன்படும்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸ் உடன் சீரகம் கலந்து பருகி வந்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். மோருடன் சீரகம், இஞ்சி. சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாய்வுத் தொல்லை நீங்கும்.ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.இரத்தம் அதிகரிக்கவும் இரத்தத்தை சுத்திகரிப்பு செய்யவும் உதவும்.நல்ல தூக்கத்திற்கு உதவும்.இளநரை, கண் எரிச்சல் பிரச்சனைகள் சரியாகும்வாய் துர்நாற்றம், பற்சிதைவு பிரச்சனைகள் நீங்கும்.வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்சனைகள் சரியாகும்.

Apr 20, 2025

சேர்த்துக் கொள்ளக்கூடாத உணவு

அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் ஊறுகாய், மிளகாய் இரண்டையும் சேர்த்துக் கொள்ளக்கூடாது.ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய் முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.பழங்களை சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

Apr 18, 2025

மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் ஊறும்.

இரவில் தேன் கலந்து சாப்பிட்டால் இதயம் வலிமை பெறும்.பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சக்தி கிடைக்கும்.மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் ஊறும்.எலுமிச்சம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.ஆரஞ்சுப் பழச்சுளையில் தேன் கலந்து சாப்பிட்டால் தூக்கம் வரும்.தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாப்பிட குடல் புண். வாய்ப்புண் குணமாகும்.இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.சுண்ணாம்பில் தேன் கலத்து கட்டிகள் உள்ள இடத்தில் தடவ  வீக்கம் குறையும்: கட்டிகளும் ஆறிவிடும்.

1 2 ... 19 20 21 22 23 24 25 ... 44 45

AD's



More News