ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால், மறுபடியும் இயங்காது. அது என்ன? - இதயம்தண்ணியில்லாத காட்டிலே, அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்? - ஒட்டகம்.
சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள். அது என்ன? மின்விசிறி மரத்துக்கு மரம் தாவுவான், குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான், சாமி அல்ல, அவன் யார்?: அணில்
கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்? புகைகாலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம். அது என்ன? வானம்
நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன். நான் யார்? - மணிக்கூடு. ஆள் இறங்காத குளத்தில், ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன? -மத்து
காட்டிலே பச்சை, கடையிலே கறுப்பு, வீட்டிலே சிவப்பு. அது என்ன? மரம்-கரி-நெருப்பு எண்ணெய் வேண்டா விளக்கு. எடுப்பான் கை விளக்கு. அது என்ன? மெழுகுவர்த்தி
காட்டிலே பச்சை, கடையிலே கறுப்பு, வீட்டிலே சிவப்பு. அது என்ன? - மரம்-கரி-நெருப்பு எண்ணெய் வேண்டா விளக்கு. எடுப்பான் கை விளக்கு. அது என்ன? - மெழுகுவர்த்தி
ஊரெல்லாம் ஒரே விளக்கு, அதற்கு ஒரு நாள் ஓய்வு. அது என்ன? சந்திரன் எடுக்க எடுக்க வளரும். எண்ணெயைக் கண்டால், படிந்துவிடும். அது என்ன?: முடி
ஒற்றைக் காலில் ஆடுவான். ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்? பம்பரம் அழுவேன்,சிரிப்பேன், அனைத்தும் செய்வேன்.நான் யார்? முகம் பார்க்கும் கண்ணாடி
மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம். அது என்ன? அன்னாசிப்பழம் . வேகாத வெயிலில், வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன? உப்பு
அடித்து நொறுக்கி, அணலில் போட்டால், ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன? சாம்பிராணி அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன? காற்று