10-வது, 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.
.பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடக்கஉள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்திய அணி சூர்ய குமார் யாதவ் தலைமையில் களம் காணுகிறது. 2024-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு ,எந்த 20 ஓவர் தொடரையும் இழக்காமல் இந்திய அணி முதல் முறையாக உள்ளூர் சூழலில், முழுவீச்சில் ஆயத்தமாகிறது.
ஐ.சி.சி. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 12-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரை பெண்களுக்காக இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி அதே உத்வேகத்தில் 20 ஓவர் உலகக் கோப்பையையும் வெல்ல ஆர்வம் காட்டுகிறது.
0
Leave a Reply