வயிற்றை சுத்தம் செய்ய இதை மட்டும் செய்யல் போதும் வயிறு சுத்தமாகி, உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு ஏழு நாட்க்கள் தொடர்ந்து ,ஏதாவது ஒரு கீரை கடையல் குழம்பு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும், இதில் முருங்கைக் கீரை பொரியல் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் .இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, இப்படி செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
தினமும் இரவில் 5 உலர் திராட்சைகளை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலை அந்த நீரை குடித்துவிட்டு, திராட்சைகளை சாப்பிட வேண்டும். இதனால் இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும், கெட்ட கொழுப்புகள் குறையும், சிறுநீரகப் பிரச்சனைகள் குணமாகும். உடல் வெப்பமும் தணியும், பெண்கள் மாதவிடாய் பிரச்சனைக்கு அருமருந்து, மலச்சிக்கல், எலும்பு பிரச்சனைகள் தீரும் மற்றும் ஆண்கள் விறைப்புத் தன்மையை குணப்படுத்தும்.
வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும்.மறதி நோய் வராமல் காக்கும்.சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.இதயத்தைப் பாதுகாக்கும்.சருமச் சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.எனர்ஜி கொடுக்கும் சிறப்பான உணவு இது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சமன்செய்யும்.வைட்டமின் பி. கே. நிறைந்துள்ளன.புரதம், நார்ச்சத்து, கால்சியம் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தது.
ஊமத்தை செடியின் பூ, இலை, காய் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது. தேங்காய் எண்ணெயில் ஊமத்தை இலை சாற்றை காய்ச்சி புண்கள், வீக்கத்தில் தடவினால் குணமாகும். தேன், பூரான், வண்டு போன்ற ஏதாவதொன்று கடித்துவிட்டால் ஊமத்தை இலையை அரைத்து மஞ்சள் சேர்த்து பற்று போட வேண்டும்.ஊமத்தையை உட்புற உணவாக அல்லாமல் வெளிப்புறமாக எடுத்து கொள்வது நல்லது.
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை, விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும். இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி மடக்கும், பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.
மாதவிடாய் காலங்களில் போதுமான அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம்..ஓய்வின்றி வேலை செய்வது, ரத்தப்போக்கையும் வலியையும் அதிகரிக்கக்கூடும்.மாதவிடாயின்போது கார்போஹைட்ரேட், புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.சூடான நீரைக்கொண்டு வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறைக்கும்.அடிக்கடி நாப்கினை மாற்ற வேண்டும்.. அதிகபட்சமாக 4 முதல் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் கட்டாயம் மாற்ற வேண்டும்..
ஆப்பிள் -ஏ , பீட்ரூட்-பி, கேரட்- ஸி இவற்றின் கூட்டணிதான் ABC பானம்.ஆப்பிள் கேரட், பீட்ரூட் தலா ஒன்று எடுத்து தோலுடன் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்காலையில் ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு முன்னால் ' ABC பானத்தை பருக வேண்டு..இதை குடித்தால் சிறுநீரகம், கணையம் இதயம் ஆகிய முக்கிய உடல் உறுப்புகள் வலுப்பெறு.மொத்த உடல் ஆரோக்கியமும் காக்கப் படுவதோடு நோய் எதிர்ப்புச் சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.
ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்
துவரம் பருப்பில் அதிக நார்ச்சத்து இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கும் செரிமானத்திற்கும் உதவுகிறது.சமச்சீர் உணவை வழங்குகிறது.புரதங்கள், தாதுக்கள் போன்ற அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள் சமச்சீரான அளவில் உள்ளது.இதில் உள்ள பாஸ்பரஸ் வலுவான எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள மக்னீசியம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சிவப்பணுக்களை அதிகளவில் உற்பத்தி செய்கிறது.
வைட்டமின் ஏ, கால்சியம், ஃபோன்க் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆ கியவை இதில் நிறைந்துள்ளன. வயிற்றுப் புண், வாய்ப்புண், மூல நோய் வேதனைஆகியவற்றை நீக்கும். ஆரம்பநிலைச் சர்க்கரை வியாதிக்குக் கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாற்றை அடிக்கடி உட்கொண்டால் சர்க்கரை வியாதிக்குப் பக்கவிளைவும் அதிகம் ஏற்படு வதில்லை. பரம்பரையில் நீரிழிவு நோய்இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதற்கொண்டே உ ணவில் சேர்த்துக்கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.வாய்ப்புண்ணுக்குப் பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டால் வாய்ப்புண் ஆறும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளுக்குக் கோவைக்காய்நல்லது.வைட்டமின் பி 6, பி 12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன.