25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நலம் வாழ

Sep 07, 2023

வெப்பத்தைத் தணிக்கும் இளநீர்

ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறதுஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்துவாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர் வெப்பத்தைத்  தணிக்கும்உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்இளநீரை வெறும்   வயிற்றில் சாப்பிடக் கூடாதுஇளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.ஜீரண சக்தியை அதிகரிக்கும்.சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.

Sep 04, 2023

உலகில் உள்ள ஊட்டச்சத்தான உணவுகளில் ஒன்றாக இட்லியை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

தமிழர்களின் அன்றாட உணவில் முக்கியமானது இட்லி, அரிசி, உளுந்து கலந்து தயாரிக்கப்படும் இட்லி பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை தன்னுள் கொண்டிருக்கிறது. காலையிலேயே இட்லி சாப்பிடுதால் , வயிற்று கோளாறு, வயிற்றில் புண் இருந்தால் எளிதில் சீரணமாகும் இட்லியை சாப்பிடுவது நல்லது.நீராவியில் வேகவைத்து செய்யும் உணவாதலால் இட்லியில் கொழுப்புச்சத்து அதிகம் கிடையாது.இட்லி சாப்பிடுவதால் மூளைகளில் செயல்படும் செல்கள் சுறுசுறுப்படைகிறது.உடலில் நல்ல இரத்தம் உற்பத்தி அதிகரிக்க இட்லி அற்புதமான உணவு.இட்லியில் புரதச்சத்துக்கள், அமினோ அமிலங்கள், நார்ச்சத்துக்கள் நிறைவாக உள்ளன.இட்லி எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஎன்பதால் அனைவரும் உண்ணலாம்.உலகில் உள்ள ஊட்டச்சத்தான உணவுகளில் ஒன்றாக இட்லியை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

Sep 02, 2023

மணக்கும் மல்லிகைப்பூ

மணக்கும் மல்லிகைப்பூ, தலையில் சூடுவதற்கு மட்டுமல்ல,பெண்களின் கருபிரச்னைகளுக்கு  முக்கிய மருந்தாக மல்லிகைப்பூ உள்ளது.மல்லிகைப் பொடியை தேனில் சேர்த்து சாப்பிட்டால் கருப்பைவலுவாகும்.மல்லிகைப் பூவை கொதிக்க வைத்து, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக பிரச்னைகள் நீங்கும்.வயிற்று கோளாறு மற்றும் அஜீரன பிரச்னைகளுக்கு மல்லிகைப்பூ சாறு நல்லது.வயிற்றுப்புழுக்களையும் மல்லிகைப் பூ அழிக்கிறதுமல்லிகைப் பூ பொடி, சிறுநீரக கற்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.நீர் பாதையில் இருக்கும் எரிச்சலை கட்டுப்படுத்தும்நரம்பு தளர்ச்சிக்கு மல்லிகைப் பூ பொடி சிறந்த மருந்து.தாய் பால் கட்டிக்கொண்டால்மல்லிகைப்பூ பொடிையை மார்பில் போட, பால் கட்டி கரையும். மல்லிகைப்பூக்களைநீரில்போட்டுகொதிக்கவைத்துஅந்தநீரைப்பனங்கற்கண்டுடன்பருகிவந்தால்,கண்களில்ஏற்படும்சதைவளர்ச்சிகுறைந்து,படிப்படியாகபார்வைதெரியஆரம்பிக்கும்.மல்லிகைப்பூக்களை நன்றாக அரைத்து உடலில் வீக்கம் மற்றும் எரிச்சல் நமைச்சல் இருக்கும் இடங்களில் பூசி வந்தால் எளிதில் குணமடையும். நமது குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் வயிற்றின் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்கவைத்து அதனை வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும். அதைப்போலவே அஜீரணக் கோளாறினால் ஏற்படும் வயிற்றுப்புண்களுக்கும். வாய்ப்புண்களுக்கும் மல்லிகை பூ சிறந்த மருந்து.

Aug 31, 2023

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காய் ஜூஸ்

வெண்டைக்காய் ஜூஸில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடம்பில் கொலஸ்ட்ராலின் அளவுகள் அதிகரிக்கும் பொழுது இதயம் சார்ந்த நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். வெண்டைக்காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவும்.வெண்டைக்காய் ஜூஸில் நிறைந்துள்ள கால்சியம் எலும்புகளின் உருவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. வெண்டைக்காய் ஜூஸை தொடர்ந்து குடித்து வர எலும்பு சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.உடம்பில் இரத்த பற்றாக்குறை உள்ளவர்கள் அல்லது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்குவெண்டைக்காய் ஜூஸ் நல்லது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். இதன் மூலம் இரத்த சோகையிலிருந்தும் விடுபடலாம்.வெண்டைக்காய் ஜூஸில் வைட்டமின்களும் புரதங்களும் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வெண்டைக்காய் ஜூஸை தொடர்ந்து குடித்து வர நுண்கிருமிகளால் ஏற்படக்கூடிய தொற்றுகளை தவிர்க்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவும்.

Aug 28, 2023

பெருங்கடல்களில் ஆழமானது பசிபிக் பெருங்கடல்

ஐந்து பெருங்கடல்களில் பெரியது, ஆழமான பசிபிக் பெருங்கடல். இக்கடலுக்கு பெயரிட்டவர்  போர்ச்சுக்கலின் மெகல்லன். இவர் 1519ல் ஸ்பெயினில்  இருந்து ஐந்து கப்பல்களில் 280 மாலுமிகளுடன் கிழக்கு  நோக்கி பயணித்தார். ஒவ்வொரு பகுதியாக  கண்டறிந்த இவர், அமெரிக்க கண்டத்துக்கு அப்பால்  மேற்கே உள்ள கடலுக்கு 'பசிபிக் கடல்' என பெயர்  வைத்தார்.  இதன் பரப்பளவு 16.25  சதுர கி.மீ. இதன் சராசரி ஆழம் 14,040 அடி. அதிகபட்ச ஆழம் 35,797 அடி. பூமியின் மொத்த நீர் பரப்பளவில்  46% இக்கடலில் உள்ளது.

Aug 26, 2023

NO ஹை ஹீல்ஸ் NO ,NO,NO.

பெண்கள் அழகுக்காகச் செய்யும் எத்தனையோ விஷயங்கள் பல நேரத்தில் ஆபத்தில் முடிந்திருக்கிறது.ஹை ஹீல்ஸ் அணிவதால் ஏற்படும் அபாயங்கள்நாம் காலணிகள் தேர்வு செய்யும்போது அது நம் பாதத்தை காக்குமா என பார்த்துத்தான் தேர்வு செய்ய வேண்டும்அழகாகக் காட்டுமா என்பதைப் பார்த்து வாங்குவது நிச்சயம் விபரீதத்தில்தான் போய் முடியும்குதிகால் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளதுகால் தடுமாறும் நேரங்களில் தசை நாண்களில் அதிகளவு பாதிப்பு, தசை முறிவு போன்ற பிரச்னைகள் ஏற்படும்நம் உடலின் மொத்த எடையும் முதுகெலும்பு மூலமாகச் சமன் செய்யப்படும்ஹீல்ஸ்அணியும்போது குதிகால் சற்று உயரமாக இருக்கும்.தொடர்ந்து ஹீல்ஸ் அணியும்போது மூட்டு ஜவ்வில் தேய்மானம் ஏற்படலாம்.ப்ளாட் காலணிகளைத் தேர்வு செய்து உடலின் ஆரோக்கியம் காப்போம்.

Aug 25, 2023

கல்லீரலைச் சரிசெய்யும் விளாம்பழம்

விளாம்பழத்தில் உள்ள சத்துக்கள் :- விளாம்பழங்களில் 70 சதவிதம்  ஈரப்பதம், 7.3 சதவிதம் புரத சத்து, 0.6 சதவிதம் கொழுப்பு சத்து, 1.9 சதவிதம் தாது உப்புக்கள், 100 கிராம் பழத்தில் 70 மி.கி. ரிபோபிளேவின் மற்றும் 7.2 சதவிதம் சர்க்கரைச் சத்து ஆகியன அடங்கியுள்ளன.விளாம்பழம் சாப்பிடுவதால் ரத்தம் அதிகரித்து, ரத்தத்தில் உள்ள கெட்ட செல்களை அழிக்கிறது.உடலில் உண்டாகும் அஜீரண குறைபாடு, பசியின்மை, கோழை அகற்றுதல், பல் எலும்பு உறுதிபட, உடல் உள் உறுப்புகள் வலுப்பட என பல வகைகளில் விளாம்பழம் சிறப்பாக பலன் தருகிறது.விளாம்பழத்தை தினமும் சாப்பிடுவதால், மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றை போக்கும். மேலும் இதய துடிப்பை ஒரே சீராக வைத்திருக்கும்.இருமல், கோழை, காசநோய், தொண்டைப்புன், ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் விளாம்பழத்துடன் திப்பிலிப்பொடி சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.அடிக்கடி விக்கல் பிரச்னை இருப்பவர்கள், விளாம்பழம் சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே இல்லை என வருத்தப்படுபவர்கள், விளாம்பழ டானிக் சாப்பிட்டுவந்தால், உடல் எடைகூடும்.கல்லீரலைச் சரிசெய்யும் ஆற்றல். விளாம்பழத்துக்கு உண்டு. கல்லீரல் சுருக்க நோயில் இருந்து கல்லீரவைக் காக்கும் ஆற்றல் இருப்பதால், குடிநோயில் இருந்து மீண்டவர்கள் கல்லீரலில்  ஏற்பட்ட புண்கள் ஆற விளாம்பழத்தை சாப்பிடலாம்.

Aug 23, 2023

  இருமல்,சளி  வெளியேற வால் மிளகு

வால் மிளகு.காரத்தன்மை உடையது.இதை சாப்பிடும் பொழுது சிறுநீரை பெருக்கும், வாயு பிரச்சினை சரிசெய்யும், கோழையை அகற்றும் இது போன்ற பிரச்சினைகள் சரி செய்யும். பல் சம்பந்தபட்ட பிரச்சினைகள் குணமாக கறிவேப்பிலைப் பொடி, லவங்கம், கடுக்காய், நெல்லிவற்றல், வால்மிளகு சேர்த்துத் தயாரித்தபல்பொடியில்பல்துலக்கினால்குணமாகும்.உடலில் HEATஉண்டாக்கி சளியை வெளியேற்றக்கூடியது. வயதான காலத்தில் சிலருக்கு சளி சேர்ந்து மிகுந்த தொல்லையை உண்டாக்கும் அப்படிப்பட்ட நேரங்களில் வால் மிளகுத்தாள்5 சிட்டிகை எடுத்து தேனுடன் கலந்து தினமும்2 வேளை சாப்பிட்டால்" சளித்தொல்லை நீக்கி குணம் கிடைக்கும்..வால் மிளகு எண்ணெய்ப்பசையும், காரமான விறுவிறுப்பும், நறுமணமும் கொண்ட இது நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்..

Aug 22, 2023

தைராய்டு ஹார்மோன்களை சீராக வைத்துக்கொள்ள உதவும் ஒரு மூலிகை நீர்

முடி உதிர்தல், வறண்ட சருமம், வளர்ச்சிதை மாற்றம், கருவறுதல், சுழற்சி மற்றும் பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் TSH, T3, T4 போன்ற தைராய்டு ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.தைராய்டு ஹார்மோன்களை சீராக வைத்துக்கொள்ள உதவும் ஒரு மூலிகை நீரை  பற்றிய தகவல்களை ஆயுர்வேத நிபுணரான தீக்ஷா பவ்சர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தேவையான பொருட்கள்தண்ணீர் - 1 கிளாஸ்தனியா – 2 டேபிள் ஸ்பூன்கறிவேப்பிலை 9-12உலர்ந்த ரோஜா இதழ்கள் - 1 டீஸ்பூன்செய்முறைதனியா, கறிவேப்பிலை மற்றும் உலர்ந்த ரோஜாஇதழ்களை தண்ணீரில் சேர்த்து 5-7 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். இதை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மற்றொரு முறை ஒரு டீஸ்பூன் தனியா விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் இதை பாதி அளவு வற்றும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். இந்த அருமையான பானம் உங்கள் மனநிலை மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும்.நன்மைகள்தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்தும்தைராய்டு ஹார்மோன்களை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். சரும வறட்சி குறையும் முடி உதிர்வை தடுக்கலாம்.

Aug 21, 2023

இளைத்த உடல் தேற

அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாக சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும்  தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.ஆக்ஸிஜனேற்றங்கள், ஃபோலேட்  மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது.அவரைக்காய் நன்மைகள் எடை இழப்பை ஊக்குவித்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், பார்கின்சன் நோயின் அறிகுறிகளைக் குறைத்தல் மேலும் பிறப்புக் குறைபாடுகளை நிர்வகித்தல் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதலும் அடங்கும்.அவரைக்காயில் கனிசமான அளவு உடலுக்கு அவசிமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவரைக்காயில் நிறைவுற்ற கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால்  இல்லை.

1 2 ... 12 13 14 15 16 17 18 19 20 21

AD's



More News