25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நலம் வாழ

Aug 07, 2024

முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது.

ஓரிடத்திலேயே அமர்ந்து வேலை செய்பவர்கள், நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டால் போதுமானது, உடல் உழைப்பு அதிகமான வேலைகளில் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை வெள்ளை கரு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 முட்டைகள் சாப்பிடலாம், இரவு நேரத்தில் முட்டை சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் தூங்க செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும்மஞ்சள் கருவையும் சேர்த்து முட்டைகளை அதிகமாக சாப்பிடுபவர்களின் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகி, இதய நோய்கள் வரக்கூடும் .எனவே மஞ்சள் கரு சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது.

Aug 06, 2024

தேவையற்ற கொழுப்பை குறைக்க அருகம்புல் சாறு உதவுகிறது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீர் தடைபடுவது சொட்டு சொட்டாக சிறுநீர் போவது இதற்கெல்லாம் அருகம்புல் சாறு சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்துகிறது.படை, அரிப்பு, சொறி சிரங்கு, கடி போன்றவற்றை குணமாக்க உதவுகிறது. தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.

Aug 05, 2024

பக்கவாதம் வருவதை தடுக்க உதவும்  நாவல்பழம்

நாவல்பழத்தில்  வைட்டமின் ஏ, சி, சிட்ரிக் அமிலம் உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதயத்தை பாதுகாக்கிறது. பக்கவாதம் வருவதை தடுக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. சிறுநீரக கற்களைக் கரைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. மாலைக்கண் மற்றும் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.

Aug 04, 2024

வாய், தொண்டை, இரைப்பை, குடல்  புண்களை அகற்றும் கடுக்காய்

கடுக்காயில் உவர்ப்புசுவை தவிர மீதமுள்ள 5 சுவையும் இருக்கும். இதை  உண்பதன் மூலம் வாய், தொண்டை, இரைப்பை, குடல்  புண்களை அகற்றும்., மலச்சிக்கலை போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தி இரத்ததை சுத்தப்படுத்தும். பல நன்மைகள் தரும் இதை சித்த மருத்துவத்தில் அதிகம் உபயோகிப்பர். இதை வெளிச்சம் படாத இடத்தில் சேமித்து வைத்தால்  ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.

Jul 25, 2024

தலைவலி இருந்தால் மருந்தை உட்கொள்ளாமல் எதற்காக தலைவலி ஏற்பட்டது என்று கண்டறிந்து செயல்படுவோம்.

கண்கள் தொடர்ந்து அரிக்குமானால் ஜலதோஷம் வரப் போகிறது என்று அர்த்தம். தலையின் முன் பகுதியில் தலைவலி இருந்தால் அதற்கு  தூங்குவதே மருத்துவம். தலையின் மேல் பகுதியில் வலி இருந்தால் சரியாக சாப்பிடுவதும், தண்ணீர் குடிப்பதே மருத்துவம். தலையின் பின் பகுதியில் வலி இருந்தால் அதற்கு மன உளைச்சலே காரணம். ஆகையால் எதற்கெடுத்தாலும் மருந்தை உட்கொள்ளாமல் எதற்காக தலைவலி ஏற்பட்டது என்று கண்டறிந்து செயல்படுவோம்.

May 31, 2024

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த செம்பருத்தி டீ

ரத்தத்தில் சோடியம் குறைவாக பொட்டாசியம், சத்து அதிகமாக இருந்தால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் நான்கைந்து செம்பருத்தி பூவின் இதழ்களை போட்டு, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.வடிகட்டி இத்துடன் நாட்டுச் சர்க்கரை கலந்து தினமும் குடித்தால், இதில் இருக்கும் பீட்டா கரோட்டின், லைக்கோபின் போன்ற ஆன்டிஆக்சிடென்ட்டுகள், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.நார்ச்சத்து, பொட்டாசியம் நிறைந்த சிறுதானியங்களையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

May 31, 2024

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

காலை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் உங்கள் நாளை தொடங்குவதால் கிடைக்கும் நன்மைகள் .காலை தண்ணீர் குடிப்பதால் நீர்ச்சத்து அதிகரித்து சருமத்தில் சுருக்கங்கள் குறைந்து இயற்கையான பொலிவை அதிகரிக்கும். காலை தண்ணீர் குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.  காலை தண்ணீர் குடிப்பது நீங்கள் காலை உண்ணும் சிற்றுண்டியின் செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கலை தடுக்கிறது.  உடலில் நீர்ச்சத்து குறையும் போது முடி உலர்ந்து உடையக்கூடியதாக மாற்றும். எனவே காலையில் தண்ணீர் குடிப்பதால் முடியின் பொலிவும் வலிமையும் அதிகரிக்கும்.  சிறுநீரகத்தில் உள்ள அமிலத்தை நீர்த்துப்போகச் செய்ய தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க காலை தண்ணீர் குடிங்க. காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இவை உங்களை நாள் முழுவதும் ஆற்றலுடன் வைத்திருக்கும். 

May 30, 2024

பனை வெல்லம்

உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.சுவாச குழாய்,நுரையீரல்போன்ற பிரச்சினைகளுக்குநிவாரணம் அளிக்கிறது.ரத்த சோகையைத் தடுக்கும் தன்மைக்கொண்டது.ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. செரிமானம் மற்றும்  மலச்சிக்கல் பிரச்சினையை குறைக்கிறது. சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.சிறுநீர் பாதை பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.

May 28, 2024

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ...

எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரேட், கால்சியத்துடன் சேர்ந்து, சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் இருக்க உதவுகிறது.எலுமிச்சை ஜூஸில் இருக்கும் பெக்டின் எனும் நார்ச்சத்து, கல்லீரலில் செரிமான நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.இதனால் மலச்சிக்கல் வராது.  எலுமிச்சை ஜூஸ் குடிப்பது ரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. எலுமிச்சை ஜூஸில் உள்ள பெக்டின், எடை இழப்பினை ஊக்குவிக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, இதயநோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும். 

May 27, 2024

அதிக வெப்பநிலை காரணமாக உடலில் தோன்றும் வேர்வையால் வேர்க்குரு ஏற்படுகிறது

 ஏப்ரல் மாதத்திலேயே வெப்பம் உச்சத்ததில் இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். வெயிலில் நீண்ட நேரம் தங்குவதால் உடல் உஷ்ணம் வேர்க்குரு பிரச்சனை அதிகரிக்கிறது. சிறிய சிவப்பு தடிப்புகள் தோன்றுவதால் அரிப்பு மற்றும் எரியும் உணர்வு ஏற்படுகிறது. பல நேரங்களில் ஆடை அணிவதில் கூட சிரமம் ஏற்படுகிறது..வேர்க்குரு போக்கமுல்தானி மெட்டியை பயன்படுத்தி உஷ்ண தடிப்புகளை நீக்கலாம். முல்தானி மெட்டி குளிர்ச்சியாக இருக்கும். இதைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத் தழும்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம். முல்தானி மெட்டியில் ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட் செய்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பின் வேர்க்குரு இருக்கும் இடங்களில் தடவ வேண்டும். வேர்க்குரு இருக்கும் பகுதிகளில் இந்த பேஸ்ட்டை 15 நிமிங்கள் உடலில் இருந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.வேர்க்குருவை தடுக்க கோடையில் முடிந்தவரை காட்டன் துணியை மட்டுமே அணியுங்கள். இது வியர்வை உறிஞ்சும் பண்புகளைக் கொண்டுள்ளதால் உங்கள் சருமத்தை சுவாசிக்க அனுமதிக்கிறது.வேர்க்குருவை தடுக்க முடிந்தவரை உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். உடலை ஈரப்பதமூட்டும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள். எலுமிச்சை நீர், பழ வகை சார்ந்த ஜூஸ் மற்றும் சர்பத் போன்ற பானங்களின் உதவியை எடுத்துக் கொள்ளலாம். இதன் காரணமாக உடலில் இருந்து நச்சு பொருட்கள் எளிதில் அகற்றப்படுகின்றன.வெயிலில் இருந்து வெளியே வரும்போதெல்லாம் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்கவும். இதனால் உடலில் தேங்கியிருக்கும் வியர்வை நீங்கும் தொற்று மற்றும் வேர்க்குரு ஆபத்து இருக்காது.

1 2 ... 33 34 35 36 37 38 39 ... 48 49

AD's



More News