ஓமவள்ளி இலை, தூதுவளை, துளசி இலை.,3 இலைகள் மட்டுமே போதும்.. ஒரே நாளில் சுவாச கோளாறு ஓடிவிடும். சளி, காய்ச்சல் என்றால், மிளகு, இஞ்சி இந்த இரண்டை மூலிகைகளையும் தவிர்க்கக்கூடாது. மக்னீசியம், இரும்பு, வைட்டமின் K, நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்டதுதான் மிளகு.அஜீரண கோளாறுகளை மட்டுமல்லாமல், உடலை நச்சுக்களிலிருந்து காப்பாற்றி, புற்றுநோயிலிருந்தும் விடுவிக்க உதவுவதும் இந்த மிளகுதான். இந்த மிளகில் டீ போட்டு குடிப்பதால், கொழுப்புகள் குறைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அந்தவகையில், மிளகு ரசம் போலவே, 2 புதினா இலைகளை சேர்த்து மிளகு டீ தயாரித்து குடித்தால், சுவாச கோளாறுகள் தீரும்.இஞ்சியும் அதுபோலவே, தொண்டைக்கு இதமான பண்புகளை கொண்டுள்ளது. அதனால்தான், இருமலுக்கான சிரப்புகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. இது சளியை நீக்கும் பண்புகளை கொண்டிருக்கிறது.. நுரையீரலிலிருந்து சளியை தளர்த்தி வெளியேற்ற உதவுகிறது.. தொண்டையின் பின்புறத்தில் இருமலை தூண்டும் வலிமிகுந்த கூச்ச உணர்வை இஞ்சி கட்டுப்படுத்தவும் செய்யும்.ஓமவள்ளி இலையிலிருந்து சாறு எடுத்து சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம். இதனால் ஜலதோஷம், தலைவலி நீங்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையும் தீரும். அதிகப்படியான கபம் பிரச்சனை இருப்பவர்கள், ஓமவள்ளி இலையை அரைத்து நீர் கலந்து கொதிக்க வைத்து, ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால் நிவாரணம் கிடைக்கும். ஓமவள்ளி இலையை தண்ணீரில் சேர்த்து சுடச்சுட ஆவி பிடித்தாலும் தீர்வு கிடைக்கும். அல்லது இந்த ஓமவள்ளி இலையை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, சிறிது பனகற்கண்டு சேர்த்து குடித்து வந்தாலும் நன்மை பயக்கும். இந்த இலையின் சாறு எடுத்து, சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சளி, இருமல் பிரச்சனை தீரும்.. மார்பு சளி கட்டுக்குள் வரும். தலைவலிக்கு இலையைக் கசக்கித் தலையில் தடவலாம்.
தரமான உறக்கம்யோகா மற்றும் தியானம்ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுமகிழ்ந்திருக்கவும், சிரிக்கவும் பழகுங்கள்மூச்சுப்பயிற்சிகள்ஹாபிகளுடன் மகிழ்ந்திருங்கள்நல்ல உறவுகளை வளர்த்தெடுத்துக் கொள்ளுங்கள்புகை தவிருங்கள்
வெயிலைத் தவிர்க்கவும், கோடைக் காலத்தில் உடலைக் குளிரச் செய்யவும் ராகி கூழ் உங்களுக்கு உதவும்கோடை காலம் வந்துவிட்டது. வெயிலின் உக்கிரமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே வர யோசிக்கிறார்கள். மோசமான நிலையில் வெளியே சென்றவர்கள் வெயிலின் வெப்பத்தில் இருந்து விடுபட குளிர் பானங்கள், பழச்சாறுகள், தேங்காய் தண்ணீர் போன்றவற்றை நாடுகின்றனர்.பழச்சாறுகள் மற்றும் தேங்காய் தண்ணீர் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அவற்றை தினமும் உட்கொள்ள முடியாது. அப்படியானால், வெயிலில் இருந்து தப்பிக்க ராகி கூழ் தீர்வு.தேவையான பொருட்கள்· ராகி மாவு - 4 டீஸ்பூன்· சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்· மோர் - 1 கப்· தண்ணீர் - 2 முதல் 3 கப்· உப்பு - தேவையான அளவுராகி கூழ் செய்முறை·முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் ராகி மாவை சேர்க்கவும். பிறகு 1/2 கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலக்கவும்.· இப்போது ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.· தண்ணீர் சிறிது கொதித்ததும், ராகி மாவு கலவையை ஊற்றவும்.· இப்போது தீயை குறைத்து, ராகி கூழை ஒரு கரண்டியால் கிளறவும்.· இதையடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் சீரகப் பொடி சேர்க்கவும்.· ராகி கூழ் சிறிது ஆறிய பிறகு அதனுடன் தயிர் அல்லது மோர் சேர்த்து கலந்து குடிப்பது மிகவும் நல்லது.· இந்த கூழை மேலும் சுவையாக மாற்ற பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து கொள்ளலாம்.ராகி கூழை காலையில் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இதில் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் மற்றும் அயோடின் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.இதனை குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். இதனை கோடையில் குடிப்பதால் உடலில் உள்ள சூடு குறையும்.ராகி கூழில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதை குடித்தால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும் என்பது ஐதீகம். ராகி கூழை தினமும் குடித்து வர இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். ராகி கூழை முதல் நாள் இரவு தயாரித்து மறுநாள் மோர் அல்லது தயிர் கலந்து குடித்தால் மிகவும் ருசியாக இருக்கும் உடலுக்கும் நல்லது.
எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும் புற்றுநோய் ஏற்படாது கண் பார்வை திறன் அதிகரிக்கும் வாயில் துர்நாற்றம்| ஏற்படாது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்.
கோவக்காயில்தியாமைன் என்ற ஊட்டச்சத்து, கார்போஹைட்ரேட்களை குளுக்கோஸாக மாற்றுகிறது. அது உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது உடல் வளர்சிதை மாற்றத்தை முறைப்படுத்த உதவுகிறது. கோவக்காயில் உள்ள தியாமைன் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் புகுந்து அதிக சக்தியை வழங்குகிறது. இந்த ஊட்டச்சத்து ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் உதவுகிறது. இது மரபணு கோளாறுகளையும் சரிசெய்கிறது. கோவக்காய்விதை, பழம் மற்றும் இலைகள் என அனைத்தையும் சேர்த்து அரைத்து சொறி சிரங்கு மற்றும் தொழுநோய்க்கு உபயோகிக்கலாம். இந்த நோய்களுக்கு இது இயற்கை மருத்துவம். பல்வேறு மருந்துகள் இருக்கும்போதும் இதுவும் உதவுகிறது. இது பாக்டீரியாக தொற்றுக்களுக்கு ஆன்டிபயோடிக்காகவும் பயன்படுகிறது
மூளை வளர்ச்சி மற்றும் ஞபாக சக்தியை அதிகரிக்கிறது.ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.சரும பிரச்சினைகளை நீக்கி முகப்பொலிவுக்கு உதவுகிறது. அல்சர் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.
கடல் பாசி எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கச் செய்யும். எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து தேய்மானத்தைக் குறைக்கும். கடல் பாசியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைபர் தைராய்டு ஆகிய இரண்டுமே கட்டுக்குள் இருக்கும். கடல் பாசியில் நார்ச்சத்துக்கள் மிக அதிகம்சிலவகைகடற்பாசிகளை கொண்டு புற்றுநோய், சர்க்கரை நோய், காசநோய் மூட்டு வலி இரும்பு சத்து குறைபாடு உள்ளவர். மாதவிடாய் சார்ந்த நோய்கள் மற்றும் வெள்ளைபடுதல் போன்றவைகளை தடுக்கப்படும் கடல் பாசியானது அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறதுகேல்பஸ் போன்ற கடற்பாசி இனங்கள்,மீன்வளம் மற்றும் தேவையான நாற்றாங்கால் வாழ்விடத்தை வழங்குகின்றன. இதனால் உணவு மூலங்களை பாதுகாக்கின்றன. மிதக்கும் பாசிகள் போன்ற பிற இனங்கள் கரியமிலத்தைக் (கார்பனைச்). கைப்பற்றுவதில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.
காரசாரமான கறிகளிலும், உணவுகளிலும் ருசி மற்றும் சுவையை அதிகரிக்க பிரியாணி இலையை (பிரிஞ்சி இலை)பலரும் சேர்க்கிறார்கள் மசாலாப் பொருட்களின் பொக்கிஷமாக பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய இருந்துவருசிறது. இதுவே இந்திய உணவுகள் நறுமணமாக மற்றும் சுவையாக இருக்க காரணம் அப்படிப்பட்ட நறுமண மசாலா பொருட்களில் ஒன்று தான் பிரியாணி இலை தனித்துவமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் நல்ல நறுமணத்திற்காகஇந்தியசமையலில்பரவலாகப் பயன்படுத்தப்படுகிறதுசாம்பிராணி புகை போடும் பொழுது பிரிஞ்சி இலையையும் போட்டு புகை போட எதிர்மறை ஆற்றல் போய் விடும் .
இடுப்பு வலி, மூட்டு வலி, வாயு, தைராய்டு, சர்க்கரை, உடல்'சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல், கைகால் வலி, வயிற்று கோளாறு சரிசெய்யும்.கசாயம்; சீரகம்., கொத்துமல்லி விதை... சோம்பு... மிளகு...பட்டை. கிராம்பு... ஓமம் தலா அரை ஸ்பூன் வீதம் எடுத்து இரவே 1 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து... மூடி வைத்து... காலையில் வெறும் வயிற்றில்-5 நாளைக்கு குடித்து வந்தால் மேலே சொன்ன10 நோய்களும் ஆயுளுக்கும் வரவே வராது...வாரம் இரண்டுமுறை இதை குடிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்...
சிறுநீரக கற்கள் என்பது கால்சியம் அல்லது மற்ற மினரல்கள் சிறுநீரக பாதையில் கற்களாக உருப்பெறுவது. உணவில் குறிப்பிட்ட அளவைவிட உப்பு அதிகரித்தால் அது சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்துகிறது. கோவக்காயில் உள்ள கால்சியம் கீரை போன்ற உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது, சிறுநீரக கற்களை போக்க உதவுகிறது.தர்ப்பூசணியைப்போல், கரையக்கூடிய பி2 வைட்டமின் சத்து இதில் உள்ளது. இந்த வைட்டமின் உங்கள் உடலில் ஆற்றல் அளவை பராமரிக்க உதவுகிறது. இதில் ஊட்டச்சத்துக்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் நரம்பு மண்டலம் வலுவடைய உதவுகிறது. கோவக்காய் வலிப்பு, அல்சைமர், சிவிரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. காப்பர் டனல் சின்ரோம் என்ற கோளாறை வைட்டமின் பி6வுடன் சேர்ந்து சரிசெய்ய கோவக்காய் உதவுகிறது.