25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


நலம் வாழ

Dec 14, 2023

குளிர்கால தொற்று நோய்களை குறைக்கும்  மூலிகைகள்

குளிர்காலம் என்றால் குளிர்ச்சியுடன் சளி பிடிக்கும் ஆபத்து அதிகரிக்கிறது. மாரடைப்பு மற்றும் நீரிழிவு ஆகியவை குளிர்காலத்தில் அதிகரிக்கும்.குளிர்காலத்தில், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உள்ளன. எட்டு முதல் எண்பது வரையிலான அனைவரும் அடிக்கடி நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மூலிகைகளை நம்பினால் நோய் பயம் இருக்காது.துளசி இலைகள் நீண்ட காலமாக உணவாக அறியப்படுகிறது. இதன் சாறு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றிலிருந்து விடுபடுங்கள். இஞ்சியில் ஜிஞ்சரால் என்ற சிறப்பு மூலப்பொருள் உள்ளது. இது வாந்தி பிரச்சனையை அகற்ற உதவுகிறது. மேலும், உணவு விரைவாக ஜீரணமாகும். வேப்ப இலைகளில் பல கலவைகள் காணப்படுகின்றன. வேப்ப இலையின் பண்புகள் மூட்டுவலி பிரச்சனையை நீக்குகிறது. மேலும், வேப்ப இலைகளின் சிறப்புப் பண்பு ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். வேப்ப இலைகள் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் தொற்றுநோயையும் குறைக்கின்றன மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கிறது. அஸ்வகந்தா அந்த ஹார்மோனின் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. இது கவலைப்படும் போக்கையும் குறைக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, அஸ்வகந்தா தூக்கமின்மையை குணப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்ஆகியவை திரிபலா என்று அழைக்கப்படுகின்றன. திரிபலா செரிமானத்திற்கு சிறந்தது. மலச்சிக்கல் பிரச்சனையால் பலர் அவதிப்படுகின்றனர். திரிபலா மலச்சிக்கலைக் குறைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது.

Dec 11, 2023

கல்லீரலைப் பாதுகாக்க......

கல்லீரல்.எப்போதும் முழு செயல் திறனுடன் இயங்கும் விதத்தில் பாதுகாத்து வந்தாலே அநேக நோய் பாதிப்பில் இருந்து நம்மை பாது காத்திட முடியும்.கல்லீரல் பாதிப்பால் வரும் நோய்களில் முக்கியமானது மஞ்சட் காமாலை. கல்லீரலை எளிதில் பாதிப்படைய செய்யும் மது போன்ற போதை பழக்கங்களை தவிர்த்தல். மற்றும் உணவில் காரம். உப்பு அளவுடன் சேர்த்துக் கொள்வது நலம்.காலை வேளையில் மிதமான சூட்டுடன் உள்ள நீரில்1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது. கல்லீரல் புத்துணர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. கல்லீரலில் சேதமுற்ற செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்க மிகவும் துணை புரியும்.நன்மை செய்யும் உணவுகளைச் சாப்பிட வேண்டும்; கல்லீரலைப் பாதிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். கல்லீரை பாதுகாக்கும் உணவகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்:திராட்சை, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட் ,விஷ்ணு கிரந்தி போன்றவை கல்லீரலைப் பாதுகாக்க உதவுகிறதாம்

Dec 08, 2023

தேற்றான்கொட்டை

`தேற்றான்கொட்டையைத் தேய்க்க கலங்கிய நீர் தெளிவதைப்போல தலைவி, தலைவனின் அரவணைப்பால் தெளிவு பெற்றாள்' என்பது அந்த பாடல்வரியின் பொருள். தேற்றான் மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை நிற இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்ட குறு மரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.தேற்றா மரத்தின் விதை தேற்றான் கொட்டை என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த தேற்றான் கொட்டையை கலங்கிய நிலையில் உள்ள நீரில் சிறிது நேரம் ஊறவைத்தால் அந்த நீர் தெளிவாக மாறும்.வீட்டிலுள்ள கலங்கிய நீரானாலும் சரி. நிலக்கரிச் சுரங்கத்தில் கரிப்பொடி கலந்த நீரானாலும் சரி, நீரினைத்தெளியவைக்கும் பண்புடைய கொட்டை இதுவாகும்.இதன் பழம் சளியை போக்கும். வயிற்றுப்போக்கை சரி செய்யும். காயங்களை குணமாக்கும். சிறுநீரக பிரச்சனைகள் சரி செய்யும் மற்றும் கண்ணில் உள்ள கோளாறுகளை நீக்கும்.

Dec 07, 2023

"எப்பொழுதெல்லாம் கைகளை கழுவ வேண்டும்?

காலை எழுந்ததும் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தலாம்.தர்பூசணி,உடலைநீரேற்றமாகவைத்திருக்கும்.ஊறவைத்த சியா விதைகள் உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவலாம்.சமையலறையில் நுழையும்முன்பு,கழிவறை பயன்படுத்திய பின்பு,புகைபிடித்த பின்பு,தும்மல் மற்றும் இருமல்வந்த பின்பு - உணவு சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும்,தலை அல்லது மூக்கில் கை வைத்த பின்பு கைகளை கழுவ  வேண்டும்.

Dec 05, 2023

வெந்தயக் களி

நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மற்றும் சீரண சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இவை கொழுப்பைக் குறைப்பதோடு பித்தம் மற்றும் கபம் அதிகமாக உள்ள நபர்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் வலியை போக்கவும் வெந்தயம் உதவுகிறது.இது உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். பருவம் எய்திய பெண்களுக்கு உடல் சூடு காரணமாக வெள்ளைப்படுதல் உண்டாகி உடல் மெலிந்துபோவார்கள். பெண்கள் பருவமடைந்த புதிதில் வெப்பத்தை குறைத்து உடல் மெலிந்து போவதை தடுக்கிறது. அப்படியுள்ளவர்கள் வாரம் இரு முறை வெந்தயக்களி தயார் செய்து சாப்பிட கொடுக்கவேண்டும்.இது உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கவும். எலும்புகள் நன்கு வளரச் செய்யவும் உதவும்.வாய் புண் இருந்தால் விரைவில் குணமடையும். சர்க்கரை நோயை கட்டுபடுத்த உதவுகிறது. இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

Dec 04, 2023

குழந்தைகளுக்கு நல்ல சக்தியை அளிக்கும்.பொட்டுகடலை* 

.பொட்டுகடலைஇந்தியாவில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி ஆகும். இது பொட்டுக்கடலை பொரிகடலை போன்ற பல்வேறு பெயர்களில் இந்தியா முழுவதும் அறியப்படுகிறது மற்ற அனைத்து பருப்பு வகைகளைப் போலவே. இதில் புரதம். நார்ச்சத்து தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது. மேலும் இந்த பருப்பில் கலோரிகள் மிகக் குறைவு: மற்றும் இரும்புச் சத்து அதிகம்.பொட்டுகடலை வளரும் குழந்தைகளுக்கு நல்ல சக்தியை அளிக்கிறது. இது அற்புதமான ஆரோக்கியமான சிறந்த தானியங்களில் ஒன்றாகும். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருவருக்கும் இது ஒரு நல்ல சிற்றுண்டி ஆகும்..பொட்டுக்கடலையில் ஏராளமான நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் உள்ளன. இவை சீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் உங்களை நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கும். இது செரிமான பிரச்சினைகளை களைவது, உடல் எடையை குறைக்க மற்றும் பல நோய்களை விரட்ட என நிறைய நன்மைகளை தருகிறது100 கிராம் வறுத்த பொட்டுக்கடலையில் 18.64 கி புரோட்டீன், 16.8 கி நார்ச்சத்துக்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. எனவே எடை இழப்புக்காக வறுத்த பொட்டுக்கடலையை உட்கொள்ளுங்கள்.

Dec 03, 2023

மூங்கில் குருத்து

முளைகட்டிய பயறு வகைகள் கொள்ளு, காறாமணி, முழுக்கடலை, பயத்தம் பயறு இவற்றுடன் மூங்கில் குருத்தும் சேர்த்து சோம்பு பட்டை லங்கம் இஞ்சி பூண்டு தக்காளி வெங்காயம் சேர்த்து குருமா செய்து சாப்பிட பெண்கள் கருப்பை பலப்படும் .மூட்டுத்தசைகள், ஐவ்வு பசை உற்பத்தி ஆகும். எலும்பு வலுவாகும். குடலிலுள்ள மண் கசடுகள் மலத்தில் வெளியேறும்.இது இதய தமனிகளில் இருந்து கொழுப்புகளை எளிதாக்க உதவுகிறது. உடல் முழுவதும் ரத்தத்தின் இயக்கம் எளிதாக்க உதவுகிறது. இதில் நிறைய விட்டமின்களும் தாதுக்களும் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது. மூங்கில் குருத்து வயிற்றுப்போக்குக்கு நல்லது.

Nov 30, 2023

பப்பாளி பழ விதைகள்

பப்பாளி பழத்தில் இருப்பதைப்போலவேஅதன்விதையிலும்நிறையமருத்துவகுணமும்ஊட்டச்சத்துகளும் இருக்கிறது.பப்பாளி விதைகளில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. அதனால் நமது செரிமாண மண்டலத்தைத் துரிதப்படுத்தி, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.நமது உடல் எடையை மேலும் அதிகரிக்கச் செய்யாமல் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்கிறது..பப்பாளி விதைகளில் மிக அதிக அளவில் ஆன்டிஆக்சிடண்ட்டுகள் மற்றும் பரிலபினைல்கள் இருக்கின்றன. அதனால் இவை தொற்றுக்களை ஏற்படுத்தும் கிருமிகளைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. சளி, காய்ச்சல், இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான தொற்றுக்களைத் தாக்கி அழிக்கக் கூடியவையாக இருக்கின்றன.குடல் புண்களை ஆற்றுகின்ற சக்தி பப்பாளி விதைக்கு உண்டு. உடல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்களுக்கு அதிலும் அல்சர் என்னும் வயிற்றுப்புண், உணவுக்குழாய் தொற்று இருப்பவர்கள் கட்டாயம் பப்பாளி விதைகளை பச்சையாகவோ அல்லது நன்கு உலர வைத்தோ சாப்பிட்டு வரலாம்.பப்பாளி விதைகள் மாதவிடாய் காலங்களில் ஏற்படுகின்ற கடுமையாக வயிற்று வலி மற்றும் தொடை, இடுப்பு வலிகளைப் போக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. உடலுக்குப் போதிய வலிமையைக் கொடுக்கிறது. பப்பாளி விதைகளில் ஃபேட்டி ஆசிட் மிக அதிக அளவில் இருப்பதால், இதயக் குழாய், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் கரைக்கின்ற ஆற்றலைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன்பாக பப்பாளி விதைகளைச் சாப்பிடுவது இன்னும் கூடுதல் பலன்களைத் தரும்.ஸ்மூத்தி, மில்க் ஷேக், ஜூஸ் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம். ஒன்றிரண்டாக அரைத்து ஃபுரூட் சாலட்டுகளில் சேர்த்து சாப்பிடலாம்.பப்பாளி விதையோடு தேன் அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிடுங்கள்.பப்பாளி விதைகளை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொண்டு அதை சூப், ரசம் போன்றவற்றில் தூவிக் கொள்ளலாம்.காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியுடன் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம்.நல்லது என்பதால் அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது. அளவோடு சாப்பிட வேண்டும்.

Nov 28, 2023

குறைந்த கொழுப்பு உள்ள வெண் பூசணி

அன்றாடம் உணவில் பயன்படுத்தப்படும் உணவுகளில் வெண்பூசணிக்காயும்ஒன்று.வெண்பூசணியில்ஏராளமான நன்மைகள் உள்ளது. வெண் பூசணி உணவில் எடுத்துக் கொள்வது கணையத்தின் செயல்பாடுகளை எளிதாக்குகிறது.இதில் துத்தநாகம் உள்ளது, இதை தைராய்டு உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.வெண் பூசணி வறண்ட சருமத்திற்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.வெண்பூசணி சாப்பிடுவதால் சிறுநீர் மூலம் நச்சுகள் வெளியேறுகிறது.இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அறிவு வளர்ச்சிக்கு பல மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.குறைந்த கொழுப்பு கொண்ட வெண்பூசணி உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்காது.பூசணி சாறு அடிக்கடி பருகுவது வயிற்றுப் புண்களுக்கு நன்மை பயக்கும்.

Nov 27, 2023

உடலில் இயற்கையான முறையில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க ..

இரும்பு, கால்சியம், நார்ச்சத்து நிறைந்த மாதுளை ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.இரும்பு சத்துக்களை அதிகரிக்கும் தன்மை கொண்ட பெர்ரி பழங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை உடலிலுள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவை வைட்டமின் சி சத்துக்களின் ஆதாரமாக உள்ளது. இவை இரும்பு சத்துக்கள் உறிஞ்சுவதை உறுதி செய்கிறது.இரும்பு சத்து, வைட்டமின் சி நிறைந்திருக்கும் ஆப்பிள் பழங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதுடன், ரத்தத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.பச்சை நிற காய்கறியாக இருந்து வரும் ப்ரோக்கோலி இரும்பு சத்து, வைட்டமின் சி, போலேட் நிறைந்து காணப்படுவதுடன் ஹீமோகுளோபின் உற்பத்தியைஅதிகரிக்கிறது.இரும்பு சத்து, போலிக் அமிலம், பொட்டாசியம், நார்சத்து நிறைந்த காணப்படும் பீட்ரூட் ரத்த அளவை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.இரும்பு சத்துக்களின் சிறந்த ஆதாரமாக இருந்து வரும் பசலை கீரை, ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

1 2 ... 36 37 38 39 40 41 42 43 44 45

AD's



More News