25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுக் குறிப்பு

Aug 27, 2024

தயிர் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்

தலைமுடி வறண்டு போயிருந்தால், தயிர் மற்றும் தேனில் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். தயிரில் புரோட்டீன் மற்றும் லாக்டிக் அமிலம் இருப்பதால் இது முடிக்கு ஊட்டமளிக்கிறது. தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் மாய்ஸ்சரைசிங் பண்புகள் இருப்பதால் முடியை பட்டுப் போல் ஆக்குகிறது. முதலில் உங்கள் தலைமுடியை சிக்கு இல்லாமல் சீவவும்.ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும். பின், இந்த கலவையை நன்கு கலக்க வேண்டும்.இப்போது இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.பின்னர் அதை தலைமுடியில் 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதற்குப் பிறகு, ஷாம்பூவுடன் முடியை சுத்தம் செய்யவும்.இது உங்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்தை அளிக்கும்.

Aug 23, 2024

சருமத்தை சுத்தம் செய்து, பருக்களைகுணப்படுத்துகிறது, கோதுமைப்புல் பொடி

சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதன் மூலம், இது சிறந்த சரும சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. நமது உடலுக்குள்ளும் ஊடுருவி, இளமையைப் பேணும் பணிகளையும் செய்வதால், சருமத்தின் பொலிவையும், மென்மையையும் அதிகரிக்கிறது.நச்சு நீக்கும் தன்மை கொண்டிருப்பதால், கோதுமைப்புல் பொடியானது பருக்கள் உண்டாவதைத் தடுத்து, மென்மையான வழவழப்பான சருமத்தினை அளிக்கிறது. கோதுமைப்புல் பொடியுடன் சிறிது பால் சேர்த்து பசை போலாக்கி, சருமத்தின் மீது தடவிக் கொள்வதால், பருக்கள், வெடிப்புகள், கரும்புள்ளிகள், சரும நிறம் மங்குதல் ஆகியவை மறையும்.

Aug 21, 2024

முதுமை, நரைமுடி, பொடுகுமற்றும்தலைமுடிப்பிரச்சனைகள் தடுக்கும் கோதுமைப்புல் பொடி

ஃப்ரீ ராடிகல்களினால் ஏற்படும் பாதிப்புகளை இது தடுக்கிறது. முதிர்ந்த செல்களைப் புத்துயிரூட்டும் தன்மையைக் கொண்டிருப்பதால், முதுமையைத் தடுக்கும் ஆற்றல் பெற்று, இளமையைப் பேண உதவுகிறது. சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தின் நெகிழும் தன்மையை நிலை நிறுத்த உதவுகிறது. இதன் மூலம் சருமத்தின் இளமைப் பொலிவை மீட்டுத் தருகிறது.நரைத்துப் போன தலைமுடியின் நிறத்தை மாற்றி, பழைய படி கருமையாக்கும் தன்மை கோதுமைப்புல் பொடிக்கு உண்டு. இந்த பவுடரைத் தலை முடியில் தடவிக் கொண்டு, குளித்து வந்தால், நரைமுடிகள் கருமையாகும்கோதுமைப்புல் பொடியைத் தலையில் தடவிக் கொண்டு குளித்து வந்தால், பொடுகு, வறட்சி மற்றும் உச்சந்தலை அரிப்பு போன்ற தலை சார்ந்த பிரச்சனைகள் தீரும். ஆகவே வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்புவுடன் கோதுமைப்புல் பொடியைக் கலந்து, தலையில் தடவிக் கொண்டு குளித்துவரலாம். இதனால், ஆரோக்கியமற்ற தலைமுடியை நல்ல ஆரோக்கியத்துடன் திகழும்.

Aug 15, 2024

முகத்தில் உள்ள கருப்பு திட்டுக்கள் நீங்க 3 டிப்ஸ்

சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்களில் கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இது ஒரு நோய் அல்ல,  சிறிய மச்சம் போல் ஆரம்பித்து முகத்தில் வேகமாக பரவிவிடும்.பொதுவாக 20-35 வயதுள்ளவர்களுக்கு வரக்கூடிய தற்காலிகப் பிரச்சனையாக இருந்தாலும், சிலருக்கு மட்டும் மீண்டும் மீண்டும் வரலாம்.5-7 பாதாமை நீரில் ஊறவைத்து, தோல் நீக்கி, மைய அரைத்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு நீரில் முகத்தை கழுவவேண்டும், தேனும், பாதாமும் சேர்ந்த கலவை வெகு சீக்கிரத்தில் மங்கு மறைந்து விடும்.ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து சம அளவு எடுத்து நீர்விட்டு மைய அரைத்து, முகத்தில் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசை போல் தடவவும், காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும், சில முறை இதை செய்து வந்தால், கருப்பு திட்டுகள் மறையும்.1 ஸ்பூன் தக்காளி சாறு, 1 ஸ்பூன் தயிர், 2 ஸ்பூன் ஓட்ஸ், இவற்றை பேஸ்ட் போல் செய்து , சருமத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் மீது நன்றாக தேய்த்து  காய்ந்தபின்  கழுவவும், வாரத்தில் 2-3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

Aug 09, 2024

பால்,ரோஜாப்பூ இதழ் பேஸ்ட்

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்து 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து அதில் ரோஜாப்பூ இதழ்களை அரைத்து பேஸ்ட் செய்து கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு காய வைத்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பளபளப்பு கிடைக்கும்

Aug 08, 2024

கண்ணில் உள்ள கருவளையம் மறைய உருளைக்கிழங்கு பேஸ்ட்

* உருளைக்கிழங்கை தோல் சீவிய பின் தேங்காய் போல துருவி கண்களை மூடி அதில் வைத்து மேல் ஒரு துணியுடன் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.*உருளைக்கிழங்கை மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்டாக கண்களின் மேலும், கீழும் அப்ளை செய்யலாம்.*உருளைக்கிழங்கு சாறை இரவில் தூங்குவதற்கு முன் கண்களின் மேலும். கீழும் தடவிவிட்டு படுக்கலாம்.*உருளைகிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மீது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கலாம்.

Aug 07, 2024

பருக்கள் நீங்கி முகம் பளபளவென்று இருக்க...

.தினந்தோறும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும், பருக்கள் வராமல் தடுக்கும்.சந்தன பௌடருடன் சிறிது பன்னீர் சேர்த்து கலந்து பருவின்  மேல் வைத்து உலர்ந்தவுடன் கழுவி வாருங்கள்.சில நாட்களிலேயே பரு மறைந்துவிடும்.இரவில் நன்றாகத் தூங்க வேண்டும் சரியாகத் தூங்காவிட்டால் முகப்பரு வரும் வாய்ப்பு அதிகம்.கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் தவிர்ப்பது, பருக்கள் வராமல் தடுக்கும். தினசரி சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெயைக் குறைத்தாலே பருக்களும் குறைந்துவிடும்.ஜாதிக்காயை உரசி பருக்கள் மேல்தொடர்ந்து நான்கு நாட்கள் தடவி வந்தால் கரும்புள்ளிகள், பருக்கள் நீங்கி முகம் பளபளவென்று ஆகிவிடும்.

Jul 31, 2024

வெள்ளை முடி கருப்பாக மாற ......

கருஞ்சீரகம் 100 gm, மருதாணி பச்சை இலைகள் இரண்டு கைப்பிடி, இந்த இரண்டையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் திக்கான கரைத்த புளி 20 gm அளவு சேர்த்து நல்ல நைசாக அரைத்துக் கொள்ளவும். முடியை நல்ல ஷாம்பு போட்டு முதல் நாள் தலையை எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் அலசி காய விட்டு  மறுநாள் அரைத்த விழுதை  தலையில் தடவி ஒரு மணி  நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தலையில் ஊறவிட்டு அதன் பிறகு தலையை எந்த ஒரு ஷாம்பும் இல்லாமல் வெறும் தண்ணீரில் நன்றாக  தலையை அலசி முடியை நல்ல வெயிலில் காய விட்டால் முடி நல்ல கருப்பாகி விடும் இப்படி வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இப்படி செய்தால்  முடி மூன்றே மாதத்தில் நல்ல  கருப்பாகி விடும். ஆனாலும் தொடர்ந்து செய்யவேண்டும்.

Jul 24, 2024

இட்லி மாவு  ஃபேஷியல்

முகத்துக்கு இட்லி மாவு கூட கொஞ்சம் தயிர் சேர்த்து, பூசி மெதுவா மசாஜ் செஞ்சி குளிர்ந்த தண்ணியில் முகம் கழுவ. ஃபேஷியல் பண்ணிய மாதிரி  பளிச்சென இருக்கும்.கரும்புள்ளிகள்,வெள்ளைபுள்ளிகள் மறையும்.இட்லி மாவில், அரிசி, உளுந்து, வெந்தயம் இருக்கு இது மூன்றுமே முகத்துக்கு நல்லது. இட்லி மாவில் உள்ள ஃபோலிக் அமிலம், தியாமின், போன்ற சத்துக்கள் அழுக்கை நீக்கி உடனடி பொலிவை கொடுக்கும்.

Jul 19, 2024

உடல் எடையை குறைக்க சியா விதைகள் .

சியா  விதைகளில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளன. அவற்றில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன.  உடல் எடை இழப்புக்கு இது உதவுகிறது .சியா விதைகள் உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகின்றன.. இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். சியா விதைகளில் உள்ள அமினோ அமிலங்கள் மீண்டும் பசியைக் குறைக்கும் பலர் உடற்பயிற்சி செய்த பிறகு ஆற்றலை அதிகரிக்க தண்ணீரில் ஊறவைத்த சியா விதைகளை குடிக்கலாம். அவற்றில் உள்ள மெக்னீசியம் மற்றும் டிரிப்டோபான் அமிலமும் நீங்கள் தூங்க உதவுகிறது.இந்த விதைகளை சாப்பிடுவதால் உடலின் தண்ணீர் தாகம் அதிகரிக்கிறது. சியா விதைகளை அதிகமாக சாப்பிடுவது இரத்த சர்க்கரையை குறைக்கும். சியா விதைகளை காலை அல்லது மாலையில் சிற்றுண்டியாக பயன்படுத்தலாம்.இந்த விதைகளை கோடையில். குளிர்ச்சியாக இருக்க உங்களுக்கு பிடித்த பழங்களான ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை மெல்லியதாக நறுக்கவும். இப்போது பழங்கள், பால், தயிர், பனிக்கட்டி, ஒரு டீஸ்பூன் சியா விதைகளை ஒரு பிளெண்டரில் சேர்த்து சிற்றுண்டியாகபயன்படுத்தலாம் .சியா விதைகளை சாலட்களிலும் பயன்படுத்த, சாலட் சத்தானதாகவும் சுவை நிறைந்ததாகவும் இருக்கும். சாலட்டில் எலுமிச்சை சாறு ,சிறிது ஆலிவ் ஆயில், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் சியா விதைகளை சேர்த்து பயன்படுத்தலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 21 22

AD's



More News