25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


அழகுக் குறிப்பு

Aug 18, 2025

தலை முடி கொட்டுவதை நிறுத்த....

3 ஸ்பூன் தயிரில் 1/4 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவி விடுங்கள். இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் சருமம் மென்மையாக இருக்கும் .வாழைப்பழம் பாதாம் பிசின் கலவையில்  நீங்கள் என்ன எண்ணெய் தலைக்கு பயன்படுத்துவீர்களோ அதை இரண்டு ஸ்பூன்  ஊற்றிக் கொண்டு. இதை மறுபடியும் ஒரு முறை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் .இதை நம் தலையில் வேர்க்கால்களில் படும் படி தடவி20 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் எப்போதும் போல ஷாம்பூ போட்டு நன்றாக சாதாரண நீரில் குளித்து விட வேண்டும். இதைவாரத்திற்கு இரண்டு முறை செய்தால் எப்படி வேகமாக கொட்டிய முடியும் தடைபடும்.

Aug 13, 2025

முகம் பளிச்சென மாற கடுக்காய் பொடி .

முகத்தில் இயற்கையான பொலிவை இழப்பதற்கான காரணங்கள் பலவாக இருக்கின்றன. தூய்மையில்லாத சுற்றுச்சூழல், அதிக சூரிய வெப்பம், குறைந்த தண்ணீர் உட்கொள்ளல், மற்றும் நன்றாக தூங்காமை போன்றவை முக சருமத்தில் கருமை ஏற்படச் செய்து பொலிவை குறைக்கும். இதனால் முதுமை தோற்றம் கூட வெளிப்படும். இந்தப் பிரச்சனையை சரி செய்ய, வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு எளிய ஃபேஸ் பேக் உள்ளது. அதில் முக்கியமான பொருள் கடுக்காய்.மருந்தாகவே பரவலாக பயன்படுத்தப்படும் கடுக்காயை, முக அழகுக்காகவும் பயன்படுத்தலாம் என்பது சற்று ஆச்சர்யமாக இருக்கலாம். கடுக்காய் பொடி, முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைத்து, கண்கள் மற்றும் வாயை சுற்றியுள்ள கருமையைக் குறைக்கும் திறன் கொண்டது. செய்முறை:மூன்று ஸ்பூன் கடுக்காய் பொடி, இரண்டு விட்டமின் E எண்ணெய் கேப்சூல்கள், அரை ஸ்பூன் தேன் மற்றும் தேவையான அளவு பன்னீர்—all சேர்த்து பேஸ்ட் செய்யவும். இதை முகம் மற்றும் கழுத்தில் கீழிருந்து மேலாக தடவி, 20 நிமிடங்கள் வைத்துவிட்டு மெதுவாக தேய்த்து கழுவ வேண்டும்.மேலும், நேரத்தை மிச்சப்படுத்த கடுக்காய் ஹேர் பேக் தயாரிக்கவும்: கடுக்காய், ஆம்லா, கருவேப்பிலை பொடிகள் ஒவ்வொன்றாக 1–2 ஸ்பூன் வீதம் எடுத்து தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து இரவில் ஊறவைத்து, காலையில் தலைமுடியில் தேய்க்கவும். வாரத்தில் ஒருமுறை செய்தால் முடி வளர்ச்சியும், பொடுகும் கட்டுப்படும்.

Aug 06, 2025

இளநரை போக....

அருகம்புல்லை சின்ன சின்னதாய் வெட்டி, நல்லெண்ணெயில் போட்டு, வெயிலில் ஒரு வாரம் வைத்து, பின், அந்த, எண்ணெயை, இரண்டு மாதம் தலையில் தடவி குளித்து வந்தால், இளநரை போய்விடும்.

Aug 05, 2025

சருமம் மென்மையாக கோதுமை மாவு .

சரும சுத்தம் மற்றும் பொலிவுக்கு கோதுமை மாவு, இயற்கையான ‘எக்ஸ்ஃபோலியேட்டராக’ செயல்பட்டு, முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் எண்ணெய் கலவைகளை நீக்குகிறது. இதனால், முகம் ஜொலிக்கத் தொடங்கும்.முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தும்தொடர்ந்து பயன்படுத்தும்போது, கோதுமை மாவு முடி வேர்களை மெதுவாக பலவீனமாக்கி, அவற்றின் வளர்ச்சியை குறைக்கும். குறிப்பாக முகத்தில் உள்ள சிறு முடிகளை அகற்றுவதற்கு இது பயனாகிறது.பயன்பாட்டு முறைகள்:பேஸ்ட் 1: கோதுமை + தயிர்/பால் + மஞ்சள்தேவைப்படும் பொருட்கள்: கோதுமை மாவு – 2 ஸ்பூன் தயிர் அல்லது பால் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு செய்முறை:எல்லாவற்றையும் கலந்து விழுதாக செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் காய வைக்கவும். பின்னர் நனைந்த கைகளால் மெதுவாக துடைக்கவும். பேஸ்ட் 2: கோதுமை + தேன்முடி வளரும் இடங்களில் தடவி, 20 நிமிடங்கள் காய வைக்கவும். பிறகு கீழிருந்து மேலாக மெதுவாக பிடுங்கி எடுக்கவும். ஸ்கிரப்: கோதுமை + கடலை மாவு + தயிர்/பால்இதை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து ஸ்கிரப் செய்து கழுவவும். இதுவும் பொலிவை கூட்டும். இந்த செய்முறைகள் வாரத்தில் 2-3 முறை பயன்படுத்தப்படும்போது, நல்ல முடிவுகளை காணலாம்.

Jul 28, 2025

தலைப்பருக்களைப் போக்க சில வழிகள்.

தலை சீவும்போதும் பலருக்கும் இடைஞ்சலாக வலியாக இருக்கும் ஒரு விஷயம் தலையில் ஏற்படும் பருக்கள். அந்தவகையில் அவற்றை சரி செய்ய என்ன வழிகள் என்பதைப் பார்ப்போம்.இந்த பருக்கள் உச்சந்தலையில், காதுகளுக்கு பின்னால், பின் கழுத்திற்கு மேல், நெற்றியில் போன்ற இடங்களில் உண்டாகும். இது அரிப்பு அல்லது வலியை ஏற்படுத்தும். ஹார்மோன்களின் ஏற்ற இறக்கத்தினால், மாதவிடாய், கர்ப்பக்காலம் போன்ற காலங்களில் எண்ணெய் அதிகமாக சுரக்கும். முகத்தில் சுரப்பது போலவே உச்சந்தலையில் சுரக்கும். அப்போது இந்த பருக்கள் ஏற்படும். சில ஷாம்புகள், கண்டிஷனர் மற்றும் ஸ்டைலிங் பொருட்களைப் பயன்படுத்துவதால் தலையில் அரிப்புகள் மற்றும் பருக்கள் ஏற்படும். சர்க்கரை மற்றும் பால் ஆகியவை எடுத்துக்கொள்பவர்களுக்கு தலையில் பருக்கள் வரலாம்.உங்கள் தலையை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். அழுக்குகள் இருக்கும் சிலருக்கு பருக்கள் வரும்.மன அழுத்தம் ஹார்மோன் மாற்றங்களைத் தூண்டும். இது எண்ணெய் உற்பத்தி மற்றும் முகப்பருவை அதிகரிக்க வழிவகுக்கும். சாலிசலிக் அமிலம் கொண்ட ஷாம்புவை பயன்படுத்துங்கள். ஏனெனில் இது எவ்வளவு பெரிய முகப்பருக்களாக இருந்தாலும், அவற்றை எதிர்த்துப் போராடும்.  கற்றாழை ஜெல்லை பருக்கள் உள்ள இடங்களிலெல்லாம் வைய்யுங்கள். இது வீக்கத்தை குறைத்து குணப்படுத்தும்.ஹேர் ஜெல் போன்ற கெட்டியாக இருக்கும் ப்ராடக்ட்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.  நிறைய தண்ணீர் குடியுங்கள். தண்ணீர், பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக்கொள்வதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். இதுபோன்ற பருக்கள் வருவதையும் குறைக்கும். மன அழுத்தம் கொள்ளாமல் இருங்கள். யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள் போன்ற நினைவாற்றல் பயிற்சிகளை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.பருக்களை தொடுவதைத் தவிருங்கள். தேங்காய் அல்லது ஜோஜோபா எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயுடன் சில துளிகள் தேயிலை மர எண்ணெயைக் கரைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். கழுவுவதற்கு முன் சுமார் 30 நிமிடங்கள் அதை விட்டு விடுங்கள். இவற்றை வழக்கமாக செய்து வந்தாலே தலைப் பருக்களை எளிதில் போக்கிவிடலாம்.

Jul 22, 2025

முகச்சுருக்கத்தை நீக்கும் பலாப்பழ கொட்டை

பலாப்பழத்தில் வைட்டமின்A, வைட்டமின் சி, தியாமின், பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது.உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க பலாப்பழம் கொட்டையை ,தோல் நீக்கி ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு பால் எடுத்து அதில் நன்கு ஊற வைத்து அரைத்து கொள்ள வேண்டும்.இவற்றுடன் தேன் சேர்ந்து பேஸ்ட் போல் எடுத்து கொண்டு முகத்தை நன்கு கழுவிய பின் இவற்றை முகத்தில் அப்ளை  செய்து மசாஜ் பண்ணவும். வாரத்திற்கு இரு முறை இப்படி செய்தால் சுருக்கம் நீங்கி பொழிவு கிடைக்கும்.

Jul 16, 2025

சருமத்தைப் பளபளப்பாக்கும் ஐஸ் கட்டிகள்.

அரிசி நீரை குளிர்சாதன பெட்டியில் உறைய வைத்துஐஸ் கட்டிகளை உருவாக்குங்கள். தினமும் காலையிலும் மாலையிலும் உங்கள்முகத்தில் ஐஸ் கட்டிகளைத் தேய்க்கவும், இது துளைகளை இறுக்கமாக்கி, கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக்கும். ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகமாகி முகம் பளிச்சென்று ஆகிவிடும். ஐஸ் கட்டியை தேய்ப்பதால் இரத்த குழாய்கள் முதலில் சுருங்கி இரத்த ஓட்டம் குறையும். பின்னர் இதை ஈடு செய்ய நம்முடைய உடல் அதிகமாக இரத்த ஓட்டத்தை முகத்தில் ஏற்படுத்தும். இது முகத்தை பொலிவாக மற்றும் உயிர்ப்பாக மாற்றும்.

Jul 14, 2025

தலைமுடி பளபளப்பாக

நன்கு புளித்த தயிரைத் தலையில் தேய்த்துக் குளித்தால் முடி வளர்வதுடன் பளபளப்பாகவும் இருக்கும்.பொடுகு குறையும். கற்றாழை மற்றும் தயிர் மாஸ்க் கற்றாழை சருமத்திற்கு மட்டுமல்ல, கூந்தலுக்கும் நல்லது. இது உங்கள் உச்சந்தலையில் சேதமடைந்த செல்களை சரிசெய்ய உதவும் புரோட்டியோலிடிக் என்சைம்களைக் கொண்டுள்ளது. இது நுண்ணறைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கற்றாழை உங்கள் தலைமுடியை மிருதுவாக மாற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். கற்றாழையில் இருந்து ஜெல்லை பிரித்தெடுத்து, தயிர் சேர்த்து உங்கள் தலைமுடி முழுவதும் தடவவும். ஒரே இரவில் உங்கள் தலைமுடியை ஒரு துணியால் மூடி வைக்கவும். காலையில் லேசான ஷாம்பு கொண்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ தலைமுடி பளபளப்பாக இருக்கும்.

Jul 11, 2025

 தினமும் முகத்தை மூன்று அல்லது நான்கு முறையாவது குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்

தினமும் அரிசி களைந்த நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும். தினமும் முகத்தை மூன்று அல்லது நான்கு முறையாவது குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும், இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் பொலிவாக காணப்படும்.சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும், சருமம் பொலிவாக, சருமத்தில் ஏற்படும் பருக்கள் மறையவும் தினமும் ஒரு முறையாவது ஆவிப் பிடிப்பது மிகவும் நல்லது, இவ்வாறு செய்வதினால் சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கின்றது. இதனால் சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும்.முகம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்று கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, பழங்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும்.மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசனை பயன்படுத்துவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணையை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றிஇருக்கும்.

Jul 04, 2025

கோடைகாலத்தில் சருமத்தை பாதுகாப்பதில் மகிழம்பூ

கோடைகாலத்தில் சருமத்தை பாதுகாப்பதில் மிகவும் முக்கியம் வாய்ந்தது மகிழம்பூ என்றே சொல்லலாம். வேனல் கட்டி  சூடுகட்டி, உஷ்ணகட்டி, போன்ற அனைத்தையும் நீக்க ஒரு கைப்பிடி மகிழம் பூவை நீர் விட்டு அரைத்து அப்படியே முகத்திலும், உடலில் கட்டிகள் இருக்கும் இடத்திலும் தடவி காய்ந்ததும் குளித்து வர கட்டிகள் காணாமல் போகும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 26 27

AD's



More News