25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


முதுமை

Jan 14, 2026

முற்றிலும் நினைவிழந்த நிலை.

முற்றிலும் நினைவிழந்த நிலையில் (Coma) இருப்பவருக்கு தனது நிலையைப் பற்றி எதுவும் தெரியாதது மட்டுமல்ல, வெளியிலிருந்து வரும் எவ்விதத் தூண்டுதல்களையும் அறியாத ஒரு நிலையில் இருப்பார். ஆனால் இதயத்துடிப்பு, சுவாச நிலை, சிறுநீரகத்தின் செயல் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாடு ஓரளவிற்கு ஒரு காலகட்டம் வரை சரியாகவே இயங்கிக் கொண்டிருக்கும். மூச்சு அடிக்கடி விடுதல் அல்லது மெதுவாக விடுதல் போன்ற நிலை ஏற்படும். பொதுவாக காய்ச்சலும் கூடவே இருக்கும்.காரணங்கள்நுரையீரல் செயலிழப்பு, இதயம் வலிமை இழத்தல்,சிறுநீரகம் செயலிழப்பு,கல்லீரல் செயலிழப்பு,அளவிற்கு அதிகமான ரத்தப்போக்கு, உ.ம்.: விபத்து, அறுவை சிகிச்சை,அளவிற்கு அதிகமான தூக்க மாத்திரை,மதுவின் விளைவு,ரத்தத்தில் மிகக்குறைந்த அல்லது அதிகமாக உள்ள சர்க்கரையின் அளவுதைராய்டு குறைவாகச் சுரத்தல்,தயாமின் வைட்டமின் குறைவு,வலிப்பு நோய்,அதீத நீர் வறட்சி,உப்பின் அளவு மிகக்குறைந்த நிலை,நோய்த்தொற்று, உ.ம்.ஃபேக்ட்டீரியா, வைரஸ் கிருமிகளின் தாக்கம்,மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவு (Brain haemorrhage),கபாலத்திற்கு உள்ளே மற்றும் மூளைக்கு வெளியே உள்ள இடைவெளியில் ஏற்படும் ரத்தக்கட்டி  (Sub dural haematoma),மூளையில் ஏற்படும் சாதாரண கட்டி அல்லது புற்றுநோய்,தலைக்காயம்.மருத்துவர், இந்நிலையில் உள்ளவரின் நெருங்கிய உறவினரிடம் இந்நிலை எவ்வாறு ஏற்பட்டது என்று முழுமையாகக் கேட்டறிவது மிகவும் அவசியம். உதாரணம்: திடீரென்று கீழே விழுதல், விபத்திற்கு உள்ளாவது, மருந்தை அளவிற்கு அதிகமாக உண்ணுதல்.நோயாளியை மருத்துவர் முழுமையாகப் பரிசோதனை செய்து முற்றிலும் நினைவிழந்தநிலைக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சிப்பார்.முற்றிலும் நினைவிழந்த நிலைக்கான காரணத்தைக் கண்டறிந்து விரைவில் சிகிச்சை அளிக்க முயற்சிக்க வேண்டும். இதற்கான காரணத்தைக் கண்டறிய உறவினர்களின் பங்கு மிகவும் அவசியம்.

Jan 07, 2026

முதியோர்களுக்கு ஏற்படும் முக்கியமான இதயக் கோளாறுகள்:

ரத்தநாள அடைப்பு (Coronary Artery) இதய வால்வுக் கோளாறு (Valvular Heart Disease) தமனி வீக்கம் (Aneurysmal Disease) இதய செயலிழப்பு ( Heart Failure ) மேற்கண்ட நோயால் தவிக்கும் எல்லோருக்கும் வாழ்நாள் முழுவதும்மருத்துவச் சிகிச்சை அவசியம். சுமார் 25% பேருக்கு இதய அறுவை சிகிச்சை தேவைப்படலாம். முதுமையில் செய்யப்படும் முக்கியமான இதய அறுவை சிகிச்சைகள் மாற்று ரத்தநாள அறுவை சிகிச்சை (Coronary Artery Bypass Surgery - CABG) வால்வு மாற்றும் அறுவை சிகிச்சை (Valve Replacement Surgery) தமனி மாற்றும் அறுவை சிகிச்சை (Aneurysm Surgery) இதயச் செயலிழப்பு அறுவை சிகிச்சை (Surgery for Heart Failure) முதுமையில் அறுவை சிகிச்சை செய்வதில் உள்ள முக்கியமான சிரமங்கள் அவர்களது மனநலப் பாதிப்பு, நிறைய பேருக்குச் சிகிச்சை செய்துகொள்ளும் மனபலம் இருப்பதில்லை. . காப்பீடுத் திட்டம் இல்லாதவர்களே அதிகம் என்பதால் பணக் கஷ்டம் ஒரு முக்கியமான தடங்கல். பலவித உடல் உபாதைகள்சேர்ந்து இருப்பதால் இவர்கள் சிகிச்சையில் ஆபத்தும் செலவும் அதிகம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை குறைந்துவரும் நிலையில் இவர்களைப் பார்த்துக்கொள்ள யாரும் தயாராக இல்லை என்பது நிதர்சனமான, ஆனால் கசப்பான உண்மை. வயது முதிர்ந்தவர்களே சமுதாயத்தின் சொத்து. அவர்களைப் பேணிக்காப்பதால் சமுதாயத்திற்கு ஏற்படும் நலன்கள் கணக்கிலடங்காது. இன்று உலகளாவிய அறிவியல் முன்னேற்றங்களால் இவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதில் உள்ள பயம் கணிசமாகக் குறைந்திருக்கிறது.

Dec 31, 2025

சிறுநீரகங்கள்

நம் ரத்தத்தில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் மிகமுக்கியமான பணியைச் செய்கின்றன சிறுநீரகங்கள். உடலில் இருக்கும்அதிகப்படியான நீரை அகற்றும் இயற்கை வடிகட்டியாகவும் சிறுநீரகங்களே செயல்படுகின்றன.நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குத் தாமதமின்றி உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது.போதுமான அளவு தண்ணீரை அதிகம் பருக வேண்டும். வயது வந்தவர்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவது அவசியம். முதுமையில் தாக உணர்ச்சி சற்றுக் குறையும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமே என்ற கவலையும் இருக்கும். இதுபோன்ற காரணங்களால் தண்ணீர் அருந்துவதைத்தவிர்த்துவிடக்கூடாது.இதய நோயாளிகள் மற்றும் சிறுநீரகத் தொல்லை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீர் குடிக்கலாம்.நமது உணவுமுறையில் உப்பின் அளவு அதிகமாகவே உள்ளது. ஒருநாளில் சராசரியாக 10 முதல் 15 கிராம் உப்பைச் சேர்த்துக்கொள்கிறோம். உலக சுகாதார நிறுவனம் ஒரு நாளில் 5 கிராம் பயன்படுத்தினால் போதும் என்று பரிந்துரைத்துள்ளது. எனவே, நம் உணவில் உப்பின் அளவைப் பாதியாகக் குறைத்தாலே சிறுநீரகம் பல ஆண்டுகள் பழுதின்றி உழைக்கும்.முக்கியமாக உப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். ஊறுகாய், அப்பளம், வடகம், உப்பு அதிகம் உள்ள பிஸ்கட் வெண்ணெய், சீஸ், இறைச்சி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றில் உப்பு அதிகம்.சிறுநீரில் நோய்த்தொற்று ஏற்பட்டால் தாமதிக்காமல் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.சிறுநீர்த்தாரையில் அடைப்பு போன்ற தொல்லைகள் ஏதும் இருப்பின் (உதாரணம்: சிறுநீரகம் மற்றும் சிறுநீர்த் தாரையில் இருக்கும் கட்டிகள், கற்கள், புராஸ்டேட் சுரப்பியின் வீக்கம்) அவை நாளடைவில் சிறுநீரகத்தைச் செயலிழக்கச் செய்யும்.காலம் தாழ்த்தாமல் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனை பெற வேண்டும்.புகையிலையை நிறுத்த வேண்டும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யும்போது சிறுநீரகம் சார்ந்த பரிசோதனைகளை (ரத்தத்தில் யூரியா, க்ரியாடினின், சிறுநீரில் புரதம்) அவசியம் செய்துகொள்ள வேண்டும்.

Dec 24, 2025

மூப்புத் தசையிழப்பு நோய்.

இந்தத் தொல்லை அதிகமாக பொதுவாக முதியோர்களுக்கே வருகிறது. எனவே, முதுமைதான் இதற்கான அடிப்படைக் காரணம் என்று புரிந்துகொள்ளலாம். ஆனால், முதுமை மட்டுமே காரணம் அல்ல. தசை இழப்பிற்கான காரணத்தை அறிய இன்னும் சரியான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை.சுற்றுப்புறச் சூழ்நிலையின் பாதிப்பு, சில நோய்கள் மற்றும் ஹார்மோன் மாற்றத்தினால் இந்நோய் இருக்கலாமோ " என்று கணித்திருக்கிறார்கள். இவை * எல்லாமே நிரூபிக்கப்படவில்லை. சுறுசுறுப்பாக இயங்கிய அன்றைய தலைமுறையினருக்கே இந்தநிலை என்றால், இன்று செயலற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் இளைஞர்களுக்கு வெகுசீக்கிரத்தில் தசையிழப்பு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.அறிகுறிகள்தோள்பட்டைத் தசைகள் சுருங்கி, பார்ப்பதற்கு இளைத்திருப்பது போல் தோன்றும். அவற்றின் செயல்திறனும் குறைவதால், அன்றாடம் செய்யும் வேலைகளை எளிதாகச் செய்ய முடியாது. இளைால் தன்னுடைய பிவலைகளைச் செய்வதற்கு மற்றவரின் உதவியை நாட வேண்டியிருப்பதால், அடுத்தவரைச் சார்ந்தே வாழவேண்டிய நிலை வரும். ஆகையால் இவர்களின் உடல் தரம் வெருவாகக் குறைந்துவிடும்.வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone), டெஸ்ட்டோஸ்டிரோன் மற்றும் இன்சுலின் போன்ற சில ஹார்மோன்களின் உற்பத்தியும் குறையத் தொடங்குகின்றன. மார்புத் தசைகளும் சுருங்கத் தொடங்குவதால், இதயம் மற்றும் நுரையீரல் தசைகளும் சுருங்கி, மூச்சுவிடச் சிரமப்படுவார்கள். நரம்பணுக்கள் குறைவதால் மூளையிலிருந்து தசைகளுக்குச் செல்லும் இயக்கம் தொடர்பான செயல்கள் தடைபடும்போது அடிக்கடி நிலை தவறிக் கீழேவிழுவார்கள். அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதோடு நீண்ட நாள் மருத்துவமனையில் வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.நோயைக் கண்டறிதல்தசை பலம் அறியும் பரிசோதனை, கைப்பிடிப் பரிசோதனை போன்ற பரிசோதனை முறைகள் இருக்கின்றன. ஒரு பொருளைச் சரியாக எப்படிப் பிடிக்கிறார் என்பதையெல்லாம் சோதனை செய்து  தெரிந்துகொள்ளலாம்.

Dec 17, 2025

ஆஸ்துமா விரைவில் குணமடைய...

மூச்சுத் திணறல் வரும்போது தவிர்க்க வேண்டிய மருந்துகள்: தூக்க மாத்திரை, அவில் போன்ற அலர்ஜி மாத்திரை. நாடித்துடிப்பை மிகுதிப்படுத்தும் மருந்து. (உ.ம். அட்டிரினிலின்), உயர் ரத்த அழுத்தத்திற்குக் கொடுக்கும் மாத்திரை (உம். புரோபரனலால்)சளி இறுகாமலிருக்க நிறைய திரவ உணவினை வாய் மூலமோ, ஊசி மூலமோ உட்கொள்ள வேண்டும்.எந்த அளவிற்கு விரைவில் சிகிச்சை பெறுகிறார்களோ, அந்த அளவுக்கு ஆஸ்துமா விரைவில் குணமடையும்

Dec 10, 2025

தனியே வசிக்கும் முதியோர்களின் கவனத்திற்கு...

கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வரும் இன்றைய காலத்தில் தனித்திரு நிலையில்தான் பல முதியோர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கல்விக்காகவோ, திருமணமாகியோ, வேலை விஷயமாகவோ குழந்தைகள் வெளியூர் சென்று விடுகிறார்கள். இதனால் முதியோர்கள் தனியாக வசிக்க வேண்டிய ஒரு கட்டாயச் சூழல் உருவாகி வருகிறது. இப்படித் தனியாக வசிப்பவர்கள் 'விழித்திரு' மனநிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சில தற்காப்பு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான்தனிமையும் இனிமையாக மாறும்.தனியாக வசிக்கும் முதியோர்கள். அக்கம்பக்கத்தினரிடம் நல்ல உறவை வைத்துக்கொள்வது அவசியம்.அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதையோ, அவர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதையோ தவிர்க்க வேண்டும்.கதவுகளைக் கொஞ்சமாகத் திறக்கும்விதமாகக் கதவுக்கும் வாசலுக்கும் இடையே சங்கிலி பொருத்திக்கொள்ள வேண்டும்.வீட்டில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்த வேண்டும். அந்தக் காட்சிகளை உலகின் எந்த மூலையிலிருந்தாலும் உங்கள் குழந்தைகள், உறவினர்கள் பார்க்கும்விதமாக அமைத்துக் கொள்ளலாம். இந்தப் பாதுகாப்பு உணர்வே நிம்மதியை அளிக்கும்.வீட்டில் டார்ச்லைட் வைத்திருப்பது அவசியம். இன்வெர்ட்டர் இணைப்பு இருந்தால்,மின்சாரம் தடைப்பட்டாலும் கவலை இல்லாமல்இருக்கலாம்.அவசர உதவி தேவைப்படும்போது போன் அழைக்க, வீட்டுக்கு அருகே இருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்களின் தொலைபேசி செய்து எண்களை வைத்திருங்கள்.சற்று அதிக சத்தம் எழுப்பக்கூடிய அலாரமும் வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.தினமும் வெளியூரில் உள்ள உங்கள் குழந்தைகள், உறவினர்களுடன் பேசுங்கள். அது நீங்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதை உறுதி செய்யும்."சிறிது தூரமே வெளியே சென்றாலும், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய உங்களின் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். சில சமயங்களில் இது உயிரைக்கூடக் காக்க உதவும்.வெளியில் செல்லும்போது தேவையில்லாமல் அதிக நகைகளை அணிய வேண்டாம். முதுமையில் நகை மற்றும் ஆடை ஆபரணங்களில் அதிக நாட்டம் வேண்டாம். இதன்மூலம் தேவையில்லாத சிக்கல்களைத் தவிர்க்கலாம்.விழாக்களுக்குச் செல்லும்போது முடிந்தவரை தனியாகச் செல்ல வேண்டாம். யாரையேனும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள். பாதுகாவலர் மற்றும் வேலையாட்களை நியமிப்பதில் கவனம் தேவை. வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் டிரைவர் போன்றவர்கள் முன்னே பணத்தைப் பற்றியோ நகைகளைப் பற்றியோ பேச வேண்டாம்.நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளைப் பாதுகாப்புக்காக வளர்க்கலாம். பாசமாக இருக்கும் அவை மனதுக்கும் ஆறுதல் தரும்.இரவில் சிறிய விளக்கு எரியுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வெளிச்சம் இருக்கும் இடத்துக்குத் திருடர்கள் பெரும்பாலும் செல்ல மாட்டார்கள்.மேற்கண்ட வழிமுறைகளை முடிந்தளவுக்குக் கடைப்பிடியுங்கள். காலம் செல்லச் செல்ல நீங்கள் தனியாக இருப்பதை மறந்து பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை உணர்வீர்கள் .

Dec 03, 2025

ஆஸ்துமா நோயாளிகள் அவசியம் செய்யக்கூடாதவை,செய்யக்கூடியவை

செய்யக்கூடாதவைசுயமாக மருந்து, மாத்திரை உட்கொள்வது கூடாது..புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் விடவும்.அலர்ஜி, ஆஸ்துமாவைத் தூண்டும் உணவுப் பொருட்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும்.மூச்சுத் திணறல், இருமல் (பக்கவாட்டு விலா எலும்பு வலி), தூக்கமின்மை, காய்ச்சல் ஆகியவை வந்தால் தள்ளிப்போடாமல் மருத்துவரை அணுகவும்.வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதைத் தவிர்க்கவும். உதாரணம்: பூனை, நாய், புறா, கிளி.தூசு, குப்பை,அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தவும்.படுக்கை, மெத்தை, தலையணை ஆகியவற்றில் ஆஸ்துமாவை உண்டாக்கும் பூச்சிகள் குடியேற வாய்ப்பு இருப்பதால்  அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்.நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்படும் போது பயப்படக்கூடாது.வீட்டு உபயோக ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கத் தயங்கக்கூடாது. ஆக்சிஜன் சிலிண்டர் உபயோகப்படுத்தும் போது புகைப்பிடிக்ககூடாது, வெடித்துவிடும்.தனிமை தவிர்க்கப்பட வேண்டும்.மன அழுத்தம் வராமல் இருக்க மருத்துவமும் பயிற்சியும் தேவை.மார்பு பிசியோதெரபி தேவைப்படும்போது அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் (உள்ளிருக்கும் சளியை வெளிக்கொணர)சாப்பிட்டவுடன் படுக்கக்கூடாது.ஆஸ்துமா நோயாளிகளுக்கு அவசியம் செய்யக்கூடியவை.முறையாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு அவசியம்.வாகனம் ஒட்டும் போதும், சமையல் செய்யும் போதும், ஒட்டடை அடிக்கும் போதும் துணியால் முகத்தை மூடிக்கொள்வது அவசியம்.ஆஸ்துமா நோயாளிகள் மருத்துவரிடம், தாங்கள் பிறநோய்களுக்கு உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளைக் காட்டுவது மிக முக்கியம்.யோகா பயிற்சி அவசியம்.சரியாக உட்காரும், உறங்கும் முறைகள் தெரிய வேண்டும்.தொப்பை, உடல் பருமனைக் குறைக்கவும்.மன தைரியம், உற்சாகம், ஊக்கம் ஆகியவற்றை ஆலோசனை மூலம் அதிகரித்தல் வேண்டும்.ஆஸ்துமா சிகிச்சையை மருத்துவரின் அனுமதியோடு மட்டுமே தொடங்க வேண்டும்.தேவைப்படும் போது நீராவி பிடித்தல்.சைனஸ், வயிறு எரிச்சல் போன்றவை தீர்க்கப்பட வேண்டும்.இன்ப்ளுயன்சா, நிமோனியா தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.மருந்துப் பம்புகள் உபயோகிக்கும் முறையைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.தேவையெனில் சக்கர நாற்காலியை உபயோகிக்கத் தயங்கக்கூடாது.காற்றோட்டமான அறை, வீடு அவசியம்.வீட்டில் அவசர உதவிக்கு அழைப்பு மணி (Alarm) தேவை.

Nov 26, 2025

முதுமையில் மனச்சோர்வின் அறிகுறிகள் .

மற்ற நோய்களைப் போல அல்லாமல் இந்நோயின் அறிகுறிகள் பலதரப்பட்டவை.தொடர்ந்து சோகநிலை, குற்ற உணர்வு, தகுதியற்றஉணர்வு,உதவியற்றஉணர்வு, நம்பிக்கையின்மை, எல்லாம்கெட்டதுஎன்கிறமனப்பான்மை, பொழுதுபோக்கில்நாட்டம் இல்லாமை, தூக்கமின்மையால் அதிகாலையில் எழுந்துவிடுவது, அளவுக்கு அதிகமாகத் தூங்குவது, பசி குறைதல், எடை குறைதல் அல்லது அதிகமாக உண்டு உடல் பருமன் அடைவது, சக்தியின்மை, அதிக அளவு களைப்பு, தற்கொலை பற்றிய எண்ணம், தற்கொலைக்கு முயற்சிசெய்வது, மனப்பதற்றம். கவனமின்மை, மறதி, எதிலும் முடிவுஎடுக்க முடியாத நிலை மற்றும் சிகிச்சைக்குப் பயனளிக்காத உடல் உபாதைகள்... உதாரணம்:தலைவலி, வயிற்றுக்கோளாறு, உடல் வலி.நோய்களைத் தவிர மனச்சோர்வு வருவதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. உதாரணம்: த தள்ளாமை, மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை, தொடர்ந்து படுக்கையில் இருக்கவேண்டிய நிலை, வறுமை,கடன் தொல்லை,உறவினரின் எதிர்பாராத இழப்பு, குடும்பத்திலோ, சமுதாயத்திலோ மதிக்காத நிலை. இவ்வாறு வயதான காலத்தில் மனச்சோர்வு வருவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் உண்டு.மனச்சோர்வு மிகவும் முற்றிய நிலையில் உள்ளவர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பர்.முதுமையில் இம் மனநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது அவ்வளவு சுலபமல்லவலிமை அடையச் செய்ய மருந்தை விட, முதியோர்களுடன் கலந்துபேசி முதலில் அவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்வதே முக்கியமானதாகும். அவர்களின் மனச்சோர்வுக்கு உடல் நோயைத் : தவிரமற்ற காரணங்கள் இருப்பின் அதற்குத் தக்க வழிமுறைகளைச் செய்துகொடுக்க வேண்டும். இந்த மனநலச் சிகிச்சையை அடிக்கடி தொடர்ந்து கொடுக்க வேண்டியிருக்கும். உதாரணம்: வீட்டில் உள்ளவர்களிடம் பேசி முதியோர்களுக்குத் தக்க மரியாதை அளிக்கச் செய்தல், தனிமையைத் தவிர்க்க நண்பர்களை அறிமுகம் செய்துவைத்தல், வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுதல். ஆன்மிகத்தில் ஈடுபடச் செய்தல், தியானம் செய்யப் பழக்கப்படுத்துவது, முடிந்த அளவுக்கு நிதி வசதி பெற ஆலோசனைகூறுதல்... இப்படி

Nov 19, 2025

நிமோனியா.

முதியோர்களுக்கு வரும் இருமல்  சளித் தொல்லைகளில் நிமோனியா  முக்கியப் பங்கு வகிக்கிறது. இது ஒரு பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று நோய் இந்நோய் உள்ளவர்கள் இருமும்போது காற்றின் மூலம் மற்றவர்களுக்குப் பரவும். இந்நோயின் முதல் அறிகுறி காய்ச்சல், உடல்வலி மற்றும் வாந்தி, இதைத் தொடர்ந்து இருமல், சளி, மூச்சுத் திணறுதல் போன்றவை தோன்றும். இருமல் அதிகரிக்கும் பொழுது சிலருக்கு சளியில் ரத்தமும் கலந்திருக்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்நோய் காது, தலை (சைனஸ்) மற்றும் மூளையைப் பாதித்து உயிருக்கேகூட ஆபத்தை விளைவிக்கும். மிகவும் வயதானவர்களுக்கு இந்நோய் மனக்குழப்பம், கீழே விழுதல் மற்றும் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலையைக்கூடஏற்படுத்தும்.நிமோனியா வர வாய்ப்புள்ளவர்கள்மிகவும் வயதானவர்கள்.நீரிழிவு நோய்.இதய நோய்.சிறுநீரக நோய்.தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள்.அதிகமாக மது அருந்துபவர்கள்.ஸ்டீராய்டு மருந்தைத் தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்கள்.சமீபத்தில் ப்ளூ ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.ஆஸ்துமா, நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.தூசி நிறைந்த இருப்பிடம். புற்றுநோய்மாற்று உறுப்பு பெற்றிருப்பவர்கள்எய்ட்ஸ் நோய்முதுமையில் நோயின் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்நோய் மரணத்தைக்கூட விளைவிக்கும். ஆகையால் இந்நோய் வராமல் தடுப்பதே நல்லது. இதற்கும் தடுப்பூசி உண்டு. சுமார் 50 வயதைக் கடந்தவர்கள் ஆயுளுக்கு ஒரே ஒருமுறை இந்த ஊசியை எடுத்துக்கொண்டால் போதும், ஒருசிலருக்கு, முக்கியமாக இணை நோய் உள்ளவர்கள் மட்டும் ஓராண்டு கழித்து இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம்.இந்த தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் எதுமில்லை, தேவைப்படுவோர் இன்புளூயன்ஸா தடுப்பூசியையும் ஒரே நேரத்தில் போட்டுக் கொள்ளலாம்.

Nov 12, 2025

டிமென்சியா நோயாளிகளை கவனித்துக்கொள்ள..,

டிமென்சியா நோயாளிகள் அன்றாட தேவைகளைச் சரிவரச் செய்துகொள்ள நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.முடிந்த அளவுக்கு நோயாளிகள் தனித்தே செயல்பட ஊக்குவிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.நோயாளியை எதிர்த்துப் பேசவோ, அவருடைய செய்கை சரியில்லை என்றோ வாதாடக் கூடாது.அவரிடம் உள்ள திறமைகளைப் பாராட்டி, அதைத் தொடர்ந்து செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்.நோயாளிகளிடம் பேசும்போது தெளிவாகவும், நிதானமாகவும், நேருக்கு நேர் அவர் புரிந்துகொள்ளுமாறு பேச வேண்டும்.ஆறுதலாகத் தொடுதல், கையைப் பிடித்துக்கொள்ளுதல், தடவிக் கொடுப்பதன் மூலம் நம்முடைய அன்பைத் தெரிவிக்க வேண்டும்.எந்தச் சூழ்நிலையிலும் அவரைத் தனிமைப்படுத்த வேண்டாம்.முடிந்தவரை உணவு உண்ணும்போதும், தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும் அவரும் உங்களோடு சேர்ந்தே இருக்கட்டும்.அவருக்கே தெரியாமல், இருந்த  இடத்திலேயே சிறுநீர் கழித்துவிட்டால், அதைப்பெரிதுபடுத்த வேண்டாம். நோயின்காரணமாக இதைப் போன்றே அவர் செய்யும் சிலவேலைகள் அவரை அறியாமலேயே நடக்கின்றன.சத்தான உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உணவை அவரே எடுத்து உண்ண முடியாத நிலை வரும்போது. நீங்கள் ஊட்டிவிட வேண்டிய நிலை ஏற்படும். அதை ஒரு சுமையாகக் கருதாமல் சுகமாக எண்ணுங்கள்.மருந்தை அவரே எடுத்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் அவர் உட்கொள்ள மறந்துவிடுவார் அல்லது மருந்து சாப்பிட்டதை மறந்து, மறுமுறை அந்த மருந்தையே சாப்பிட்டுவிடுவார். ஆகவே, உறவினர்களே மருந்தைக் கொடுக்க வேண்டும்.சில நேரங்களில் கோபமாகவும் பதற்றமாகவும் முரட்டுத்தனமாகவும் நடக்கலாம். அப்போது அவரிடம் நீங்களும் உங்களின் முரட்டுத்தன்மையைக் காண்பிக்க வேண்டாம். சாந்தமாகப் பேசி, படுக்கையில் படுக்க வைத்து, தேவையான மாத்திரைகளைக் கொடுத்தால் அவர் சாந்தமடைவார்.முடிந்தவரை நடைப்பயிற்சி செய்யுமாறு ஊக்குவிக்கலாம்.புலன் உறுப்புகளைத் தூண்டும் பயிற்சிகள்: தொட்டு அறியும் உணர்வுகளைத் தூண்டக்கூடிய பயிற்சிகளை அளிக்க வேண்டும்உதாரணம்: கண்களை மூடிக்கொண்டுபொருட்களைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. உள்ளிருப்பதைக் காணமுடியாதபடி வெவ்வெறு பொருட்களை ஒரு பையில் போடவும். அவர் கையை உள்ளே விட்டு அந்தப் பொருட்களை என்னவென்று யூகிக்கச் செய்ய வேண்டும்டிமென்சியாவினால் பாதிக்கப்பட்ட வயதானவர்கள், பழக்கத்துக்கு ஒரு குழந்தையைப் போல! அவர்களுக்கு குழந்தைக்குரிய அன்பையும், பெரியவருக்குரிய மரியாதையையும் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். மறதி உள்ளவர்கள் தானே, அவர்களுக்கு என்ன தெரியும் என்று எதிலும் குறைகள் வைக்க வேண்டாம். இது தெய்வத்தையே ஏமாற்றுவது போல ஆகும் !

1 2 3 4 5

AD's



More News