ஒற்றைத் தலைவலி என்று சொல்லப்படும் மைக்ரேன் வந்தால் ஒரு பக்க தலை மட்டும் வலிக்கும் சிலமணி நேரம் முதல் 3 நாட்கள் வரை தொடரும். சிலருக்கு இருபக்கமும் வலி இருக்கும்.வெண்ணீரில் குளிப்பதன் மூலம் ஒற்றைத்தலைவலி குணமாகிறது..ஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிக்காய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும் .
மாம்பழம் அதிகம் சாப்பிட்டு, அஜீரணம் என்றால் பால் சாப்பிட வேண்டும்.நெய் சாப்பிட்டு, அஜீரணம் என்றால் எலுமிச்சை சாறு சாறு சாப்பிட வேண்டும்.கேக் சாப்பிட்டு அஜீரணம் என்றால், வெந்நீர் அருந்த வேண்டும்.பால் சாப்பிட்டு அஜீரணம் என்றால், வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.தேங்காயால் அஜீரணம் என்றால் அரிசியை சிறிது மென்று தின்றால் சரியாகும்.பருப்பினால் அஜீரணம் என்றால் சிறிது சர்க்கரை சாப்பிட வேண்டும்.பப்பாளி பழம் சாப்பிட்டதால் அஜீரணம் என்றால் தாராளமாக தண்ணீர் குடியுங்கள் குணமாகும்.
கருவேப்பிலையைகாலை வெறும் வயிற்றில் மென்றுசாப்பிடுவதால் செரிமானத்தை அதிகரிக்கிறது: கறிவேப்பிலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவை சிறிய துண்டுகளாக உடைக்க உதவுகிறது, எனவே இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் குடலை சுத்தம் செய்ய உதவுகிறது. அஜீரணம், குடல் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது.கருவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் கண் பிரச்சனை மேம்படுத்தலாம். கருவேப்பிலை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. தினமும் வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும் .கருவேப்பிலை பலவகையான தொற்று நோய்களை குறைக்கிறது, மற்றும் நோயாளிகளின் அபாயத்தை குறைக்கிறது. கருவேப்பிலை மென்று சாப்பிடுவதால் மூலம் எடை மற்றும் தொப்பையை குறைக்கிறது.குழந்தை இல்லாத பெண்மணிக்குதினமும் கருவேப்பிலை சாப்பிட்டு வந்தால் கரு தங்க உதவுகிறது.கர்ப்பபைக்கு ரொம்ப நல்ல கருவேப்பிலை.
கற்பூரவல்லி இலை, துளசி இலை சின்ன வெங்காயம், உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு இடித்து அதன் சாறை எடுத்து அதனுடன்.சிறிதளவு மிளகுதூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால் போதும் சளி உடனடியாக வெளியே வந்து இருமல் குறைந்து விடும் எப்படிப்பட்ட இருமல் இருந்தாலும் ஒருமுறை குடித்தால் போதும் இருமல் ஓடிவிடும்.
கல்லீரல், மண்ணீரல் வீக்கம் கொண்டவர்கள்100 கிராம் திப்பிலியை வறுத்து பொடி செய்து,100 கிராம் கரிசலாங்கண்ணி கீரை பொடியுடன் கலக்க வேண்டும். அத்துடன்100 கிராம் பொடித்த நெற்பொரி.100 கிராம் நாட்டு சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரவேண்டும். மண்ணீரல் வீக்கத்தையும்,தொடர் விக்கலையும் இது குணப்படுத்தும்.
வில்வ இலை ஒரு கைப்பிடி அளவு ,மிளகு 2 ஸ்பூன் ,சீரகம் 2 ஸ்பூன், சுக்கு ஒரு துண்டு, அனைத்தையும் மிக்ஸியில் போட்டு லைட்டா அரைத்துக்கொள்ளவும். 500 மில்லி தண்ணீரில் நன்றாக சுண்ட 200 மில்லி கசாயம் வர்ற அளவுக்கு கொதிக்க வைக்கவும். கொதித்த கசாயத்தை வடிகட்டி அரை கிளாஸ், இரண்டு வேளை சாப்பிட்டால் போதும் ,24 மணி நேரத்துக்குள் எல்லா வைரஸ் காய்ச்சலும் குணமாகும் . வில்வ இலை எல்லா வைரஸ் காய்ச்சலுக்கும் ஆயிரம் வருஷத்துக்கு முன்னால் ஒரு சித்தர் எழுதிய மிகவும் அற்புதமான மருத்துவ குறிப்பு .
1 கண்கள் தொடர்ந்து அரிக்குமானால் ஜலதோஷம் வரப்போகிறது என அர்த்தம். 2. காதில் அதீத குடைச்சல் அல்லது வலி வந்தால் காய்ச்சல் வரலாம் என அர்த்தம். 3. அதிக பசி தொடர்ந்து இருக்குமானால் இன்சுலின் அதிகம் சுரக்கிறது எனவும் நீரழிவு வரலாமெனவும் அர்த்தம். 4. பாதங்களில் வெடிப்பு அதிகம் வந்தால் உடலில் அதிக சூடு உள்ளது என அர்த்தம். 5. கால்களின் மணிக்கட்டுகள் தொடர்ந்து வலித்தால் உடல் எடை கூடுவதாக அர்த்தம். 6. கைவிரல் நகங்களின் மேல் மெல்லிய கருப்பு கோடு ,அடுத்தடுத்து விழுமானால் இதயத்தில் பிரச்சனை ஆரம்பிக்கிறது கவனம் கொள்ளவும் என அர்த்தம்.
குளிர்ந்த நீரை அப்படியே தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு. நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி. இறுதியாக தலையில் ஊற்ற வேண்டும். காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிலிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியே செல்லும். குளிப்பதற்கு சுடு நீரை விட,பச்சை தண்ணீர் தான் மிகவும் சிறந்தது.
வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு பொதுவாகவே நல்லது. தினமும் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் குடல் புண்களை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும், பற்களின் பலத்தை உறுதிப்படுத்தும்.உடல் எடை குறைய உதவும்.பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு எதிர்ப்பு சக்தி கொண்ட மாவுச்சத்து உள்ளது, இது உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாத கார்போஹைட்ரேட் வகை. எதிர்ப்பு ஸ்டார்ச் ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது, உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது மற்றும் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது.பச்சை வாழைப்பழங்களில் டோபமைன் மற்றும் கேட்டசின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகின்றன.
ஆப்பிள்(A), பீட்ரூட்(B), கேரட்(C) ஆகிய மூன்றையும் சேர்த்து தயாரிக்கப்படும்ABC ஜூஸ், ஆரோக்கியம் நிறைந்த ஒரு பானமாகும். இதனை தினமும் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.வைட்டமின் C நிறைந்திருப்பதால் இதில் உள்ள பீட்டாலைன்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக, வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். நார்ச்சத்து மற்றும் பெக்டின் போன்ற சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானப் பிரச்சினைகளைக் குறைக்கும்.வைட்டமின் A மற்றும் C போன்ற ஆன்டிஆக்சிடெண்டுகள் இருப்பதால், சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தரும்.