25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நலம் வாழ

Jan 12, 2026

இரத்தசோகை குணமாக முருங்கைக் கீரை சூப்

முருங்கைக் கீரையை நீர் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் சில நாட்களுக்கு சூப்பு போல குடிங்க. ருசிக்கு மிளகு சீரக தூள் கொஞ்சம் போட்டுக்கலாம். கழுத்து வலி மூட்டுவலி நிரந்தரமாக குணமாகும். சர்க்கரை வியாதி, சளி, ஆஸ்துமா, இரத்தசோகை (இஹீமோகுளோபின்). உடல்சூடு, மலச்சிக்கல், ஆண் பெண் மலட்டுத்தன்மை, தலைமுடி வளர்ச்சியின்மை, நரைமுடி, அல்சர், வாய்ப்புண், பற்கள் உறுதியின்மை, தலைவலி, தாய்பால் சுரப்பின்மை இதெல்லாம் கூட குணமாகிவிடும்.

Jan 10, 2026

ஆரோக்கியம் தரும்  டிப்ஸ்...

தினமும் காலை 30 நிமிடம் நடந்தா ரத்த ஓட்டம் சீராகும்.வெறும் வயிற்றில் 2 கப் சூடான தண்ணீர் குடிக்கவும் - டிடாக்ஸ் ஆகும்.ஒரு நாளைக்கு குறைந்தது 2 வகை பழமும் 3 வகை காய்கறியும் சாப்பிடவும்.வாரத்தில் 2 நாள் சிறுதானியம் சேர்க்கவும் - உடல் எடை சர்க்கரை கட்டுப்பாடு.7-8 மணி நேரம் நல்ல தூக்கம் அவசியம்.தினசரி ஒரு கைப்பிடி (10gm) பாதாம், வால்நட் நிலக்கடலை மாதிரி நட்ஸ் சாப்பிடவும்.யோகா/ப்ராணாயாமா 15 நிமிடம் செய்யவும் மன அழுத்தம் குறையும்.மொபைல், டிவி குறைத்து குடும்பத்தோட நேரம் செலவிடவும் மன அமைதி வரும்.

Jan 07, 2026

மஞ்சள் கலந்த தண்ணீர்...

எலுமிச்சையை மணப்பது குமட்டல் வாந்தி எடுக்கும் உந்துதலை கட்டுப்படுத்த உதவுகிறது.ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை வாயில் போட்டு வைப்பது, இரத்த அழுத்தத்தைக் குறைத்து இருமலைக் கட்டுப்படுத்துகிறது.டீ யில் இலவங்கப்பட்டையைச் சேர்ப்பது, சீக்கிரம் வயதான தோற்றத்தை தடுத்து, இரத்த குளுக்கோஸை கட்டுப்படுத்துகிறது.தொண்டைப்புண் போக்க சிறிய துண்டு இஞ்சியை மென்று சாப்பிடுவது உதவும்.காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் கலந்த தண்ணீர்க் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Jan 06, 2026

இயற்கை மருத்துவக் குறிப்புகள்.

முதுகுத்தண்டு வலிக்கு - பப்பாளிப்பழம் சாப்பிடவும்.வரட்டு இருமலுக்கு சிறந்தது -திராட்சை.இரத்த அழுத்தம் குறைய - எலுமிச்சை.மூளைக்கு வலிமையூட்ட - வல்லாரை.காது மந்தம் போக்கும்- தூதுவளை.மூத்திரக்கடுப்பு மாற்ற - பசலைக்கீரை.உடற்குடு, உடல் உஷ்ணம் அகல - முருங்கை கீரை .இரத்தத்தை சுத்திகரிக்க - வெள்ளை பூண்டு.கண் பார்வை அதிகரிக்க - கேரட், புதினா, ஏலக்காய்.வாழ்நாளை நீடிக்க - நெல்லிக்காய். 

Jan 05, 2026

கால்சியம் சத்து குறைபாடு அறிகுறிகள்.

கால்சியம் சத்து குறைபாடு அறிகுறிகள்,சோர்வு, கருவுறாமை, தூக்கமின்மை, தோல் வறட்சி, கண்புரை, நெஞ்சு வலி, அதிக கொழுப்பு, கருச்சிதைவு, கையில் உணர்வின்மை,ஈறுநோய்கள்,பசியின்மை,உயர்இரத்தஅழுத்தம்ஏற்படும்.எலும்புகள், பற்கள் மற்றும் மூட்டுகளில் அடிக்கடி வலி ஏற்படும்.நரம்பு இழுப்பதை போன்ற உணர்வு ஏற்படும்.நகம் எளிதாக உடையும்.அடிக்கடி மன அழுத்தம் ஏற்படும்.கால்சியம் குறைபாடு வராமல் தடுக்கும் உணவுகள் பால்& பால் பொருட்கள், கேழ்வரகு கீரைகள் கசகசா, எள்ளு, கம்பு, சிறுதானியங்கள்,சியா விதைகள்.

Jan 02, 2026

ஆரோக்கியம் தரும் மருத்துவ குறிப்புகள் .

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.வாழைப்பூவைப் பொடிப் பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கை க்கீரையை யும் சேர்த் து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும். வெந்தயத்தை வறுத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வர  இருமல் பித்தக் கோளாறு நீங்கும்.மாதுளம் பழச்சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த் து சாப்பிட்டு வர  நரம்பு சம்பந்த மான உபாதைகள் நீங்கிவிடும்..கொப்பரைத் தேக்காயை கசகசா வுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும். ஓருதேக்கரண்டி  நெல்லிசாறு அரைத்தேக்கரண்டி தேன் கலந்து வைத்து தினமும் காலையில் பருகி வந்தால் கண் நோய் வராது.இஞ்சியைச் சாறெடுத்து கொஞ்சம் உப்புபோட்டு குடித்தால் வயிற்று வலி, வயிற்று போக்கு குணமாகிவிடும்.தினமும் ஒரு கொய்பாப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல்  சம்பந்தமான நோய்கள் வராது.இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் நீங்கி விடும்.

Dec 31, 2025

வயிற்று வலி நீங்க முருங்கை இலை சாறு.

ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் தேக்கரண்டி தேன் விட்டு நன்றாக கலக்கி குடிக்கலாம்.முருங்கை இலை சாறு2 தேக்கரண்டி வீதம் இரண்டு வேலை பருக வயிற்று வலி நீங்கும். முருங்கை இலை சாறு ஒரு தேக்கரண்டி உடன் தேன் கலந்து சாப்பிட்டால் நாக்குப்பூச்சிகள் அழிந்து வயிற்று வலியும் போகும்.முருங்கையிலையை தண்ணீர் ஊற்றி வேகவைத்து, அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலேஏராளமான நோய்கள் குணமாகின்றன. தேவைப்பட்டால், இந்த முருங்கை நீரில் எலுமிச்சம் பழச்சாறு, சிறிது நெல்லிக்காய் சாறையும் கலந்து குடித்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.இயற்கையாகவே நச்சு நீக்கும் தன்மை இந்த முருங்கைக்கு உள்ளதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சுத்தப்படுத்த தூண்டுகிறது. வாய்ப்புண்ணும், வயிற்றுப்புண்ணும் ஆறுகிறது. முருங்கை கீரை சாறு, குடித்து வந்தால் உடல் சூடு மெல்ல தணிந்துவிடும்.

Dec 30, 2025

அரிப்பு குணமாக.....

கீழாநெல்லி செடியை சுத்தம் செய்து நீர் விட்டு அரைத்து உடல் மீது பூசி குளிக்க உடலில் உள்ள அரிப்பு உடனே குணமாகும்.வெங்காயத்தை அரைத்து வைத்து முட்டிகளில் கட்ட மூட்டு வலி குறையும்.பால் கொடுக்கும் தாய்மார்கள் நாவற்பழத்தை சாப்பிடக்கூடாது .அப்படி சாப்பிட்டால் குழந்தை குடித்த பாலைக் கக்கும்.அதிக அளவில் வெங்காயம், பூண்டு பயன்படுத்துவதால் மார்பக புற்றுநோய் மிக மிகக் குறைந்த அளவே ஏற்படுகிறது.

Dec 29, 2025

பூண்டு எண்ணெய்

பூண்டு எண்ணெய் பல வகையான பயன்களை கொண்டது. இதை சருமத்திற்குபயன்படுத்தி மஞ்சள், முடி குறைவு மற்றும் முக அழற்சி போன்றவந்தை சமாளிக்க முடியும். பூண்டு எண்ணெய் குளோரா மற்றும் கிருமி எதிர்ப்பு தன்மை கொண்டது. அதனால் புற்றுநோய் எதிர்ப்பு குணங்கள் உள்ளன இது ஆஸ்துமா காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு உதவும்.அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாக விளங்கும் பூண்டு எண்ணெயை இதய ஆரோக்கியம், தோல் ஆரோக்கியம், அழற்சி எதிர்ப்புப் பண்புகள், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பயன்படுத்தலாம். பூண்டில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பூண்டு எண்ணெய்யில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. பூண்டில் உள்ள முக்கிய உயிர் வேதியியல் கலவையான டயல் டிசல்பைட், அல்லிசின் கலவை நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, இதய நோய் தடுப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை வழங்குகிறது.

Dec 24, 2025

நோய் வராமல் இருக்க...

நீரைக்காய்ச்சி குடிக்க வேண்டும்.நீர்மோர் நிறைய குடிக்க வேண்டும்.நெய்யை உருக்கி உணவில் சேர்க்க வேண்டும்.தினமும் இரவில் காய்ச்சிய பசும்பால் அருந்த வேண்டும்.பகலில் தூங்கக்கூடாது.மலம், சிறுநீர் இரண்டையும் அடக்கக் கூடாது.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிக்க வேண்டும்.முந்தைய நாளில் சமைத்த உணவை உண்ணக்கூடாது.மதிய உணவில் தயிர் சேர்க்க வேண்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 43 44

AD's



More News