25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நலம் வாழ

Dec 23, 2025

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கிராம்பு .

தூங்கும் முன் ஒரு கிராம்பு சாப்பிட்டு வந்தால் வயிறு எப்போதும் சுத்தமாக இருக்கும்.கிராம்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கிராம்பு சாப்பிடுவது பல்வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.இரவில் ஒரு கிராம்பு சாப்பிட்டால் இருமல் விரைவில் நீங்கும்.கிராம்புகளில் உள்ள யூஜெனால் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.கிராம்பு சாறு, கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களிலிருந்து கல்லீரலைப் பாதுகாக்க உதவுகிறது, மேலும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி மற்றும் கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. 

Dec 22, 2025

ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்...

முருங்கைக்கீரை, சுண்டைக்காய் பாசிப்பயறு,எள்ளுருண்டை,மணத்தக்காளி வத்தல்,அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலைஉருண்டை,விதையுள்ள கருப்பு திராட்சை,நாட்டு மாதுளை, நாட்டுப்பேரீட்சை,கறிவேப்பிலைத்துவையல்,பீர்க்கங்காய்,பிரண்டை, முள்ளங்கி,பனை வெல்லமிட்டு கிண்டியஉளுந்துக்களி,உளுந்து, கேழ்வரகு தோசை,பொன்னாங்கன்னிகீரை,தண்டுக்கீரை,வெள்ளாட்டுக்கறி, ஈரல், எலும்பு சூப்,நெல்லிக்காய்ச் சாறு, பழரசம்.

Dec 19, 2025

உடல் சோர்வு குறைய கருஞ்சீரகம்.

கருஞ்சீரகம் அல்லது கருப்பு விதைகள் என அழைக்கப்படும் இது உணவு தயாரிக்கவும் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது அது இரத்தத்தில் உருவாகி இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலை குறைப்பதில் கருஞ்சீரகம் பயனுள்ளதாக சொல்லப்படுகிறது.கருஞ்சீரகம் விதைச்சாறு புற்றுநோய் செல்களை செயலிழக்க செய்ய உதவுவதாக காட்டுகிறது.ஒரு சிறிய சிட்டிகை கருஞ்சீரகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து காலையிலேயே குடிக்கவும்.தினமும் எடுத்தால் மூட்டு வலி, உடல் வீக்கம் மற்றும் உடல் சோர்வு குறையும்.அரை கரண்டி கருஞ்சீரகத்தை தேனுடன் கலந்து இரவு படுக்கும் முன் எடுத்தால் தூக்கம் மேம்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.உணவில் சமைக்கும் போது அரை கரண்டி அளவு கருஞ்சீரகத்தை சேர்த்து பயன்படுத்தினால் செரிமானம் சீராகி வயிறு வீக்கம், வாயு  மற்றும் குடல் தொந்தரவு குறையும்.

Dec 18, 2025

முடக்குவாதத்தை  குணப்படுத்த...

வெந்தயம்: முந்தைய இரவுவெந்தயம்1ஸ்பூன் அளவு எடுத்து ஊற வையுங்கள் மறுநாள் காலையில் அந்த நீரை குடித்து வெந்தயத்தை மென்று சாப்பிடவும் வெந்தயம் உள் மற்றும் வெளி வீக்கத்தை குறைக்கும் பாதிக்கப்பட்ட இடங்களில் வலிகுறையும்.பூண்டு: பூண்டு முடக்குவாதத்திற்கான மிகச்சிறந்த மருத்துவஉணவு2 பூண்டு பற்களை நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து தினமும் சாப்பிட்டு வாருங்கள் இது முடக்குவாதத்தின் பாதிப்பை வேரிலிருந்து குணப்படுத்தும்.கொத்தமல்லி தழை:கொத்தமல்லி தழையை நீரில் போட்டு அப்படியே குடிக்கவும் அல்லது கொத்தமல்லி விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம் இது யூரிக்அமிலத்தை குறைக்கச்செய்கிறது இரைப்பை பாதிப்புகளையும் சரி செய்து மூட்டு வலியை போக்கும்.ஓமம் மற்றும் இஞ்சி:ஓமம் அரை ஸ்பூன் மற்றும் இஞ்சி ஒரு துண்டை தட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.இரண்டையும் ஒரு கப் நீரில் போட்டு நன்ராக கொதிக்க வைக்கவும்.இதனை வடிக்கட்டி காலை அரை கப் மற்றும் மாலை அரை கப் என்று குடிக்கவும்.இவை வலி, வீக்கத்தை மட்டுமல்லாது, யூரிக் அமிலத்தின் சுரப்பையும் கட்டுப்படுத்தும்.

Dec 17, 2025

ஊட்டச்சத்துகள் நிறைந்த காலை உணவு.

 ராகி கீரை அடை: இரும்புச்சத்து, ரத்தசோகை நீங்கும். எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும், சருமத்துக்கு நல்லது, பார்வைத்திறன் மேம்படும்.ஆப்பம்: செரிமானமாவது எளிது, வயிறு, குடலுக்கு நல்லது, வயிற்று, வாய் புண்களை குணப்படுத்தும்கோதுமை ரவை புட்டு: ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு காலை உணவாக கொடுக்க சிறந்தது.

Dec 15, 2025

மருத்துவ குணங்களை உள்ளடக்கிய வால்நட்ஸ்

நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதை தமிழில் அக்ரூட் பருப்பு என்று அழைக்கின்றனர். வால்நட்ஸில் உள்ளMUFA மற்றும் ஒமேகா3 கொழுப்புக்கள் அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் நல்லது. தாவர அடிப்படையிலான ஒமேகா -3 ALA மற்றும் சிறந்த ஆதாரத்தை வழங்கும் பருப்பு வகை வால்நட்ஸ் ஆகும்.ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில்4 கிராம் புரதம்,2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.அதோடு வால்நட்ஸில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. வால்நட்ஸில் உள்ள MUFA மற்றும் ஒமேகா3 கொழுப்புக்கள் அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் நல்லது. தாவர அடிப்படையிலான ஒமேகா-3ALA மற்றும் சிறந்த ஆதாரத்தை வழங்கும் பருப்பு வகை வால்நட்ஸ் ஆகும். பிற சத்துள்ள பருப்புகளை விட இந்த வால்நட் 5 மடங்கு ALA-ஐக் கொண்டுள்ளது.

Dec 13, 2025

இதய துடிப்பை சீராக்க...

தினமும் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன், 5 பூண்டு பல், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் சீரகம் இவை அனைத்தையும் இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அது பாதியாக சுண்டியவுடன், மசித்து குடித்து வந்தால் தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து, இதய துடிப்பை சீராக்கி ,இதய அடைப்பு ,ஏற்படாமல் பாதுகாக்கிறது, தேவையற்ற கொழுப்புகளை சேரவும் விடாது.

Dec 11, 2025

இருதயம் பலம் பெற

இருதய நோய் உள்ளவர்கள் காபி குடிப்பதை தவிர்த்தல் நல்லது டீ குடிக்கலாம்.வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த அன்னாசி பழம் மற்றும் ஆரஞ்சு பழங்களை அவ்வப்போது உண்ண வேண்டும். இதயத்தை பலப்படுத்தி சீராக்கும் அத்திப்பழத்தை தொடர்ந்து உண்டு வர வேண்டும். பசும் பாலில்  பூண்டு பற்கள் சிலவற்றை நசுக்கி போட்டு, நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். வெள்ளை தாமரை பூவின் இதழ்களை நசுக்கி, கஷாயம் செய்து ,காய்ச்சிய பசும்பாலில் அக் கஷாயத்தை கலந்து குடிக்க வேண்டும். மாதுளம்பழசாற்றில்தேன்கலந்துகுடிக்கவேண்டும்.இருதயம் வலுவாக அத்திப்பழத்தை காய வைத்து பொடியாக்கி1 கரண்டி சாப்பிட்டு வருவதால் நல்ல பலன் கிட்டும்.தினசரி ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வருவதால் இருதயம் பலம் பெரும்.

Dec 09, 2025

மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கும் எருக்கு மூலிகை.

விஷம் என ஒதுக்கும் எருக்கம் செடியில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடப்பதாக சித்த மருந்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதில் எருக்க இலையை அடுக்கிக்  காலால் மிதித்தால் குதிகால் வலி  நீங்கும். செடியின் இலைகளை நெருப்பில் போட்டுஎரித்து அந்த புகையை சுவாசித்தால் மார்புச்சளி கட்டுப்படும் இலையை நெருப்பில் வாட்டி  கட்டிகள் மேல் கட்டினால் அவை உடையும்.

Dec 08, 2025

பசியின்மையைச் சரிசெய்யும் சுக்கு.

மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் இவை தீவிரமாகாமல் தடுக்கவும், அறிகுறியை கட்டுப்படுத்தவும் பாரம்பரியமாகவே சில மூலிகைகள் உள்ளது. சுக்கு மழைக்காலத்தில் கண்டிப்பாக எடுக்க வேண்டிய மூலிகை என்று சொல்லலாம்.இஞ்சியை, சுண்ணாம்பு நீரில் நனைத்துக் காயவைத்து எடுக்கப்படுவதுதான் சுக்கு. இது, காரத்தன்மை கொண்டது.சுக்கு, பித்தத்தை அதிகரிக்கும். கபம், வாதம் போன்றவற்றைக் குறைக்கும்.பசியின்மையைச் சரிசெய்யும். உடல்பருமன் இருப்பவர்களுக்கு ஏற்றது. கெட்ட நீரை அகற்றும்.தனியா, சுக்கு, சீரகம், மிளகு போன்றவற்றைச் சேர்த்து அரைத்து, ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து, சுக்கு காபியாகக் குடிக்கலாம்.சுக்கு ரத்தத்தைக் கெட்டிப்படுத்தும். எனவே, ரத்தம் உ றைதல் பிரச்னை இருப்பவர்கள், அளவாகப் பயன்படுத்த வேண்டும்.செரிமானம் பிரச்னை உள்ளவர்கள்அரை தேக்கரண்டி சுக்குப் பொடியை  ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க நிவாரணம் கிடைக்கும்.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 43 44

AD's



More News