1 கண்கள் தொடர்ந்து அரிக்குமானால் ஜலதோஷம் வரப்போகிறது என அர்த்தம். 2. காதில் அதீத குடைச்சல் அல்லது வலி வந்தால் காய்ச்சல் வரலாம் என அர்த்தம். 3. அதிக பசி தொடர்ந்து இருக்குமானால் இன்சுலின் அதிகம் சுரக்கிறது எனவும் நீரழிவு வரலாமெனவும் அர்த்தம். 4. பாதங்களில் வெடிப்பு அதிகம் வந்தால் உடலில் அதிக சூடு உள்ளது என அர்த்தம். 5. கால்களின் மணிக்கட்டுகள் தொடர்ந்து வலித்தால் உடல் எடை கூடுவதாக அர்த்தம். 6. கைவிரல் நகங்களின் மேல் மெல்லிய கருப்பு கோடு ,அடுத்தடுத்து விழுமானால் இதயத்தில் பிரச்சனை ஆரம்பிக்கிறது கவனம் கொள்ளவும் என அர்த்தம்.
குளிர்ந்த நீரை அப்படியே தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு. நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி. இறுதியாக தலையில் ஊற்ற வேண்டும். காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிலிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியே செல்லும். குளிப்பதற்கு சுடு நீரை விட,பச்சை தண்ணீர் தான் மிகவும் சிறந்தது.
வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு பொதுவாகவே நல்லது. தினமும் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் குடல் புண்களை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும், பற்களின் பலத்தை உறுதிப்படுத்தும்.உடல் எடை குறைய உதவும்.பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு எதிர்ப்பு சக்தி கொண்ட மாவுச்சத்து உள்ளது, இது உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாத கார்போஹைட்ரேட் வகை. எதிர்ப்பு ஸ்டார்ச் ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது, உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது மற்றும் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது.பச்சை வாழைப்பழங்களில் டோபமைன் மற்றும் கேட்டசின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகின்றன.
ஆப்பிள்(A), பீட்ரூட்(B), கேரட்(C) ஆகிய மூன்றையும் சேர்த்து தயாரிக்கப்படும்ABC ஜூஸ், ஆரோக்கியம் நிறைந்த ஒரு பானமாகும். இதனை தினமும் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.வைட்டமின் C நிறைந்திருப்பதால் இதில் உள்ள பீட்டாலைன்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக, வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். நார்ச்சத்து மற்றும் பெக்டின் போன்ற சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானப் பிரச்சினைகளைக் குறைக்கும்.வைட்டமின் A மற்றும் C போன்ற ஆன்டிஆக்சிடெண்டுகள் இருப்பதால், சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தரும்.
சீக்கிரமாக குறைந்து வரும் கண் பார்வை .இரவு நேரத்தில் குடிக்க இந்த Eye Booster பானம்தேவையான பொருட்கள்:1.பாதாம்-102. சோம்பு-2 ஸ்பூன்3. கற்கண்டு-1 ஸ்பூன்4.பால் மற்றும் நெய்மிக்ஸியில் பாதாம், சோம்பு, கற்கண்டு சேர்த்து அரைத்த அந்த கலவையை பசு நெய்யுடன் பால் சேர்த்து நன்கு கொதி வரும் வரை காய்ச்சி வடி கட்டிக்கொள்ளுங்கள். அதை அப்படியையே குடிக்க வேண்டியது தான். இந்த பாலை தொடரச்சியாக குடிப்பதன் மூலம் கண் பார்வை பிரச்சனை குறைகின்றது. இது எப்போதும் நம் கண்களை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும். கண்களுக்கு குளிர்ச்சி மிகவும் நல்லது ஏனென்றால் அப்போதுதான் கண்ணில் உள்ள நரம்புகள் மற்றும் செல்கள் வலுப்பெறும்.
நூக்கல் காயில் வைட்டமின்கள் A, E, C, போன்றவைகளும் மற்றும், மாங்கனீசு,பீட்டா,கரோட்டீன்மாவுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களும். நிறைந்துள்ளன. குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட காய்கறியான இது உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதுடன் அதிக எடையைக் குறைக்கவும் உதவுகிறதுநூல்கோலில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்க உதவும். ரத்தச் சிவப்பு அணுக்களைப் பெருக்கும். ரத்தச்சோகையை நீக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் நூல்கோல் நல்லது.ரத்தத்தில் உப்புச்சத்து அதிகம் உள்ளவர்களுக்கு மட்டும் நூல்கோல் வேண்டாம். தவிர்த்து விடுங்கள்.இதிலுள்ள பொட்டாசியம் ஒரு வாசோடைலேட்டராக செயல்பட்டு திடீரென இரத்த அழுத்த உயர்வதைக் குறைக்கிறது. தமனிகள் மற்றும் இரத்த நாளங்களில் உள்ள பதற்றத்தை குறைத்து போதுமான இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதுகாக்க உதவுகிறது.பொட்டாசியத்துடன் நூக்கலில் இரும்புச் சத்தும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதால் இது இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையை தடுக்க அவசியமான இரத்த சிவப்பணுக்களை (RBC) அதிகரிக்க உதவுகிறது. இதனால் உண்டாகும் பலவீனம், சோர்வு, தலைவலி, வயிற்று கோளாறுகள் போன்றவற்றைத் தடுக்கிறது.
கேக் நிறைய சாப்பிட்டால், ஒரு டம்ளர் வெந்நீர்.மாங்காய், மாம்பழம் அதிகம் சாப்பிட்டால், பால் ஒரு டம்ளர் .பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால், ஒரு வாழைப்பழம்.நெய் உணவுகனை அதிகம் சாப்பிட்டால், ஒரு கப் எலுமிச்சை ஜூஸ்.அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால், சிறிதளவு சோம்பு.தேங்காய் பதார்த்தங்களை அதிகம் சாப்பிட்டால், கொஞ்சம் அரிசி.
வில்வ பூ- சுவாசத்தை சீராக்கும். காச நோயை குணப்படுத்தும்.சித்தகத்தி பூ - தலைவலியை குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.தாழம்பூ- நறுமணம் விசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும் உடல் சோர்வை நீக்கும். தாமரைப்பூ - தலை எரிச்சல், தலைச்சுற்றல் போன்றவற்றை சரி செய்யும், மன உளைச்சலை நீக்கும் .மன அமைதிக்கு வழிவகுக்கும். சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.கனகாம்பரம் பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தை சரி செய்யும்.தாழம்பூ, மகிழம்பூ, ரோஜா பூ, செண்பகப்பூ, போன்றவை வாதம், கபத்தை குறைக்கக் கூடியது.
வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதன் சாறு சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வயிற்று புண்கள் ஏற்படுவதை தடுக்கிறது.வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிந்து அத்துடன் முள்ளங்கி சாறு அரைபாகம் சேர்த்து காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. குடித்துவர கல்லடைப்பு நீங்கும்வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் ,வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும்.வாழைத்தண்டு சாறு ஒரு நாள் மற்றும் பார்லி கஞ்சி ஒரு நாள் என்று சாப்பிட்டு வர சிறுநீர்க்கற்கள் பொடிப்பொடியாகி சிறுநீருடன் வெளியேறும்.
சுடு நீரில் ஆவாரம் பூக்களை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம்.ஆவாரம் பூ பொடியை வெந்நீரில் போட்டு பருகலாம் சர்க்கரை சேர்க்க கூடாது.செரிமான பிரச்னையை நீக்கும்.தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்.உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும்.சரும சுருக்கங்களை குறைத்து நிறத்தை அதிகரிக்கும்.உடல் சூடு, பித்தம், மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு , ஒழுங்கற்ற மாதவிடா, குடல் புண் இப்படி பல்வேறு வகையான பிரச்னைகளுக்கும் ஆவாரம் பூ மருந்தாக இருக்கிறது.சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அளவு சீராக இருக்க ஆவாரம் பூ பயன்படுத்துவார்கள். கருப்பை ஆரோக்கியம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கும்.