25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நலம் வாழ

Nov 15, 2023

நித்திய கல்யாணி

 நித்திய கல்யாணி செடியின் வேர்ப்பகுதியை எடுத்து சுத்திகரித்து மிளகு, சீரகம் இரண்டையும் வெருகடி அளவு எடுத்து அதனுடன்10 கிராம் நித்திய கல்யாணி வேரையும் சேர்த்து நீர் விட்டு தேநீராய்க் காய்ச்சி பருகுவதால் பல் வலி, உடல் வலி ஆகியன போகும்.நித்திய கல்யாணி இலைச்சாறு இரண்டொரு தேக்கரண்டி எடுத்து வெருகடி மஞ்சள் சேர்த்து தேநீராக்கிக் குடிப்பதால் சர்க்கரை நோய் தணியும். பேதியும் நிற்கும்.நித்திய கல்யாணி பூக்கள் 10 இலைகள், 5 மாதுளை தோல் 10 கிராம் அளவு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு, அரை டம்ளராகச் சுருங்கக் காய்ச்சி உடன்  தேவையான சுவைக்குத் தேன் சேர்த்து தினம் இருவேளை சாப்பிட அதிக ரத்தப்போக்குடன்கூடிய மாதவிலக்கு குணமாகும் நித்திய கல்யாணி பூக்கள் 10 எடுத்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து தேநீராக்கிக் குடிப்பதால் ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு குணமாகும். . நித்திய கல்யாணி பூக்கள் 10 முதல் 15 எடுத்து அதனோடு மஞ்சள் சேர்த்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்து தேன் சேர்த்துப் பருகி வர எவ்வகைப் புற்றுநோயும்  விலகும்.நித்திய கல்யாணி பூக்களை பத்து எடுத்து ஒரு டம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டிக் கண்களைக் கழுவ கண் நோய்கள் குணமாகும். இதைக் கொண்டு ஆறாதப் புண்களைக் கழுவி வர விரைவில் ஆறும். 

Nov 14, 2023

பச்சை நிற பழங்கள்

 பச்சை நிற திராட்சை அதிகம் புளிப்பு இல்லாமல், தித்திக்கும் என்பதால் பலரும் அதை விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். பொதுவாக திராட்சைகளில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை உள்ளன. கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், தினமும் ஒரு கையளவு பச்சை திராட்சை சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள pterostilbene என்னும் உட்பொருள் கெட்டகொலஸ்ட்ராலைக்கரைத்து,உடலில்கொலஸ்ட்ரால்அளவைசீராகவைத்துக்கொள்ளும்.பச்சைத் திராட்சை, பச்சை ஆப்பிள், பேரிக்காய், பச்சை வாழைப்பழம், பீன்ஸ், கோஸ் போன்றவை பச்சை நிறம் பழங்கள். குளோரோஃபில், நார்ச்சத்து, லுடீன், கால்சியம், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட உயிர்ச்சத்துக்கள் இதில் உள்ளன.

Nov 11, 2023

அதிமதுரம் டீ

அதிமதுரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பல மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன. அதிமதுரம் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த டீயை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.அதிமதுரம் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சர்க்கரை நோய் எதிர்ப்பு பண்புகள் உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.அதிமதுரம் டீயில் ஆன்டி வைரல் பண்புகள் உள்ளன. இது சளி, காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.அதிமதுரம் டீ பற்கள் மற்றும் ஈறுகளுக்கும் நன்மை பயக்கும். இதைத் தொடர்ந்து குடித்து வர வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுரம் டீ குடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைமேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொற்று நோயை எதிர்த்து போராட உதவுகின்றன.

Nov 10, 2023

பார்லி அரிசி

பார்லி. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால். ,இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் ப்ரோபியானிக் என்கிற அமிலம் இருக்கிறது. அது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.இதில் பீட்டா க்ளூக்கோன் அதிகம். அதுவும் கொலஸ்ட்ராலை குறைக்கவல்லது. இந்த பீட்டா க்ளூக்கோளானது. பித்த நீருடன் சேர்ந்து கொழுப்பை மலத்தின் வழியே வெளியேற்றி விடும்.அரிசி வகைகளில் ஒன்றாக இருக்கும் பார்லி மிகுந்த ஊட்டச்சத்து மிகுந்தது. ஊட்டச்சத்து மிகுந்த பார்லி உடல் வலிமைக்குப் பெரிதும் உதவுகிறது.பார்லி அரிசியில்"டெக்ஸ்ட்ரின்' என்னும் சத்துப் பொருள் உள்ளது. இது தண்ணீரில் கொதிக்கும் போது ஊட்டச்சத்தாக மாறிவிடுகின்றன. பார்லி கஞ்சி குடித்தால் நோயின் காரணமாக ஏற்பட்ட பலவீனம் அகலும், உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழற்சி குணமாகும்.

Nov 08, 2023

.உருளைக் கிழங்கு

மாவுச்சத்து நிறைந்த கிழங்கு வகைகளில் மிகவும் பிரபலமானது.உருளைக் கிழங்கு. இதில்இருக்கும் தாது உப்புகள் உடலில்உள்ள எலும்புகளின் உறுதித்தன்மைக்குத்துணைபுரியும். நரம்பு இயக்கங்கள், தசைகள் வலுப்பெறவும் இது உதவிபுரிகிறது. மாவுச்சத்து நிறைந்திருப்பதால், உடலுக்கு எளிதில் சக்தி கிடைக்கும்.ஃபோலேட், வைட்டமின் சி, சிறிதளவு நார்ச்சத்தும் இதில்இருக்கின்றன. எளிதில்செரிமானம் ஆகும். புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை. கொண்டது. உருளைக் கிழங்கை வறுவலாகச் சாப்பிடுவதைத் தவிர்த்து, வேகவைத்துச் சாப்பிடு ங்கள் .வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும். உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

Nov 07, 2023

அல்சீமர் எனும் மறதி நோய் வராமல்இருக்க ….

பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையைபகல் உணவில்சேர்த்துக் கொள்வதன்மூலம் நரம்புகள்வலுப்பெறும்..நரம்புமண்டலம்வலுப்பெற்றிருக்க பழங்கள் மிகஅவசியம்..தற்போதுஉலகமெங்கும் அதிகமாகி வரும்முதுமையில் வரக்கூடிய அல்சீமர்நோய் எனும் மறதி, வலுக்குறைவு,தடுமாற்றம் நமக்கு வராமல்இருக்க 40 வயதில்இருந்துதினமும் ஒரு முறை ஏதேனும்பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Nov 06, 2023

 நார்ச்சத்து உள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கு

உணவுச்சத்து அதிகமான உணவுச்சத்து நிறைந்தது. சமைப்பது சுலபம். ஒருவித இனிப்புடன் ருசி பிரமாதமாக இருக்கும் பச்சையாகவும் சாப்பிடலாம். வேக வைத்து, சுட்டு, வதக்கி, பொரித்து என்று பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலும் சாப்பிடக் கூடியது.இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் உரிக்காமல் சாப்பிடுவது நல்லது. சீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரிஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும்.சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், கரோட்டினாய்ட்ஸ், பீட்டா கரோட்டின் ஆகியவை வாய் முதல் ஆசனவாய் வரையிலான உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்க்கான செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இது உள் உறுப்புகளின் வீக்கத்தைக் குறைத்து, இயற்கையாகவே உடலை சுத்தம் செய்யும் பண்புகளை கொண்டுள்ளது.

Nov 03, 2023

சீம்பால்

பிறந்த குழந்தைகளுக்கு எப்படி தாய் பால் அவசியமோ அதேபோல் மாடுகளுக்கு குட்டி போட்டவுடன் அதற்கு பால் கொடுப்பது அவ்வளவு அவசியம். ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் பாலானது மிகவும் அவசியம். அவற்றின் வளர்ச்சிக்கு பிறகு தாய் பால் தான் ஊட்டச்சத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் பெரிதும் உதவு செய்கிறது.நம் வீடுகளில் பசு மாடு உள்ளது. அது கன்றை ஈன்ற பின் அந்த கன்று சற்று சோர்வாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்காது. அந்த சமையத்தில் தாய் மாடானது கொடுக்கும் பால் தான் அதற்கு சத்துக்களை கொடுக்க வேண்டும்.கன்றை ஈன்ற பின் தாய்மாடு 3 நாட்கள் அளிக்கும் வெண்ணிறமாக இல்லாமல் அடர்ந்த நிறமாக பால் கொடுக்கும் அந்த பாலில் கொழுப்பு சத்து குறைவாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் புரதச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கும்.அதனால் கன்றுகள் பிறந்து அதற்கு வயிற்று போக்கு ஏற்பட்டால் இந்த பாலை குடிப்பதன் மூலம் குட்டிகள் வேகமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவும் இருக்கும் கன்று ஈன்று3 நாட்கள் கொடுக்கும் பாலை தான் சீம்பால் என்று சொல்வார்கள் அதன் பின் பால் வெண்ணிறமாக மாறிவிடும்.சீம்பாலில் வைட்டமின்கள், புரதம், தாதுக்கள் உள்ளன. ஆகவே மனிதர்கள். சீம்பாலை உட்கொள்வதன் மூலம் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க உதவி செய்கிறது.நாள்பட்ட மலச்சிக்கல் சரியாக்கும்.மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்து, உடலில் அஜீரண பிரச்சனைலிருந்து விடுபடவும் வழி செய்கிறது. இதனை பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு உடல் பலத்தை கொடுக்கும். ஆகவே இதனை வீட்டில் பால்கோவா போல் செய்தும் சாப்பிடுவார்கள்.

Oct 30, 2023

கை தட்டுவதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றன.

கைதட்டல் பயிற்சி செய்வதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.தினமும் அரை மணி நேரம் கை தட்டுவதால், சர்க்கரை நோய், ஆர்த்ரைட்டிஸ், தலைவலி போன்ற பிரச்சனைகள் நீங்கும்.இதய நோய், ஆஸ்துமா, கீல்வாதம் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கிறது. ஆனால் இதற்காக கைதட்டல் 1500 முறை கைதட்ட வேண்டியிருக்கும்..இப்படி நம்மை ஈர்க்கும் விசயங்களில், மன உற்சாகத்தில், நாமறியாமல் செய்யும் இந்த கைதட்டல், உண்மையில் நமக்கு ஒரு வரம், உம்மணாமூஞ்சிகளின் மத்தியில் கைதட்டி சிரித்து இரசிப்பது ஒரு வரம். மனதின் உணர்வுகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல், எப்போதும் சீரியஸ் முகமாக காட்சிதரும் மனிதர்கள் மத்தியில், நம்மை ஈர்க்கும் விசயங்களுக்கு, எளிதில் சிரித்து கைத்தட்டி மகிழும் மனிதர்கள், உண்மையில் வரம் பெற்று வந்தவர்கள்தான்! மேலும், இதனால், உடலில் வியாதி எதிர்ப்பு தன்மைகள் அதிகரித்து, உடலை வியாதிகளில் இருந்து காத்து வர முடியும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். "மனம் போல வாழ்வு!" என்பர் பெரியோர், உடலின் பல்வேறு வியாதிகளுக்கும் அடிப்படை மனம்தான்! வெற்றியடைந்தால்தான் மகிழ்ச்சி கிட்டும் எனும் எண்ணத்தை விடுத்து, உற்சாகமாக இருப்பதே ஒருவகை வெற்றிதான்.

Oct 27, 2023

நெல்லிக்கனி

நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று. ரத்த ஓட்டத்தை நன்குதூண்டி தோலில் சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து,இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது. இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சத்து சருமத்திற்கு இலகுவான தன்மையை தருவதோடு சரும புற்று நோய்கள் ஏற்படாமலும் காக்கிறது. குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளபளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம். ஆயுர்வேதத்தின்படி, சருமத்தை பளபளவென வைத்துக்கொள்ள நெல்லிக்காய் உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும், கண் பார்வை மேம்படவும் நெல்லிக்காய் பயன்படுகிறது. நெல்லிக்காய் செரிமான மேம்பாட்டுக்கும், அசிடிட்டி பிரச்சனைக்கும்உதவுகிறது.இதுஇரத்தசர்க்கரைஅளவைகட்டுப்படுத்துவதால்,சர்க்கரைவியாதிக்கும்நன்மருந்தாகஉள்ளது.பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பெரும்பாலோனோர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இதில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தி நம் உடம்பில் இருக்கிற கபத்தை வெளியேற்றும், அதைத்தான் நாம் சளி பிடித்துக்கொண்டதாக நினைக்கிறோம். ஆனால், இரவு நேரத்தில் நெல்லிக்காய் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு ஏற்படும்.குழந்தைகளுடைய வாட்டர் பாட்டிலில் ஒரு நெல்லிக்காயை கட் பண்ணிப் போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி விடலாம். நெல்லிக்காய் ஊறிய இந்தத் தண்ணீரைக் குடித்தாலே குழந்தைகளுக்குப் போதுமான வைட்டமின்`சி' கிடைத்துவிடும். ஆனால், குழந்தைகளுக்கு மாலை 5 மணிக்கு மேல் நெல்லிக்காய் சாப்பிடக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

1 2 ... 12 13 14 15 16 17 18 19 20 21

AD's



More News