கண்ணாடிப் பொருட்கள் வீணாகும்போது அவற்றில் பெரிய துண்டுகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. சிறிய துண்டுகள் பெரும் பாலும் மண்ணில் தான் புதைக்கப்படுகின்றன.அமெரிக்காவைச் சேர்ந்த டெக்சாஸ் பல் கலை விஞ்ஞானிகள், இந்தக் கண்ணாடித் துகள் களை மண்ணில் கலப்பது பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.மண், கண்ணாடி இரண்டுமே சிலிக்கா வால் ஆனவை என்பதை மனதில் கொண்டேவிஞ்ஞானிகள் ஆய்வைத்தொடங்கினர். கண்ணாடிமறுசுழற்சி செய்யும் இடத்தில் இருந்து கண்ணாடித்துகள்களை வாங்கினர். அவற்றின் கூர்மையான முனைகளை மழுங்கடித்தனர்.செடிகள் வளர்ப்பதற்கு பயன்படும் மண்ணில் துகள்களை வெவ்வேறு விகிதங்களில் கலந்து தொட்டிகளில் நிரப்பினர். பின்பு அவற்றில் கொத்த மல்லி, குடைமிளகாய், மிளகாய் ஆகிய தாவரங் களை நட்டு வளர்த்தனர்.முழுக்கவே மண் மட்டும் நிரம்பிய தொட்டியை விட50 சதவீதம் மண்,50 சதவீதம் கண்ணாடித் துகள்கள் கலந்த தொட்டியில் செடிகள்வேகமாக வளர்ந்தன.வெறும் மண்ணில் உருவான சில பூஞ்சைகள் தாவரத்தின் வளர்ச்சியை தடுத்தன. ஆனால், கண்ணாடி கலந்த மண்ணில் பூஞ்சைகள் உருவாக வில்லை.இதனால் தான் அவற்றில் தாவரங்கள் வேகமாக, நன்றாக வளர்ந் துள்ளன. ஆகவே, இனி எதிர்காலத்தில் இவ்வாறு வீணாகும் கண்ணாடித்துகள்களைக் கொண்டு பயிர் வளர்ச்சியை ஊக்கு விக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.இந்தப் புது முயற்சி யால் பயிர்களுக்கான உரம், ஆபத்தான பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட் டைக் குறைக்க முடியும்.
தமிழ்நாட்டில் சில கிராமங்களில்விவசாயிகள்அதிகஅளவில் 'கிளாடியோலஸ்' மலர்சாகுபடிசெய்துஉள்நாட்டிலும், வெளிநாடுகளுக் கும் ஏற்றுமதி செய்து அதிக அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர். நல்ல வருமா னம் தரும் கிளாடியோலஸ் மலர் சாகுபடி பற்றி அனைத்து விவசாயிகளும் தெரிந்து கொள்வது அவசியம்.கிளாடியோலஸ் மலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிக அளவில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. மேலும், தென் இந்தியாவில் பெங்களூருவில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்பட்டது. தற்போது தமிழகத் தில் பசுமை குடில்கள் மற்றும் தோட்டங் களில் சாகுபடி செய்யப்படுகிறது. கிளாடி யோலஸ் மலர்கள் கரணைகள் மூலமாக சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மலர் வெங்காயம் மற்றும் பூண்டு குடும்பத்தை சேர்ந்தது.கிளாடியோலஸ் மலர்களை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் நல்ல வடிகால் வசதி கொண்ட நிலத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். தண் ணீர் தேங்கி நிற்கும் களிமண் நிலங்களில் கிளாடியோலஸ் நன்றாக வளராது. இது மழை மற்றும் பனி காலங்களில் 15 முதல்20 செல்சியஸ் வரை வெப்பம் கொண்ட பகுதிகளில் இளம் பருவத்தில் நன்றாக வளரும் தன்மை கொண்டது. 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமானா லும் செடியின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாது. எனவே தமிழகத்தில் தற்போது அதிக அளவில் மலர் சாகுபடி செய்யப்படும் மதுரை, திண்டுக்கல், கடலூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயி கள் அதிக அளவில் கிளாடியோலஸ் மலர் சாகுபடியில் ஈடுபட முடியும்.சாகுபடி முறைகிளாடியோலஸ் மலர் சாகுபடி செய்ய தேர்வு செய்யப்படும் நிலத்தின் கார அமிலத்தன்மை 6 முதல் 7 வரை இருத்தல் வேண்டும். இவ்வாறு இடத்தை தேர்வு செய்த பின் வெப்ப பகுதிகளில் கிளாடி யோலஸ் 2 முதல் 4 இலைகள் விடும் தருணத்தில் 12 முதல் 17 நாட்கள் வரை தொடர்ந்து நீர் பாசனம் செய்ய வேண்டி யது அவசியம்.பின்னர் சாகுபடியில் களைகளை கட் டுப்படுத்த களையெடுக்க வேண்டும். ஒன்று முதல் ஐந்து பூங்கொத்துகள் தோன்றும் தருணத்தில் விவசாயிகள் கிளாடியோலஸ் மலர் அறுவடை காலத்தை அடைந்து விட்டதை தெரிந்து கொள்ளலாம்.பதப்படுத்துதல்கிளாடியோலஸ் மலர்களை அறுவடை செய்த பின் கரணைகளை மீண்டும் தோண்டி எடுத்து பெவிஸ்டின் பூஞ்சை கொல்லி மருந்தில் நன்றாக நனைத்து பதப்படுத்துதல் வேண்டும். கிளாடியோலஸ் கரணைகளை குளிர் பதனிடும் முறையில் பதப்படுத்த ஈரமான சாக்குப் பைகள் அல்லது மரப் பெட்டிகளில் வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.
மண் மற்றும் தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கு உரங்கள் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானவை.வாழைத்தோல் உரம், வெங்காய தலாம் உரம் தாவரமானது கிளைகளுடன் பூக்கும் கட்டத்தில் நுழையும் போது,வாழைத்தோல் உரம் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியத்துடன் வளர்ச்சியை அதிகரிக்கிறது.அதிக மகசூலுக்கு பூக்கும் .வெங்காய தலாம் உரம்-பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. வேர் வளர்ச்சி, பசுமையான பசுமை, துடிப்பான பூக்கள் ஆகியவற்றை அதிகரிக்கிறது.தாவரத்தில் ஏதேனும் பாதகமான விளைவுகளைத் தடுக்க உரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் போதுமான தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்வது நல்ல நடைமுறையாகும், ஏனெனில் தாவரத்தின் ஊட்டச்சத்து தேவைகள் வளரும் நிலை மற்றும் பூக்கும் கட்டம் போன்ற வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளில் மாறுபடும்.இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், யார் வேண்டுமானாலும் வீட்டில் செழிப்பான மல்லிகை (மோக்ரா) செடியை வளர்க்கலாம்.
எறும்பில் இலை வெட்டி என்ற இனம் ஒன்று உள்ளது. இது உலகின் முதல் விவசாயி எனஅழைக்கப்படுகிறது. வடதென் அமெரிக்க கண்டப் பகுதிகளில் பெருமளவில் காணப்படுகிறது. குழுவாக வாழும் இதில், ராணி, ஆண்மற்றும் வேலைக்கார எறும்புகள் இருக்கின்றன.முட்டையிட்டு சந்ததியை பெருக்குவது ராணி எறும்பின் முதன்மை வேலை. நாள் ஒன்றுக்கு, ஆயிரம் முட்டைகள் வரைஇடும். இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது ஆண் எறும்பின் பணி, வேலைக்கார எறும்பு பெரிய உருவம் மற்றும் வலிய தாடையுடன் இருக்கும். இது வீரர் என அழைக்கப்படுகிறது. இதன்பணி. இலைகளை வெட்டி எடுத்து வந்து, புற்றில் சேர்ப்பது. தன்னை விட, 50 மடங்கு எடைஉடைய இலையையும் சுமந்தபடி புற்றை நோக்கி வேகமாக திரும்பும். இலையை தாடையால் வெட்டி, நசுக்கி, உமிழ்நீரை பாய்ச்சும். இலைக்கூழாகி நொதிக்க ஆரம்பித்த சில நாட்களில் பூஞ்சை உருவாகும். அது எறும்புகளுக்கு உணவாக பயன்படுகிறது.வேலைக்கார எறும்புகள், ராணியை கவனிப்பது, புழுக்களுக்கு உணவளிப்பது, கூட்டை சுத்தம் செய்வது, உணவு சேமிப்பது, எதிரிகளிடம் இருந்து புற்றைப் பாதுகாப்பது, புற்று கட்டுவது என பணிகள் செய்கின்றன. சூழலை காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவைகூட்டு முயற்சி, வேலைப் பகிர்வு, சுறுசுறுப்பு, விடாமுயற்சியை கடைபிடித்து உதாரணத்துவமாக வாழ்கின்றன.
அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். தேவையான பொருட்கள் Grow Bags அல்லது Thottiஅடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.நாற்றுகள் அல்லது விதைகள்சொட்டு நீர் பாசனம் அமைக்க வசதி அல்லது பூவாளி தெளிப்பான்பிளாஸ்டிக், மண்பானை, உலோகம், செராமிக் என எதுவாக இருந்தாலும் பிரச்சனை இல்லை. செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் எனஇந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். இந்த மண்கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது.7,10 நாட்களில் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும். இதன் பிறகு தான் விதைப்பு செய்ய வேண்டும்.நன்கு பழுத்த தக்காளியை எடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நன்கு பிசைந்து விட வேண்டும். விதைகள் தனியே பிரிந்து விடும். பின் நீரை வடித்து எடுத்து சிறிது மண் அல்லது சாம்பலுடன் சேர்த்து கலந்து பேப்பரில் காய வைத்துவிட வேண்டும். இவ்வாறு காய்ந்த விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும். விதைகள் முளைத்து 20 முதல் 25 நாட்கள் ஆனநாற்றுகளை வேறு பைகளுக்கு மாற்ற வேண்டும்.நாற்றுகளாக இருந்தால் அப்படியே நடவு செய்யலாம். நடும் இடைவெளியானது பைகளின் அளவை பொறுத்து மாறுபடும்.நாற்று நட்டவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும்.பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.பூச்சிகளிடமிருந்து காக்க அடுப்பங்கரை குப்பையிலிருந்து செய்யும் உரமும், பஞ்சகாவ்யா உரமும் போதுமானது. டீத்தூள், முட்டை ஓடு, மக்கிய காய்கறி கழிவுகளை உரமாக போடலாம்.செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காயவைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடிஉரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடிமண்ணைக் கொத்தி விடவேண்டும். மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது.தக்காளி நாற்றுகளை நட்டவுடன் அதன் அருகில் சிறிய கம்பு ஒன்றினை ஊன்றிவிட வேண்டும். செடி வளர்ந்ததும் கம்புடன் சேர்த்து கட்டிவிட வேண்டும். அப்பொழுது தான் காய்க்கும் பொழுது பாரம் தாங்காமல் செடி சாயாமல் இருக்கும்.நன்கு திரண்ட பழங்களை இரு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.
மாடித் தோட்டத்தில் சாகுபடி செய்யக்கூடிய காய்கறிகளில் பச்சை மிளகாயும் ஒன்று. எந்தவொரு உணவிலும் காரம் தேவைப்படுகிறது. இதற்கு பச்சை மிளகாய் அல்லது மிளகாய் தூள் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு முறையும் காய்கறி வாங்கும் போது 5 ரூபாய், 10 ரூபாய்க்கு பச்சை மிளகாய் கொடுங்கள் என கேட்கிறோம். மாடி தோட்டத்தில் அதை எளிதாக வளர்க்க முடியும் என்றால் 5 ரூபாயை கூட மிச்சப்படுத்தலாம். சரியாக பயிரிட்டு நோய் தாக்குதல் இன்றி வளர்த்து வந்தால்90 நாட்களில் பச்சை மிளகாய் அறுவடை செய்யலாம். பச்சைமிளகாய் செடியாக வளரும். இதற்கு மண் கலவை மிக முக்கியம்.15*12 அளவில் மண் தொட்டிபோதுமானது. பச்சை மிளகாய் வளர ஆரம்பிக்கும் முதல் வாரத்தில் சில களை செடி வளரும். இதை அவ்வப்போது அகற்றிட வேண்டும். பச்சை மிளகாய் வளர்ப்புக்கு20 விழுக்காடு செம்மண்,40 விழுக்காடு கோகோபீட்,40 விழுக்காடு உரம்கலவை தேவை.40 விழுக்காடு உரத்தில் மக்கிய மாட்டு உரம், மண் புழு உரம் அடங்கும். சூடோமோனாஸ் பயன்படுத்தி நோய், பூச்சி பாதிப்புகளை தவிர்க்கலாம்.பச்சைமிளகாய் வளர்ப்புக்கு பிரத்யேகமாக விதை வாங்க வேண்டிய தேவையில்லை. சமையலுக்கு பயன்படுத்தும் வர மிளகாய் இருந்தால் போதும். நீங்கள் குண்டு மிளகாயும் பயன்படுத்தலாம். ஒரு காய்ந்த மிளகாய் எடுத்து அதில் உள்ள விதைகளை எடுத்து மண் கலவையில் போட்டு மூடி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றுங்கள். பச்சை மிளகாயை வெயில் காலத்தில் வளர்ப்பது நல்லது. மழை காலத்தில் பச்சை மிளகாய் வளர்ப்பது சற்று கடினம்.ஒரு வாரத்தில் பச்சை மிளகாய் செடி ஓரளவு வளர்ந்திருக்கும்.4,5 செடிகள் வளர்ந்திருந்தால் அவற்றில் இரண்டை மட்டும் ஒரு தொட்டியில் வளருங்கள். மற்றதை வேறு தொட்டிக்கு மாற்றி விடவும். களை செடிகள் இருந்தால் நீக்கி விடுங்கள். பச்சை மிளகாய் செடி வளர மிதமான ஈரப்பதம் போதும். மண் காயும் நேரத்தில் மிளகாய் செடிக்கு தண்ணீர் ஊற்றினால் போதும். அதிக ஈரப்பதம் இலை சுருட்டல் பாதிப்பை ஏற்படுத்தும்.இலை சுருட்டல் பாதிப்பு வந்தால் சூடோமோனாஸ்10,15 மில்லி லிட்டரை ஒரு லிட்டர் தண்ணீரில்கலந்து செடியின் மீதும் வேரிலும் தெளிக்கவும். புளித்தமோர்இருந்தால்அதைஒருலிட்டர்தண்ணீருடன்கலந்துசெடியில்தெளித்தால்இளைசுருட்டலைதவிர்க்கலாம். புதியஇலைகள்நன்றாகவளரும்.90 நாட்களில் பச்சை மிளகாயை சாகுபடி செய்து சமையலுக்கு பயன்படுத்தலாம்.
விதைப்பு, பாசனம், அறுவடை இவை மூன்றும்தான் கீரை சாகுபடிக்கு முக்கியம். கீரை வளர்ப்பில் தொட்டியில் வைத்து வளர்ப்பது, தரையில் வளர்ப்பது என இரண்டுவகை உள்ளது. இதில் அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, சிவப்பு தண்டுக் கீரை, பச்சை தண்டுக் கீரை, பருப்புக் கீரை, காசினி கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி இவற்றைத் தொட்டியில் வளர்க்கலாம். புளிச்சக்கீரை, அகத்திக்கீரைகளை தரையில் வளர்க்கலாம்.தோட்டம்போட வசதிஇல்லாதவர்கள் ஒருபிளாஸ்டிக் சாக்கைஎடுத்து, அதில்பாதி அளவுக்குத்தென்னை நார்க்கழிவு உரத்தைநிரப்பி,அதில்10 கிராம் கீரைவிதையைத் தூவினால்போதும்,20 நாள்களில்கீரை கிடைத்துவிடும்.கீரைவிதைகள் மிகவும்சிறியதாக இருக்கும்,எனவே அதைவிதைக்கும்போது, மேலோட்டமாகத்தூவக் கூடாது,மண்ணுடன் நன்றாகக்கலந்துவிட வேண்டும்.பூவாளியைப் பயன்படுத்திதண்ணீர் விடுவதுநல்லது.மணத்தக்காளிகீரை நன்றாகப்படர்ந்து வளரக்கூடியது, எனவேஒரு தொட்டியில்ஒரு செடிவைக்கலாம். கீரைவிதை விதைத்து15 முதல்20 நாள்களுக்குள்சாகுபடி செய்துவிடலாம்.வீட்டுத்தோட்டத்தில் விளைந்தகீரைகளை அறுவடைசெய்யும் போதுமுழுதாகப் பிடுங்கவேண்டாம். பாலக்கீரையைகிள்ளக் கிள்ளவளரும். அதேபோலஅரைக்கீரை, சிறுகீரையைஅறுக்க அறுக்கவளர்ந்து கொண்டேஇருக்கும். கீரைகளுக்குவேப்பம்புண்ணாக்கை தண்ணீரில்ஊறவைத்து அந்தக்கரைசலை பூச்சிதொல்லைக்குபயன்படுத்தலாம்.1லிட்டர் தண்ணீரில்100 கிராம் புண்ணாக்குஎன்ற விகிதத்தில்கலந்து, அதுகரைந்த பின்அந்தக் கரைசலைஎடுத்து,அதனுடன் 10 மடங்கு தண்ணீர்சேர்த்துக் கலந்துசெடிகளுக்குத் தெளிக்கலாம். இதனால் பூச்சித்தொல்லைகள் இருக்காது.
.வெண்டி விதை நேர்த்தி செய்து, விதைகளை நடவு செய்ய வேண்டும். பையில் உள்ள ஊடகத்தின்(மண் அல்லது காயர் கம்போஸ்ட்) மீது விரலில் குழியெடுத்து விதைகளை ஊன்ற வேண்டும். ஒரு குழியில் இரண்டு விதைகள் ஊன்றலாம். நடவு செய்த ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத் துவங்கும். பத்து நாள்களில் நன்றாக முளைத்துவிடும். அந்தச் சமயத்தில் ஒவ்வொரு குழியிலும் நன்றாக வளர்ந்துள்ள ஒன்று அல்லது இரண்டு செடியை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு செடியைப் பிடுங்கி எடுத்துவிட வேண்டும். ஒரு பையில் ஒரு செடியை மட்டும் வைப்பது சிறந்தது. பெரிய பையாக இருந்தால் இரண்டு செடிகள் இருக்கலாம். அதற்கு மேல் அதிக எண்ணிக்கையில் ஒரே பையில் செடிகள் இருக்கக் கூடாது. நடவு செய்த30 முதல்35ம் நாள்களுக்குள் பூவெடுக்கத் தொடங்கும். அந்த நேரத்தில்10 லிட்டர் தண்ணீருக்கு300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும்.30ம் நாள் முதல்15 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து பஞ்சகவ்யாவைக் கொடுத்துவந்தால், இலைகள் அதிகமாக உருவாகும். அதிகப் பூக்கள் பூக்கும். பூவெடுத்ததிலிருந்து ஏழு நாள்களில் காய் உருவாகத்தொடங்கும். பிறகு ஒன்றரை நாள் இடைவெளியில் அறுவடைக்கு வரும். ஒருநாள் விட்டு ஒருநாள் காய் பறிக்கலாம்.வெண்டைக்காயைப் பிஞ்சாக இருக்கும்போது பறிக்கக் கூடாது. அதேபோல முற்றிய காயையும் பறிக்கக் கூடாது. சரியான முதிர்ச்சி அடையாத பிஞ்சுக்காய்களைத் தொடர்ந்து பறித்தால்100 நாள்கள் மகசூல் கொடுக்க வேண்டிய பயிர்,80 நாள்களில் தனது மகசூலை நிறுத்திக்கொள்ளும். வெண்டைக்காயின் கொண்டைக்கு மேலே, இரண்டு முதல் மூன்று அங்குல உயரத்தில் இருக்கும் காய்களைப் பறிப்பதுதான் சிறந்தது.வெண்டைக்காயைத் தாக்கும் பூச்சிகளில் சாறு உறிஞ்சும் பூச்சி, அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, செந்நாவாய் பூச்சி ஆகியவை முக்கியமானவை. அசுவினித் தாக்குதலுக்கு உள்ளான இலையின் அடிப்பாகம் சுருங்கியதுபோல இருக்கும். விளிம்பு மடங்கத் தொடங்கும். தத்துப்பூச்சித் தாக்குதல் இருந்தால் இலை மஞ்சள் நிறமாக மாறி, பிறகு பழுப்பு(பிரவுன்) நிறத்துக்கு மாறும். இலை, தீயில் வாட்டியதுபோலக் காணப்படும். இந்த இரண்டு பூச்சிகளையும் தடுக்க 5 சதவிகித வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிக்கலாம். நடவு செய்த20ம் நாள் முதல் ஒவ்வொரு25 நாள் இடைவெளியில் சாகுபடிக்காலம் முடியும் வரை வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளித்து வர வேண்டும்.வெண்டைக்காயைத் தாக்கும் மற்றொரு பூச்சி வெள்ளை ஈ. இது ஒருவகையான வைரஸ் கிருமியைப் பரப்பும்.இலை மஞ்சள் நரம்பு நச்சுயிரி நோய்’ என அதற்குப் பெயர். இந்த நோய் தாக்கப்பட்ட இலை முழுவதும் மஞ்சள் நிறமாகிவிடும். வெண்டி சாகுபடியில் அதிக பிரச்னையாக இருப்பது இதுதான். இதனால், அதிகளவில் மகசூல் பாதிப்பு ஏற்படும். இலை மஞ்சள் நரம்பு நோய் தாக்கிய இலைகளில் ஒளிச்சேர்க்கை நடைபெறாது. அதனால், செடிகளுக்கு உணவு கிடைக்காது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அந்த நோயைப் பரப்பும் ஈயை வேப்பெண்ணெய் கரைசல் மூலம் கட்டுப்படுத்தலாம். இருபது நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து5 சதவிகித வேப்பெண்ணெய்க் கரைசல் பயன்படுத்தி வந்தால், அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ இவை மூன்றையும் கட்டுப்படுத்தலாம். இலை மஞ்சள் நரம்பு நச்சுயிரி நோய் தாக்காத சில கலப்பின ரகங்களைச் சாகுபடி செய்வதன் மூலமும் இந்த நோயிலிருந்து வெண்டைச் செடியைக் காப்பாற்றலாம். செடியில் பூ உருவாகி, காய்கள் தோன்றும் நேரத்தில்தான் இலைகளில்`குளோரோஃபில்' அளவு அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில்தான் வெள்ளை ஈ வருகை இருக்கும். இந்த ஈ, பெரும்பாலும் களைச்செடிகளில்தான் இருக்கும். அதனால், பூவெடுக்கும் நேரத்தில் மாடித்தோட்டத்தில் களைச்செடிகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியமானது.வெண்டைக்காயில் காய்ப்புழுத்தாக்குதலும் இருக்கும். காய்ப்புழுத் தாக்குதலுக்குள்ளான வெண்டைக்காய்கள் வளைந்து, எட்டுபோல, அரைவட்டமாக வடிவம் மாறிக் காணப்படும். காய்களில் துளைகளும் இருக்கும். தாய் அந்துப்பூச்சி, இலையின் குருத்துகள், பூவிலிருந்து முளைக்கும் பிஞ்சுகளில் முட்டை போட்டுவிடும்.அதிலிருந்து வெளிவரும் புழுக்கள், தண்டின் உள்ளே போய், விதை உருவாகும் இடத்தில் உள்ள சதைகள் மற்றும் விதைகள் முழுவதையும் சாப்பிட்டுவிடும். தண்டுப்புழு மற்றும் காய்ப்புழு என அழைக்கப்பட்டாலும் இரண்டும் ஒரே புழுதான். டிரைக்கோகிரம்மா கைலானிக் முட்டை ஒட்டுண்ணி பயன்படுத்துவதன் மூலம் இதை கட்டுப்படுத்தலாம். வெண்டைக்காய்ச் சாகுபடி செய்யும் இடங்களில், மக்காச்சோளம் நடவு செய்தால் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். வெண்டைக்காயைத் தாக்கும் மற்றொரு நோய்,இலைச் சாம்பல் நோய்’. இந்நோய்த் தாக்குதலுக்குள்ளான செடிகளின் இலைகள், வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும். குளிர்காலங்களில் இந்நோய்த் தாக்குதல் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த திரவ வடிவ டிரைக்கோடெர்மாவிரிடி அல்லது சூடோமோனஸ் தெளிக்கலாம். மேலே சொன்னவை பொதுவான மேலாண்மைக்கான ஆலோசனைகள். ஆனால், நான் ஏற்கெனவே சொன்னதுபோல வேப்பெண்ணெய் கரைசலை வாரம் ஒருமுறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பெரும்பாலான பூச்சி, நோய் தாக்குதலிலிருந்து பயிர்களைப் பாதுகாத்து விடலாம். வெண்டை வீட்டுத்தோட்டத்தில் இருக்க வேண்டிய பயிர். தொடர்ந்து உணவில் பயன்படுத்தி வந்தால் சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளிட்ட பல வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கும். இதில் உள்ள செறிவூட்டப்பட்ட நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவை பல்வேறு அற்புதங்களைச் செய்யும் ஆற்றல் கொண்டவை.
ரோஜா செடி வளர்ப்பு பெரும்பாலும் அனைவரின் இல்லங்களில் அதிகரித்து காணப்படுகிறது. வீட்டு தோட்டம், மாடி தோட்டம் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக ரோஜா செடியை விதவிதமாக வாங்கி வளர்த்து வருகிறார்கள். இதில் ஒரு கிளையிலேயே நிறைய பூக்கள் பூக்கக்கூடிய தன்மை உண்டு. ஆனால் அதற்கு சரியான ஊட்டச்சத்து தேவை. பத்து பைசா செலவு செய்யாமல் ரேஷன் கோதுமையிலிருந்து வளர்ச்சியூக்கி உரம் தயாரிப்பது எப்படி?. ரேஷன் கோதுமையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உண்டு. பொதுவாக எல்லா விதமான கோதுமையிலும் உள்ள சத்துக்கள் வளர்ச்சி ஊக்கியாக நுண்ணுயிரிகளை பெருக்க செய்யக்கூடிய அற்புதமான தன்மையை கொண்டு விளங்குகிறது. நாம் ரேஷன் கடையிலிருந்து வாங்கி வைத்திருக்கும் கோதுமையில் இருந்து ஒரு கப் அளவிற்கு எடுத்தாலே 10 செடிகளுக்கு மேலே கொத்து கொத்தாக பூக்களை பூக்க செய்யக்கூடிய உரத்தை தயாரித்து விடலாம்.ஒரு கப் அளவிற்கு கோதுமையை எடுத்துக் கொள்ளுங்கள். நன்கு சுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றி5 மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். பிறகு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதுடன் சம அளவிற்கு நாட்டு சர்க்கரை அல்லது மண்டை வெல்லம் போட்டு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். கரைத்து வைத்த இந்த கரைசல் ஒரு வாரம் வரை புளிக்க வேண்டும். புளித்து, நுரைக்க ஆரம்பித்தால் அதில் ஏராளமான நுண்ணுயிரிகள் பெருக துவங்கும். இந்த நுண்ணுயிரிகள் தான் நம்முடைய மண்ணை வளமாக்க செய்கிறது. மண் வளமாகும் பொழுது வளர்ச்சி ஊக்கியாக செடிகளுக்கு அது செயல்படுகிறது. மண்புழுக்கள் உற்பத்தியை இது தூண்டி விடுகிறது. நீங்கள் தயார் செய்து வைத்துள்ள இந்த புளித்த கரைசல் அரை லிட்டர் அளவிற்கு எடுத்தால் அதனுடன்5 லிட்டர் அளவிற்கு சாதாரண தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.ஒரு லிட்டர் கரைசலுக்கு10 லிட்டர் தண்ணீர் நீங்கள் சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் செடிகளுக்கு அது நல்ல ஒரு உரமாக அமையும். நேரடியாக அப்படியேஊற்றி விடக்கூடாது எல்லாவிதமான ரோஜா செடிகளுக்கும் இந்த உரத்தை நீங்கள் பயன்படுத்தலாம்..15 நாட்களுக்கு ஒரு முறை எல்லா விதமான செடிகளுக்கும் தயார் செய்து வைத்துள்ள உரத்துடன் தண்ணீர் சேர்த்து அரை லிட்டர் அளவிற்கு மட்டும் செடிகளின் வேர்களில் உரமாக ஊற்ற வேண்டும். ரோஜா செடி மட்டும் அல்ல காய், கனி செடிகளுக்கும் இந்த உரத்தை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.பன்னீர் ரோஜா, காஷ்மீர் ரோஜா, பட் ரோஸ், பட்டன் ரோஸ் என்று எல்லாவிதமான ரோஜா செடிகளுக்கும் இந்த உரத்தை கொடுத்து வந்தால் கொத்து கொத்தாக கிளை முழுவதும் பூக்களாக பூத்து தள்ளும். அந்த அளவிற்கு நல்ல ஒரு வளர்ச்சியூக்கியாக செயல்படும். ரோஜா செடிகளில் போதிய அளவிற்கு சூரிய வெளிச்சம் படுமாறு பாதுகாக்க வேண்டும்.அதிகம் வெயில் இருக்கும் நேரங்களில் கூடுதலாக தண்ணீர் தெளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அல்லது இலைகளை, பூக்களை அவ்வபொழுது கத்தரித்து எறிய வேண்டும். ஒருமுறை கிளையில் நன்கு பூ பூத்து விட்டால் அந்த பூவை அப்படியே விட்டு விடக்கூடாது, பறித்து விட வேண்டும். இப்படி நீங்கள் உங்களுடைய செடிக்கு பராமரிப்பு கொடுத்து பாருங்கள், உங்க வீட்டு ரோஜா செடியும் மலர்ந்து தள்ளும்.
புதுமையான விவசாய அணுகுமுறைமூலம்பிரதீப் குமார் திவேதியின்40,000 விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது, குயினோவா, மோரிங்கா மற்றும் சியா போன்ற பயிர்கள் மூலம் வருமானத்தை அதிகரிக்கிறது. அவரது ஆண்டு வருமானம் ரூ.48 கோடி பயிர் சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மூலம் வருகிறது.உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த45 வயதான முற்போக்கு விவசாயி பிரதீப் குமார் உணவு அறிவியலில் பி.டெக் மற்றும் கான்பூரில் உள்ள எச்.பி.டி.ஐ.யில் இருந்து கெமிக்கல் இன்ஜினியரிங்கில் எம்.டெக்., அவரது கல்விப் பின்னணி அவரது வாழ்க்கைப் பாதையைப் போலவே ஈர்க்கக்கூடியது. உணவு, மருந்துகள், கெமிக்கல்ஸ், மூலிகை மற்றும்FMCG போன்ற தொழில்களில்R&D,ProductEngineering,QA,QC மற்றும் திட்ட மேலாண்மை ஆகியவற்றில்26 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், பிரதீப்பின் பயணம் புதுமைக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.அவர் நீண்ட காலமாக கார்ப்பரேட் உலகில் பணிபுரிந்தார், அதில் அவர் தனது எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கினார். புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் புகழ்பெற்ற தொழிலில், அவர் எவ்வளவு காலம் இந்த வழியில் வேலை செய்ய முடியும் மற்றும் இன்னும் எவ்வளவு காலம் தொடரலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார். இறுதியில், அவர் ஒரு ரிஸ்க் எடுக்க முடிவு செய்தார்,2010 இல் தனது வேலையை விட்டுவிட்டு, இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தினார். ஃபதேபூர் மாவட்டத்தில் மொத்தம்300 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மற்றும் ஒப்பந்த விவசாயத்தை தொடங்கினார். இந்த முயற்சி ஒரு வலுவான கல்வி மற்றும் தொழில்முறை பின்னணியில் நிறுவப்பட்டது.தென் அமெரிக்காவில் உள்ள பெருவுக்குச் செல்லும் வாய்ப்பு பிரதீப்பிற்கு கிடைத்தது. அவரது விஜயத்தின் போது, அவர் குயினோவாவை கண்டுபிடித்து இந்திய விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்த முடிவு செய்தார். அவர் ஃபதேபூரில் உள்ள பஹுவா கிராமத்தில் நான்கு விவசாயிகளுடன் குயினோவாவைத் தொடங்கினார், குயினோவா சாகுபடியின் லாபத்தை விளக்கினார். ஆரம்பத்தில் விவசாயிகளை நம்பவைத்து வாங்குபவர்களைக் கண்டுபிடிப்பது எளிதான வேலையாக இல்லை, ஆனால் அவரது விடாமுயற்சி பலனளித்தது. இன்று, அவர் ஆறு மாநிலங்களில்40,000 விவசாயிகளுடன் குயினோவா, சியா விதைகள், முள்ளங்கி, முருங்கை, ஆளிவிதைகள் மற்றும் பலவற்றை பயிரிடுகிறார்.விவசாயிகளுக்கு விதைகள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய செயலாக்கம் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதே அவரது வணிக உத்தியின் அடிப்படையாகும். விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொருட்களை வாங்குவதன் மூலமும் விற்பனையை தானே நிர்வகிப்பதன் மூலமும் சந்தை அணுகலின் முக்கியமான சிக்கலை அவர் சமாளிக்கிறார். கொத்து அடிப்படையிலான விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம், அவரது கூட்டுறவு அணுகுமுறை செயல்திறனை அதிகரிக்கிறது மற்றும் கூட்டு பேரம் பேசும் திறனை அதிகரிக்கிறது.பிரதீப்பின்R&D குழு விவசாயப் பொருட்களின் மதிப்பு கூட்டல் பணிகளில் ஈடுபட்டு வருவதால் அவற்றின் சந்தை மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. அவரது குழு, உடனடி கரும்பு சாறு என்ற புதுமையான தயாரிப்பை உருவாக்கியுள்ளது. உடனடி தூளில் இருந்து கரும்பு சாற்றை உட்கொள்ளும் புதுமையான வழிகளில் ஒன்று, அதை தண்ணீரில் கலந்து, இரசாயனங்கள் இல்லாமல் ஆண்டு முழுவதும் உட்கொள்ளலாம்.அவர் தனது பயணத்தை ஆண்டுதோறும் 5 லட்சம் விற்றுமுதலுடன் இன்று தொடங்கினார், இப்போது அவரது வணிகம் சுமார்48 கோடி வர்த்தகத்தை கொண்டுள்ளது. அவரது முயற்சியின் விளைவாக நொய்டாவில் குயினோவா பால் ஆலை நிறுவப்பட்டது, இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முதல் முயற்சியாகும்.இந்திய அரசின் வேளாண்மை அமைச்சகத்தின்ICAR வழங்கும் சிறந்த தொழில்முனைவோர் விருது.(2016).உ.பி. அரசாங்கத்தின் விவசாய அமைச்சகத்தால் இயற்கை வேளாண்மைக்கான சிறந்த விவசாயி விருது.(2017).இந்திய அரசின் உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தின் சிறந்த புதுமையான ஆர்கானிக் தயாரிப்பு உற்பத்தி விருது. (2018).இந்திய அரசாங்கத்தின் உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தால் உணவு பாதுகாப்பு விருது.(2018) என்ற சிறந்த ஆர்கானிக் பணப்பயிர்.சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சிறந்த இயற்கை விவசாயி விருது. (2021).பிரதீப் பல்வேறு மூலிகைகள் மற்றும் கரிம உணவுகள் குறித்து கிட்டத்தட்ட155 சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். குயினோவாவை பயிரிடுவதன் மூலம் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு என்ற புத்தகத்தை அவர் எழுதியுள்ளார், இது குயினோவா ஒரு நிலையான பயிராக இருப்பதைப் பற்றிய சில நுண்ணறிவுகளை வழங்குகிறது.விவசாயிகளுக்கு பிரதீப்பின் செய்தி எப்பொழுதும் பல பயிர்கள் மற்றும் அதிக தேவையுள்ள குயினோவா மற்றும் மோரிங்கா போன்ற பயிர்களை கொண்டு வர வேண்டும், அரசு மற்றும் தனியார் துறை ஆதரவு அமைப்புகளுடன் பொறுமையாக இருக்க வேண்டும், மீதமுள்ளவை குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்புகள் அல்லதுMVP களை உருவாக்குவது பற்றியது. அவற்றை வைத்து இவற்றில் தேர்ச்சி பெறுகிறது.பிரதீப் குமார் த்விவேதியின் கார்ப்பரேட் நிபுணரிலிருந்து கரிம முன்னோடிக்கான பாதை படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்பின் கதை. அவரது முயற்சிகள் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, நீடித்த விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பின் இந்தியாவின் பெரிய நோக்கங்களை முன்னேற்றுகின்றன.