25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வேளாண்மை

Oct 15, 2024

மழைக்காலத்தில், பூஞ்சான் நோய் தாக்கம்

மழைக்காலத்தில், பூஞ்சான் நோய்களான வேர் அழுகல், செடி கருகுதல் மற்றும் வைரஸ் நோய்களின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க, பயிர் செய்வதற்கான கலவையைத் தயார் செய்யும்போதே டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் போன்ற நுண்ணுயிர்க் கொல்லிகளைச் சேர்த்துக் கலக்க வேண்டும். அப்படிச் செய்தால் பூஞ்சிண நோய்களிலிருந்து தாவரங்களைப் பாதுகாக்கலாம்.ஒரு பைக்கு100கிராம் வேப்பம்புண்ணாக்கு,10சதவீதம் மாட்டுக் கோமயம் என்ற விகிதத்தில் கலந்து செடிகளின் மீதும் தெளிப்பது இயற்கை முறையில் நோய்களைக் கட்டுப்படுத்தும் இன்னொரு வழிமுறை.வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகளில் மஞ்சள் நிறத் திட்டுகள் காணப்படும். அவற்றை உடனடியாக வேருடன் நீக்கிவிட வேண்டும்.இந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் மாடித்தோட்டச் செடிகள் பூச்சி, நோய் தாக்குதலில் சிக்குவதிலிருந்து இயற்கை முறையிலேயே அதிகச் செலவில்லாமல் தாவரங்களைப் பாதுகாக்கலாம்

Oct 08, 2024

செங்குத்து தோட்டம்(Vertical Garden)

நகரங்களில் ஏற்படும் இட நெருக்கடிக்கு இந்த செங்குத்துத் தோட்டம் தீர்வாக அமையும். அதே சமயம் மக்கும் கழிவுகளுக்கும் இது தீர்வாக அமையும். பல்வேறு முறைகளை பார்த்ததில் இந்த பை முறை சற்று எளிமையாக இருப்பதோடு குறைந்த செலவில் இதனை உருவாக்க முடியும். சாதாரணமாக குறைந்த உயரத்தில் செடிகளை வளர்க்கும் போது அதிக பட்சம் 4 அல்லது 5 செடிகளை மட்டுமே வளர்க்க முடியும். உயரம் அதிகமான இந்த பையில் பக்கங்களில் துளை செய்து குறைந்தது 20 முதல் 25 செடிகள் வளர்க்கலாம். குறிப்பாக பாலக்கீரையை சிறப்பாக வளர்க்கமுடியும். உங்கள் பார்வைக்காக சில புகைப்படங்கள்.செங்குத்துத் தோட்டதிற்கு பை தயாராகிறதுஇளம் நாற்றுக்கள்நன்கு வளர்ந்த நிலையில் கீரைகள்மேற்பகுதியில் 4 அல்லது 5 செடிகள் மட்டுமே வளர்க்க இயலும்.செங்குத்து நிலையில் 20 முதல் 25 செடிகள் வளர்க்க இயலும்.

Oct 01, 2024

அதிர்ஷ்ட தாவரம் லக்கி பாம்பூவை வீட்டில் வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

புதிதாக வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரப்படி எந்த மூலையில் சமையல் அறை இருக்க வேண்டும், படுக்கை அறை எந்தப் பக்கம், வாட்டர் டேங்க் எந்தப்புறம் என ஒவ்வொன்றையும் சாஸ்திரப்படி பார்த்துப் பார்த்து அமைத்து வீட்டைக் கட்டுவது வழக்கமாக உள்ளது. வீட்டைக் கட்டி முடித்த பின் உள்அலங்காரமாக பல வகையான நவீன விளக்குகள், இருக்கைகள் என பலவற்றையும் வாங்கிப் பயன்படுத்துகின்றோம்.இதற்கிடையில் வீட்டிற்குள் குளிர்ச்சி தர, காற்று மாசை சுத்தப்படுத்த, அஷ்ட லட்சுமிகளையும் அழைத்து வர என பல்வேறு காரணங்களுக்காக, குறைந்த அளவு பராமரிப்பிலேயே நன்கு வளரக்கூடிய வாஸ்து செடிகளையும் அழகாக வரிசைப்படுத்தி வளர்த்து வருவது ட்ரெண்டிங்காக உள்ளது. அவ்வாறான செடிகளில் மிகுந்த அதிர்ஷ்டம் தரக்கூடியதாகக் கருதப்படுவது மூங்கில் செடி. இந்த லக்கி பாம்பூவை (Lucky Bamboo) வீட்டில் வளர்ப்பதால் நன்மைகள் லக்கி பாம்பூ எந்த சூழலையும் தாங்கி வளைந்து கொடுத்து வளரும் குணம் கொண்டது. இருக்கும் இடத்திற்கு அழகு தரக் கூடியது. வீட்டில் உள்ளவர்களின் வளமான வாழ்வுக்கும் இதன் வளர்ச்சிக்கும் தொடர்பு உள்ளதாக நம்பப்படும் அபூர்வ தாவரம் இது. குறைந்த அளவு பராமரிப்பிலேயே தான் இருக்கும் இடத்திற்கு நேர்த்தியான அழகும் நளினமும் சேர்க்க வல்லது.இந்த மூங்கில் பிளான்ட் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதோடு, வீட்டிற்கு உகந்த நேர்மறை சக்தியையும் அளிக்கக் கூடியது. இதை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பதால் வீடு நிறைவான சமநிலை பெற்றுத் திகழும்.இந்த செடிக்கு அவ்வப்போது சிறிது தண்ணீர் விட்டு குறைந்த வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் வைத்து, குறைந்த அளவு கவனிப்பு தந்தாலே அது நன்கு வளர்ந்து நிறைந்த நன்மைகளைத் தரும்.இந்த லக்கி பாம்பூ வெளிக்காற்றில் கலந்து வரும் மாசுக்களையும் கிருமிகளையும் வடிகட்டி சுத்தமான காற்றை மட்டும் வீட்டுக்குள் வர உதவும். இதனால் வீடு அதிகளவு ஆரோக்கியம் நிறைந்த காற்றினால் நிரப்பப்பட்டு வீட்டிற்குள் நல்லதொரு சூழல் உருவாகும்.இதன் அடர் பச்சை நிறம் கொண்ட தோற்றம் மனதை அமைதிப்படுத்தும்; மன அழுத்தத்தைக் குறைத்து உடலை தளர் நிலைக்குக் கொண்டு செல்லும். இதனால் ஒரு தெய்வீகமான அமைதி நிறைந்த சூழல் வீட்டிற்குள் உருவாகும் வாய்ப்பு உண்டாகும். எந்த மாதிரியான உள் அலங்காரத்திற்கும் உகந்தது லக்கி பாம்பூ. அதன் அழகும், நேர்த்தியும், பார்ப்போரைத் தன் பக்கம்  கவர்ந்திழுக்கும் குணமும் அது வீட்டினுள் எந்த இடத்தில் வைக்கப்பட்டாலும் அந்த இடத்தை அமைதியும் அழகும் நிறைந்ததாக மாற்றிவிடும்..நம் வீட்டிலும் அழகும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கும் லக்கி பாம்பூவை வளர்ப்போமே.!

Sep 24, 2024

குட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்புக் கலை

 போன்சாய் என்னும் குட்டைச் செடிகளின் வளர்ப்புக் கலையானது ஜப்பானில் 13 – ஆம் நூற்றாண்டில் தோன்றி இன்று உலகமெங்கும் பரவிக் காணப்படுகிறது. ஜப்பானிய மொழியில் “போன்” என்றால் “ஆழமற்ற தட்டுகள்” என்னும் “சாய்” என்றால் “செடிகள்” என்றும் பொருள்படும். மற்றும் போன்சாய் கலை மூலம் 100 முதல் 200 வயதான மரங்களையோ, செடிகளையோ கூட தொட்டிகளில் வளர்க்க முடியும். பொதுவாக போன்சாய் செடிகளின் வயது கூடும் போது, விலை மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.நகர மக்களின் செடி மற்றும் மரம் வளர்க்கும் ஆவலை போன்சாய் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம். செடிகளை வளர்ப்பதற்கு போதிய இடவசதி இவர்களுக்கு இல்லை. குறுகிய இடங்களிலேயே ஓரளவு முயற்சி செய்தாலே போன்சாய் செடிகளை வளர்க்கலாம். வீட்டு மாடிகளிலும் இவற்றை வைத்துப் பராமரிக்கலாம். வரவேற்பு அறைகளில் வைப்பதற்கு உகந்த அழகிய பூக்கும் மரங்களையும், பூஜை அறையில் வைப்பதற்கு ஏற்ற ஆழ் மற்றும் வேல் போன்ற மரங்களையும், சாப்பாட்டு அறையில் விரும்பி வைக்கப்படும் அழகிய பூக்கும் சிறு மற்றும் பெரு மரங்களையும் இந்தக் குட்டைச் செடிகள் வளர்ப்புக் கலையின் மூலம் எளிதாகப் பராமரிக்கலாம். மேலை நாடுகளில் இருப்பது போன்று நமது நாட்டிலும் முக்கிய நகரங்களில் போன்சாய் வளர்ப்போர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அழகுக் கலையாகத் தோன்றி போன்சாய் கலையானது இன்று வணிக ரீதியாக வருமானம் கொடுக்கும் தொழிலாகவும் மாறி வருகின்றது. பாறை வெடிப்புகளிலும் பாழடைந்த கட்டிடங்களின் சுவர்களிலும் இயற்கையாக வளரும் செடிகள் இயல்பாகவே குட்டையாகக் காணப்படும். இது போன்ற செடிகளின் குட்டைத் தன்மையை எளிதாகப் பயன்படுத்தி போன்சாய் செடிகளாக மாற்றி விடலாம். மேலும் நாற்றுப் பண்ணைகளில் தொட்டிகளில் நீண்ட நாட்கள் விற்பனையாகாமல் வைக்கப்பட்டிருக்கும் செடிகளும் குட்டையாக வளர்ந்து, முதிர்ந்து காணப்படும். இது போன்று குட்டையாக வளரும் செடிகளை சேகரித்து போன்சாய் கலைக்குப் பயன்படுத்த வேண்டும்.பொதுவாக சிறிய, குறுகலான இலையுதிராத தன்மை கொண்ட மரம் மற்றும் செடி வகைகளே போன்சாய்க்கு மிகவும் உகந்தவை. கனிகள் மற்றும் மலர்கள் கொடுக்கும் மரங்கள் மற்றும் செடிகளை போன்சாய் செய்யும் போது அழகும், மதிப்பும் கூடுதலாக இருக்கின்றன. பழமரங்களில் மாதுளை, சப்போட்டா, ஆரஞ்சு, அத்தி, புளி ஆகியனவும், பாலைவன ரோசா, போகன்வில்லா, குல்மாகர் ஆகிய தாவரங்களும் , வேம்பு, இலுப்பை, வாகை, ஆல், அரச மரம், புங்கம் ஆகிய மரங்களும் பைன், ஜப்பான் டேபிள், பீச், ஆப்ரிகாட், ரோடா டெண்டிரான், சைப்ரஸ் ஆகிய பிரதேச மரவகைகளும் போன்சாய் கலைக்கு மிகவும் ஏற்றவை.செடி வெட்டும் கத்திரி, அலுமினியம் மற்றும் தாமிரக் கம்பி, கம்பி வெட்டும் கத்தி, குறடு, மண் அள்ளும் கரண்டி போன்ற கருவிகள் போன்சாய் வளர்ப்பில் பெரிதும் பயன்படுவனவாகும். பல்வேறான ஆழமில்லாத பூந்தொட்டிகள் போன்சரய் வளர்ப்புக்குத் தேவைப்படுகின்றன.போன்சாய் வளர்ப்புக்குத் தேவையான பொருத்தமான தொட்டிகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானதாகும். செடிகளின் வடிவங்களுக்கேற்ப முக்கோணம், செவ்வகம், வட்டம், நீண்ட வட்டம் போன்ற வடிவுள்ள ஆழமற்ற தொட்டிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் தொட்டிகளின் உயரம் 15 செ.மீ க்கு மிகாமல் இருக்க வேண்டும். போன்சாய் செடிகளின் வண்ணத்தோடு ஒத்துப்போகும் வகையில் நீலம், கெட்டிப் பச்சை,கரும் பழுப்பு போன்ற நிறமுடன் கூடிய தொட்டிகளையே பயன்படுத்த வேண்டும் அல்லது தேவையான வடிவமுள்ள மண்தொட்டிக்கு பொருத்தமான வர்ணம் பூசியும் இதற்குப் பயன்படுத்தலாம்.போன்சாய் வளர்ப்புக்குத் தொட்டிகளின் அடிமட்டத்தில் உள்ள துளையில் கம்பி வலை அல்லது உடைந்த மண்தொட்டி துண்டு கொண்டு அமைத்து அதிகப்படியான நீர் மட்டும் வெளியேறுமாறு வைக்க வேண்டும். தொட்டிகளில் முதலில் ஒரு வரிசை சிறிய உடைந்த செங்கல் துண்டுகளை வைத்து அதன் மேல் மண் இருபாகம் , மக்கிய சாணம் ஒரு பாகம் மற்றும் இலை மட்கு ஒரு பாகம் என்ற அளவில் கலந்து நிரப்ப வேண்டும். தொட்டி கலவை நிரப்பிய பின்னர் இத்தகைய தொட்டிகளின் செடியை மாற்றி நட வேண்டும். செங்கல், கருங்கல் துண்டுகள் போன்றவற்றையும் எடுத்து நடுவில் போதிய அளவு தோண்டிய பின்னர் மண் கலவை நிரப்பியும் போன்சாய் செடிகளை வளர்க்கலாம்.போன்சாய் செடிகளைப் பல்வேறு வடிவங்களில் வளர்க்கலாம். குடை வடிவம், சாய்ந்த வடிவம், நீர் வீழ்ச்சி வடிவம், ‘எஸ்’ போன்ற ஆங்கில எழுத்து போன்ற வடிவம் ஆகியவை இவற்றுள் அடங்கும். போன்சாய் மரச் செடிகளைத் தனி மரமாகவும், இயற்கைக் காடுகள் போன்று திட்டமாகவும் வளர்க்கலாம். குடை போன்ற வடிவத்தில் செடிகளைப் பயிற்சி செய்வதற்குக் கிளைகளின் நுனிப் பகுதியில் சிறிய கற்களைக் கட்டித் தொங்க விட வேண்டும். தேவையான வடிவங்களை உருவாக்க தாமிரம் அல்லது அலுமினியக் கம்பிகளைக் கொண்டு கிளைகள் மீது சுற்றி ஏற்ற வடிவங்களில் கிளைகளை மாற்றலாம். சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை கம்பிகளை அப்படியே விட்டு வைத்துப் பின்னர் அகற்றி விட வேண்டும். அப்போது கிளைகள் அந்த வடிவத்திலேயே இருக்கும்.செடிகளை மிகவும் குட்டையாக வளர்ப்பது மிகவும் முக்கியமானதாகும். வளரும் நுனிகளை வாரத்திற்கொருமுறை கிள்ளி விடுவதன் மூலம் உயரம் இரண்டு அடிக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வளர்ச்சிக் குறைப்பான்களான சைக்கோசெல் அல்லது பி.ஏ போன்ற இரசாயனங்களை லிட்டருக்கு 4 மிலி என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலமும் செடிகளைக் குட்டையாக்க முடியும். மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கொருமுறை செடிகளை புதிய தொட்டிகளில் மாற்ற வேண்டும். தொட்டிகளை மாற்றுவதை சூன் – சூலை மாதங்களிலேயே செய்ய வேண்டும். இது சமயம் கூடுதலாக வளர்ந்துள்ள மற்றும் காய்ந்து போன வேர்கள், கிளைகள் அனைத்தையும் வெட்டி அகற்றி விடுதல் வேண்டும்.போன்சாய் செடிகளுக்கு போன்சாய் வளர்ப்புக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உரக்கலவைகளையே பயன்படுத்த வேண்டும். போன்சாய் செடிகள் மிகவும் சிறிய தொட்டிகளில் வளர்க்கப்படுவதால் மாதம் ஒரு முறை கடலை பிண்ணாக்கு மற்றும் வேப்பம் பிண்ணாக்கை ஊற வைத்த கரைசலை ஊற்ற வேண்டும். புதிய தொட்டிகளில் மாற்றிய ஒரு மாதம் வரை எந்த விதமான இரசாயன உரமும் இடக்கூடாது. கோடையில் தினம் இருமுறையும் இதர பருவங்களில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இடைவெளியிலும் தேவைக்கேற்ப நீர் விட வேண்டும்.                             

Sep 17, 2024

வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள், மழைக்காலங்களில் செடிகள் நன்கு செழிப்பாகவும், பாதுகாப்பாகவும் இருக்க….

மழைநீர் மரம், செடி, கொடிகளுக்கு மிகவும் அவசியம் என்றாலும் அந்த மழைநீர், தேவைக்கு அதிகமான அளவு மரங்களின் வேர் பகுதிகளில் தேங்கி நிற்கும் அளவிக்கிற்கான சூழ்நிலையை  ஏற்படுத்தி கொடுத்து விடக் கூடாது. ஏனெனில் மழை பொழியும் சமயங்களில், அந்த மரத்திற்கு அடியில் இருக்கின்ற மண்ணின் அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தையும் மழைநீர் அடித்துக் கொண்டு சென்றுவிடும். எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே உங்கள் தோட்டங்களில் இருந்து மழைநீர் முழுவதும் வெளியேறும் வகையில் வடிகால் அமைப்பை ஏற்படுத்தி வைக்க வேண்டும். ஒரு சில வகை மரம், செடி கொடிகளில் கிளைகள் மிக அதிக அளவில் வளர்ந்து புதர் போன்று காட்சியளிக்கும். அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில் செடிகளின் வளர்ச்சி அதி வேகமாக இருக்கும். எனவே மழைக் காலங்களுக்கு முன்பாகவும், மழைக்காலங்களின் பொழுதும் உங்கள் தோட்டங்களில் இருக்கின்ற செடி, கொடிகளில் உங்களுக்கு தேவையில்லை என்றும் நீங்கள் கருதுகின்ற மரம், செடிகளின் கிளைகளை வெட்டி விட வேண்டும். இது ஊட்டம் நிறைந்த புதிதான கிளைகள் நன்கு வளர்வதற்கு உதவி புரியும்.மனிதன் முதன் முதலில் விவசாயம் செய்யத் தொடங்கிய காலத்திலிருந்தே அவனது விவசாய தொழிலுக்கு மிகவும் உற்ற நண்பனாக இருந்து வருவது மண்ணிற்கு அடியில் வாழும் உயிரினமான மண்புழு ஆகும். மழைக்காலங்களில் செடிகள் வளருகின்ற மண் பரப்பு சுலபத்தில் தளர்ந்து விடுவதால், மண்புழுக்கள் மண்ணிற்குள்ளாக ஆழமாக ஊடுருவிச் சென்று, செடிகள் வளருகின்ற அந்த மண்பகுதியை, செடிகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் நிறைந்ததாக மாற்றுகிறது. மண்புழுக்கள் அதிகம் இல்லாத மண்ணாக இருந்தாலும், மண்புழு கொண்டு செய்யப்பட்ட மண்புழு உரங்களை செடிகளின் வேர்ப் பகுதிகளில் இடுவதால் செடிகள் இந்த மழைக் காலங்களில் மிக சீரான வளர்ச்சியை அடைவதற்கு ஏதுவாக இருக்கும்.களைச்செடிகள் மழைக்காலத்தில் அதிகமாக வரக்கூடியதாகும். எனவே தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் செடிகள் , ஆரோக்கியமாக வளர்வதற்கு இத்தகைய களைச்செடிகளை மழைக்காலத்திற்கு முன்பாக வேருடன் பிடுங்கி அவற்றை அப்புறப்படுத்துவது நல்லது. இந்த களை செடிகள் உங்கள் செடிகளுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி எடுத்துக்கொண்டு உங்கள் செடிகளுக்கு கிடைக்கவேண்டிய சத்துக்களை கிடைக்கவிடாமல் செய்துவிடும்.எந்த ஒரு வகை செடி, கொடி வளர்வதற்கும் சூரிய வெளிச்சம் இன்றியமையாததாகிறது. மழைக்காலங்களில் இத்தகைய சூரிய வெளிச்சம் அதிக அளவில் கிடைக்காத நிலை ஏற்படும். தங்களின் வீடுகளுக்கு உள்ளே உள்ள  தொட்டிகளில் அலங்கார மற்றும் இதர வகையான செடிகளை வளர்ப்பவர்கள் சூரிய ஒளி கிடைக்காத பட்சத்தில், செயற்கையான மின்சார விளக்கு வெளிச்சத்திற்கு கீழாக அந்த செடிகள் சில மணி நேரமாவது இருக்குமாறு செய்ய வேண்டும். தொட்டிகளில் வளருகின்ற செடிகள் செயற்கையான மின்விளக்கிலிருந்து தேவையான சத்துக்களை பெற்று கொள்ளும் திறனை கொண்டிருக்கிறது. உங்கள் வீட்டு தோட்டங்களில் வளருகின்ற செடிகளுக்கு அருகிலோ அல்லது மாடி தோட்டங்களில் தொட்டிகளில் வளர்க்கப்படுகின்ற செடிகளுக்கு அருகிலோ மழை பெய்து முடிந்ததும், அந்த மழை நீர் தேங்காமல் விரைவில் அப்புறப்படுத்தி விட வேண்டும். ஏனெனில் இத்தகைய நீரில் பல வகையான பாசிகள் படர்ந்து வளர வாய்ப்புகள் அதிகம். பாசிகள் செடிகளின் வளர்ச்சிக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்தும் ஒன்றாக மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். எனவே பாசிகள் படியாத வண்ணம் பார்த்து கொள்வது செடிகளுக்கு நாம் வளர்க்கும் நன்மைகளை உண்டாகும்.

Sep 10, 2024

மழைக்காலத்தில் செடிகள் செழிப்புடன் வளர்வதற்கு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள். 

மழை மண் வளத்திற்கும், மரம் செடி வளர்ச்சிக்கும் இயற்கையின் கொடை இருந்தாலும் மழைக் காலத்தில் மாடித்தோட்டத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.மழைக்காலத்தில் செடிகளின் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் தேங்கி நிற்கும். அப்படி பூந்தொட்டியில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனே வெளியேற்றிவிட வேண்டும்.பிளாஸ்டிக் வாளியில் செடி வைத்தால், அதில் துளை இட வேண்டும். செடிகளுக்கு ஊற்றும் தண்ணீரில் தேவைக்கு அதிகமான தண்ணீர் வடிய இந்தத் துவாரங்கள் அவசியம் .தண்ணீர் வெளியேற முடியாத அளவுக்கு ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அதனை உடனே சீர்படுத்த வேண்டும்.இந்த பருவத்தில் பூஞ்சை தாக்குதல்கள் அதிகம் என்பதால் 10-15 நாட்களுக்கு ஒருமுறை வேப்ப எண்ணெய் போன்ற பூஞ்சைக் கொல்லியைப் பயன்படுத்தலாம்.ஆடி மாதத்தில் காற்றும் பலமாக இருக்கும் என்பதால் மரக்கிளைகளை கொண்டு பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டும் இந்த காலத்தில் கண்டிப்பாக செடிகளுக்கு கூடுதலாக தண்ணீர் ஊற்ற வேண்டாம். இது செடிகள் அழுகுவதற்கு வழிவகுக்கும்.நிறைவாக இந்த பருவம் இறுதிவரை ஒவ்வொரு நாளும் செடியின் இலைகள், தண்டுகள் ஆரோக்கியமாக இருக்கிறதா என பார்ப்பது, அவற்றை அழுகாமல் பாதுகாக்கும்.

Sep 03, 2024

சித்திரையில் உழவடிச்சா வருஷம் முழுசும் விவசாயம் செழிக்கும்.மானாவாரியில் மகத்தான மகசூல்

 தமிழகத்தில் மொத்த விவசாயப் பரப்பில் பெரும்பாலானவை மானாவாரி நிலப்பகுதிகள்தான். சித்திரை மாதம் என்பது மானாவாரி விவசாயிகளுக்கு விவசாய வேலைகளைத் தொடங்குவதற்கான தலை மாதம். ஆண்டு முழுவதும் நல்ல மகசூல் கிடைக்க வேண்டுமென்று சித்திரையின் முதல் நாள் உழுவது ஒரு மரபு உழவுத் தொழில் ஒரு வேலையைப்போல் இல்லாமல் ஒரு விழாவாகவே நடக்கும். இதை `சித்திரை ஏர் பூட்டுதல்' எனவும், பொன்னேர் பூட்டுதல்' எனவும் சொல்வார்கள்தமிழ்ப் புத்தாண்டின் தலை மாதமான சித்திரையில்  உழவு செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்பது நம்பிக்கை அதனாலேயே ”சித்திரை மாத உழவு, பத்தரை மாற்றுத் தங்கம்" எனவும் சொல்வார்கள் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள குருவார்பட்டி கிராமத்தில் சித்திரை முதல் நாளன்று பொன்னேர் உழவு நடைபெற்றது.பொன்னேர் உழவு குறித்து அயன்வடமாலாபுரத்தைச் சேர்ந்த கரிசல் பூமி விவசாயிகள் கூறும்போது சித்திரையில மழை பெய்ஞ்சா பொன் ஏர் கட்டலாம்னு கிராமத்தில் சொல்வடையே இருக்கு சித்திரை மாசப் பிறப்பு நாளில் முதல் நிலத்தை உழுவோம்.மாடுகளைக் குளிப்பாட்டி, பொட்டு வச்சு மாலை போட்டு, வீட்டில் சாணி மொழுகி, விளக்கேற்றி மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதுல அறுகம்புல் செருகி வைப்போம். நாழி நிறைய நெல்லு வச்சு தேங்காப்பழம் உடைச்சு மாடுகளுக்கும். ஏர்கலப்பைக்கும் சாம்பிராணி காட்டி, தோள்ல ஏரைத்தூக்கிக்கிட்டு கையில மாட்டையும் பிடிச்சுக்கிட்டு ஊர்க்காளியம்மன் கோயிலுக்கு முன்னால் கொண்டு வந்து மாடுகளை நிப்பாட்டி ஏர்கலப்பையை கோயில் வாசல்ல ஒண்ணுபோல வரிசையா வச்சிடுவோம் ஒவ்வொரு வீட்டுலயும் அவரவர் வீடுகளில் கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகுனு என்ன விதை இருக்கோ, அதுல ஒரு கைப்பிடி விதையை ஓலைப்பெட்டியில சேகரிச்சு ஊர்க்கோயிலில் விதைப் பெட்டியை வச்சு சாமி கும்பிடுவோம். எல்லா விவசாயிகளோட ஏர்கலப்பைக்கும் மாடுகளுக்கும் மஞ்சள் தண்ணீர் தெளிச்சு, சூடம் காட்டினதும், ஒவ்வொரு ஜோடி மாடுகளும் ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணா வரிசையாப் போய், கோயிலுக்குப் பாத்தியப்பட்ட நிலத்துல வரிசையா ஏர்பூட்டி நிற்போம் சாட்டைக்குச்சி, களைக் கொத்துவான் கலப்பை ஆகியவற்றை நிலத்தில் இரு இடத்துல வச்சுட்டு சூரிய பகவானை  நோக்கி சாமி கும்பிடுவோம்.பிறகு, ஊரிலுள்ள வயதான விவசாயி ஒருவர் களைக் கொத்துவானை எடுத்து விவசாயிகளிடம் கொடுக்க, ஆளுக்கு 3 களைச் செடிகளைக் கொத்தி எடுப்பார்கள். பிறகு. அவரவர் கலப்பையை எடுத்து ஏர்பூட்டி, அன்றைய நாளில் வடக்கு சூலமாக இருந்தால்  தெற்கு நோக்கியும், தெற்கு சூலமாக இருந்தால் வடக்கு நோக்கியும் உழவு செய்வோம் இப்படி நல்ல நேரம்  திசை பார்த்து உழவு செய்வதால்  நல்லேர் பூட்டுதல்'னு சொல்வோம். உழவு செய்ததும் அந்த வயதான விவசாயி விதைகளை அப்படியே பரவலாக   தூவி விதைப்பார்.பிறகு, மாடுகளை அங்கிருந்து விரட்டி விடுவோம். அதில் வெள்ளை நிற மாடு வேகமாக ஊருக்குள் ஓடி வந்தால் அந்த வருஷம் பருத்தி, வெள்ளைச் சோளம் ஆகிய வற்றின் மகசூலும், செவலை நிற மாடுகள் வேகமாக ஓடி வந்தால் வத்தல், துவரை, சிவப்புச் சோளம் ஆகியவற் றின் மகசூலும் அதிகரிக்கும்னு எங்களுக்கு ஒரு நம்பிக்கை. வீட்டுக்கு வந்த மாடுகளுக்கு பருத்தி விதை, புண்ணாக்கு, வைக்கோல், புற்கள் ஆகியவற்றை மகிழ்ச்சியில் வழக்கத்தைவிட கூடுதலாகக் கொடுப்போம்ஊருக்குப் பொதுவான நிலத்தில் உழுதுவிடும் விவசாயிங்க அவரவர்கள் சொந்த நிலத்துலயும் உழுதுட்டு வீட்டுக்கு வருவோம் உழவுக்குப் போன வீட்டு ஆம்பள களைப்போட வீட்டுக்கு வரும் போது களைப்பு தீர மோர், பானக்கம்னு ஏதாவது குடிக்கக் கொடுப்பாங்க. இது இன்னைக்கு நேத்து இல்ல ரொம்ப வருசமாவே நடக்குது. . சித்திரையில் உழவடிச்சா வருஷம் முழுசும் விவசாயம் செழிக்கும்னு எங்களுக்கு நம்பிக்கை "என்றார்

Aug 27, 2024

விதை பரிசோதனையே விளைச்சலுக்கு ஆதாரம்.

விதைப்பரிசோதனை என்பது புறத்துாய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன், பிற  ரக  கலப்பு போன்றவற்றை ஆய்வு செய்வதே.விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் விதைப் பரிசோதனைநிலையங்கள் செயல் படுகின்றன.விவசாயிகள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோர் தங்களிடம் உள்ள விதைகளின் தரம் பற்றி அறிந்து கொள்ள ஒரு விதை மாதிரிக்கு ரூ.80 கட்டணம் செலுத்த வேண்டும். விதை மாதிரி பெற்ற 30 நாட்களுக்குள் விதையின் தரம் குறித்த அறிக்கையை பெறலாம்.குறைந்த தரம் உள்ள விதைகளை நிராகரிக்க விதைப் பரிசோதனை முடிவுகள் உதவுகின்றன. நல்ல முளைப்புத்திறன் உள்ள விதைகளை பயன்படுத்துவதன் மூலம் விதைச்செலவை குறைக்கலாம்.புறத்துாய்மை பரிசோதனையில் பிற பயிர் விதைகள், களை விதைகள் மற்றும் துாசு கண்டறியப்படுகிறது. ஈரப் பதப் பரிசோதனையின் மூலம் பூச்சி நோய் தாக்குதலின்றி விதைகளை சேமித்து அடுத்த கால விதைப்பு வரை விதைகளை பாதுகாக்கலாம்.

Aug 20, 2024

சேறடித்து நடும் முறையுடன் ஒப்பிடும் போது சொட்டுநீரில் நெல்நடுவது ….

1. தண்ணீர் 2.5% போதுமானது. 2.சேறு அடிக்க தேவையில்லை. 3.உரச்செலவு 20% போதுமானது. 4.ஆட்கூலி 25%மட்டுமே 5 சமனற்ற நிலங்களிலும் நடவு செய்யலாம். 6 இடைவெளி அதிகம் இருப்பதால் நோய்கள் 95% வருவதில்லை. 7.10-15% நாற்றுகள் போதுமானது.

Aug 13, 2024

மண்ணுக்கு ஏற்ற மரங்கள்

கரிசல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : புளி, புங்கன், நாவல்,நெல்லி சவுக்கு,வேம்பு,வாகை வண்டல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : தேக்கு,மூங்கில்,வேம்பு கருவேல், சவுண்டல்,புளி களர்மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : குடை வேல்,வேம்பு, புளி, பூவரசு, வாகை உவர் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : சவுக்கு, புண்கள்,இலவம்,புளி, வேம்பு அமில நிலம் : குமிழ், சில்வர் ஓக் சதுப்பு நிலம், ஈரம் அதிகம் உள்ள நிலம் : பெரு மூங்கில்,நீர்மருது, நாவல்,இலுப்பை, புங்கன் வறண்ட மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: ஆயிலை, பனை, வேம்பு ,குடைவேல், செஞ்சந்தனம். சுண்ணாம்பு படிவம் உள்ள மண் : வேம்பு,புங்கன், புளி, வெள்வேள் சுபாபுல் குறைந்த அழமான மண் : ஆயிலை,ஆச்சா, வேம்பு, புளி, வாகை,பனை களிமண்ணுக்கு ஏற்ற மரங்கள் :வாகை,புளி, வேம்பு, புங்கன், சுபாபுல், நெல்லி, கரிமருது, கருவேல் 

1 2 3 4 5 6 7 8 9 10 11

AD's



More News