பிரண்டை என்பது மூலிகை தாவரமாகும். இது எல்லா சீசனிலும் தழைத்து வளர கூடிய ஒரு வகை புதர் செடியாகும். எனவே நீங்கள் எந்த சீசனியிலும் பிரண்டையை பயிரிடலாம். இது கிராம புறங்களில் அதிகமாக பரந்து வளரக்கூடியது. இது நம் உடலில் ஏற்பட கூடிய பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.பிரண்டைவளர்க்க தேவைப்படும்GrowBags அல்லது மண் தொட்டி,மண்,மண்புழு உரம் அல்லது மாட்டு சானம்.முதலில் பிரண்டைசெடிநடுவதற்குஉங்கள்வீட்டுபகுதிகளில்உள்ளகாய்கறிகடையில் முற்றிய பிரண்டையை வாங்கி வைத்து கொள்ளுங்கள்.பிறகு உங்கள் வீட்டு பகுதியில் கிடைக்கக்கூடிய மண்ணை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் மண்புழு உரம் அல்லது மாட்டு சாணம் சேர்த்துகலந்துகொள்ளுங்கள்.இப்போது 5கணுக்கள் அளவிற்கு உள்ள முற்றிய பிரண்டையை எடுத்து கொள்ளுங்கள். பிரண்டையின்அடிப்பகுதியில்உள்ள கணுவின் கீழ் பகுதியை சிறிதளவு வெட்டி விடுங்கள்.பிறகு ஒரு மண் தொட்டி அல்லது Grow Bags எடுத்து, அதில்கலந்துவைத்துள்ளமண்உரத்தைநிரப்பிகொள்ளுங்கள். சமமானஅளவிற்குநிரப்பியதும்முற்றிய பிரண்டையை2கணுக்கள் மண்ணிற்குள் புதையும் படி குழிபறித்து பதித்து கொள்ளுங்கள்.இப்போது அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாடியின் சிறிது நிழலான பகுதியில் வைத்து கொள்ளுங்கள். பிரண்டைசெடி துளிர் விடும் வரை தண்ணீர் விட வேண்டும்.பிரண்டையை பதித்த 20 அல்லது25 நாட்களிலே நன்றாகதுளிர்விட்டுவளரஆரம்பித்துவிடும்.பிரண்டை செடிக்கு மாதம் ஒரு முறை நன்கு மக்கிய சாணம் உரம் மற்றும் மண்புழு உரம் போட வேண்டும். நம் உடலுக்கு தேவையான அதிகப்படியான சத்துக்களை தரக்கூடிய மூலிகை செடியான பிரண்டை செடி.
முல்லைப்பூ செடியை வளர்க்க, சரியான மண்ணைத் தேர்வுசெய்து, செடிக்குத் தேவையான நீர் மற்றும் உரங்களை அளித்து, பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். மேலும், செடியின் வளர்ச்சிக்கு ஏற்ப அதனை வெட்டி விடுவதும் (trimming), சரியான வெளிச்சம் கிடைப்பதும் அவசியம். வளமான மண் மற்றும் மணல் கலந்த மண்ணைப் பயன்படுத்துவது நல்லது.முதலில் செம்மண் அல்லது உங்கள் வீட்டு பகுதிகளில் கிடைக்க கூடிய மண் வகைகளில் எதாவதுஒன்றைஎடுத்துகொள்ளுங்கள். அதனுடன் மாட்டு எருது அல்லது ஆட்டு எருது, மக்கிய தேங்காய் நார், இலை தழைகள் போன்றவற்றைகலந்துகொள்ளுங்கள்.இதனை உங்கள் செடிக்கு மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் கொடுங்கள்.செடி நடும் போது, சரியான இடைவெளியுடன் நடுவது முக்கியம். செடிகளுக்கு இடையே சுமார் 8 அடி இடைவெளி விட வேண்டும். முல்லை செடிக்கு தினமும் தண்ணீர் கொடுக்க வேண்டும். இது சூரிய ஒளியில் தான் நன்றாக வளரும் எனவே அதற்கேற்ப தண்ணீரும் முல்லை செடிக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து சீரான இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும்.. முல்லை செடியில்உள்ள கிளையை வளர வளர வெட்டி விட வேண்டும். கிளைகளைவெட்டாமல்அப்படியேவிட்டுவிட்டால்செடிமட்டும்தான்காடுபோல்வளரும். அதில்செடிகள்பூக்கும்தன்மைகுறைந்துவிடும்.நீங்கள்செடியின்கிளைகளைவெட்டிவிட்டால்தான்கிளைகள்இரண்டாகபிரிந்துஅதிகமொட்டுகள்வைக்கதொடங்கும்.செடிகளை குறிப்பிட்ட அளவு உயரத்தில் வெட்டிவிட வேண்டும்.வீட்டில் இருக்கும் காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்திய பிறகு மீதமுள்ள கழிவுகளை முல்லை செடிக்கு கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதன் மூலம் உங்கள் முல்லை செடி வேகமாக மொட்டுகள் வைக்க தொடங்கும்.அதுமட்டுமில்லாமல் வாழைப்பழ தோலில் அதிக அளவு பொட்டாசியம் சத்து நிறைந்து இருக்கிறது. எனவே வாழைப்பழ தோலை அரைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முல்லை செடிக்கு கொடுக்கலாம். இதனை நீங்கள், வாரத்திற்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை முல்லை செடிக்கு கொடுக்கலாம்.சாம்பலுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து விட்டு மாதத்திற்கு ஒருமுறை சாம்பல் கரைசலை முல்லை செடிக்கு கொடுக்கலாம்.மேலே குறிப்பிட்டுள்ள இந்த முறைகளை எல்லாம் முல்லை செடிக்கு கொடுத்து வந்தீர்கள் என்றால் நீங்கள் எதிர் பார்க்காத அளவிற்கு முல்லை செடியில் பூக்கள் பூத்து குலுங்கும்.காட்டுமல்லி, வனமல்லி, ஊசிமல்லி, பிடவம், மஞ்சள் முல்லை, வெள்ளை முல்லை, ஜாதி முல்லை, சந்தன முல்லை என்ற வகைகள் இருக்கிறது.மாலை 6 மணி முதல் முதல் மெதுவாக மொட்டு விரிவடைந்து பூ மலரும்.இரவு 8 மணி முதல் 12 மணி வரை பூ முழுவதுமாக மலரும்.காலை 4 மணி முதல் 6 மணி வரை மலர்ந்த பூக்கள் அதிகளவில் மணம் வீசும். . காலை 7 மணிக்கு பிறகு பூக்கள் மெதுவாக வாடத் தொடங்கும்.
சிறுகுறிஞ்சான்செடிகள்தமிழ்நாட்டின்பலபகுதிகளில்காணப்படுகின்றன.இவைபொதுவாககாடுகள்,சமவெளிகள்,மற்றும்சமவெளிகாடுகள்போன்றஇடங்களில்வளருகின்றன.சர்க்கரைகொல்லிசெடி(sirukurinjan) வளர்வதற்குதொட்டிசற்றுஅகலமானதாகஇருந்தால்நல்லது.சர்க்கரைகொல்லிசெடி (sirukurinjan)வளர்ப்பதற்காகபைகளில்மண்நிரப்பும்போது,பையின்நீளத்தில்ஒருஅங்குலத்துக்குக்கீழ்இருக்குமாறுநிரப்பவேண்டும், முழுமையாகநிரப்பக்கூடாது.இதில்அடியுரமாகஒருபங்குமண்,ஒருபங்குதென்னைநார்க்கழிவு,ஒருபங்குஇயற்கை உரம் எனஇந்தமூன்றையும்கலந்துவைக்கவேண்டும்.இந்தகலவைதயாரானதும் 10 நாட்கள்கழித்து, கலவைநன்குமக்கியதும்விதைப்பைமேற்கொள்ளவேண்டும்.விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும்.அதேபோல் தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.விதைகள் முளைக்கும் வரை செய்திதாள்களை கொண்டு மூட வேண்டும்.விதைகள் முளைத்த பின் நீக்கி விடலாம். 20 நாட்கள் ஆன நாற்றுகளை தொட்டியின் அல்லது பைகளின் மையத்தில் நடவு செய்ய வேண்டும்.பைகளில் நேரடையாகவே துண்டுச் செடிகளை நடவு செய்யலாம். தொட்டியின் அளவைப் பொறுத்து நடவு செய்ய வேண்டும்.நாற்றுகள்நட்டவுடன்பூவாளிகொண்டுதண்ணீர்தெளிக்கவேண்டும்.பின்தினமும்காலைஅல்லதுமாலைவேளைகளில்தண்ணீர்தெளிக்கலாம்.சிறுகுறிஞ்சான்செடிகளைக்காக்கும்இயற்கைபூச்சிக்கொல்லியானவேப்பஎண்ணையைமாதம்ஒருமுறைதெளிக்கவேண்டும்.சமையலறைகழிவுகளைமட்கச்செய்துஉரமாகபோடலாம்.மாதம்ஒருமுறைமண்புழுஉரம்இடவேண்டும். இயற்கைஉரங்களைஇடுவதால்செடிகளின்வளர்ச்சிசீராகஇருக்கும்.சிறுகுறிஞ்சான்செடி(sirukurinjan) பாதுகாப்பு முறைபொறுத்தவரைவாரம்ஒருமுறையாவதுசெடியைச்சுற்றிஅடிமண்ணைக்கொத்திவிடவேண்டும்.வேப்ப இலைகளை நன்குகாயவைத்துத்தூள்செய்துகொள்ளவேண்டும். இந்தத்தூளைச்சிறுகுறிஞ்சான்செடிஒன்றுக்குஒருபிடிவீதம், சிறுகுறிஞ்சான்செடியின்வேர்பகுதியில்போட்டுநன்குகொத்திவிடவேண்டும். இதுவேஅடிஉரமாகவும், பூச்சிக்கொல்லியாகவும்:சிறுகுறிஞ்சான்செடிநீண்டநாள்தாவரம்என்பதால்,தங்களுக்குதேவைப்படும்போதுசெடியில்இருந்துபறித்துபயன்படுத்திகொள்ளலாம்.
பூச்செடிகளை வளர்க்க, நல்ல தரமான, நிறைய மொட்டுகளுடன் கூடிய செடிகளை நர்சரியில் இருந்து வாங்க வேண்டும். செடிகளை கவாத்து செய்வது, பக்கக்கிளைகள் வர உதவுகிறது. உரங்கள் மற்றும் இயற்கை கரைசல், அதாவது பிண்ணாக்கு கரைசல், பஞ்சகாவ்ய, அமிர்த கரைசல் மற்றும் புளித்த தயிர் மற்றும் தேங்காய் கலவை போன்றவற்றை வாரந்தோறும் அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம். செடியை தேர்வுசெய்தல்:நிறைய மொட்டுகள்மற்றும்ஆரோக்கியமானஇலைகளுடன்இருக்கும்நல்லசெடியைநர்சரியில்இருந்துதேர்வுசெய்யவும். மண் கலவை:செடியை நடுவதற்கானமண் 15x15 அளவில்இருக்கவேண்டும். கவாத்து செய்தல்:செடிகளை கவாத்துசெய்வதன்மூலமாகஅதிகமானபக்கக்கிளைகள்உருவாகி, அதிகபூக்கள்பூக்கஉதவும். உரமிடுதல்:பிண்ணாக்கு கரைசல், மீன்அமினோஅமிலம், பஞ்சகாவ்ய, அமிர்தகரைசல்போன்றஇயற்கைகரைசல்களைபயன்படுத்தலாம்.புளித்த தயிர் மற்றும்தேங்காயைஅரைத்துசெடிகள்மீதுதெளித்துவந்தால், ஒரேமாதத்தில்பூக்கள்பூக்கும். தொடர்ச்சியான பராமரிப்பு:வாரத்திற்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்குஒருமுறைஇந்தஇயற்கைகரைசல்களைசெடிகளுக்குகொடுக்கவேண்டும்.தொடர்ந்து சரியான பராமரிப்புசெய்வதன்மூலம், செடிகள்பூத்துகுலுங்கும்.
வாரம் ஒரு முறை சிறிதளவு எப்சம் உப்பை தண்ணிரில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம் .செடிகள் நன்கு வளரத் தேவையான மெக்னீசியம் சல்பேட் இரண்டையும் இந்த உப்பு கொடுக்கும்.முட்டை ஓடுகளை காய வைத்து நன்கு தூளாக்கி போட வேண்டும் இதில் இருக்கும். கால்சியம் செடிகளுக்கு நல்ல உரமாகும்.4 ஸ்பூன் வினிகர் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊற்றவேண்டும்.அலங்கார மீன் தொட்டியில் தண்ணீர் மாற்றும்போது வெளியேற்றப்படும் கழிவு நீரை செடிகளுக்கு ஊற்றலாம் செடிகள் செழிப்பாக வளரும்.சாம்பல் சிறந்த உரம் கிடைத்தால் போடலாம்.ஓக் மர இலைகள் அல்லது வேப்பமர இலைகளை வாளியில் உள்ள போட்டு வெயிலில் வைக்கவேண்டும். நீரின் நிறம் நன்றாக மாறியதும் குளிர வைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.காய்கறி கழிவுகளை செடியின் அடியில் போட்டு வரலாம் .
விதை தேர்வு, நிலம் தயாரித்தல், விதைப்பு, நீர் நிர்வாகம், உரமிடுதல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அறுவடை போன்ற பல படிகள் உள்ளன. நல்ல தரமான, நோய் இல்லாத விதைகளைத் தேர்ந்தெடுக்கவும்.நீங்கள் வளர்க்க விரும்பும் பீன்ஸ் வகைக்கேற்ப விதைகளைத் தேர்வு செய்யவும்.உதாரணமாக, புதர் பீன்ஸ் (bush beans) அல்லது கொடி பீன்ஸ் (climber beans) போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம்.பீன்ஸ் பயிரிட, நன்கு வடிகால் வசதியுள்ள நிலம் தேவை.நிலத்தை உழுது, கட்டிகளை உடைத்து, மண்ணை பொலபொலப்பாக ஆக்கவும்.தேவைக்கேற்ப தொழு உரம் அல்லது இயற்கை உரங்களை இடவும்.மண்ணின் கார அமிலத்தன்மை (pH) 6.0 முதல் 6.8 வரை இருக்க வேண்டும்.புதர் பீன்ஸை 15-20 செ.மீ. இடைவெளியில், வரிசைகளில் நடவும்.கொடி பீன்ஸை 30-45 செ.மீ. இடைவெளியில் நடவு செய்து, கொடிகள் ஏறுவதற்கு ஏதுவாக பந்தல் அமைக்கவும்.ஒவ்வொரு குழியிலும் 2-3 விதைகளை விதைக்கவும்.விதைகளை 2-3 செ.மீ. ஆழத்தில் நடவும்.விதைத்த பின், மண்ணை லேசாக அழுத்தி, நீர் ஊற்றவும்.மண் ஈரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.விதைத்த உடனேயும், பூக்கும் தருவாயிலும், காய்கள் உருவாகும்போதும் போதுமான அளவு நீர் பாய்ச்சவும்.தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும்.இயற்கை உரங்களான தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை இடலாம்.தேவைக்கேற்ப ரசாயன உரங்களையும் பயன்படுத்தலாம்.மண்ணின் வளத்திற்கேற்ப உர அளவை சரி செய்யவும்.பீன்ஸ் செடிகளில் பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்காமல் இருக்க, வேப்ப எண்ணெய் போன்ற இயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்.நோய் தாக்கிய செடிகளை உடனடியாக அகற்றவும்.அதிக அளவு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.காய்கள் இளம் பச்சை நிறத்தில் இருக்கும்போது அறுவடை செய்யவும்.காய்கள் முதிர்ச்சியடையாமல் பார்த்துக்கொள்ளவும், அதிக முதிர்ந்த காய்கள் சுவை குறைவாக இருக்கும்.செடியிலிருந்து காய்களை மெதுவாகப் பறிக்கவும்.இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, பீன்ஸ் பயிரிடுவதன் மூலம் நல்ல மகசூல் பெறலாம்.
பல்வேறு பயிர்களில் படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது. குறிப் பாக, மக்காச்சோளத் தில் படைப்புழு தாக்கு தல் என்பது பரவலாக காணப்படுகிறது. பெரிய அளவில் மக சூல் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.பொதுவாக மக்காச்சோள பயிரில் இலைகளுக்கு அடிப்பகுதியில் இந்த புழுவின் முட்டை குவியல்கள் காணப்படும். முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதி யில் சுரண்டி பாதிப்பை உண்டாக்கும்.எனவே மக்காச்சோளம் சாகுபடிக்குமுன் கட்டா யம் கோடை உழவு மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் வெளிக் கொண்டு வரப்பட்டுவெயில், பறவைகளால் அழிக் கப்படும். விதைப்பின்போது கடைசி உழவில்உரத்துடன் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண் டும். பயிரின் ஆரம்பகால வளர்ச்சி பருவத்தில் ஏக்கருக்கு 10 பறவை தாங்கிகள் வைக்கலாம்.மேலும், 5 இனக்கவர்ச்சி பொறி கள் வைத்து ஆண் அந்துப் பூச்சி களை கவர்ந்து அழிப்பதன் மூலம் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த லாம். ஊடுபயிராக பயிறுவகை, சூரியகாந்தி பயிர்களை கட்டாயம் பயிரிட வேண்டும்.15 நாள் பயிராக இருக்கும்போது வேப்பங் கொட்டை சாறு அல்லது வேம்பு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். வாரத்திற்கு குறைந்தபட்சம் 2 முறை வயலை பரிசோதிக்க வேண்டும். அறுவடைக்கு பிறகு பயிர் கழிவுகளை அகற்றி, புழுவின் முட்டைகள் இருந்தால் அழிப்பது முக்கியம் என வேளாண் துறையினர் கூறுகிறார் கள்.
வீட்டில் இஞ்சியை வளர்ப்பது எளிது. முதலில், ஒரு தொட்டியில் ஆற்று மணலை எடுத்து, ஈரப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர், இஞ்சி விதையை அந்த மணலில் விதைத்து, நிழற்பாங்கான இடத்தில் வைக்கவும். இலைகள் மேலே வந்ததும், வேருடன் எடுத்து வேறு தொட்டிக்கு மாற்றவும். வெளிச்சம் உள்ள இடத்தில் வைத்து, தண்ணீர் தெளித்து வந்தால், 8 மாதங்களில் அறுவடை செய்யலாம். நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த களிமண்ணில் இஞ்சி நன்றாக வளரும். தொட்டியில் இஞ்சி வளர்க்கும்போது, ஆற்று மணலைப் பயன்படுத்தலாம். விதையை விதைப்பதற்கு முன், மணலை ஈரப்படுத்திக் கொள்ள வேண்டும்.நன்கு முதிர்ந்த, நோய் இல்லாத இஞ்சி கிழங்குகளை தேர்வு செய்யவும். கிழங்குகளை சிறு துண்டுகளாக வெட்டி, சில மணி நேரம் உலர விடவும்.தொட்டியில் தயார் செய்த மண்ணில், இஞ்சி கிழங்குகளை5-10 செ.மீ ஆழத்தில் நடவும். கிழங்குகளில் உள்ள முளைப்பு பகுதிகள் மேல் நோக்கி இருக்குமாறு நடவும்.தொட்டியை நிழலான இடத்தில் வைத்து, மண்ணை எப்போதும் ஈரப்பதமாக வைத்துக் கொள்ளவும். இஞ்சி விதைகள் முளைத்து வந்த பிறகு, வெளிச்சம் உள்ள இடத்திற்கு மாற்றவும்.இஞ்சி செடிகளுக்கு தேவையான உரத்தை சரியான அளவில் இடவும்.இஞ்சி செடிகளில் பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்காமல் இருக்க, அவ்வப்போது கவனிக்கவும். தேவைப்பட்டால்,இயற்கை பூச்சிக்கொல்லிகளைபயன்படுத்தலாம்.8-10 மாதங்களில் இஞ்சி கிழங்குகள் அறுவடைக்கு தயாராகிவிடும். குறிப்பு:இஞ்சி வளர்ப்பதற்கு, நன்கு வடிகால் வசதியுள்ள, ஈரப்பதமான மண் தேவை.சரியான அளவு தண்ணீர் மற்றும் சூரிய ஒளி அவசியம்.இஞ்சி செடிகளுக்கு தேவையான உரத்தை சரியான அளவில் இடவும்.பூச்சிகள் மற்றும் நோய்களில் இருந்து செடிகளை பாதுகாக்க, அவ்வப்போது கவனிக்கவும்.
ஏக்கர் கணக்கில் நிலம் தேவையில்லை, 10 முதல் 20 செண்ட் பரப்பளவில் பத்து வகைகீரைகளை விதைத்து பராமரித்தால் போதும். தினந்தோனும் கிள்ள கிள்ள (அறுவடை) கீரைகள் அள்ளித்தரும் என்கிறார் மதுரை அருகே கருமாத்தூரை சேர்ந்த கீரை விவசாயி ஜெயச்சந்திரன்.விதையில் முளைக்கும் கீரைகளும் உண்டு. ஒருமுறை விதைத்தால் அடுத்தடுத்து குறிப்பிட்ட இடைவெளியில் 8முதல்9 முறை அறுவடை செய்யும் கீரை வகைகளும் உண்டு. சிவப்பு பொன்னாங்கன்னி கீரை ஒருமுறை விதைத்தால் அடுத்தடுத்து அறுவடை செய்யலாம்.30 சென்ட் பரப்பில் அரைக்கீரை, 20 சென்ட் அளவில் மணத்தக்காளி, 10 சென்ட் இடத்தில் பாலக்கீரை,5சென்ட் பரப்பில் பொன்னாங்கன்னி, 50 சென்ட் பரப்பில் முருங்கை கீரை நடவு செய்துள்ளேன். இடையே தண்டங்கீரை, சிறுகீரை, அகத்தி கீரை என 80 சென்ட் பரப்பளவில் 8வகை கீரைகளை வளர்க்கிறேன். இன்னும் 40 சென்ட் பரப்பில்' முருங்கை பயிரிடுவதற்கான விதை வாங்கி வைத்துள்ளேன்.நோய் பூச்சி தாக்குதல் இல்லாமல் பாதுகாத்தால் கீரையில் லாபம் இருக்கிறது. நெல்லுக்கு உரமிடு வதைப் போல கீரைகளையும் பராமரிக்க வேண்டும். வீட்டில் மாடுகள் வளர்க்கிறேன். அதனால் முழுவதும் இயற்கை முறையில் தான் கீரை சாகுபடி செய்கிறேன்.ஆட்டு எரு, மாட்டு சாணம் தான் கீரைகளுக்கு உரம். குறிப் பிட்ட இடைவெளியில் கீரை களுக்கு மாட்டு கோமியம் தெளிக்கிறேன். மாட்டு சாணத்தை கரைசலாக்கி கடலைமாவு, வெல்லம் கலந்து ஜீவாமிர்தம் கடை சலாக தருகிறேன். வெயில் நேரத்தில் பாலக்கீரை விதையை ஒருமுறை விதைத்தால் 20 முறை அறுவடை செய்யலாம். மழைக்காலத்தில் கூடுதலாக நான்கு முறை அறுவடை செய்ய லாம். பாலக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை வகைகளை 12 நாட்க ளுக்கு ஒருமுறை அறுவடை செய் தால் அடுத்தடுத்து தழைத்து வளரும். முழு அறுவடை முடிந்த பின் அதே இடத்தில் அதே வகை கீரைகளை விதைக்காமல் இடம்மாற்றி விதைக்க வேண்டும் என்றார்.
மஞ்சள் வளர்ப்பு முறைக்கு, நிலத்தைத் தயார் செய்வது, விதை நேர்த்தி, நடவு செய்தல், நீர் நிர்வாகம், உரமிடுதல், களை மேலாண்மை, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, அறுவடை போன்ற பல்வேறு படிகள் உள்ளன. மஞ்சள் வளர்ப்பதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள நிலம் அவசியம்.மண் மாதிரி பரிசோதனை செய்து, நிலத்தின் தன்மைக்கு ஏற்ப உரங்களை இடவும்.நிலத்தை நன்கு உழுது, சிறு சிறு கட்டிகளாக இல்லாமல் சமப்படுத்தவும்.தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து உரங்களை இடவும். விதைகளை சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி போன்ற நுண்ணுயிர்களால் நேர்த்தி செய்யவும்.இவ்வாறு நேர்த்தி செய்வதன் மூலம், விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்கும், மேலும் நோய்கள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்கும். மஞ்சள் வேர்த்தண்டுகளை நடவு செய்யவும்.வரிசைகளுக்கு இடையேயும், செடிகளுக்கு இடையேயும் போதுமான இடைவெளி விடவும்.பொதுவாக 30 x 20 செ.மீ அல்லது 45 x 25 செ.மீ இடைவெளி விடலாம்.மழைக்காலங்களில், வரப்புகளில் நடவு செய்வது நல்லது. மஞ்சளுக்கு போதுமான அளவு நீர் தேவை, ஆனால் அதிக நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.தொடர்ந்து 7-10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவும், குறிப்பாக வறட்சி காலங்களில்.மஞ்சள் பயிர் 20-25 நாட்கள் வரை நீர்ப்பாசனம் தேவைப்படும், பின்னர் தேவைக்கேற்ப நீர்ப்பாசனம் செய்யலாம். தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து உரங்களை இடுவது பயிர் வளர்ச்சிக்கு உதவும்.நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.கடைசி உழவின் போது தொழு உரம் இடவும், நடவின் போது வேப்பம் புண்ணாக்கு இடவும். நிலத்தில் களைகளை அவ்வப்போது அகற்றி, பயிருக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்யவும். மஞ்சள் பயிரில் வேர்ப்புழு, இலைப்புள்ளி நோய் போன்ற பிரச்சனைகள் வரலாம்.இதற்கு வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்தலாம், மேலும் சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா போன்ற நுண்ணுயிரிகளையும் பயன்படுத்தலாம்.நோய்த்தாக்குதல் அதிகமாக இருந்தால், பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவும். மஞ்சள் பயிர் நடவு செய்த 7-9 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்போது, வேர்த்தண்டுகளை வெட்டி எடுத்து காய வைக்கவும்.