25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நலம் வாழ

Oct 25, 2023

பிளம்ஸ் பழம்

பிளம்ஸ்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்க வல்லது. பிளம்ஸ் சிவப்பு நிறங்களில் அடங்கும்.பிளம்ஸ் பழம் வைட்டமின் ஏ,வைட்டமின் சி,வைட்டமின் கே ஆகிய சத்துகளும்,வைட்டமின் பி1,பி2,பி3,பி6மற்றும் வைட்டமின் இ சத்துகளும்நிறைந்துள்ளன.இப்பழத்தில் உள்ளமெக்னீசியம் சத்து உடலின் தசைகள் மற்றும் சீரான நரம்புகளின் செயலாற்றலுக்கு உறுதுணையாக இருக்கிறது.பிளம்ஸ்  பொட்டாசியத்தின் வளமான மூலமாகும். பொட்டாசியம் தான் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவி செய்யும். பிளம்ஸ்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்க வல்லது. பிளம்ஸ் சிவப்பு நிறங்களில் அடங்கும்.இதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது.இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.இரத்தத்தில் கலந்துள்ளகொழுப்புப்பொருட்களைகரைக்கும்குணமுடையது.இதுஇரத்தஅழுத்தத்தின் ஆரோக்கியமானஅளவை பராமரிக்க உதவுகிறது.சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும்.தசைகளில் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடைச் செய்யும். மூளை நரம்புகளும் அதிகம் பலம் கொடுக்கும்.மனம் அழுத்தத்தை போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப்பழங்கள் விளங்குகின்றன.

Oct 24, 2023

அதிமதுரம் டீ

அதிமதுரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பல மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன.உடல் எடையை குறைக்க உதவும்.அதிமதுரம் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதிமதுரம் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சர்க்கரை நோய் எதிர்ப்பு பண்புகள் உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆன்டி வைரல் பண்புகள் உள்ள அதிமதுரம் டீ சளி, காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.அதிமதுரம் டீ பற்கள் மற்றும் ஈறுகளுக்கும் நன்மை பயக்கும். இதைத் தொடர்ந்து குடித்து வர வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.அதிமதுரம் டீ குடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொற்று நோயை எதிர்த்து போராட உதவுகின்றன.

Oct 21, 2023

பிரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்கள்

வாழைப்பழம் முதல் வெங்காயம் வரை குளிர்சாதனப் பெட்டியில் ஒருபோதும் வைக்க கூடாது. அதிக குளிர் வாழைப்பழத்தை எளிதில் பழுக்க வைக்கிறது. வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் அதன் தன்மை பாதிக்கப்படும். தக்காளி சுவை மற்றும் அதன் தன்மையை இழக்கிறது. தேன் படிகமாக்குகிறது, அதே நேரத்தில் காபி வாசனையை உறிஞ்சுகிறது. வெங்காயத்திற்கு நன்கு காற்றோட்டமான இடம் தேவை, பூண்டு தீவிர சுவைக்காக உலர்வது மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இந்த பொருட்களின் தரத்தை சரியான முறையில் பயன்படுத்த, நச்சுத்தன்மையை தடுக்க பிரிட்ஜில் வைப்பதை தவிர்க்க வேண்டும். 

Oct 20, 2023

உடலில் உள்ள நச்சுக்களை   வெளியேற்றும் சுண்டைக்காய்

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.சுண்டைக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியை தூண்டி, உடலில் உள்ள நச்சுக்களை   வெளியேற்றும் தன்மை கொண்டது.

Oct 20, 2023

தேங்காயும், பேரீச்சையும்...

அரைமுடிதேங்காயை துருவி5 பேரீச்சை பழத்தை அதனுடன் பிசைந்து காலை உணவாக கலந்து எடுத்துக்கொள்ளுங்கள்.மூட்டு வலி,எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, நரம்பு பலவீனம், உடல் பருமன், இளைப்பும், இருதய பலவீனம், மனசஞ்சலம் அனைத்தும் போக்கும் மாமருந்தான உணவுகள் தான் தேங்காயும், பேரீச்சையும்...

Oct 19, 2023

அலர்ஜி பிரச்சனை

அலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். அலர்ஜி மூக்கில் தும்மல், மூக்கடைப்பு, ஜலதோஷம், நமைச்சல், வீக்கம், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். சிலருக்கு மூச்சுமுட்டி திணறல் ஏற்படும். வேறு சிலர் வாந்தி, குமட்டல், வாயு பிரிதல், வயிற்றுப்போக்கு ,போன்ற கோளாறுகளால் அதிகம் துன்பப்படுவார்கள்.ஒவ்வாமையினால் முதலில் பாதிக்கப்படுவதும், உணர் குறிகளை முதலில் வெளிப்படுத்துவதும் சருமம்தான். சிலருக்கு வெயில் மற்றும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்,கடுமையான வியர்க்குரு  வந்தாலும் அரிப்பு வரும்.எந்த அலர்ஜியாக இருந்தாலும், நம் முதல் தேடல் மிளகாகத்தான் இருக்க வேண்டும். மிளகு மெள்ள மெள்ள நோய் எதிர்ப்பு சக்தியைச் சீராக்கும்.அலர்ஜி பிரச்சனை இருக்கும் நேரத்தில் உப்பில் ஊற வைத்த பொருட்களான ஊறுகாய், வற்றல், கருவாடு, கரம் மசாலா சேர்க்கபடும் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள், குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வருவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். பழங்கள் அலர்ஜிக்கு நல்லது. ஆனால், புளிப்பான ஆரஞ்சு, திராட்சையைத் தும்மல் உள்ளவர்கள், கரப்பான் உள்ளவர்கள் தவிர்க்கவும்.எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா, பூரி ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது.பசலைக் கீரை சூப் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.புதினாவை வாரத்தில்3 முறை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளறிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப்போட்டு சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

Oct 18, 2023

இரும்புச்சத்து கொண்ட சப்போட்டா

புரோட்டின், இரும்புச்சத்து கொண்ட சப்போட்டா பழங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடியது.கண்பார்வையை அதிகரிக்கச்செய்வதோடு தோல் பாதிப்படையாமல்பாதுகாக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சப்போட்டா பழத்திலுள்ள வைட்டமின்கள் ரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணமுடையவை. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானத்துக்கு உதவுகிறது.சப்போட்டா பழத்தில் வைட்டமின்-சி அதிக அளவில் உள்ளது. 100 கிராம் பழத்தில் 24.5 சதவீதம் ‘வைட்டமின்-சி’ கிடைக்கிறது. தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களை நீக்குவதிலும்,நோய்த் தொற்று ஏற்படாமல் காப்பதிலும் ‘வைட்டமின்-சி’ யின் பங்கு மகத்தானது. அத்தியாவசிய வைட்டமின் ஆன, வைட்டமின்-ஏ குறிப்பிட்ட அளவில் காணப்படுகிறது. இதுபோக பொட்டாசியம், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களும், போலேட், நியாசின், பான்டோதெனிக் ஆசிட் போன்றவையும் உள்ளன.சப்போட்டா பழத்தைத் சாப்பிடுவதால், மார்புகளில் சளித்தேக்கம் மற்றும் நாள்பட்ட இருமல் ஆகியவைகளை, நாசி வழியாக மற்றும் சுவாசக் குழாயிலிருந்து கபம் மற்றும் சளி நீக்குவதன் மூலம், சளி மற்றும் இருமலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

Oct 17, 2023

மொச்சை

 மொச்சைக் கொட்டையில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த புரதம் உடலுக்கு மிகவும் அவசியம். மொச்சை கொட்டை உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும். மொச்சையில் நார்ச்சத்து உள்ளதால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.. மொச்சையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்குகிறது. பெருங்குடலில்புற்று நோயை உண்டாக்கும் ரசாயனங்களை தடுக்கிறது. இதில் அடங்கியுள்ள புரதச்சத்துஅ ணுக்கள். செல்களின் வளர்ச்சிக்கும். பாதிப்படைந்த செல்களை பழுது செய்யவும் உதவுகிறது. மொச்சையுடன் இஞ்சி பூண்டு சேர்த்து சமைத்தால் வாயுத்தொல்லை ஏற்படாது.

Oct 13, 2023

கஸ்தூரி மஞ்சள் 

கஸ்தூரி மஞ்சள் பொடியை வெந்நீரில் கலந்து தலையில் தேய்த்தால் தலைவவி குணமாகும். இதனை அரைத்து சூடேற்றி அடிபட்ட இடத்தில் தடவினால், வலியும் வீக்கமும் குறையும் இதன் பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்று வலியும், பாலில் கலந்து குடித்தால் இருமலும் தீரும் வியர்வைக் கட்டிகள் மறைய இதை வெங்காய சாற்றில் குழைத்து பூசலாம்.கஸ்தூரி மஞ்சள் அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில்  குணமாகும்..

Oct 12, 2023

கொட்டைப் பாக்கு

உணவிற்கு பின் சாப்பிடும் வெற்றிலையுடன் கொட்டைப் பாக்கில் ஏராளமான நன்மைகளும் ஆரோக்கியம் உண்டு.பாக்கு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மேலும் மலச்சிக்கலை போக்கும் .தலைவலி, மூட்டுவலி, தசைவலி போன்றவற்றை  நீக்கும் .உதடு புண், வாய் புண் சரியாகும் .பற்களில் உள்ள மஞ்சள் கறை,,பல் சொத்தை, போன்ற பிரச்சனைகளை சரியாகும், பல் வலுவடைகிறது ..

1 2 ... 12 13 14 15 16 17 18 19 20 21

AD's



More News