25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நலம் வாழ

Feb 23, 2024

உடல் பருமனை அலர்ஜியை கட்டுப்படுத்த உதவும் கோவக்காய்

கோவக்காயில் உடல் பருமனுக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. இது கொழுப்பு செல்களாக ப்ரீஅடிபோசைட்டிஸ் மாறுவதை தடுக்கிறது. இதனால் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ரத்த சர்க்கரை அளவை குறிக்கிறது. இது இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.கோவக்காயில் அதிகளவில் செப்போனின், அல்கலாய்ட்கள், ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் கிளைக்கோசைட்கள் அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள், உடலை அலர்ஜி மற்றும் அனஃபிலாக்டிக் பிரச்னைகளில் இருந்து உடலை காக்கிறது.

Feb 20, 2024

உடலின் கழிவுகளை நீக்க நெல்லிச்சாறு

உடலில் உள்ள கழிவுகளை நீக்க நெல்லிக்காய் சாறு சிறந்த தேர்வு. காலையில் இதை பருகுவது உங்கள் உடலுக்கு நன்மையளிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது. உடலில் சத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.உடலில் கொலொஜென் உற்பத்தியை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தை யூவி கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது.தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. தலைமுடியை வலுவாக்குகிறது. தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. உங்கள் தலைமுடியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துகிறது.இதில் உள்ள அடாப்டோஜெனிக் உட்பொருள், மனஅழுத்ததை குறைக்க உதவுகிறது. மனத்தெளிவை அதிகரிக்கிறது. உடல் மற்றும் உணர்வு ரீதியிலான அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.இதில் உள்ள வைட்டமின் ஏசத்து, கண் பார்வைத்திறன் மேம்பட உதவுகிறது. நெல்லிச்சாறை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் கண் ஆரோக்கியத்துக்கும், கண்ணில் நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது.

Feb 15, 2024

அசைவம் பல வழிகளில் மனிதனுக்குக் கெடுதல் செய்கிறது

.1. அசைவ உணவுகளைச் சாப்பிடுவதால் இவ்வுணவு நமக்குச் செரிப்பதற்கு, நம் குடலானது இரண்டு மடங்கு வேலை செய்ய வேண்டும்.2. அசைவ உணவு நம் குடலில் செரிமானமாகாத பட்சத்தில் இவ்வுணவு புளித்துப் பல கிருமிகளை உண்டாக்கும். அதனால் உடலுக்குக் கெடுதியாகும். இவை மேலும் பல நோய்களை உண்டாக்கும். ஆனால் மனிதக்குடல் நீளமாய் இருப்பதால் கழிவுப் பொருட்கள் எளிதில் வெளியாகாமல் நீண்ட நேரம் குடலில் தங்கி நச்சுக் கிருமிகளைத் தோற்றுவிக்கிறது. இவை ரத்தத்தில் கலந்து பல நோய்களைத் தோற்றுவிக்கிறது.3. அசைவ உணவில் கொடிய புளிப்பு நஞ்சு கலந்துள்ளது. இதனால் மார்பு வலி, வயிற்று வலி, நீரிழிவு ஆகியவை உண்டாகின்றன.4. சில நேரங்களில் இறந்த விலங்கின் கறியை உண்ணுவதால் விசக்கிருமிகள் தொற்றும் வாய்ப்பும் உள்ளது.5. இரண்டு, மூன்று நாட்கள் கறிகளைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதாலும், கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் சேர வாய்ப்புள்ளது.6. அசைவ உணவு உண்பதால் இயற்கையான மன உணர்வுகள் மாறுகின்றன. குறிப்பாக நல்ல உணர்வுகள் குறையத் தொடங்கும்.

Feb 14, 2024

சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவும். ஆளி விதை

வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ்,பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும்தர்பூசணிப்பழம் ஆகிய பழங்கள் சிறுநீரகத்தை சுத்தம்செய்ய உதவுகிறது.குதிரைவாலியை நமது அன்றாட உணவு முறைகளில் சேர்த்து வந்தால், அது சிறுநீரக மற்றும் சீறுநீரகத்தை சுத்தம் செய்துவிடும்.ஆளி விதையை அன்றாட டயட்டில் சேர்ப்பதன் மூலம், சிறுநீரில் உள்ள புரோட்டீன் அளவைக் குறைக்கலாம். ஆளி விதையில் உள்ள ஆல்பா- லினோலினிக் அமிலம் மற்றும் லிக்னன்கள் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.அகத்திக்கீரையை வேக வைக்கும் போது மிகுதியாகும் அகத்திநீரை குடித்து வந்தால், குடல் சுத்தமாகும்.

Feb 07, 2024

அதிகப் புரதம் நிறைந்த சைவ உணவுகள்

தாவரத்தில் அதிக புரதத்தைக்கொண்டுள்ளது பீன்ஸ் தான். இது முடி வளர்ச்சிக்கு அவசியம். அதோடுபீன்ஸில் துத்தநாகமும் அதிகமுள்ளது. இது முடி வளர்ச்சிக்கும் மறுசுழற்சிக்கும் உதவுகிறது. கொண்டைக்கடலை (சன்னா) கொண்டைக்கடலை ஒரு தனித்துவமான ஊட்டச்சத்துப் பட்டியலைக் கொண்டுள்ளது. ...சிவப்புக் காராமணி (ராஜ்மா) ...பால் ...பாலாடைக்கட்டி (பனீர்) ...பருப்பு ...பச்சைப் பட்டாணி (மட்டர்) ...கலப்பு விதைகள்அதிகப் புரதம் நிறைந்த சைவ உணவுகள்

Feb 05, 2024

சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் திராட்சை

கணையத்தில் ஏற்படும் அழற்சி மற்றும் தொற்று காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படும். சிறுநீர் பையில் ஏற்படும் கற்கள், வீக்கம், கட்டிகளாலும் உடல் உபாதைகள் உண்டாகும்.திராட்சை பழத்தை கொண்டு சிறுநீர் பையில் ஏற்படும் அழற்சி, கட்டிகளை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்:- திராட்சை பழம், வேப்பங்கொழுந்து, பனங்கற்கண்டு. ஒரு பாத்திரத்தில்10 திராட்சை பழங்களை போடவும்.இதை லேசாக நசுக்கவும். இதனுடன் சிறிது வேப்பங்கொழுந்து, பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி எடுக்கவும்.  இந்த தேனீரை காலை, மாலை வேளைகளில்50 முதல்100 மில்லி வரை குடித்துவர கல்லீரல், மண்ணீரல், கணையம்,சிறுநீர் பை ஆகியவற்றில் ஏற்படும் கட்டிகள் கரையும். வலி விலகிப் போகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பன்னீர், பச்சை என அனைத்து வகை திராட்சைகளையும் பயன்படுத்தி தேனீர் தயாரிக்கலாம்.திராட்சை நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. வேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

Feb 03, 2024

உடலை சுத்தப்படுத்தும்  சோம்பு நீர்

 காலையில்எழுந்தவுடன்சோம்புதண்ணீரைமுதலில்குடிக்கவேண்டும்.ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல் சோம்பு தண்ணீர் குடித்தால் மிக எளிதாக, நாள்பட்ட உடல் பருமனை குறைக்கும்.சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளை எரித்து எளிதில் உடல் எடையை குறைக்க உதவுகிறது.வயிற்றை சுற்றி உள்ள தேவையற்ற சதைப்பகுதி தொப்பையை கரைத்து சரியான உடல் அமைப்பைத் தரும்.செரிமானத்திற்கு நல்லது ...இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது ...கண் ஆரோக்கியம் ...இரத்தத்தை சுத்திகரிக்கும்மாதவிடாய் வலியை போக்கும் ...புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்... சோம்பு டீ செய்முறை ..- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து லேசாக சூடாகவும். இந்த தண்ணீரை அதிகமாக கொதிக்க வைத்தால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும். அடுப்பை அணைத்தபின் இதனை ஒரு தட்டு வைத்து மூடி வைக்கவும். சிறிது நேரத்தில் தண்ணீரின் நிறம் மஞ்சள் நிறமாக மாறி இருக்கும்

Jan 29, 2024

ரத்த ஓட்டம் சீராக்கும் புளிச்சக்கீரை 

இந்த கீரை புளிப்பு சுவையை கொண்டுள்ளதால் புளிச்ச கீரை என்று அழைக்கப்படுகிறது.புளிச்ச கீரை பச்சை தண்டு வகை சிகப்பு தண்டு வகை என இரு வகைகள் காணப்படுகின்றன. பல சத்துகளைக் கொண்ட புளிச்சக்கீரை இதயத்திற்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தை சீராக்கும் பண்புகளை கொண்டது, உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.சொறி, சிரங்கு போன்ற சரும பிரச்சனை உள்ளவர்கள் புளிச்சக்கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.புளிச்சக்கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட பெரிதும் உதவுகிறது.புளிச்சக்கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசிஉணர்வை குறைக்கிறது, இதனால் உடல் பருமனை குறைக்க முடியும்.புளிச்சக்கீரையில் இருந்து தேநீர் தயாரித்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும். காலையில்4 முதல்5 புளிச்சக்கீரையை வெந்நீரில் சேர்த்துகொதிக்க வைத்து குடித்து வரலாம்நீர் கோர்த்தல்பிரச்சனைஉள்ளவர்கள் மற்றும் ரத்தநாளங்களில் பிரச்சனை இருப்பவர்கள் புளிச்சகீரை கடையல் செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.புளிச்சக்கீரையை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வாதத்தைக் குறைக்க உதவும்.

Jan 26, 2024

வயிற்றுப் பூச்சி நீங்க...

 வேப்பங்கொழுந்து-1 டீஸ்பூன், ஓமம்-1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன், கருஞ்சீரகம்-1/2 டீஸ்பூன்எடுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்து நீர்விட்டு அரைத்து, சுண்டைக்காய் அளவுக்கு உருட்டி, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாரத்துக்கு ஒருநாள் என மூன்று முறை கொடுத்தால், வயிற்றுப் பூச்சி நீங்கி, அரிப்பு குறையும்.

Jan 24, 2024

ஏழைகளின் பாதாம் பருப்பு நிலக்கடலை

நிலக்கடலைஏழைகளின் பாதாம் பருப்பு என்றழைக்கப்படுகிறது.வாரத்தில்5 நாட்கள் வேர்க்கடலை உண்டால் இதயம் நன்றாக இருக்கும்.மலச்சிக்கல் பிரச்சனை வராது.குடல் புற்றுநோய் ஏற்படாது.இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றுகிறது.கார்போஹைட்ரேட், கால்சியம் உள்ளது.வைட்டமின் சி, பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது.ரத்த நாளங்களை நிலக்கடலை பாதுகாக்கிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தம் மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால் அளவையும் இந்த கடலை கட்டுப்படுத்துகிறது.முதுமை தோற்றத்தை நீக்கி, இளமையை தக்கவைக்கிறது இந்த நிலக்கடலை. இதற்கு காரணம், வைட்டமின் C, E இரண்டுமே கடலையில் உள்ளதால், சருமத்துக்கு கவசம்போல பாதுகாக்கிறது.சருமத்திலுள்ள காயங்களையும் குணப்படுத்தும் திறன் இந்த கடலைக்கு உள்ளது. தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்க செய்கிறது. எலும்புகள் தேய்மான பிரச்சனை இருப்பவர்கள், கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு நிலக்கடலை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். மாங்கனீசு, பாஸ்பரஸ், வைட்டமின் B1, நியாசின், போலேட், ஓலிக் அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை பெண்களின் நரம்பு மண்டலத்தை பலப்படுகிறது. ஞாபக சக்தியையும் பெருக்குகிறது.புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் சக்தி இந்த நிலக்கடலைக்கு இருக்கிறது.

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 20 21

AD's



More News