25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பழமொழி.

Aug 06, 2024

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி 

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி ஓட்டை கப்பல் என்பது நமது உடல். ஒன்பது மாலுமி என்பது நமது உடலில் இருக்கும் நவதுவாரங்கள்.

May 28, 2024

எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்.

எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய். பொருள்: இப்பழமொழி மருத்துவம் சார்ந்த பழமொழி ஆகும். எரு கெட்டார் என்பது மலச்சிக்கல் கொண்டவர்களை குறிக்கிறது. கடுக்காய் மலச்சிக்கலுக்கு மிகவும் சிறந்த மலமிலக்கியாக பயன்படும். அதே போலவே பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.

May 21, 2024

சருகைக் கண்டு தணலஞ்சுமா

சருகைக் கண்டு தணலஞ்சுமாபொருள்: உலர்ந்த இலையைச் சருகு என்பர். தணல் என்றால் தீ, உலர்ந்த இலைச் சருகை தீக்கணல் எளிதில் எரித்து விடும். எனவே சருகைக் கண்டுதணல் அஞ்சப்போவதில்லை. அதேபோலவே எளியவரைக்கண்டு வீரன் அஞ்சி ஓடமாட்டான் என்பதை விளக்கவே இப்பழமொழி கையாளப்படுகிறது.

May 07, 2024

சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது. பொருள்: பேறு பார்க்கும் மருத்துவ மகளிருக்கு(மருத்துவச்சி) கண்டிப்பாக கூலி கிடைத்தே தீரும். ஒருவேளை பிள்ளை இறந்தே பிறந்தாலும், பேரு பார்த்ததற்கான கூலி கிடைக்கும். 

Apr 30, 2024

மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்

மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.பொருள்:ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் எஎன்று பொருள் வருகிறது,உண்மையான பொருள்:மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்,மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயி வீட்டில் மாமியாரும், மருமகளும் சேர்ந்து நிலத்தில் உழைத்தால், பொன்னும், பொருளும் சேரும் என்பது அர்த்தம்.

Apr 23, 2024

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு.பொருள்:ஆறு வயதிலும் சாவு வரும்;நூறு வயதிலும் சாவு வரும்.உண்மையான பொருள்:மகாபாரதத்தில் கர்ணன், பஞ்ச பாண்டவர்கள்(ஐவர்) பக்கம் இருந்தாலும், கெளரவர்கள்(நூறு பேர்) பக்கம் நின்றாலும்,போரின் போது இறப்பு வரும். ஆதலால் துரியோதனன் மீதுள்ள நட்பின் காரணமாக கெளரவர்களிடமே இருக்கிறேன் என்று சொன்னது.

Apr 16, 2024

சட்டியில் இருந்தால் தான் , அகப்பையில் வரும்

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் பொருள்:சட்டியில் என்ன (சோறு) இருக்கிறதோ அது தான் நமக்கு கிடைக்கும்.உண்மையான பொருள்:சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று பொருள் கொள்ள வேண்டும்

Apr 09, 2024

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை. பொருள்:என்ன வேலைக்கு போவது என தெரியாமல் நிற்பவன் தான், போலிஸ் வேலைக்கு போவான்; வேறு வேலைக்கு போக வழி தெரியாதவன், வாத்தியார் வேலைக்கு போவான்.உண்மையான பொருள்:மற்றவருக்கு போக்கு கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை;வாக்கு கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பது சரியான பொருள்.

Mar 26, 2024

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

ஆற்றில் போட்டாலும் அளந்து போடுசொல்லப்படும் பொருள்:நாம்  தர்மம் செய்யும் போதோ, வேறு ஏதாவது செய்யும் போதோ அளவுடன் தான் கொடுக்க /  செய்ய  வேண்டும். உண்மையான விளக்கம்:அகத்தில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பது சரியான பொருள்.அகம் என்பது உடல். அதாவது என்ன சாப்பிட்டாலும் அளவுடன் தான் சாப்பிட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான  வாழ்வு  கிடைக்கும் என்பது,இதன் அர்த்தம்.

Mar 19, 2024

குறைக்கிற நாய் கடிக்காது

சொல்லப்படும் பொருள்:தெருவில் போகும் போது நாய் குரைத்து கொண்டே இருந்தால் அது நம்மை கடிக்காது. வெறும் வாய் பேச்சில் வீரர்கள், பெரிதாக ஏதும் செய்ய மாட்டார்கள்.உண்மையான விளக்கம்:குழைக்கிற நாய் கடிக்காது. நம்மிடம் பாசமாய் குழைந்து காலை நக்கும் நாய் நம்மை கடிக்காது. நம் மீது பாசம் உள்ளவர்கள் நமக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் என்பது தான் சரியான அர்த்தம்.

1 2 ... 8 9 10 11 12 13 14 15 16 17

AD's



More News