25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வெள்ளித்திரை

May 25, 2023

நடிகர் சரத்பாபு மறைந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில்400 படங்கள் வரை நடித்துள்ள இவர் தமிழில் இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சரத்பாபு. அப்படத்திற்கு பிறகு முத்து, அண்ணாமலை போன்ற ரஜினியின் முக்கியமான படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.. சரத்பாபு செப்சிஸ் நோயின் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமா மக்கள் மறைந்த நடிகர் சரத்பாபுவை பற்றி அதிகம் பேசி வருகிறார்கள்.72வயதாகும் நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவு காரணமாக மே22ம் தேதி உயிரிழந்தார். ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டது, இங்கே தகனம் செய்யப்பட்டது..சரத்பாபு அவர்கள் முதலில் ரமா பிரபா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களின் திருமணம் விவாகரத்தில் முடிய ,தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக எம்.என்.நம்பியாவின் மகளான சினேகாவை மறுமணம் செய்தார், ஆனால்2011ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள்..அவர்களின் வாழ்க்கையும் பாதியில் முடிந்தது.இவரது மறைவிற்கு பிறகு சொந்த வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியாக, “அட நம்பியாரின் மருமகனா இவர்” என ரசிகர்கள் புதிய செய்தியாக பார்க்கிறார்கள். 

May 24, 2023

பொன்னியின் செல்வனுக்கு ஐஸ்வர்யாராயின் சம்பளம் ?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன்2.முன்னணி நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை மக்களிடத்தில் பெற்று வருகிறது.இப்படத்தில் இவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் நட்சத்திரங்களிலேயே விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவிக்கு மட்டுமே 10 கோடிக்கு மேல் சம்பளமாக கொடுத்துள்ளனர்.ஐஸ்வர்யா ராய்-10 கோடி, விக்ரம்-12 கோடி, ஜெயம்ரவி-8 கோடி, திரிஷா-5 கோடி, கார்த்தி-5.5 கோடி, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ், பிரபு போன்ற நட்சத்திரங்களுக்கு சுமார்-1.5 கோடி, சோபிதா, ஜெயராமுக்கு1 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.பல கோடி பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தின் முதல் பாகம்500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இரண்டாம் பாகம்500 கோடி வசூலித்தால் 1000 கோடி வசூலித்த படங்களில் பொன்னியின் செல்வன் படமும் பிடிக்கும். கோடிகளில் குளிப்பாட்டிய மணிரத்னம்.

May 17, 2023

உலகஅழகி ஐஸ்வர்யா ராயின்சொத்து மதிப்பு

உலகஅழகியாக வலம்வந்த ஐஸ்வர்யாராய் ,அப்போதும்இப்போதும் தமிழ்சினிமாவில் கொண்டாடும்நடிகையாக இருப்பவர். வந்த ஐஸ்வர்யா ராயின்சொத்து மதிப்புஎவ்வளவு இருக்கிறதுஎன்று தெரியுமா?தமிழ்சினிமாவில் மணிரத்தினத்தின்இருவர் என்றதிரைப்படத்தின் மூலம்தமிழுக்கு அறிமுகமானார்.அதற்கு பிறகுசூப்பர் ஹிட்படங்களை அடுத்தடுத்துக்கொடுத்து முன்னணிநடிகையாக திகழ்ந்தார்.அதன்பிறகு பொலிவூட்நடிகர்சல்மான்கானைகாதலித்து வந்தார்.ஆனால் அவர்களிடம்கருத்து வேறுபாடுகாரணமாக அவரிடம்இருந்து விலகிவிட்டார்.பின்னர்2007ஆம் ஆண்டுஅபிஷேக்பச்சனைகாதலித்துதிருமணம்செய்துக் கொண்டார்.மேலும், இவர்கள்இருவருக்கும் ஆராத்யாஎன்ற பெண்குழந்தையும் இருக்கிறார்.தமிழில்ரஜினிநடிப்பில்வெளியானஎந்திரன்  திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் தமிழை விட ஹிந்தி படங்களில் தான் அதிக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.ஐஸ்வர்யாராயிடம் பலபங்களாக்களும் காணிகளும்உள்ளது. இவர்களின்மொத்த சொத்தும்776 கோடிக்கு மேல்இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல்ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட்கார்களும், சொகுசுகார்களும் சொந்தமாகவைத்திருக்கிறார்.உலகஅழகி என்றாலே இப்போதும் நம் நினைவுக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யாராய் தான்.1973ஆம் ஆண்டு கர்நாடகாவின் மங்களூரில் பிறந்த இவர்,1994ஆம் ஆண்டு உலகஅழகி பட்டத்தை தட்டி சென்றார். தற்போது49 வயதானாலும் கூட இன்னும் இளமை தோற்றத்தில் இருந்து ரசிகர்களை அசத்துகிறார் ஐஸ்வர்யாராய்.

May 10, 2023

பிரபாஸின் ஆதிபுருஷ்

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை தழுவி உருவாகும்,ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கிருத்தி சனோன், லட்சுமணனாக சன்னி சிங், ராவணனாக சைப் அலிகான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் ஜூன் 16ல் . வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது. டிரைலரை5 மொழிகளில்  பார்த்த அனைவரும் பிரமாண்டமாய் இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.கடந்த அக்டோபர்2 அன்று டீசர் வெளியான போது அதன் கிராபிக்ஸ் காட்சிகள் சரியாக இல்லை என கடும் விமர்சனம் எழுந்தது. அதையெல்லாம் கருத்தில் கொண்டு மே9ம் தேதிஅப்டேட் கொடுத்த’ஆதிபுருஷ்’ படக்குழு,டிரைலரை அனைவரும் பாராட்டும்படியாக வெளியிட்டுள்ளனர். வெளியான சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகள் டிரைலருக்கு கிடைத்துள்ளது.பிரபாஸின் ஆதிபுருஷ், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்,இந்திய படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.நீண்ட நாட்களாக ஆதிபுருஷ் அப்டேட்டுக்காக காத்திருந்த பிரபாஸின் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

May 03, 2023

சரத்குமாரின் மார்க்கெட் எகிறுவதற்கு முக்கிய காரணம்.பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் என்ற  கதாபாத்திரம் 

மணிரத்னத்தின் கனவு திரைப்படம் பொன்னியின் செல்வன்  கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி திரையரங்கில் தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் மார்க்கெட் டாப் கீரில் எகிறிக் கொண்டிருக்கிறது. அதிலும் பிரபல நடிகர் ஒருவருக்கு மறுபடியும் மவுசு அதிகமாகி விட்டது. இந்தப் படத்திற்கு பிறகு மட்டும் சுமார்20 படங்களில் அவர் கமிட் ஆகி இருக்கிறார்.பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் மற்றும் ருத்ரனில் பூமி என எதிர்மறை கதாபாத்திரத்தில் கலக்கி கொண்டிருக்கும் ,சுப்ரீம் சூப்பர் ஸ்டார் சரத்குமார், தற்போது20 பட வாய்ப்புகளை கைவசம் வைத்திருக்கிறார். இதை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நல்ல தமிழ் பேசும் சரத்குமார், கலை உலகில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தார்.ஆனால் இப்போது தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது கலைதான் அவர் தொழில் என்று பெருமையுடன் கூறியுள்ளார். நீண்ட வருடத்திற்கு பிறகு மறுபடியும் சரத்குமாரின் மார்க்கெட் எகிறுவதற்கு முக்கிய காரணம்.பொன்னியின்  செல்வன்  படத்தில் பெரிய பழுவேட்டரையர் என்ற  கதாபாத்திரம் தான். 

May 03, 2023

பொன்னியின் செல்வன்-2 நடிகர்கள் சம்பளம்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன்2. முன்னணி நடிகர்கள் இப்படம் நல்ல வரவேற்பை மக்களிடத்தில் பெற்று வருகிறது.இப்படத்தில் இவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் நட்சத்திரங்களிலேயே விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவிக்கு மட்டுமே10 கோடிக்கு மேல் சம்பளமாக கொடுத்துள்ளனர்.ஐஸ்வர்யா ராய்10 கோடி, விக்ரம்12 கோடி, ஜெயம்ரவி8 கோடி, திரிஷா-5 கோடி, கார்த்தி5.5 கோடி, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ், பிரபு போன்ற நட்சத்திரங்களுக்கு சுமார் 1.5 கோடி, சோபிதா, ஜெயராமுக்கு 1 கோடியும் சம்பளமாக கொடுத்து ,கோடியால் குளிப்பாட்டிய மணிரத்னம் 

Apr 26, 2023

நயன்தாராவின் சொத்து மதிப்பு

 மக்கள் மத்தியில் பிரபலமான தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ,ஜோடியாக நடித்தவர், நடிகை  நயன்தாரா . இவர் 2005 -ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான "ஐயா" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.நயன்தாரா. தமிழ் படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நயன்தாரா, ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் .ஜவான் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா ஒரு படத்திற்கு 5 முதல் 10 கோடி வரை சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது.சமீபத்தில் நயன்தாராவின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதில் இவருக்கு ரூபாய் 200 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

Apr 26, 2023

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. ( APR 28TH)

பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2 படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் கைப்பற்றியுள்ளது. அதேபோல், உலகம் முழுவதும் லைகா நிறுவனமே நேரடியாக வெளியிடுகிறது.   இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கிய பொன்னியின் செல்வன் 2 அட்வான்ஸ் புக்கிங்கில் எதிர்பார்த்ததை விடவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கியமாக முதல் வாரத்திற்கான டிக்கெட் புக்கிங் மூலம் மட்டும் இதுவரை 17 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது. முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதுண்டு. அதன்படி, நள்ளிரவு 1 மணி, அல்லது அதிகாலை 3, 4, 5 மணிக்கெல்லாம் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும். ஆனால், பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு சிறப்புக் காட்சி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், முதல் காட்சியே காலை 9 மணிக்கு தான் திரையிடப்படுகிறது. இதனால் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.பொங்கலுக்கு வெளியான துணிவு படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்கச் சென்ற அஜித் ரசிகர் விபத்தில் உயிரிழந்தார். இதேபோல் அடிக்கடி அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகவே பொன்னியின் செல்வன் 2 படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை என சொல்லப்படுகிறது , டிக்கெட் கட்டணங்கள் அதிகமாக வசூலித்தாலும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி வசூலிக்கும் என சினிமா விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் 2 திரையிடப்படவுள்ளது. இதனையடுத்து முதல் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. 

Apr 19, 2023

உதவிகளை செய்து வரும் SUPER STAR ரஜினி

படையப்பா படத்தில் ரஜினியிடம்‘ஏனுங்க இந்த பாம்பு பொத்தில் கைவிட்டீங்களே கடிச்சிராத்துங்களா’ என்று அடிக்கடி கேட்டு அனுமோகன்,அந்த வசனத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் அனுமோகன். மகளுக்கு திருமணநேரத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருந்த அனுமோகன் யாரிடமாவது கடன் கேட்கலாமா? என்று நினைத்தாராம். உடனே அவர் நினைவுக்கு வந்தது ரஜினிதானாம்.ரஜினியிடம் நாம் ஏன் கடன் கேட்க வேண்டும்? உதவியாகவே கேட்கலாம் என்று நினைத்து பத்திரிக்கையும் கூடவே ஒரு கடிதத்தையும் வைத்து ரஜினியிடம் கொடுத்து விட்டு வந்தாராம்.ரஜினி அவரது மேனேஜரிடம் அனுமோகன் என்ன எதிர்பார்த்தாரோ அதைவிட பத்து மடங்கு தொகையை அவரிடம் கொடுத்து அனுமோகனிடம் கொடுக்க சொன்னாராம்.இந்த செயலால் அனுமோகன் மிகவும்கண்கலங்கிமெய்சிலிர்த்து போனாராம். பொன்னம்பலம், போண்டாமணி, பிதாமகன் தயாரிப்பாளர் போன்ற பலருக்கு ரஜினி உதவிகளை செய்தும் வருகிறார் .தமிழ் சினிமாவில் அனைவரும் கொண்டாடும் நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கோடான கோடி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு ஒரு மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்து வருகிறார். பலருக்கு ரஜினி உதவிகளை செய்தும் வருகிறார். 

Apr 19, 2023

'பொன்னியின் செல்வன்' இரண்டாவது பாகம்  ஏப்ரல்28ம் தேதி வெளியாகிறது

கல்கி எழுதிய'பொன்னியின் செல்வன்' நாவலைஇயக்குனர் மணிரத்னம்,வெற்றிகரமாக ,அந்த நாவலை இரண்டு பாகப் படங்களாக எடுத்து முடித்தார்.கடந்த எழுபது வருடங்களாகப் பலரும் திரைப்படமாக்க முயற்சித்து, முடியாமல் போனது.முதல் பாகம் கடந்த வருடம் வெளியானது. இரண்டாவது பாகம் அடுத்த வாரம் ஏப்ரல்28ம் தேதி வெளியாகிறது. அதை அதை முன்னிட்டு நேற்று மணிரத்னம், விக்ரம்,ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி, ஷோபிதா துலிபலா ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது மணிரத்னம் பல கேள்விகளுக்குபதில் சொன்னார்.“பொன்னியின் செல்வன்” படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் நிறைய சரித்திரப் படங்கள் வரும் என நினைக்கிறேன். உங்களை மாதிரியே நானும் அம்மாதிரியான படங்களைப் பார்க்க விரும்புகிறேன். ஒரு படம் பண்ணணும்னு ஆசைப்படறதுக்குக் காரணம் படத்தோட கதை. பிரம்மாண்டம்  பண்ணணும்னுபடம் எடுக்க மாட்டேன். அடுத்த சரித்திரப் படங்கள், நிறைய இயக்குனர்கள் இருக்காங்க, அவங்ககிட்ட இருந்து வரணும். நான் இது மட்டும் பண்ணிட்டிருந்தேன்னா தேங்கிப் போயிடுவேன்.கல்கி எழுதின கதையை வச்சி எடுக்கப்பட்ட படம். இதுல எதுக்கு தேவையற்றமதத்தை எடுத்து வந்து நுழைக்கறீங்க. இந்தப் படத்துல நடிச்ச பலர் கிட்ட இருந்து, ஒரு கதாபாத்திரத்துக்கு எப்படி லைப் கொடுக்கணும்? கத்துக்கிட்டேன்.டைரக்டர் வேலை ஈஸி, நடிகர்கள் கிட்ட இது, அதுன்னு ஏதாவது சொல்லலாம். ஆனால், ஒரு கதாபாத்திரத்தைத் தூக்கி நிறுத்த வேண்டியது இவங்கதான். ஒரு சரித்திரப் படம், படிச்சது மட்டும்தான், கற்பனை உலகம்.  அங்க ஒரு இளவரசன் இருந்தால், உடல்மொழி மூலமா, நடிப்பு மூலமா அந்தக் கதாபாத்திரங்களை இவங்க உயிரோட கொண்டு வந்தாங்க. “ஆர்ஆர்ஆர்' படம் ஆஸ்கர் போனது ரொம்ப பெருமையான விஷயம். போயிட்டு ஒரு அவார்டு வாங்கியதும் பெருமை. இந்தப் படத்தை ஆரம்பிக்கும் போது, ஆஸ்கருக்கு எடுத்துட்டு போகணும்கற நோக்கத்தோட நாங்க ஆரம்பிக்கல. உங்ககிட்ட.. கொண்டு வரணும். கல்கியோட இந்த நாவலை 70 வருஷமா அதிகமா விற்கப்பட்ட புக்கா இருந்திருக்கு. சினிமாவா சரியா. கொண்டு வரணும்கறதுதான் நோக்கம். அதைத்தாண்டி நடந்தா மகிழ்ச்சிதான். இரண்டாவது பாகம் பார்த்துட்டு நீங்க வந்து பாராட்டு சொன்னீங்கன்னா, ரொம்ப சந்தோஷப்படுவேன்,” என பதிலளித்தார் மணிரத்னம்.இரண்டாவது பாகம் அடுத்த வாரம் ஏப்ரல்28ம் தேதி வெளியாகிறது .ரசிகர்கள் ஒவ்வொருத்தரும்  ஆவலுடன் எதிர்ப்பார்த்து க்கொண்டிருக்கின்றனர்.

1 2 ... 66 67 68 69 70 71 72 73 74 75

AD's