புதுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் கொடியேற்றும் வைபவம்.
புதுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் , நிகழும் மங்களகரமான 1201-ம் ஆண்டு ஸ்ரீபராபவ நாம வருஷம் சித்திரை மாதம் 8-ம் தேதி 21.04.2026 செவ்வாய்க்கிழமை அன்று சதுர்த்தி திதியும், மிருகசீரிஷ நட்சத்திரமும், அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் மேஷ லக்கினத்தில் உத்ஸவ த்வஜாரோகணம் (கொடியேற்றும் வைபவம்) நடைபெறும்.
மேற்படி திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அம்மன் அருளைப்பெறும்படி வேண்டிக்கொள்கிறோம்.
நிர்வாக அறங்காவலர் குழு
திரு.K.K. உதயகுமார் ராஜா
திரு.S.V. கார்த்திக் ராஜா
திரு.P.P. சசிகுமார் ராஜா
திரு.S.R. வெங்கடேஷ் ராஜா
இப்படிக்கு
திரு. S.S.B. வெங்கட்ட ராஜா நிர்வாக அறங்காவலர் குழுத்தலைவர்
புதுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில்,
இராஜபாளையம்.
0
Leave a Reply